இடுகைகள்

சிசாமி லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

சம ஊதியம் கனவல்ல - நாகலாந்து கிராமம் சாதனை

படம்
இந்த ஆண்டின் தொடக்கத்தில் சுவிட்சர்லாந்தில் சம ஊதியம் கேட்டு பெண் ஊழியர்கள் போராட்டத்தில் குதித்தனர். ஆனால் வளர்ந்துவரும் பல்வேறு ஏற்றத்தாழ்வுகள் கொண்ட இந்தியாவில் அது சாத்தியமாகி உள்ளது. குறிப்பாக, நாகலாந்து கிராமத்தில் இதனை சாத்தியப்படுத்தியுள்ளனர். அதுவும் இன்று நேற்றல்ல, கடந்த 30 ஆண்டுகளாக இதனை செய்து வருகின்றனர். நாகலாந்தின் சிசாமி மாவட்டத்தில்தான் இந்த அதிசயம் நடந்துள்ளது. நாங்கள் முதலில் உழைப்பிற்கு ஊதியமாக தானியங்களைப் பெறும் வரையில் எந்த பிரச்னையும் இல்லை. ஆனால் உழைப்பிற்கு சம்பளம் அளிக்கப்பட்டபோது, அதில் பெரும் இடைவெளியையும் வேறுபாட்டையும் உணர்ந்தோம் என்கிறார் 74 வயதான விவசாயக்கூலியான காஃப்கோ. சிசாமி மாவட்டத்தில் விவசாய வேலைகளை பெண்கள்தான் செய்கிறார்கள். பெரும்பாலான உதவிகளை நாடாமல் அவர்கள் உழைப்பது ஆச்சரியமாக உள்ளது. அங்கு வாழ்நிலை அப்படித்தான் இருக்கிறது. பெண்கள் சங்கம் அமைத்து ஆண்களின் சம்பளம், உழைப்பு ஒன்றாக இருந்தாலும் அதிகமாக இருப்பது குறித்து கேள்விகளை 2007 ஆம் ஆண்டு முதல் எழுப்பி ஊதியத்தை உரிமையாக பெற்றிருக்கிறார்கள். இங்கும் முன்னர் குடும்பத்தலைவராக ஆண்