இடுகைகள்

நுண்ணுயிரிகள் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

வயிற்றில் உள்ள நுண்ணுயிரிகளை செம்மை செய்தாலே நோய்களை குணப்படுத்தலாம்! - ஜெனிஃபர் டூட்னா

படம்
  நேர்காணல் ஜெனிஃபர் டூட்னா, பயோகெமிஸ்ட் எனக்கு நீங்கள் செய்யும் புரோஜெக்ட் மீது ஆர்வமாக உள்ளது. மனிதர்களின் வயிற்றில் மாறுதல் செய்யப்பட்ட பாக்டீரியாக்களை உருவாக்க முயன்று வருகிறீர்கள். நான் இதை முதலில் கேள்விப்பட்டபோது அது மிகவும் சிக்கலான முறை என்று நினைத்தேன். மனித உடலில் உள்ள செல்களை விட நுண்ணுயிரிகளின் எண்ணிக்கை அதிகம். முதலில் நுண்ணுயிரிகளை ஆய்வகத்தில் உருவாக்கி வளர்த்து ஆய்வு செய்து வந்தனர். ஆனால் அதன்பிறகுதன் அவை பல்வேறு இடங்களிலும் உருவாகி வளர்வது தெரிய வந்தது. நமது உடலில் உள்ள நுண்ணுயிரிகளை பற்றி மட்டுமே ஆய்வாளர்கள் கவனம் செலுத்தினர். அவற்றின் உலகம் சற்று வித்தியாசமானது.  செரிமானம், உடல்பருமன், மன அழுத்தம், பதற்றகுறைபாடு என ஏராளமான சிக்கல்களுக்கு நுண்ணுயிரிகளை பயன்படுத்தலாம் என யோசனை கூறப்படுகிறது. நீங்கள் குழந்தைக்கு வந்த ஆஸ்துமாவை எப்படி குணப்படுத்தினீர்கள்? ஆஸ்துமா என்பது முக்கியமான நோய். நாங்கள் செய்யும் சிகிச்சை, யோசனை என இரண்டு விஷயங்களிலும் மேம்பாடு வேண்டுமென நினைத்தோம். அமெரிக்காவின் யுசி சான் பிரான்சிஸ்கோவைச் சேர்ந்த சூ லின்ச், நோயாளியின் வயிற்றில் உள்ள நுண்ணுயிரி ஒன

பூமிக்கு நுண்ணுயிரிகள் அவசியம்! - ராபர்ட்டோ கோல்ட்டர்

படம்
  நேர்காணல் ராபர்ட்டோ கோல்ட்டர் அமெரிக்காவிலுள்ள நுண்ணுயிரியல் துறையில் பேராசிரியராக பணிபுரிகிறார். மனிதர்களின் வாழ்க்கை, சூழலின் பல்லுயிர்த்தன்மைக்கு நுண்ணுயிரிகளின் பங்கு பற்றி ஆராய்ச்சி செய்து வருகிறார்.  பூமியிலுள்ள உயிரினங்களுக்கு நுண்ணுயிரிகள் எதற்கு அத்தியாவசியம் என்று கூறுகிறீர்கள்? நமது பூமி இயங்கும் செயல்பாட்டிற்கு, நுண்ணுயிரிகள் பங்களிப்பு முக்கியம். நுண்ணுயிரிகள் இல்லாத சூழலில் தாவரங்கள், விலங்குகள், மனிதர்களின் பரிணாம வளர்ச்சியும் வாழ்கைகயும் பூமியில் சாத்தியமாகி இருக்காது. கடலில் ஆக்சிஜன் உற்பத்தியாக நுண்ணுயிரிகள் உதவுகின்றன. உயிரினங்களின் வாழ்வுக்கு முக்கியமான சல்பர், நைட்ரஜன் ஆகிய வேதிப்பொருட்களை நுண்ணுயிரிகள்தான் தயாரிக்கின்றன. தாவரங்களின் ஒளிச்சேர்க்கை, பயிர்கள் மண்ணில் விளைய என அனைத்து முக்கிய நடவடிக்கையிலும் நுண்ணுயிரிகளின் பங்கு உள்ளது.  மனிதர்களுக்கு நுண்ணுயிரிகளின் உதவி தேவையா? பூமியிலுள்ள பல்வேறு உயிரினங்கள் ஒன்றையொன்று சார்ந்தும் , தொடர்புகொண்டும் தான் இயங்குகின்றன. இந்த வகையில் நம் உடலிலுள்ள தோல், நுண்ணுயிரிகளோடு தொடர்புகொண்டுதான் உள்ளது. அதேபோல, வயிற்றின் குட

இறந்துபோன விலங்குகளை பதப்படுத்தியது போல வைத்திருக்கும் நார்டன் ஏரி!

படம்
தி வாட் இஃப் ஷோ நாட்ரான் ஏரி கிழக்கு ஆப்பிரிக்காவின் தான்சானியாவில் அமைந்துள்ளது நாட்ரான் ஏரி ( ). உலகிலுள்ள வினோதமான தன்மை கொண்ட இடங்களில் இதுவும் ஒன்று.  ஏரியிலுள்ள நீர் வெப்பம் கொண்டதோடு, உப்பின் அளவும் அதிகமாக உள்ளது. இந்த நீர்நிலையிலுள்ள சிறிய பாக்டீரியாவகை, உப்பை  உட்கொள்கிறது.  மோசமான சூழ்நிலை இருந்தாலும் கூட இங்கு இனப்பெருக்கம் செய்ய ஃபிளாமிங்கோ  (flamingo)பறவைகள் ஆயிரக்கணக்கில் வருகின்றன. எவாசோ என்கிரோ (Ewaso ng'iro)ஆறு மூலம் ஏரி நீர்வளத்தைப் பெறுகிறது. நாட்ரான் ஏரி, 60 கி.மீ. அளவுக்கு பரந்து விரிந்தது. இதன் ஆழம் 3 மீட்டர்தான். நீரின் வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸாக உள்ளது. நாட்ரான் ஏரியிலுள்ள நீர், கடலுக்கோ செல்வதில்லை. வெப்பநிலை காரணமாக ஆவியாகிறது. மிஞ்சுவது உப்பும், பிற கனிமங்களும்தான்.  ஏரியின் வெப்பத்திற்கு காரணம், அதன் கீழுள்ள ஆல் டோயினோ லெங்காய் (ol doinyo lengai)எரிமலைதான். இதன்  எரிமலைக் குழம்பு, ஏரி நீரை சூடாக்குகிறது. இதன் காரணமாக நீர், ஆவியாகிறது. ஏரி அமைந்துள்ள கிழக்கு ஆப்பிரிக்கா ரிப்ட் பள்ளத்தாக்கு பகுதியில் புவித்தட்டுகள் சந்திக்கின்றன. இதன் விளைவாக, இங்கு 

நுண்ணுயிரிகள் கண்காணிப்பு!

படம்
  நுண்ணுயிரிகள் கண்காணிப்பு ஆஸ்திரேலியாவில் நிலம், நீர் உள்ளிட்டவற்றிலுள்ள நுண்ணுயிரிகளான பாக்டீரியா, பூஞ்சைகளைக் கண்டறிந்து ஆவணப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த கிம் லேமா முயற்சித்து வருகிறார். இவர், பாசிகள் எப்படி நுண்ணுயிரிகளை ஈர்க்கின்றன என்பது குறித்து ஆராய்ச்சி செய்து வருகிறார். பாசிகள் வெளியிடும் குறிப்பிட்ட வேதிப்பொருட்கள் நுண்ணுயிரிகளை ஈர்க்கின்றன என்பதைக் கண்டறிந்துள்ளார் கிம்.  நுண்ணுயிரிகளின் டிஎன்ஏக்களைத் தொகுத்து அதனை வரிசைப்படுத்த தொடங்கியுள்ளார். இம்முறையில் 1.7 மில்லியன் பாக்டீரியா, 1.2 மில்லியன் பூஞ்சைகள் ஆகியவற்றோடு பிறவகை நுண்ணுயிரிகள் 1.8 மில்லியன் அளவில் இணைக்கப்பட்டு மக்கள் அணுகும் தகவல்தளமாக இதனை உருவாக்கி வருகிறார். நுண்ணுயிரிகளை ஆவணப்படுத்தும் பணியில் 40 அறிவியல் அமைப்புகள் இணைந்து செயற்பட்டு வருகின்றன. இதன் மூலம் வெப்பமயமாதலின் தாக்கத்தை அறிவதோடு, நுண்ணுயிரிகளை எப்படி வாழ்க்கைமுறையை மாற்றுவதற்கு பயன்படுத்தலாம் என்ற புத்திசாலித்தனமும் இதில் உள்ளது.  மாசுபடுதலை நுண்ணுயிரிகள் மூலம் எப்படி தடுக்கலாம் என்பதற்கும் இவற்றின் டிஎன்ஏக்களை ஆவணப்படுத்த

நீர்நிலைகளை ஆக்கிரமிக்கும் நுண்ணுயிரிகள்!

படம்
giphy.com நகரங்களில் பரவும் நுண்ணுயிரிகள்! பெருமளவு வலிநிவாரணிகளை மக்கள் பயன்படுத்தும்போது, நிலம், நீராதாரங்கள் அனைத்திலும் மாசுபாடு  ஏற்படுகிறது. அழகுசாதனப் பொருட்கள், மருந்துகள் ஆகியவை இந்த மாசுபாடுகளுக்கு முக்கியக் காரணிகள். கழிவுநீர் கலப்பதால், நகரிலுள்ள ஏரி, குளம் ஆகிய நீராதாரங்களில் நுண்ணுயிரிகளின் பெருக்கம் அதிகரித்து வருகிறது. நீர்நிலைகளிலுள்ள நுண்ணுயிரிகள் தொடர்பான ஆய்வு அசாமின் கௌகாத்தியில் நடைபெற்றது. இந்த ஆய்வில் நீர்நிலைகளில் வைரஸ்கள் மற்றும் மருந்துகளை எதிர்க்கும் ஈ_கோலி பாக்டீரியாக்கள் கண்டறியப்பட்டன. பிரம்மபுத்திரா ஆற்றிலிருந்து மாதிரிகள் எடுத்து ஆராயப்பட்டு இந்த உண்மை கண்டறியப்பட்டுள்ளது.  நீர்நிலைகளில் சேரும் வேதிப்பொருட்கள், உலோகம், மலக்கழிவுகள் ஆகியவை நீர்நிலையின் இயல்பான வெப்பத்தை மாற்றுகின்றன. மேலும் இவை லெவோஃபிளாக்ஸாசின் (levofloxacin), சிப்ரோஃபிளாக்ஸாசின் (ciprofloxacin), நார்ஃபிளாக்ஸாசின் (norfloxacin), கனாமைசின் (kanamycin), மோனோசல்பேட் (monosulphate), சல்ஃபாமீதோஆக்சோல் (sulfamethoxazole)  ஆகிய ஆன்டிபயாடிக் மருந்துகளை, நீர்நிலையிலுள்ள நுண்ணுயிரி