இடுகைகள்

கோபம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

நினைவுகளின் சேமிப்பு காலத்தை தீர்மானிக்கும் உணர்ச்சிகள்!

படம்
  1950ஆம் ஆண்டு, மனிதர்களின் மூளை, அதில் பதிவாகும் நினைவு பற்றிய ஆராய்ச்சிகள் வேகம் பிடித்தன. மூளையில் குறைந்தகால நினைவுகள், அதிக காலம் உள்ள நினைவுகள் பற்றி தெரிந்துகொள்ளும் ஆர்வம் அதிகரித்தது. 1970ஆம் ஆண்டு, கற்றல் கோட்பாடு, நினைவுகள் பற்றிய ஆய்வுகள் தொடங்கியது. சில நினைவுகளை நாம் எளிதாக நினைவுகூர்ந்து மீட்டெடுப்போம். அப்படி திரும்ப மீட்கும் நினைவுகள் பற்றித்தான் உளவியலாளர்கள் ஆர்வமாக தெரிந்துகொள்ள நினைத்தனர். உளவியலாளர் கார்டன் ஹெச் போவர், மூளையில் சேமித்து வைக்கும் நினைவுகளை உணர்ச்சிகள் பாதிப்பதைக் கண்டுபிடித்தார். அதாவது நினைவுகளை குறிப்பிட்ட இடத்தில் சேமிக்கும்போது அந்த நேரத்தில் உள்ள உணர்ச்சிகளும் அதோடு இணைந்துவிடுகின்றன. திரும்ப அதே நினைவில் நாம் இருக்கும்போது அந்த நினைவுகளை எளிதாக மீட்டெடுக்க முடிகிறது.  துயரமான நிலையில் உள்ளவர்கள், தங்கள் வாழ்க்கையில் நடந்த துயரமான வலி, வேதனை பெருக்கும் நினைவுகளை துல்லியமாக அன்று நடந்தது போல கூற முடியும். ஆனால் அதே மனிதர்கள் மகிழ்ச்சியான நிலையில் இருக்கும்போது துயர நினைவுகளை முன்னர்போல தெளிவாக கூற முடியாது. இதை மூட் கான்க்ரன்ட் புரோசஸிங் என்று

தத்து எடுத்து வளர்க்கும் குழந்தைகளிடம் உருவாகும் அதீத வெறுப்பு - என்ன காரணம்? எப்படி தீர்ப்பது?

படம்
  ஒரு குழந்தை கைவிடப்பட்டு ஆதரவின்றி தெருவில் நிற்கிறது. அல்லது காப்பகத்தில் வளர்கிறது. அந்த குழந்தைக்கு பெற்றோரின் அன்பு, வழிகாட்டுதல் கிடைத்தால் பெரிய சாதனைகளை படைப்பார்கள் என சிலருக்கு தெரிகிறது. இப்படித்தான் பிள்ளைகளை  தத்தெடுப்பது தொடங்குகிறது. இப்படி தத்து வழங்கப்பட்ட பிள்ளைகள், புதிய வீட்டில் மகிழ்ச்சியுடன் ஏற்கப்படுவார்களா, இல்லையா என்பது முக்கியமான கேள்வி. பெரும்பாலும் குழந்தைகளை வெறுக்காமல் இருக்க வளர்ப்பு பெற்றோர் முயல்கிறார்கள். சகித்துக்க்கொள்ள பார்க்கிறார்கள். குழந்தைகளோ வெறுக்கப்பட்டால்தான் அன்பு கிடைக்கும் என புரிந்துகொள்கிறார்கள். இதைபற்றி டொனால்ட் வின்னிகாட் என்ற உளவியலாளர் ஆராய்ச்சி செய்தார். தாய், பிள்ளை என இருவருக்குமான உறவு, குழந்தைகளின் மேம்பாடு ஆகியவற்றை  முக்கிய அம்சங்களாக கருதி ஆய்வு செய்தார்.  இவர் சிக்மண்ட் ஃப்ராய்ட், மெலானியா கிளெய்ன் ஆகியோரின் கொள்கை,ஆய்வு மீது பெரும் பற்றுதல் கொண்டவர். தன்னுணர்வற்ற மனநிலையில் ஒருவர் கொண்டுள்ள எண்ணங்கள், உணர்வுகள் பற்றி ஆய்வுசெய்தார். இரண்டாம் உலகப்போரில் வீடுகளை இழந்த உறவுகளை இழந்த சிறுவர்கள் பற்றி ஆராய்ந்தார். இவர்கள் பல

களைத் தாவரங்களை கண்டறியும் நாயின் மோப்பசக்தி!

படம்
  அமெரிக்காவில் அரிசோனா தொடங்கி வியோமிங்   வரையில ‘டையர் வோட்’   என்ற ஆக்கிரமிப்பு தாவரம்   பரவி வருகிறது. முழங்கால் அளவு உயரத்தில் மஞ்சள் நிற பூக்களைக் கொண்டது. இந்த தாவரம் வேகமாக வளர்ந்து, புதிய செடிகளை உருவாக்குவதால் அங்கு வளர்ந்து வந்த மரபான செடிகள் அழிந்து மறைந்தன.   இதைக் கட்டுப்படுத்த அரசு முயன்றது. அதில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை. எனவே, செடியை துல்லியமாக கண்டறிய இரண்டு நாய்களை பயிற்றுவித்து பயன்படுத்துகிறார்கள். பொதுவாக, நாய்களை இதுபோன்ற பணிகளுக்கு பயன்படுத்துவது கடினமானது. ஏறத்தாழ ஆயிரம் நாய்களில் ஒன்றுதான் களைத் தாவரத்தை எளிதாக கண்டறியும் திறன்பெற்றதாக உள்ளது. மனிதர்கள் கவனிக்காமல் விட்ட தாவரத்தை நாய் தவறவிடுவதேயில்லை. ‘டையர் வோட்’ என்ற களைத் தாவரம் ரஷ்யாவை பூர்விகமாக கொண்டது. இத்தாவரத்தை அகற்றும் பணி 2011ஆம் ஆண்டு தொடங்கி இன்றுவரை நடைபெற்று வருகிறது. மனிதர்களால் கண்டறிய முடியாத விஷயங்களை நாய் மோப்பத்திறனால் கண்டுபிடித்து வருகிறது.வனவிலங்கு காட்சி சாலையில் உள்ள   நரிக்குட்டிகள், வெடிமருந்து, பண்ணை விலங்குகளை அழிக்கும் பாக்டீரியா, களைத்தாவரங்கள் என கூறிக்கொண்டே ச

பத்திரிகை ஆசிரியரின் முதல் தகுதி என்ன தெரியுமா? - ஆ.வி ஆசிரியர் பாலசுப்பிரமணியன் சொன்ன அறிவுரை

படம்
  கோபத்தின் பிரயோஜனம் ஆசிரியரின் மறைவுக்கு இருபது நாட்களுக்கு முன்பு, அவரை சந்திக்க முடிந்தது. அவருடைய துணைவியார் சரோஜா மேடமும் அருகில் இருந்தார். நடுங்கும் கரங்களை காற்றில் அசைத்து பழைய நினைவுகளைப் பகிர்ந்துகொண்டே வந்தார். பேச்சு சுற்றி வளைத்து கடைசியாக அவரைப் பற்றியே வந்து நின்றது. ‘’நெறைய தடவை நான் உங்ககிட்டயெல்லாம் கோபப்பட்டிருக்கேன் இல்லையா?’’ என்றார். ‘’ஐயோ கொஞ்சமான கோபமா சார் பட்டீங்க. நீங்க உரத்த குரலில் கண்டிக்கும்போதெல்லாம் நாங்க தடதடத்துப் போய் நின்றுக்கோம்’’ என்றேன். ‘’ஏண்டா, இவன்கிட்ட வேலை பார்க்கிறோம்னு வெறுத்துப் போயிருக்கும்.. இல்லையா’’ என்றார். சிரித்தபடியே மறுத்து தலையசைத்ததற்கு, ‘’நான் யாரிடம் கோபப்பட்டு வலிஞ்சு ஒரு விஷயத்தை சொல்றேனோ அவங்கள்லாம் நம்மோடயே இருந்து தொடர்ந்து நம்ம பேச்சக் கேட்டு திருத்திண்டு நல்லபடி முன்னுக்கு வருவாங்கன்னு நினைப்பேன். அவன்கிட்டதான் கோபப்படுவேன். கோபத்துக்கும் ஒரு பிரயோஜனம் இருக்கணும் இல்லியா.. இந்த ஆள் சரிவர மாட்டான். எவ்வளவு சொல்லியும் பயனில்லைனு நெனச்சுட்டா, அவங்கிட்ட எதுக்கு வீணா கோபப்படணும்? நீங்க செஞ்சது எனக்கு பிடிக்கலை ச

சமூகத்திற்கு தன்னை வெளிக்காட்ட வெடிகுண்டே ஒரே வழி

படம்
  கத்தி, துப்பாக்கி வைத்து கொலை செய்யும் தொடர் கொலைகாரர்கள் உண்டு. ஆனால் வெடிகுண்டு வைத்து பிரமாண்டமான செலவில் கொலை செய்யும் கொலைகாரர்களை குறைவாகவே பார்க்க முடியும்.பொதுவாக,   தொடர் கொலைகார்களுக்கு நிலையான வேலை இருக்காது. எனவே, அவர்களால் அவ்வளவு பெரிய பட்ஜெட்டில் பிளான் செய்து கொலைகளை செய்ய முடியாது. ஆனால் பாம் வைத்து கொல்பவர்களே இல்லையா என்றால் இருந்திருக்கிறார்கள். இப்போது அவர்களைப் பற்றி பார்ப்போம். 1940-50 காலகட்டத்தில் அமெரிக்காவில் இதுபோல வெடிகுண்டு வைத்து மக்களைக் கொல்லும் சம்பவங்கள் நடந்தன. இதற்கு காரணமானவர், அரசு நிறுவனத்தில் வேலை செய்த ஜார்ஜ் என்பவர். இவருக்கு காசநோய் பாதிப்பு இருந்தது. வேலைக்குச் சென்ற இடத்தில் இவரைப் பார்த்து நோய் தொற்றிவிடும் என அனைவரும் பயந்தனர். ஏசினர். தூற்றினர். பலரும் டெய்லி புஷ்ப ஊழியர்கள் போல சைக்கோபயல்கள். இதனால் மனதிற்குள் வைராக்கியம் வளர்த்த ஜார்ஜ், தன்னை   துவேஷித்த ஆட்களை கொல்ல முயன்றார். இவருக்கு அடுத்து தியோடர் என்ற நபரைக் குறிப்பிடலாம். எட்டு மாகாணங்களில் பதினாறு வெடிகுண்டுகளை வைத்தவர். 1995 – 1978 ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் தியோடர

மனதில் பெருகும் ஆவேசத்தை, கோபத்தை மடைமாற்ற முடியுமா?

படம்
  ஆவேச உள்ளுணர்வு என்பதை நேர்மறையாக எடுத்துக்கொள்ளலாம். அதை விளையாட்டு மூலம் எளிதாக வெளிப்படுத்தலாம் என்று உளவியல் ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். ஆனால் அந்த இடத்திலும் அப்படி வெளிப்படுத்துவது, விதியாக இல்லாதபோதும் வரவேற்கப்படுவதில்லை. தன் கோபத்தை, ஆவேசத்தை வெளிப்படுத்தும் வீரர் ஊடகங்களில் மோசமான முன்னுதாரணமாக காட்டப்படுகிறார். பரிமாண வளர்ச்சிப்படி பார்த்தால் ஆவேச உள்ளுணர்வு என்பதை உயிர்கள் பிழைப்பதற்கான வாசலாக பார்க்கலாம். வெல்லும் வெறி இல்லாமல் நாம் போர், நோய்களைத் தாண்டி பிழைத்து வந்திருக்க முடியாது. ஒருவகையில் உயிர்களை பிழைக்க வைப்பதற்கான ஆற்றலாக ஆவேசத்தைக் கொண்டிருக்கிறோம். மனிதர்கள் மட்டுமல்ல விலங்குகளுக்கும் இந்த உணர்வு உண்டு. உயிருக்கு ஆபத்து வரும்போது யாரும் பிறருக்கு செல்லம் காட்டிக் கொண்டிருக்க மாட்டார்கள். தன்னையும், தன்னைச் சார்ந்தவர்களையும் காப்பாற்றவே நினைப்பார்கள்.   லோரன்ஸ் என்ற உளவியல் ஆய்வாளர் மனிதர்களுக்கு ஏற்படும் ஆவேசத்தை நேர்மறையாகவே அணுகிறார். தனது கோட்பாட்டை விலங்குகளை வைத்து சோதித்து நிரூபணம் செய்தார். சிக்மண்ட் ஃப்ராய்ட், ஆவேச உணர்வை குறிப்பிட்டபடி செயலில் பயன

உறவும் கிடையாது, நம்பிக்கையும் கிடையாது! பாரனாய்ட் பர்சனாலிட்டி டிஸார்டர்

படம்
பாரனாய்ட் என்பதை,  மனதை விட்டு வெளியே என சுருக்கமாக சொல்லலாம். ஆங்கிலத்தில் பேசுபவர்கள் பாரனாய்ட் என்பதை் எளிதாக இயல்பாக பயன்படுத்துவார்கள். பாரனாய்ட் எனும் ஆளுமை பிறழ்வு கொண்டவர்கள் பிறரை எளிதாக நம்ப மாட்டார்கள். இவர்களது தினசரி நடவடிக்கையில் பிறரை நம்பாமல் நடந்துகொள்வது தெரியும்.  அலுவலகமோ, வீடோ, பிற இடங்களோ அங்குள்ள அனைவருமே பாரனாய்ட் பிறழ்வு உள்ளவர்களுக்கு எதிரிகள்தான். அவர்கள் தன்னை தாக்க முயல்கிறார்கள் என்றே நோயாளி நினைப்பார். இதனால், அந்த தாக்குதலுக்கு எப்படி பதில் தருவது என யோசித்தபடி, மனதில் பயந்துகொண்டிருப்பார். இவர்களை சொற்கள், உடல் என யாராவது தாக்கினால் அவர்கள் பாடு கஷ்டம்தான். பழிவாங்க நேரம் பார்த்துக்கொண்டிருப்பார்கள், திருப்பி பதிலடி தருவதிலும் சளைக்காத மனிதர்கள். வார்த்தைக்கு வார்த்தை கண்களுக்கு கண் என எதையும் மறக்காத மன்னிக்காத ஆட்கள்.  பாரனாய்ட் ஆளுமை பிறழ்வு கொண்டவர்களுக்கு ஸீசோபெரெனியா குறைபாடும் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. வன்முறை எண்ணங்களும், உணர்ச்சிக் கொந்தளிப்பும் பாரனாய்ட் நோயாளிகளுக்கு அதிகம் உண்டு. நடக்காத விஷயங்களை நடப்பதாக, சந்திக்காத மனிதர்களை சந்திப்பதாக

ரயில் நிலையத்தில் திடீர் ஜோதிடர்! - கடிதங்கள் - கதிரவன்

படம்
  12.12.2021 மயிலாப்பூர் அன்புள்ள நண்பர் கதிரவனுக்கு, வணக்கம். நலமாக இருக்கிறீர்களா? நீங்கள் எப்படியிருக்கிறீர்கள் என கார்ட்டூன் கதிர் போன் செய்தபோது விசாரித்தார். நலமோடு இருப்பதாக பதில் கூறினேன். நாகப்பட்டினத்தில் இருந்து இப்போதுதான் சென்னைக்கு வந்திருக்கிறார். அவர் மனைவி அகிலா, அரசுத்தேர்வுக்கு படித்து தேர்வுகளை எழுதி வருவதாக கூறினார்.   ஒருமுறை தேர்வு எழுதிவிட்டு ரயில் நிலையத்திற்கு வந்திருக்கிறார். திருவான்மியூர் ரயில் நிலையம் என்று சொன்னார். அங்கு, ஆதவன் நாளிதழில் முன்னர் பணியாற்றிய குமார் என்பவரை சந்தித்திருக்கிறார். முழுநேர ஜோதிடரும், பகுதிநேர ஃப்ரூப் ரீடருமான குமார் ரயில் நிலையத்திலேயே அகிலாவுக்கு ஜோதிடம் பார்த்து வேலை பற்றி கூறுவதாக சொல்லியிருக்கிறார். கதிரவனுக்கு மனதில் சங்கடமாகியிருக்கிறது. இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு கதிரவன் குமாரை சந்தித்திருக்கிறார். ஆனால் அவர் அப்போதும் தனது ஜோதிட திறனை நிரூபிக்க வாய்பைத் தேடியிருக்கிறார். அகிலா தடாலடியாக பேசக்கூடியவர். கணவரின் நண்பர் என்பதால் நிதானம் கூட்டி பொறுத்திருக்கிறார்.  நாளிதழ் பணிக்கான கட்டுரைகளைத் தேடி படித்து வருகிறேன். கோவைய

சைக்கோபாத்கள் சமூகத்திற்கு அவசியமா?

படம்
        சைக்கோபாத்கள் தேவையா ? வாழ்க்கை விக்ரமன் படம்போல நல்லவர்களாக நிறைந்திருந்தால் நன்றாக இருக்கும் . எதற்கு எதிர்மறையான குணங்கள் உருவாகின்றன . இவற்றின் மொத்த உருவமாக மனிதர்கள் தெற்கு சமூகத்தில் உருவாகி பிரச்னையை ஏற்படுத்துகிறார்கள் . இவர்கள் பிறக்காமலிருந்தால் நமக்கு எந்த இழப்பும் இல்லை என்று கூட பலரும் நினைப்பார்கள் . இந்த கேள்வியை ஆராய்ச்சியாளர்கள் எதிர்கொண்டால் சாதாரண தந்தி படிக்கும் வாசகர்கள் போல பொதுக்கருத்துப்படி கருத்துகளை கூறமாட்டார்கள் என உறுதியாக கொள்ளலாம் . இதில் மதரீதியான சிந்தனை , புனைவு ரீதியான சிந்தனை ஆகியவற்றை அடிப்படையாக கொள்ள முடியாது . ஒருவகையில் பரிணாம வளர்ச்சிப்படி ஒருவர் தன்னைக் காப்பாற்றிக் கொள்ளும் வகையில் தீய எண்ணங்கள் உருவாகியிருக்குமா ? இதன் பின்னணியில் மரபணுக்கள் கூட இருக்கலாம் . பன்முகத்தன்மை கொண்ட கலாசாரப்படி இன்று அனைத்து நாடுகளிலும் இனக்குழுக்களிலும் கூட 2 சதவீத மக்கள் இப்படி உளவியல் குறைபாடு கொண்டவர்களாக உள்ளனர் . பெற்றோர்களின் கண்டிப்பு , வன்முறை , அவமானப்படுத்தல் , வன்முறை , வல்லுறவு ஆகியவற்றின் காரணமாக சைக்கோபாத

நோ சொன்னால் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்!

படம்
                    நோ சொல்லிப்பழகுவது கடினமாக இருக்கிறதா ? எல்லோரும் மகிழ்ச்சியாக இருப்பது எப்போதும் சாத்தியமில்லை . ஆனால் அப்படி வைத்துக்கொள்ளவேண்டும் என்று நினைப்பவர்கள் உண்டு . இதனால் பிறருக்காக நிறைய விஷயங்களை ஓகே சொல்லி மாட்டிக்கொண்டு தவிப்பவர்கள் அனேகம் . நோ என்று சொல்லுவது குழந்தையாக , சிறுவனாக இருக்கும்வரை ஓகேதான் . பிடிவாதக்காரன் என்று விட்டுவிடுவார்கள் . ஆனால் வேலையில் இதனை சொல்லும்போது அதனை எளிதானதாக பார்க்க மாட்டார்கள் . ஆம் , இல்லை என்று சொல்லப்படும்போது அது எப்படி மக்களிடம் விளைவுகளை உருவாக்குகிறது என்பதை அனைவருமே உணர்ந்திருப்பார்கள் . இதுபற்றி உளவியலாளர் டாக்டர் ஹாரியட் பிரைக்கர் தி டிசீஸ் டு ப்ளீஸ் க்யூரிங் தி பீப்பிள் ப்ளீசிங் சிண்ட்ரோம் என்ற நூலில் விளக்கியுள்ளார் . பொதுவாக அனைவருக்குமான நன்மையாக அனுசரித்து செல்வதாக ஒருவர் அனைத்து விஷயங்களுக்கும் சரி , ஆம் என்று சொல்வது முதலில் சரியாக செல்வது போலவே தோன்றும் . ஆனால் பிறருக்காக இப்படி செயல்படும் தன்மை , ஒருவருக்கு உடல்நலம் , மனநலத்தை அழித்து பல்வேறு ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தும் என்கிறார் .