இடுகைகள்

. அனாதை லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

மனிதநேயத்தை ஒட்டியதே கலை! - அனாதைப் பிணங்களை எரிக்கும் திண்ணைநிலாவாசிகள் நாடககுழு தலைவர் பக்ருதீன்

படம்
            அனாதைப் பிணங்களை எரிக்கும் தியேட்டர் குழு ! சென்னையைச் சேர்ந்த திண்ணை நிலாவாசிகள் எனும் நாடக குழு , தங்களது செயல்பாடு தாண்டி சமூகப்பணிக்காக பாராட்டப்பட்டு வருகிறது . இக்குழுவினர் கடந்த 2016 ஆம் ஆண்டு முதல் அனாதைப் பிணங்களை பெற்று அவற்றை அடக்கம் செய்து வருகின்றனர் . இதனை செய்யும் குழுவின் தலைவர் எம் . பக்ருதீன் . சமூகத்தில் என்ன நடக்கிறது என்று கலைஞர்களுக்கு தெரிவது அவசியம் . அதோடு சமூகத்திற்கான பணிகளிலும் அவர்கள் பங்களிக்கவேண்டும் என்று கொள்கையுடையவர் பக்ருதீன் . இங்கு யாரும் அனாதைகள் இல்லை . நாங்கள் எந்த சடங்குகளையும் பின்பற்றவில்லை . உடல்களை முறையாக பெற்று அதனை முறைப்படி அடக்கம் செய்கிறோம் என்றார் பக்ருதீன் . பொதுமுடக்க காலத்திலும் கூட நாறு பிணங்களை அடக்கம் செய்திருக்கிறது இந்த நாடக குழு . கோவில்படியில் செயல்படும் முருகபூபதியின் மணல் மகுடி நாடக குழுவில் நடிப்பு பயிற்சி பெற்றவர் பக்ருதீன் . 2015 ஆம்ஆண்டு சமூக செயல்பாட்டாளர் ஆனந்தி அம்மாளின் காரணமாக சென்னைக்கு வந்திருக்கிறார் . ஆனந்தி அம்மாள் , அனாதைப் பிணங்களை பெற்று நல்லடக்கம் செய்து வந்தார் .