இடுகைகள்

டப்பிங் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

ஆடியோ கதைகள் மூலம் மக்களின் மனதை வென்ற பாக்கெட் எஃப்எம்! - பார்ச்சூன் 40 அண்டர் 40

படம்
  நிஷாந்த், ரோகன், பிரதீக்- துணை நிறுவனர்கள், பாக்கெட் எஃப்எம் பாக்கெட் எஃப்எம்- ஆடியோ கதைசொல்லி ரோகன் நாயக், நிஷாந்த், பிரதீக் தீக்‌ஷித் துணை நிறுவனர்கள் பாக்கெட் எஃப்எம் யூட்யூபை திறந்தால், ‘’பார்க்கிறதுக்கு பிச்சைக்காரன் மாதிரி இருக்கான். இவனுக்கு பேங்கில அக்கவுண்ட் இருக்கா, இந்த பிச்சைக்காரனுக்கு ஹோட்டல் டேபிளா,, அதை எங்களுக்கு கொடுங்க. பாக்குறதுக்கு சர்வர் மாதிரி இருக்க, இரண்டு கிளாஸ்ல டீ போட்டு எடுத்துட்டு வா ‘’ என்ற டோனில் பெண் குரல் பேசும் மோசமான அனிமேஷன் காட்சியைப் பார்த்திருப்பீர்கள். அந்த கம்பெனிதான் பாக்கெட் எஃப்எம். கதைகளை ஆடியோ வடிவில் கூறும் நிறுவனம். ரோகன், நிஷாந்த் ஆகிய இருவரும் காரக்பூரல் ஐஐடியில் படித்தவர்கள். இவர்கள் பிரதீக்கை சந்தித்தபிறகு பாக்கெட் எஃப் நிறுவனத்தை உருவாக்கினர்.   இன்று பாக்கெட் எஃப்எம்மின் மதிப்பு, 400 மில்லியன் டாலர்களுக்கும் அதிகம். அண்மையில்தான் 93.5 மில்லியன் டாலர்களை முதலீடாக பெற்றது. பாக்கெட் நாவல் என்ற சகோதர நிறுவனத்திலிருந்து பாக்கெட் எஃப் எம் நிறுவனம் உருவானது. திகில் கதைகளில் யட்சினி என்ற கதையை பொறியியல் மாணவர் ஒருவர் எழுதி, அக்