இடுகைகள்

இந்திரகுமார் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

மழைநீர் சேகரிப்பாளர் இந்திரகுமார்! - மாமனிதர் போற்றுதும்!

படம்
மழைநீர் சேகரிப்பு  மாமனிதர்! ஆண்டுதோறும் ஜனவரி முதல் பிப்ரவரி மாதத்திற்குள் சென்னையில் குடங்களைத் தூக்கிக்கொண்டு மக்கள் அலையத் தொடங்கிவிடுகின்றனர். காரணம், சென்னை பெருநகரம் அதனைச் சுற்றியுள்ள ஏரிகளை மட்டுமே குடிநீர் தேவைக்கு நம்பியுள்ளது. வீட்டைச் சுற்றிலும் கசிவுநீர்க்குட்டைகள், மழைநீர்  சேகரிப்புத் தொட்டிகளை அமைத்து நிலத்தடி நீரைச் சேமித்து பயன்படுத்தி வருகிறார் மழைநீர் சேகரிப்பாளரான இந்திரக்குமார். "எங்க வீட்டிலுள்ள மழைநீர் சேகரிப்பு அமைப்பை, எக்ஸ்னோரா அமைப்பின் நிமல் சார்தான் அமைச்சுக் கொடுத்தார். 1998 ஆம் ஆண்டில்தான்  நிலத்தடிநீர் சேகரிப்பைத் தொடங்கினேன்.  இதுவரை நாங்க தண்ணீர் பஞ்சத்திற்காக அலையும் நிலை வரலை" என்று பேசத் தொடங்கினார். இவர் தன் வீட்டில் மழைநீர் தேங்கும்படியான கொல்லைப்புறத்தை தாழ்த்தியும், வாசல்புறத்தை உயர்த்தியும் கட்டியுள்ளார். வாசல் வழியாக வரும் நீரை, கசிவுநீர்க்குட்டைகள் மூலமாக நிலத்தடி நீராக சேமிக்கிறார். கூடுதலாக அருகிலேயே மரங்கள் வளர்ப்பதால், மண்ணரிப்பு பிரச்னையின்றி நீர் சேகரமாவதோடு, கோடையிலும் சில்லென காற்று வீசுகிறது.  ”எங்க வீட