இடுகைகள்

ஜனவரி, 2015 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

pisasu

படம்
sorry i'm struggle on Windows os 7 and the relation of viruses. it take long minutes.

நேர்காணல்: கே.டி.எஸ் துள்சி

நேர்காணல்: கே.டி.எஸ் துள்சி ஆங்கிலத்தில்: பவன் பலி தமிழில்: பியர்சன் கயே ‘’ கருப்பு பண விவகாரத்தில் பி.ஜே.பி காலங்கடந்த புத்திசாலித்தனத்தைக் கொண்டிருக்கிறது ’’ மத்தியஅரசு உச்சநீதிமன்றத்தில் கருப்பு பண விவகாரத்தில் நாட்டின் ரகசிய ஒப்பந்தங்களோடு தொடர்புள்ளதாக கூறி இருக்கிறது இது பற்றி தங்களின் பார்வை என்ன?       பி.ஜே.பி இரட்டை வரிவிதிப்பு தவிர்ப்பு ஒப்பந்தம் குறித்து முதல்முறையாக இப்போதுதான் அறிகிறார்களா? அக்கட்சி தலைவர்கள் இதனை முன்னரே அறியாதபோது எப்படி முன்னர் இருந்த காங்கிரஸ் அரசினை குற்றம் சாட்டி, நாடாளுமன்றத்தை ஒரு ஆண்டிற்கு முடக்க முடிந்தது? எப்படி கணக்கு வைத்திருப்பவர்களை வெளிப்படுத்த வேண்டும் என்று கேட்டார்கள்? உடன்படிக்கை பற்றி அறியாத போது, ஏன் இருட்டைப்பார்த்து காலை உதைக்கவேண்டும்?      உடன்படிக்கை 26 ன்படி ஸ்விட்சர்லாந்து, தேவையான தகவல்களை நீதிமன்றத்திற்கு தர முடியும் என்பதை அறியாதவர்களா இவர்கள்? துணிச்சலாக உடன்படிக்கையை மீறினால், ஸ்விஸ் அரசு அந்த கணக்கு வைத்திருப்பவர்களின் பெயர்களைத்தராது இல்லையா? எதிர்கட்சியாக இருந்தபோது, பி.ஜே.பி  கணக்குகளை வெளியிடா

கல்வி குறித்த நூல்கள் சிறிய அறிமுகம்

கல்வி குறித்த நூல்கள் சிறிய அறிமுகம் ப் ரோமிளா சர்மா, கல்விப்பிரச்சனைகள் The Problems Of Education, A.P.H Publishing,New Delhi. 2.  ரொமயின் ரொலாந்து, The Living thought of Rousseau, David meckay,USA. 3. Education in History – Philosphical Context பெடரிக் பின்டர், 1970, மாக்மிலன். 4.   A History of Western Education, ஜி. ஹாரிகுட், டி. ஜேம்ஸ் டில்லர், 1969, மாக்மிலன். 5. Education between two worlds, 1966 அலெக்சாந்தர் மைக்லெஜோன், ஆர்தர்ன் பிரஸ் வெளியீடு. 6. ஜூன் ஜாக்குலஸ் ரூசோ, Confessions, மொ.பெ ஜெ.எம் கோஹன், 1954, பென்குயின் வெளியீடு. 7. ஜனநாயகமும், கல்வியும்(Democracy and Education) ஜான் டூவி, மாக்மிலன். 8.   Ethical Principles Undertaking Educational Development, ஜார்ஜ் பார்னட், ஹாட்டன் மிஃபின் வெளியீடு. 9.   கல்வி தத்துவ இயல்(Educational Philosophy) ஜெ. டானியல் ஓ கானர், பிலோசபிகல் ஸைரரி வெளியீடு, நி.யா USA. 10.          Every Child is a Genius, பிரிடேர், பி.ஸி சர்மா pentagon press,  New delhi, India, 2005. 11.         

காபி. காரம்.. கச்சேரி….ஆக்கம்: லாய்டர் லூன், ஆகஸ்ட் ஹிர்ட்

                    1 லூஸ் அண்ட் டைட் தொகுத்தளிக்கும்              காபி. காரம்.. கச்சேரி….     ஆக்கம்: லாய்டர் லூன், ஆகஸ்ட் ஹிர்ட் ‘’ டேய் என்ன கலர் கலரா குர்தா போட்டுக்கிட்டு இருக்கற? ’’ என்று டைட் அப்போதுதான் உள்ளே வந்துகொண்டே கேட்க, ‘’ பிரதமரே ஏதாவது விஷயம் செய்யறத விட டிரஸ்ஸத்தான் மாத்தி போட்டு போட்டோ ஷூட் எடுக்கறாரு நாமளும் பெரியாளு ஆக வேண்டாமா? செரி நீங்களும் சீக்கரமா இந்த ரத்தசெவப்பு குர்தா போடுங்க, நானும் கமலா ஆரஞ்சு குர்தா போட்டுக்கறேன் ’’    என்று லூஸ் கர்ம சிரத்தையாகப் பேச, டைட் ஏக கடுப்பானார். ‘’ ஏய் வென்று அந்தாளு போட்டோ எடுத்துட்டு கழட்டி வெச்சிருவாரு. அப்பிடி போட்டிருந்தாலும் ஏசி ரூமுல இருப்பாப்பல நீ இந்த வெய்யில கோமணத்தயே கழட்டி எறிஞ்சிக்கிட்டு இருக்கறவங்கிட்ட போயி குர்தா போடுன்னு அந்தப்பக்கம் போடா கொய்யால ’’ என்று டைட் எகிறினார். லூஸ் நிலைமைகளை சமாளிக்கும் திருட்டு முழியை உருட்டியபடி,      ‘’ ஏய் என்னய்யா நீயி அகில உலக தாமர கட்சி வருங்கால தலைவர்கிட்ட பேசறோமுன்னு மரியாத துளி கூட இல்ல ’’ என்று சொல்ல, ‘’ அவங்கிட்டயல்லா சேராத மந்திரஞ் சொல்லச் சொ

மனம் விடு தூது -கடிதங்கள்

மனம் விடு தூது கடிதங்கள் எழுத்தாளர் ஸ்ரீராம்  எழுத்தாளர் ஸ்ரீராம் அவர்கள் நான் சென்னையில் படித்துக்கொண்டிருந்தபோது என் சகோதரர் மூலம் அறிமுகமாகி அவர் வீட்டிற்கு சென்று இன்றுவரையிலும் சென்று வந்துகொண்டிருக்கிறேன். அவர் எழுதும் கதைகள் தொடர்பாக இருவருக்கும் கடும் முரண்பாடுகள், விவாதங்கள் எழுந்ததுண்டு. கடுமையான கருத்து வேறுபாட்டினால் நான் பல மாதங்கள் கடிதங்களே எழுதாமல் இருந்திருக்கிறேன். அவர் நான் எழுதிய எந்த கடித்தத்திற்கும் பதில் எழுதியதில்லை. அவர் பணியாற்றும் தொலைக்காட்சி பணியின் சூழல் அப்படியிருக்கலாம்.  தன் கதைகள் வெளிவரும் போது அதுபற்றிய குறுஞ்செய்தியினை தொடர்ந்து அனுப்பி வைப்பார். நான் இன்று எழுதும் எழுத்துக்கள் அனைத்திற்கும் ஸ்ரீராம் அவர்கள், இரா. முருகானந்தம் ஆகிய இருவருக்கும் பெரும் நன்றிகள் செலுத்த கடமைப்பட்டுள்ளேன். எவ்வளவு கோபமாக இருந்தாலும், எனக்கு புத்தகங்கள் தராமல் தன் வீட்டிலிருந்து விடை தந்ததில்லை ஸ்ரீராம் அவர்கள் என்பது அவரின் குணத்தைக்காட்டும். யாருக்கும் தராத பல புதிய புதுமைகள் கொண்ட புத்தகங்களை வாங்கி பரணில் வைத்திருந்து எனக்கு எடுத்துக்கொடுத்தவர் இவர்த