இடுகைகள்

நோய்த்தொற்று லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

மக்களின் மனதில் பயத்தை புகுத்தினால், அபார வெற்றி - பெருநிறுவனங்களின் உளவியல் யுக்தி

படம்
  பயம். சூப்பர் மார்க்கெட்டுகளில் உள்ள பெரும்பாலான பொருட்களை விற்க வைக்க பயம்தான் தூண்டில். விளம்பரங்கள் மூலம் மக்களின் மனதில் பயமே தூண்டிவிடப்படுகிறது. அண்மையில் ஒரு பாத்திரங்களைக் கழுவுவதற்கான லிக்விட் விளம்பரம் ஒன்றைப் பார்த்தேன். அதில், தண்ணீர் மூலம் கழுவி வைத்த தட்டுகளை எடுத்து துடைத்து மேசையில் அமர்ந்துள்ள பிள்ளைகளுக்கு அம்மா உணவு பரிமாறுகிறார். உடனே, அங்கு வெள்ளைக் கோட் போட்டு வரும் மருத்துவர், ‘’அந்த தட்டில் நோய்க்கிருமிகள் உள்ளது’’ என்று சொல்லி, ஜெர்மன் நாட்டு ஃபினிஷ் என்ற பாத்திரம் கழுவும் லிக்விட்டை வாங்க வற்புறுத்துகிறார். மைக்ரோஸ்கோப்பில் பார்த்தால் தெரியும் நோய்க்கிருமிகள் சாப்பிடும் தட்டில் ஏராளமாக இருக்கின்றன. அதில் உணவு போட்டு சாப்பிட்டால் பிள்ளைகள் உடல்நலம் கெட்டுவிடும் என்பது நேரடியான மிரட்டல்.   இந்த விளம்பரத்தில் பயம் என்பது முக்கியமான கிரியா ஊக்கியாக உள்ளது. வங்கிகள், காப்பீட்டு நிறுவனங்கள், ஆயுதங்களை விற்பனை செய்யும் நிறுவனங்கள், மருத்துவமனைகள் வெற்றிகரமாக இயங்குவதற்கு காரணம், மக்களிடையே அவர்கள் ஏற்படுத்தும் பயம்தான். வீட்டில் பணம் வைத்திருப்போம். அதை எளிமையா

நோய்த்தொற்று கிருமிகளை எளிதாக அழிக்கும் தொழில்நுட்பம்!

படம்
வைரஸைக் கொல்லும் புதிய தொழில்நுட்பம்!  அண்மையில் இந்தியாவைச் சேர்ந்த தனியார் தியேட்டர் நிறுவனம், விளம்பரம் ஒன்றை வெளியிட்டிருந்தது. அதில் வரும் இந்தி சினிமா நடிகர் சல்மான்கான் ”தியேட்டர்களுக்கு செல்வது பாதுகாப்பானதா?” என்று கேட்பார். இதற்கு தியேட்டர் நிறுவனம் ”வைரஸ் நியூட்ரலைசர்  ஒன்றை நிறுவியுள்ளோம். இந்தியாவிலேயே முதல்முறையாக காற்றில் உள்ள வைரஸ்களைக் கூட இக்கருவி கொல்லும்” என நம்பிக்கையுடன் கூற விளம்பரம் நிறைவடைகிறது.  தியேட்டர்களில் நிறுவப்பட்டுள்ள புதிய வைரஸ் நியூட்ரலைசர் கருவியை கேரளத்தைச் சேர்ந்த ஆல்அபவுட் இன்னோவேஷன் எனும் நிறுவனம் தயாரித்துள்ளது. கருவியின் செயல்பாட்டைப் பார்த்த 22 நாடுகளிலும் இதனை வாங்க ஆர்வம் காட்டுகின்றனர்.  இந்திய ஆயில் கார்ப்பரேஷன், இந்தியன் ஏர்ஃபோர்ஸ், ஐக்கிய அரபு அமீரக மாளிகை, டிபி வேர்ல்டு, யுஎஃப்ஓ மூவீஸ் ஆகிய நிறுவனங்கள் ஆல் அபவுட் இன்னோவேஷன் நிறுவனத்தின் வாடிக்கையாளர்களாக உள்ளன.   தற்போது கர்நாடக அரசின் சுகாதாரத்துறை, 10 ஆயிரம் வைரஸ் பாதுகாப்பு கருவிகளை வாங்க பேச்சுவார்த்தை நடத்திவருகிறது. இக்கருவிக்கு, வோல்ஃப் ஏர் மாஸ்க் என்று பெயர். இதனை மாநிலத்திலுள்

கொரோனாவின் மூன்றாவது அலையில் குழந்தைகள் பாதிக்கப்பட அதிக வாய்ப்புள்ளது!

படம்
                டாக்டர் எஸ் பாலசுப்பிரமணியன் லான்செட் இந்தியா டாஸ்க் போர்ஸ் குழு மூன்றாவது அலை கொரோனா தொற்று குழந்தைகளை தாக்கும் என்று கூறப்படுகிறதே ? பத்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகளில் நான்கு சதவீதம் பேர் நோய்த்தொற்றுக்கு உள்ளாக வாய்ப்புள்ளது . இந்த எண்ணிக்கை விரைவில் 12 சதவீதமாக உயரலாம் . பிற நாடுகளிலும் இதேபோன்ற நிலைதான் காணப்படுகிறது . ஐரோப்பிய நாடுகளில் குழந்தைகளின் மீதான நோய் பாதிப்பு 9 சதவீதமும் , அமெரிக்காவில் பதினெட்டு வயதிற்குட்பட்ட குழந்தைகளில் 12. 4 சதவீதம் பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர் . ஐரோப்பாவில் நோயால் தாக்கப்பட்டவர்களின் வயது பதினைந்துக்கும் குறைவுதான் . இந்த தாக்குதலும் கூட முதல் , இரண்டாவது அலையில் ஏற்பட்டதுதான் . மூன்றாவது அலையில் இப்படி தாக்குதல் நடைபெறுமா என்று கூற முடியாது . தடுப்பூசி திட்டத்தை விரைவுபடுத்தினால் வயது வந்தோருக்கும் குழந்தைகளுக்கும் பெரியளவு பாதிப்பு நேராது என்று கூறலாம் . படுக்கைகளும் வெண்டிலேட்டர்களும் அதிகம் தேவைப்படுமா ? முதல் மற்றும் இரண்டாவது அலையில் பெரியளவு குழந்தைகள் பாதிக்கப்படவில்லை . ஆனால் இரண்டாவது அல

சிங்கப்பூரை முதலீட்டாளர்கள் தேடி ஓடுவது ஏன்?

படம்
          சிங்கப்பூரை தேடி ஓடும் பணக்காரர்கள் ! கிரேஸி ரிச் ஆசியன்ஸ் படம் வந்ததில் இருந்து பலருக்கும் சிங்கப்பூரைப் பற்றிய ஆசை வேர்விடத்தொடங்கிவிட்டது . ஏற்கெனவே சிங்கப்பூர் வேலைகளுக்கும் மருத்துவ சேவைகளுக்கும் புகழ்பெற்றது . இப்போது உலகிலுள்ள பல்வேறு பணக்காரர்களும் கூட தங்களது கடைகளையும் , வீடுகளையும் சிங்கப்பூரில் உருவாக்கிக்கொள்ள பரபரக்கிறார்ளள் . அதற்கேற்ப நிலத்தையும் வாங்கிப்போட்டு வருகிறார்கள் . பிற நாடுகளை விட சிங்கப்பூரில் தொழிலதிபர்கள் எளிதாக சென்று செட்டிலாக முடியும் . அங்கு அதற்கான உலகளவிலான முதலீட்டுத்திட்டங்களை உருவாக்கியுள்ளனர் . அந்த நாட்டில் 13.8 கோடி ரூபாய் வரையில் யார் முதலீடு செய்ய முன்வருகிறார்களோ அவர்களுக்கு அரசு பாஸ்ட் டிராக் முறையில் குடியிருப்பதற்கான உரிமைகளை வழங்கி வருகிறது . குறிப்பிட்டளவு சொத்துகள் அதாவது ஆயிரம் கோடிக்கும் மேல் இருந்தாலும் அரசின் சலுகைகள் உங்களுக்கு மழையாக பொழியும் . ஹாங்காங் , இப்போது சீனாவின் ஆதிக்கத்தில் ஒன்றிய நாடா , தனி நாடா என்று தவித்துக்கொண்டிருக்கிறது . எனவே இந்த நேரத்தில் அங்கு சென்று முதலீடுகளை செய்யவும

வயிற்றுக்குள் நுண்ணுயிரிகள் எப்படி வருகின்றன?

படம்
              வயிற்றுக்குள் பிரளயம் ! ஒருவரின் வயிற்றுக்குள் ஏராளமான நுண்ணுயிரிகள் வாழ்கின்றன . தினசரி வாழ்க்கையை பிரச்னை இல்லாமல் நடத்த நுண்ணுயிரிகள் உதவுகின்றன . மனித உடலில் முப்பது டிரில்லியன் செல்கள் இருக்கின்றன என்றால் வயிற்றில் மட்டும் முப்பத்து ஒன்பது டிரில்லியன் நுண்ணுயிரிகள் வாழ்கின்றன . இதில் வைரஸ் , பாக்டீரியா , பூஞ்சை ஆகியவை உள்ளடங்கும் . மிகச்சிறியவை எ்ன்பதால் உடல் எடையில் பாதிதான் வரும் . ஆனால் இதன் சக்தியை குறைத்து மதிப்பிட முடியாது . ஒவ்வொரு செல்களிலும் இருபது முதல் இருபத்தைந்தாயிரம் டிஎன்ஏக்கள் இதில் உள்ளன . நுண்ணுயிரிகளை இதோடு ஒப்பிடும்போது எண்ணிக்கை அதிகம் . நுண்ணுயிரிகளின் பரிணாம வளர்ச்சி வேகம் அதிகம் . மரபணுக்களை மாற்றிக்கொண்டு தனக்கு தேவையான செல்களில் புகுந்துகொண்டு செயல்படும் வேகம் இவற்றுக்கு அதிகம் . மனிதர்களின் உ

இந்தியாவின் அனைத்து முக்கியமான ஏஜென்சிகளும் தோற்றுவிட்டன! டாக்டர் டி ஜேக்கப் ஜான்

படம்
                இந்தியாவின் அனைத்து முக்கியமான ஏஜென்சிகளும் தோற்றுவிட்டன ! நேர்காணல் டாக்டர் டி ஜேக்கப் ஜான் இரண்டாவது அலையில் கொரோனா தொற்று அதிகரித்து வருவது உங்களுக்கு ஆச்சரியத்தை அளிக்கிறதா ? நோய்ப்பரவலின் வேகமும் , அளவும் எனக்கு ்ஆச்சரியத்தை அளிக்கிறது . இந்தியாவில் கடந்த ஆண்டு பாதித்த கொரோனா வைரஸிற்கு மாற்றாக டி 614 ஜி எனும் புதிய வகை மாறியுள்ளது . இந்த மாறியுள்ள வைரஸ் இரண்டாவது அலைக்கு காரணமா என்று தெரியவில்லை . மாறியுள்ள கொரோனா வைரஸ் இங்கிலாந்து , பிரேசில் , தென் ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளிலிருந்து வந்திருக்கலாம் . நோய்த்தொற்றை கண்டுபிடித்து தடுக்கும் பொறுப்பில் உள்ள ஐசிஎம்ஆர் , ஐஎன்எஸ்ஏ , சிஓஜி ஆகிய மூன்று அமைப்புகளும் இதில் தோல்வியைத் தழுவியுள்ளன . வைரஸ்களை கண்டுபிடிக்கும் ஆரா்ய்ச்சி அமைப்புகளையும் , ஆராய்ச்சியாளர்களையும் உருவாக்கத் தவறிவிட்டோம் . அதற்காகத்தான் இப்போது விலையைக் கொடுத்துக்கொண்டிருக்கிறோம் . பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு தேவையான ஆக்சிஜனைக் கொடுக்கவே நாம் தடுமாறி வருகிறோம் . மருத்துவ அடிப்படைக் கட்டமைப்பில் எங்கு நாம் தவறு செய்துள்ளோம்

அடுத்த பெருந்தொற்று எதன் மூலம் பரவ வாய்ப்புள்ளது? - ஆராய்ச்சி சொல்லும் உண்மை

படம்
                அடுத்த பெருந்தொற்றின் ஊடகம் ! அடுத்த பெருந்தொற்று எந்த பறவை அல்லது விலங்குகளிடமிருந்து பரவ வாய்ப்பிருக்கிறது என தொற்றுநோய் ஆராய்ச்சியாளர்கள் ஆய்வுகளை செய்து வருகின்றனர் . . கோவிட் -19 பெருந்தொற்று பரவிய வேகத்தில் மக்களை பலிகொண்டதோடு உலக நாடுகளின் பொருளாதாரத்தை ஆட்டம் காண வைத்துள்ளது . வைரஸ் , பாக்டீரியாக்கள் இல்லாத இடமே கிடையாது . ஒரு குண்டூசி முனையில் நூறு கோடி நுண்ணுயிரிகள் இருக்க வாய்ப்புள்ளது என்கிறார்கள் நோயியல் வல்லுநர்கள் . அடுத்த பெருந்தொற்று எந்த உயிரினம் மூலம் பரவும் என்பதைக் கண்காணிக்கும் பணியை ஆராய்ச்சியாளர்கள் தொடங்கியுள்ளனர் . இதன்மூலம் 2019/20 இல் ஏற்பட்ட பாதிப்புகளை முன்னமே கண்டறிந்து தடுக்க முடியும் . காடுகள் , மனிதர்களின் உடல்நலம் , சூழல் ஆகிய மூன்றுமே பின்னிப்பிணைந்தவை .. மக்கள்தொகை பெருக்கம் அதிகரிக்கும்போது காடுகளில் வாழும் விலங்குகளோடு மனிதர்கள் தொடர்புகொள்ள நேருகிறது . இதன்விளைவாக நோய்த்தொற்று எளிதாக பரவுகிறது . இதில் முழுக்க விலங்குகளை குற்றம்சாட்ட முடியாது . ஆனால் அவற்றின் தொடர்பு வழியாக நோய்த்தொற்று எளிதாக பரவும்

கோவிட் 19 பாதிப்பைக் கட்டுப்படுத்த எந்த மருந்தும் கிடையாது!

படம்
மருத்துவர் முத்து செல்ல குமார்.   கோவிட் 19 பாதிப்பைக் கட்டுப்படுத்த எந்த மருந்தும் கிடையாது! இன்று கோவிட் 19 நோய் பாதிப்பு பல நாட்டு மக்களுக்கும்  வேகமாக பரவி,  உயிரிழப்பையும் ஏற்படுத்தி வருகிறது. பாதிக்கப்பட்ட நோயாளிகளைத்  தனிமைப்படுத்தி கண்காணித்து சிகிச்சைகளை வழங்கும் பணிகளை உலக நாடுகள்  செய்யத் தொடங்கி வருகின்றன. வைரஸ் பாதிப்பு, அதன் சோதனைகள், சூழல் ஆகியவற்றைப் பற்றிய பல்வேறு வதந்திகள் உருவாக்கப்பட்டு வருகின்றன. இதுபற்றி மருத்துவரும், பேராசிரியருமான முத்து செல்ல குமாரிடம் பேசினோம்.  "கோவிட் - 19 நோய் பாதிப்பு உருவாக்கும் வைரஸிற்கு சார்ஸ் கோவி 2 (SARS Cov2) என பெயரிட்டுள்ளனர். இந்த வைரஸ்களை ஆராய்ச்சியாளர்கள் ஆல்பா, காமா, பீட்டா, டெல்டா என பிரித்து வகைப்படுத்தியுள்ளனர்.  இவற்றின் புரத அமைப்பு, செயல்பாடு பொறுத்து வகைப்படுத்தப்பட்டுள்ளது. வைரஸ் உறுதிப்படுத்தும் சோதனை இருமுறை செய்யப்படுகிறது.  இரண்டாம் முறை செய்யும் சோதனையில்,  வைரஸ் தொற்றை உறுதிப்படுத்துவார்கள். பெரும்பாலும் இதில் தவறு நேருவதில்லை.  வைரஸ்களை முற்றிலும் ஒழிக்கவென பொதுவாக எந்த மருந்துகளும் கிடையாது. அதனை அழிக்க, உற

300 நாட்கள் விடுமுறை எடுக்காமல் பணிக்கு வந்த தன்னார்வ உளவியல் மருத்துவர்! - கேரளத்தில் அர்ப்பணிப்பான மருத்துவர்

படம்
                  மனநலன் காத்த மருத்துவர் ! கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தைச்சேர்ந்த உளவியல் மருத்துவர் ஏ . எஃப் . நிதின் . இவர் அரசு பொதுமருத்துவமனையில் முந்நூறு நாட்கள் விடுமுறை எடுக்காமல் பணியாற்றி மருத்துவர் ஆவார் . நெய்யாண்டிக்கரையிலுள்ள பெரியான்டிவிலாவைச் சேர்ந்தவர் , கோவிட் -19 நோய்த்தொற்றின்போது மருத்துவமனையில் தன்னார்வலராக பணியாற்றத் தொடங்கினார் . கொரோனா பரவத்தொடங்கிய போது , இந்திய மாநிலங்கள் பலவற்றில் பிசிஆர் சோதனை முறை நடைமுறையில் இருந்தது . இதில் சோதனைக்கு மாதிரிகள் கொடுத்தபிறகு மூன்று நாட்கள் கழித்துதான் ஒருவருக்கு நோய்த்த்தொற்று உள்ளதா இல்லையா என்று தெரியவரும் . இதனால் தனக்கு கொரோனா உள்ளதா என்று தெரியாதவர்கள் கடும் மன அழுத்தத்திற்கு உள்ளானார்கள் . இவர்களுக்கு நிதின் காலை 7.30 மணி தொடங்கி மாலை 5.30 வரை ஆலோசனைகளை வழங்கி வந்தார் . பெரும்பாலும் நோயாளிகளுக்கும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக்கும் கூட பல்வேறு ஆலோசனைகள் தேவைப்பட்டுள்ளன . காரணம் , நோய் பற்றி தேவையற்ற வதந்திகள் வேகமாக பரவிவந்தன . நோயுற்றோரின் எண்ணிக்கையும் அதிவேகமாக அதிகரித்தன . இதனால் ந

ஆட்டோ டிஸ்போஸபிள் சிரிஞ்சுகள் பயன்பாட்டுக்கு வரவேண்டும்!

படம்
            டாக்டர் ஹெ்ஸ் ராட்டி நோயியல் மருத்துவர் இந்தியாவில் பயன்படுத்தப்படும் சிரிஞ்சுகள் பாதுகாப்பானவையா ? சிரிஞ்சுகளை மீண்டும் பயன்படுத்துவது இந்தியாவின் பொதுவான விருப்பம் . பொதுவாக சிறு நகரங்கள் , கிராமங்களில் இப்படித்தான் சிரிஞ்சுகளை பயன்படுத்துகிறார்கள் . பயன்படுத்திய சிரிஞ்சுகளை மருத்துவக்கழிவுகளை சரியான முறையில் டிஸ்போஸ் செய்வதும் கிடையாது . இந்த சிரிஞ்சுகள் மறுசுழற்சி செய்யப்பட்டு மீண்டும் சந்தையில் விற்கப்படுவது உண்டு . இதனால் ரத்தம் சார்ந்த நிறைய தொற்றுநோய்கள் ஏற்படுகின்றன . இதற்கு ஒரே தீர்வு மருத்துவக்கழிவுகளை சரியான முறையில் வெளியேற்றுவதற்கான சட்டங்களை உருவாக்கவேண்டும் . இப்படி இந்தியாவில் நடைமுறையில் உள்ள சட்டத்தை மருத்துவமனைகள் பின்பற்றி வருகின்றன . இப்படி என்னென்ன நோய்கள் ஏற்படும் ? எய்ட்ஸ் , மஞ்சள்காமாலை , ரத்தம் தொடர்பான பிற தொற்றுகள் ஏற்பட வாய்ப்புள்ளது . இதற்கு என்ன தீர்வு ? ஆட்டோ டிசேபிள் சிரிஞ்சுகளை பயன்படுத்தவேண்டும் . அனைத்து மாநில அரசுகளும் இதனை பயன்படுத்தவேண்டும் . உலக சுகாதார நிறுவனத்தின் செயல்பாட்டு விதிமுறைப்பட

குஜராத்தில் மர்மமாக பலியாகி வரும் சிங்கங்கள்!

படம்
  cc   மர்மமாக பலியாகும் ஆசிய சிங்கம் ! கடந்த ஜூன் மாதம் 10 ஆம் தேதி இந்தியப் பிரதமர் மோடி கடந்த ஐந்து ஆண்டுகளில் காடுகளிலுள்ள சிங்கங்களின் எண்ணிக்கை 151 ஆக அதிகரித்துள்ளது என்று கூறினார் . அவர் கூறாமல் விட்ட விஷயம் , நடப்பு ஆண்டின் ஜனவரி மாதம் வரை 92 சிங்கங்கள் பலியாகி உள்ளதுதான் . நாட்டில் வாழும் சிங்கங்களில் 40 சதவீத சிங்கங்கள் , கடந்த மே மாதத்தில் மட்டுமே பலியாகி உள்ளன என்பது அதிர்ச்சியான செய்தி . ஆசிய சிங்கங்களின் கணக்கெடுப்பு என்பது ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படுகிறது . பதினைந்தாவது முறையாக நடக்கவிருந்த கணக்கெடுப்பு பணி , கோவிட் -19 பெருந்தொற்று காரணமாக கைவிடப்பட்டிருக்கிறது . இந்தியாவில் ஆசிய சிங்கங்கள் குஜராத்திலுள்ள கிர் காடுகளில்தான் வாழ்கின்றன . இதுபற்றி தகவல்களை அறிய மே 29 அன்று சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம் இதற்கென தனி கமிட்டையை அமைத்தது . இதில் பெறப்பட்ட அறிக்கைகள் சிங்கங்களின் இறப்பை உறுதிசெய்துள்ளன .. ” இங்கு வாழும் சிங்கங்களை தாக்கிய வைரஸ் தீவிரமாக பரவியதால் சிங்கங்களின் மரணம் நிகழ்ந்துள்ளது நாங்கள் நோயுற்று சிகிச்சை பெற்றுவரும் இரண்டு சிங்

இறந்தவர்களின் உடல்களை என்ன செய்வது? மத்திய அரசு தடுமாற்றம்

படம்
டெம்போ மேகசின் விதிகள் இயற்றப்படாத அபாயம்! கொரோனாவால் இறந்தவர்களின் எண்ணிக்கை உலகளவில் அதிகரித்து வருகிறது. இந்தியாவில் தற்போது மூன்று பேர் இதற்கு பலியாகியுள்ளனர். இறந்தவர்களின் உடல்களை எப்படி அப்புறப்படுத்துவது என்பதற்கு எந்த கொள்கைகளும் அரசிடம் இல்லை. தற்போது எய்ம்ஸ் இதற்கான விதிமுறைகளை வெளியிட்டுள்ளது.  கொரோனாவில் இறந்தவர்களை பிளாஸ்டிக் பேக்கால் மூடிவிடவேண்டும். அவர்களின் உடலிலுள்ள நீர் வெளியேறாமல் இருப்பதை உறுதி செய்யவேண்டும். இறந்த உடல்களை எரிக்கவேண்டும். புதைக்க கூடாது. இச்செயல்களை செய்பவர்கள் அரசு அறிவுறுத்திய பாதுகாப்பு உபகரணங்களை அணிந்திருப்பது முக்கியம்.  உலகம் முழுக்க ஆறாயிரம் பேர் கொரோனாவால் இறந்துபோயுள்ளனர். இதில் இந்தியாவில் மூன்று பேர் என்று சந்தோஷப்பட முடியாது. காரணம், மக்கள்தொகை அதிகமுள்ள நாடான இந்தியாவில் சீனா அளவுக்கு விழிப்புணர்வு கிடையாது. முன்னோர்கள் எல்லாம் முட்டாள்கள் அல்ல என்று அலட்சியமாக இருப்பவர்களே அதிகம். மத்திய அரசு இதனை தாமதமாக புரிந்துகொண்டாலும் இதற்கான விதிமுறைகளை அமைக்க குழுவை அமைத்துள்ளது.  டில்லி மேற்குப்பகுதியிலுள்ள ஜானக்புரியைச்