இடுகைகள்

வீடியோ லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

தேர்தலில் செல்வாக்கு செலுத்தும் செயற்கை நுண்ணறிவு!

படம்
  செயற்கை நுண்ணறிவு காலத்தில் பரவும் போலிச்செய்திகளும், நேர்மையான தேர்தலும் 2018ஆம்ஆண்டு ஃபேஸ்புக் நிறுவனம், கேம்பிரிட்ஜ் அனாலிட்டிகா என்ற நிறுவனத்தோடு செய்த ஊழல் அனைவரும் அறிந்ததே. ஒருவர் எழுதும் பதிவுகளை வைத்து அவர் எந்த கட்சிக்கு வாக்களிக்கிறார் என அல்காரிதம் மூலம் கணித்தனர். இதைப் பற்றி மக்களுக்கு எந்த கவனமும் இல்லாமல் இரையாக மாட்டிக்கொண்டனர். இதில் பயன்பெற்றது, உலகம் முழுக்க உள்ள அரசியல் கட்சிகள்தான். இலவசம் என்ற பெயரில் ஃபேஸ்புக் உலகம் முழுக்க பரவலாகி அதில் இணைந்த பயனர்களாகிய மக்களையே நல்ல விலைக்கு விற்ற கதை அது.  செயற்கை நுண்ணறிவு மூலம் உருவாக்கப்படும் போலிச்செய்திகள், வீடியோக்களை ஒருவர் உண்மையா, பொய்யா என்று கண்டுபிடித்து தடுப்பது உண்மையில் கடினமான ஒன்று. அரசியல் கட்சிகளுக்கு எந்த நிறுவனத்தின் செயற்கை நுண்ணறிவு மாடல் உதவும் என்று தெரியவில்லை. ஓப்பன் ஏஐ, கூகுள், அமேஸான் ஆகிய பெருநிறுவனங்களே பந்தயத்தில் முன்னணியில் உள்ளன.  வெறுப்பு, பிரிவினைவாத கருத்துகள் சமூக வலைதளத்தில் வேகமாக பரவுகின்றன. இதன் அடிப்படையில் போலிச்செய்திகளை வைத்தே கூட ஒரு கட்சி தேர்தலில் வெல்லலாம். செயற்கை நுண்ணற

டீப்ஃபேக் வீடியோக்கள் ஏற்படுத்தும் பதற்றம்!

படம்
  சில மாதங்களுக்கு முன்னர் சினிமா நடிகையான ராஷ்மிகாவின் டீப்ஃபேக் வீடியோ ஒன்று வெளியானது. வீடியோ என்றதும் ரெட் ட்யூப், ஜாவ் குரு போல இருக்கும் என எதிர்பார்க்கவேண்டாம். கருப்பு நிற பனியன் அணிந்த பெண் லிஃப்டில் ஏறுகிறார். அவரின் மார்பகங்கள் வெளியே தெரியும்படியான உடை. அவர் வேறு யாருமல்ல ராஷ்மிகாதான். இந்த வீடியோ இணையத்தில் பரவியதும். அது தான் அல்ல என்று நடிகை சமூக வலைத்தளத்தில் தனது எதிர்ப்பை பதிவிட்டார்.  ஒருவரின் அனுமதி இல்லாமல் அவரின் புகைப்படத்தை பிறர் பயன்படுத்தக்கூடாது. அப்படி பயன்படுத்த வேண்டுமெனில் அதற்கு அவர் குறிப்பிட்ட பணத்தைக்கூட கொடுக்க நேரிடலாம். இதெல்லாம் தொடர்புடைய நபர் சார்ந்த விஷயம். விவகாரம். இதில் பிறர் கருத்து கூற பெரிதாக ஏதுமில்லை. அனிமல் என்ற இந்தி திரைப்படம் வெளிவருவதற்கு முன்னர்தான் டீப்ஃபேக் வீடியோ வெளியானது. அந்த படத்தில் ராஷ்மிகா, வாங்கிய காசுக்கு ஏற்ப நாயகனுடன் தெறமை காட்டியிருந்தார். அதைப் பார்த்தவர்கள் டீப்ஃபேக் வீடியோவே பரவாயில்லை என கமெண்ட் அடித்தனர். ஒருவரின் புகைப்படம், வீடியோவைப் பயன்படுத்த அனுமதி பெறுவது அவசியம். காப்புரிமை போன்றே இதை அணுக வேண்டும்.  க

புதுமையான சிந்தனையால் சாதனை படைத்த தொழில்நிறுவனங்கள், தொழிலதிபர்கள் - டைம் வார இதழ்

படம்
  விர்டா ஹெல்த் கேரோஸ் ஜெனரேஷன் ஜீனியஸ் பப்பாயா குளோபல் ரன்வே புதுமையான சாதனை படைத்த தொழிலதிபர்கள் தி நார்த் ஃபேஸ் சர்குலர் குளோத்திங் ஆடைக்கழிவுகளைத் தவிர்க்கும் புதுமையான முறை உலகம் முழுக்க வேகமான முறையில் உடைகளை விற்கிறார்கள். அதை வாங்கும் மக்கள் உடைகளை பலமுறை அணிவது குறைவு. அதை விரைவிலேயே நாகரிகம் இல்லாமல் போய்விட்டது என்று கூறி தூக்கி எறிந்துவிடுகிறார்கள். இதை தி நார்த் ஃபேஸ் என்ற நிறுவனம் மாற்றுகிறது. பயன்படுத்திய துணிகளை மக்களிடம் இருந்து வாங்கி அதை சற்று மேம்படுத்தி மீண்டும் விற்கிறது. இதன்மூலம் உடைகளின் வாழ்நாள் அதிகரிக்கிறது. குப்பையாக நிலத்தில் தேங்குவது தவிர்க்கப்படுகிறது. தி நார்த் ஃபேஸின் தலைவர் நிக்கோல் ஓட்டோ. தெராபாடி வலியைக் குறைக்கும் கருவி வலியில் இருந்து நிவாரணம் தசையில் ஏற்படும் வலியைக் குறைக்கும் கருவி. தொடக்கத்தில் விளையாட்டு வீரர்கள், மருத்துவர்கள் என்றே தொழில்ரீதியாக பயன்பட்டது. இப்போது இக்கருவியைப் பயன்படுத்துவர்களின் எண்ணிக்கை கூடியுள்ளது. கடந்த ஆண்டிலிருந்து இன்றுவரை மட்டுமே பதினைந்து பொருட்கள் உருவாக்கப்பட்டு சந்தைப்படுத்தப்பட்டுள்ளன. தங்களத

வீடியோ எடுத்து லட்சம் சம்பாதிக்க முயன்று கம்யூனிச இயக்கத்திடம் மாட்டிக்கொள்ளும் நாயகன்! - லைக் ஷேரிங் அண்ட் சப்ஸ்கிரைப்

படம்
  லைக் ஷேரிங் அண்ட் சப்ஸ்கிரைப் இயக்கம் மெர்லபா காந்தி விப்லா என்ற இளைஞர், யூட்யூப் சேனல் ஒன்றை நடத்துகிறார். பிறரது போனைப் பிடுங்கி சப்ஸ்கிரைப் செய்யும் நிலை. அவர் தனியாக சில இடங்களுக்கு பயணித்து யூட்யூப் வீடியோ செய்ய நினைக்கிறார். அப்படி செய்ய நி னைத்து மாவோயிஸ்ட்டுகள் உள்ள காட்டுக்கு சென்று பல்வேறு பிரச்னைகளை சந்திக்கிறார். அதிலிருந்து எப்படி மீண்டார் என்பதுதான் கதை.   படத்தில் இயக்குநர் மெர்லபா காந்தி, மாவோயிஸ்ட் இயக்கம் அதன் கொள்கை, அரசு, அதிலுள்ள அதிகாரிகளால் அமைதிப் பேச்சுவார்த்தை எப்படி தகர்ந்துபோகிறது என்பதையெல்லாம் பேசுகிறார். படத்தில் கம்யூனிஸ்ட் ஒருவரின் மகன்தான் விப்லா. அவருக்கு அப்பாவின் கொள்கையை விட காசுதான் முக்கியம். எனவே யூட்யூப் சேனல் தொடங்கி அப்பாவிடம் ஒரு லட்சம் காசு வாங்கி ஊர்சுற்றி வீடியோ போட்டு காசு சம்பாதிப்பதுதான் நோக்கம் இந்த நேரத்தில் அவர் அவரைப் போலவே வீடியோ பதிவிடும் இன்னொரு நபரைப் பார்க்கிறார். அவர்தான் வசுதா. டிஜிபியின் பெண்.   டெல்லியில் படிக்கும் அவளை சீண்டிவிட்டு கமெண்டுகளைப் போடுகிறான். இதில் கோபமாகும் வசுதா, ஆந்திரப் பிரதேசத்தின் ஆரகு காட்டு

உலகம் முதல் உள்ளூர் பிரச்னை வரை உட்கார்ந்து பேசுவோமா? - பிரேக் தி டிவைட் அமைப்பு பற்றி தெரிஞ்சுக்கோங்க

படம்
  அபய்சிங் சாச்சல் தனது சகோதரருடன்... உலக பிரச்னைகளை உட்கார்ந்து பேசும் பள்ளி மாணவர்கள்!  உலகில் ஏற்பட்டு வரும் அனைத்து பிரச்னைகளுக்கும் தீர்வுகள் உண்டு. இதற்கு பிரச்னையை எதிர்கொள்ளும் தரப்புகள் ஒன்றாக அமர்ந்து பேசவேண்டும். இந்த வகையில் உலக நாடுகளிலுள்ள பள்ளி மாணவர்கள், சமூகப் பிரச்னைகளைப் பற்றி விவாதிக்க உருவானதுதான் பிரேக் தி டிவைட் என்ற நிகழ்ச்சி. இதனை பிரேக் தி டிவைட் (Break the divide) என்ற தன்னார்வ அமைப்பு நடத்துகிறது. 2016ஆம் ஆண்டு, கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியாவைச் சேர்ந்த அபய்சிங் சாச்சல் என்ற பள்ளி மாணவர், இந்த அமைப்பைத் தொடங்கினார்.  அபய்சிங் சாச்சல், பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தார். அப்போது அபய்யின் சகோதரர் சுக்மீத், ஆர்க்டிக் பகுதிக்கு சென்றிருந்தார். அபய்சிங், தனது சகோதரர் சுக்மீத்துடன் வீடியோ அழைப்பு வழியாக பேசத் தொடங்கினார். இருவரும் தொடக்கத்தில் டிவி நிகழ்ச்சி, திரைப்படம் என்று தான் பேசினார்கள். பிறகு மெல்ல சமூகப் பிரச்னைகளைத் தீவிரமாகப் பேசி விவாதிக்கத் தொடங்கினார்.  அபய்சிங் சாச்சல், படித்த சீகுவாம் பள்ளி மாணவர்களும் விவாதத்தில் இணைந்தனர். அவர்கள் ப

அந்தரங்க ரகசியங்கள் உடைபட நண்பர்கள் கூட்டத்தில் நடைபெறும் கொலை! 12 Th Man - ஜீத்து ஜோசப்

படம்
  12th Man மோகன்லால் (நடிகர், தயாரிப்பு) இயக்கம் - ஜீத்து ஜோசப்  கல்லூரி நண்பர்கள் பதினொரு பேர், ரிசார்ட் ஒன்றுக்கு வருகிறார்கள். விரைவில் திருமணம் செய்யப்போகும் நண்பன் கொடுக்கும் பார்ட்டி அது. அங்கு அவர்கள் ஒரு விளையாட்டை விளையாடுகிறார்கள். அது வினையாக அதன் விளைவாக ஏற்படும் குழப்பமும், கொலையும் அதுதொடர்பான விசாரணையும்தான் படம்.  பதினொரு நபர்களை படத்தின் டைட்டில் கார்ட் போடும்போதே அறிமுகப்படுத்திவிடுகிறார்கள். இதனால் கதையில் இவர்களைப் பற்றி தனியாக சொல்லவேண்டிய அவசியம் இல்லாமல் போய்விடுகிறது. கல்லூரி கால நண்பர்களாக இருந்தாலும் ஒருவருக்கொருவர் இன்னொருவர் மீது புகைச்சலும் பொறாமையும் இருக்கிறது இதனை வாய்ப்பு கிடைக்கும்போது வெளிப்படுத்துகிறார்கள். முக்கியமான மேத்யூ, ஷைனி ஆகியோர் தான் படத்தை நகர்த்திச்செல்லும் முக்கியமான பாத்திரங்கள்.  மேத்யூ, ஃபிடா ஆகியோர் கல்லூரி கால தோழர்கள் மேலும் தொழிலும் ஒன்றாக் இருக்கிறார்கள். இவர்களை ஷைனி ஒன்றாக இருக்கிறார்கள், பழகுகிறார்கள் என எப்போது சந்தேகப்பட்டுக்கொண்டே இருக்கிறார். தேள் போல கடினமான வார்த்தைகளை எளிதாக பேசுகிறார்.  இதில் ஃபிடா திருமணமாகி விவாகரத்த

இணையத்தில் செல்லப்பிராணி வீடியோக்கள் உங்களுக்குப் பிடிக்குமா?

படம்
  நாய், பூனை வீடியோக்களை இணையத்தில் பார்ப்பீர்கள். பொதுவாக சீரியசாக பொருளாதார கட்டுரைகளை எழுதும் எங்கள் இதழ் ஆசிரியர் கூட தன்னை ரிலாக்ஸ் செய்துகொள்ள இணையத்தில் நாய்களைப் பற்றிய வீடியோக்களைத் தேடி பார்ப்பது வழக்கம். ஆனால் நமக்கு நன்றாக இருக்கிறது ஆனால் இப்படி வீடியோக்களை எடுப்பதற்காக நாய்களை சித்திரவதை செய்வது நியாயமா என்று விலங்கு நல அமைப்புகள், விலங்கு நேசர்கள் குழுவினர் குரல் எழுப்புகின்றனர். உச்சமாக ஈரோடு மாவட்டம் விஜயமங்கலத்தில் எழுத்தாளர் வா.மு. கோமு கூட யூட்யூப் வீடியோவுக்காக நாயை சித்திரவதை செய்யும் சிலரைப் பற்றிய புகைப்படத்தை பேஸ்புக்கில் பகிர்ந்திருந்தார்.  இதைப்பற்றிய சில தகவல்களைப் பார்ப்போம்.  இணையத்தில் ஆயிரக்கணக்கிலான நாய், பூனை குறும்பு வீடியோக்கள் கிடைக்கின்றன. இதனைப் பார்ப்பவர்களின் எண்ணிக்கை லட்சக்கணக்கில் உள்ளது.  யூட்யூபில் நாய், பூனைகளை கொடுமைப்படுத்தும் வீடியோக்களுக்கு இடமில்லை என்று கூறப்பட்டுள்ளது. ஆனால் இதை எப்படி தடுப்பது என்பது பற்றி தெளிவாக தெரியவில்லை. இதனை நடைமுறைப்படுத்துவதும் கடினம்.  2021ஆம் ஆண்டு சாரிட்டி இன்டர்நேஷனல் கேட் கேர் அமைப்பு, இதுபோல வீடியோக்

டான்ஸ் வீடியோக்கள் மூலம் சாதிக்கும் பழங்குடி தம்பதி! - இது மகாராஷ்டிர காதல் பாட்டு!

படம்
 மகாராஷ்டிரத்தில் கேட்கும் காதல் பாட்டு! யூட்யூப் வந்தபிறகு இந்தியர்களின் வாழ்க்கை நிறைய  மாறுதல்களை அடைந்துவிட்டது. அதில் வரும் வீடியோக்களைப் பார்த்து தொழில்முனைவோர் ஆவது முதல், பொழுதுபோக்காக அதில் நடனம் கற்று அப்படியே இமிடேட் செய்து ஆடி பிறரை மகிழ்விப்பது வரை தினுசு தினுசான விஷயங்களை மக்கள் செய்து வருகிறார்கள். இப்படி செய்து வருபவர்களின் வீடியோக்கள் மக்களின் கவனத்தைக் கவருகின்றன. இதனால், கூகுள் நிறுவனம், யூட்யூப் சேவைகளின் பங்களிப்பாளர்களுக்கு மாதம் குறிப்பிட்ட தொகை என வங்கிக்கணக்கில் செலுத்தி ஊக்குவிக்கிறது. இதற்கான தூண்டுதலை முதலில் உருவாக்கியது சீன நிறுவனமான டிக்டாக் தான். பிறகு வீமேட் என்ற சேவைகள். இப்போது யூட்யூப் தருவதை விட அதிகளவு தொகையை டிக் டாக் வீடியோக்கள் பதிவு செய்தவர்கள் பெற்றனர். பிறகு அது தடைசெய்யப்பட்டவுடன் பலரும் வேறு வீடியோ சேவைகளுக்கு மாறினர். உள்ளூரிலும் மோஜ், டகாடக், இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் என முயற்சிகள் வரிசை கட்டின.  பாஸே பர்தி எனும் பழங்குடி இனத்தைச் சேர்ந்தவர், பவார். இவர், மகாராஷ்டிரத்தில் ஜாம்டே கிராமத்தில் வாழ்கிறார். இவர் டிக் டாக்கில் தனது இரண்டு மனைவிகளான

எப்போதும் இணைந்திருக்கச் செய்யும் தொழில்நுட்பங்கள்!

படம்
  ரிங் ஜென் 4 இது நான்காம் தலைமுறை வீடியோ டோர்பெல். வைஃபை வசதியும் பிற அம்சங்களும் நிறைய மேம்பட்டிருக்கிறது. யார் உங்கள் வீட்டுக்கு வருகிறார்கள். கதவை தட்டுபவர்கள் யார், பிறர் வீட்டுக்கு செல்பவர்கள் என நிறைய விஷயங்களை கண்காணிக்க முடியும். மேலும் காலிங்பெல் அழுத்துபவர்களுக்கு சொல்ல நான்கு வகையான ப்ரீசெட் பதில்களும் உள்ளன. விலை 16,900 எக்கோ ஷோ 10 இது மூன்றாம் தலைமுறை கருவி. 10.1 இன்ச் திரை கொண்ட சாதனம். இதனால் இதில் எளிதாக பிறருடன் பேச முடியும். ஸ்ட்ரீமிங் வீடியோக்களை பார்க்க முடியும். பிற சாதனங்களுடன் இணைத்து பயன்படுத்தலாம்.   விலை 24,999 ஃபர்போ டாக் கேமரா இது நாய்க்கான கேமரா. இதன்மூலம் நாம் வீட்டில் இல்லாதபோது கூட நாய்க்கு உணவு அளிக்க முடியும். இதில் நாயை கவனிப்பதோடு ஆடியோவும் உண்டு. இதில் உள்ள ஸ்னாக்ஸ் டிஸ்பென்சர் மூலம் நாய்க்கு உணவு அளிக்க முடியும். இதில் அலெக்ஸாவை இணைத்தால் போதுமானது. படத்தின் தரமும் சிறப்பாக உள்ளது.  விலை 26,500 ஆர்லோ எசன்ஷியல் ஸ்பாட்லைட் கேமரா வயர்லெஸ் முறையில் இயங்கும் பாதுகாப்பு கேமரா. வைஃபையில் இணைத்தால் போதும். உங்களுக்கு சொந்தமாக சொத்துக்களை எளிதாக பராமரித்து

கண்ணாடி மூலமே வீடியோக்களை எடுக்க வழி செய்யும் பேஸ்புக் கண்ணாடி! - ஸ்டோரிஸ் கண்ணாடி

படம்
  கடந்த செப்டம்பர் 2021 அன்று பேஸ்புக்கும், ரேபான் நிறுவனமும் இணைந்து ஸ்மார்ட் கிளாஸ் திட்டம் ஒன்றை அறிவித்தனர். இந்த கண்ணாடியை அணிந்து படம் எடுக்க, பாடல்களை பதிவு செய்ய, வீடியோக்களை எடுக்க பாடல்களை கேட்க முடியும்.  ஸ்டோரிஸ் என்ற கண்ணாடி வெளியானபோது, அதன் தகவல் பாதுகாப்பு பற்றி பல்வேறு சந்தேகங்களை எழுப்பினார்கள். பயனர்களின் விருப்பப்படி வீடியோக்களை படங்களை எடுக்கலாமா, இதனை கட்டுப்படுத்துவது யார், இதனை பிற சமூக வலைத்தளங்களிலும் பயன்படுத்துவார்களா என நிறைய கேள்விகள் உருவாயின.  இந்த கண்ணாடியில் இரண்டு கேமராக்கள் இருக்கும். ஸ்பீக்கர்கள் இருக்கும். மூன்று மைக்குகளும் கூட. இதனை குரல் மூலம் கட்டுப்படுத்தலாம். ஹலோ பேஸ்புக் சடாரென வீடியோ எடு என்றால் கண்ணாடி இயங்கத் தொடங்கும். நன்றாக சார்ஜ் செய்த கண்ணாடி மூலம் 30 நொடி நீளமுள்ள 50 வீடியோக்களை எடுக்கலாம் என்று பேஸ்புக் கூறியுள்ளது.  இதில் எடுக்கும் படங்கள் ஸ்மார்ட்போனில் எடுக்கும் புகைப்படங்களை விட குறைந்த தரமே கொண்டவை. வீடியோக்களை எடுத்தபிறகு அதனை எடிட் செய்து பேஸ்புக்கில் போடலாம். மெட்டாவின் பிற கம்பெனி தளங்களிலும் பதிவு செய்யலாம். கண்ணாடியை ஸ்ட

ராஜஸ்தான் அரசு பள்ளியை டிஜிட்டல் மயமாக்கும் ஜினெந்தர் சோனி! - மாற்றம் பெறும் அரசுப்பள்ளிகள்

படம்
  2019 ஆம் ஆண்டு ஜினெந்தர் சோனி தன்னுடைய வேலையைக் கைவிட்டார். வேலையை விடுவது பெரிய விஷயமல்ல. அதில் அவர் மாதம் ஐந்து லட்சம் ரூபாய் சம்பாதித்துக்கொண்டிருந்தார். ஆன்லைன் பயிற்சி நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வந்தார். இப்போது அதே மாதிரியை பின்பற்றி ராஜஸ்தானில் ஜூன்க்ஹூனு எனும் மாவட்டத்தில் அரசு பள்ளியை சிறப்பாக்கியிருக்கிறார்.  பொதுமுடக்க காலத்தில் மாணவர்களுக்கு ஆன்லைன் கல்வியை  வழங்க ராஜஸ்தான் அரசு யோசித்தது. அதில்தான் ஜினெந்தர் சோனி உள்ளே வந்தார்.  பல்வேறு கார்ப்பரேட் நிறுவனங்கள், தனது சொந்த நிதி என எட்டு லட்சம் ரூபாயை செலவழித்து  40 ஆசிரியர்களை வைத்து வீடியோக்களை உருவாக்கி இருக்கிறார். வீடியோக்கள் மேல்நிலை வகுப்புகளை படிக்கும் மாணவர்களுக்கானவை.  ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், ஜினெந்தரின் செயல்பாடுகளைப் பார்த்து ஆன்லைனில் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்க முடிவு செய்துள்ளார். இப்போது இப்படி பயிற்சி எடுக்க இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் விண்ணப்பித்துள்ளனர். இதற்கான ரெஸ்யூம் கூட வீடியோக்கள்தான்.  முதலில் வீடியோக்களை உருவாக்கும் பணி ஆறிலிருந்து பனிரெண்டாம் வகுப்பு வரை தொடங்

கல்வி நிறுவனங்கள் ஆசிரியர்களின் கையிலிருந்து அரசியல்வாதிகளின் கைகளுக்கு போய்விட்டது! அமர்த்தியாசென்

படம்
  அமர்த்தியா சென் பொருளாதார வல்லுநர் பெருந்தொற்றுகாலம் உங்களது கல்வி கற்பித்தலை எப்படி பாதித்துள்ளது? நான் நேரடியாக மாணவர்களுடன் உரையாடி பாடம் கற்றுத்தருவதை மட்டுமே விரும்புகிறேன். ஆனால் பெருந்தொற்று காரணமாக அனைத்தும் ஜூமில்தான் நடைபெறுகிறது. இதனால் என்ன மாற்றம் ஏற்பட்டுள்ளது  என்று தெரியவில்லை. இப்போது நான மாசாசூசெட்ஸ் வீட்டிலேயே தங்கும்படி ஆகிவிட்டது. சாந்தி நிகேதனிலுள்ள எனது சிறிய வீட்டிற்கு நான் செல்ல விரும்புகிறேன்.  உங்களது நூலில் இளமைக்காலத்தில் நீங்கள் செய்த பயணம், பார்த்த ஆறுகள் என பல்வேறு விஷயங்களை பகிர்ந்துகொண்டிருக்கிறீர்கள். அறிவுப்பூர்வமான பயணமாக இக்காலகட்டம் அமைந்ததா? சாந்தி நிகேதன் எப்போதும் அமைதியாக இருக்கும். எனது ஆளுமைக்கு அது உதவியது. அங்கு மாணவர்கள் சுயமாக கற்றுக்கொள்ளும் சூழலை உருவாக்கினார்கள். தேர்வில் முன்னணியில் வரவேண்டும் என்பது முக்கியமல்ல. டாகாவில் உள்ள செயின்ட் கிரிகோரி பள்ளியில் மாணவர்கள் தேர்வில் அதிக மதிப்பெண்களை பெற ஊக்குவித்தனர். எனக்கு நான் படித்த இரண்டு பள்ளிகளுமே பிடிக்கும்தான் என்றாலும் சாந்தி நிகேதன் கொடுத்த சுதந்திரம் உலகை அறிய உதவியது.  அங்குள்ள

சுவாரசியமாக கத்துக்கலாம் வாங்க! - யூடியூப் இருக்க கவலை என்ன?

படம்
  RealLifeLore நம் வாழ்க்கையில் இப்படியெல்லாம் கேள்வி கேட்கமுடியுமா என்ற அளவில் ஏராளமான கேள்விகளைக் கேட்டு பதில் சொல்கிறது இந்த சேனல். 29 லட்சம் பேர் பின்தொடரும் இந்த சேனலில், இருவாரங்களுக்கு ஒருமுறை வீடியோக்களைப் பதிவிடுகின்றனர். மூன்றாம் உலகப்போரில் பாதுகாப்பான இடம் எது, பூமியை எவ்வளவு ஆழம் தோண்டலாம், நம்மால் கேட்க முடிந்த அதிகபட்ச ஒலி அளவு என கேள்விகளைக் கேட்டு வியக்க வைக்கின்றனர்.  https://www.youtube.com/channel/UCP5tjEmvPItGyLhmjdwP7Ww/featured CrashCourse தமிழ், ஆங்கிலம் என படித்தாலும் இதைத் தாண்டிய பல விஷயங்களைப் படிக்கும் ஆர்வம் மாணவர்கள் பலருக்கும் உண்டு. உதாரணமாக, நாடகம், புராணம், ஊடகம், அறிவியல் வரலாறு என பல்வேறு படிப்புகள் என கற்றுத் தருவது இந்த யூடியூப் சேனலின் சிறப்பு. அமெரிக்கர்களான நிக்கோல் ஸ்வீனி, கேரி அன்னே பில்பின், மைக் ருக்னெட்டா ஆகியோர் பாடங்களை சுவாரசியமாக கற்றுத் தருகின்றனர். 9 லட்சத்திற்கும் மேற்பட்டோர் இந்த சேனலைப் பின்தொடர்கின்றனர் . https://www.youtube.com/user/crashcourse/featured Mike Boyd  மாதம் அல்லது வாரம் தோறும் புதிய சவாலை ஏற்று சாதிப்பது மைக்கின் சி

பொறியியலில் தோற்றுப்போனவருக்கு சிறந்த ஆசிரியர் பரிசு!

படம்
  பொறியியலில் தோற்றுப்போனவருக்கு சிறந்த ஆசிரியர் பரிசு ! கடந்த டிசம்பர் 3 அன்று ரஞ்சித் திசாலே குளோபல் டீச்சர் பிரைஸ் எனும் முக்கியமான அங்கீகாரத்தை பெற்றிருக்கிறார் . அதைவிட முக்கியம் , தான் பெற்ற ஆசிரியர் பரிசுக்கான தொகையை அவரோடு போட்டியிட்ட பிறருக்கும் பகிர்ந்து அளிக்க முன்வந்துள்ளார் .    2006 ஆம் ஆண்டு பொறியியல் படித்துக்கொண்டிருந்தார் திசாலே . ஒருகட்டத்தில் படிப்பில் நம்பிக்கை இழந்து அதனை கைவிட்டு கல்வி தொடர்பான டிப்ளமோ ஒன்றுக்கு விண்ணப்பித்தார் . அதற்கும் கூட அவராக விண்ணப்பிக்கவில்லை . ஓய்வு பெற்ற பள்ளி முதல்வரான மகாதேவ் தேசாய் , அதாவது அவரது அப்பாதான் மகன் வீட்டில் சும்மாயிருப்பதை விரும்பாமல் அப்ளை செய் என்று ஊக்கம் கொடுத்து இருக்கிறார் . திசாலேவுக்கு டிப்ளமோ படிப்பின்போது மறக்கமுடியாத இருநபர்களின் அறிமுகம் நடந்தது . ஒருவர் , அமர் நல்வாடே , மற்றொருவர் ராஜேந்திரன் மானே . நல்வாடே ஆசிரியர் மாணவர்களுக்கு எப்படி தோழனாக இருந்து கற்றுக்கொடுக்கவேண்டும் என்று கற்றுத்தந்திருக்கிறார் . இதுதான் அவரை படிப்பில் நிலையாக நிறுத்தி படிக்க வைத்திருக்கிறது .