இடுகைகள்

நேர்காணல்- கிரிஷ் காசரவல்லி லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

"கலைப்படங்களை எடுப்பதற்கான இடம் சுருங்கிவிட்டது" - கிரிஷ் காசர்வல்லி

படம்
கிரிஷ் காசர்வல்லி....  கன்னடத்தில் இலக்கியங்களை தழுவிய பனிரெண்டு  படங்களை இயக்கி பதினான்கு தேசிய விருதுகளை வென்ற முக்கியமான இயக்குநர். மருந்தியல் படித்துவிட்டு திரைப்படக்கழகத்தில் படிக்க விண்ணப்பித்து ஆச்சரியம் தந்தவர். யூ.ஆர். அனந்தமூர்த்தி, பூர்ணசந்திர தேஜஸ்வி, எஸ்.எல். பைரப்பா ஆகியோரின் நாவல்களை சிறுகதைகளை வலுவான திரைப்படங்களாக்கினார் காசர்வல்லி. பதினான்கு தேசிய விருதுகளை வென்றிருக்கிறீர்கள். கலைப்படங்களை எடுப்பதற்கு எளிய சூழல் என்று இதனைக் கூறலாமா? கர்நாடகாவில் கலைப்படங்களை எடுப்பது சரியான வழியல்ல. முதலில் இங்கு தயாரிப்பு செலவு என்பது குறைவாக இருக்கும். ஆனால் இன்று நிலைமை  அப்படியல்ல. அரசு படம் உருவாக்க உதவுகிறது என்றாலும் தயாரிப்புசெலவு பலமடங்கு அதிகரித்துவிட்டது. திரைப்பட தயாரிப்பாளர் தன் முதலீட்டை எப்படி எடுப்பார் என்பதே எனக்கு ஆச்சரியமாக உள்ளது. 2011 ஆம் ஆண்டு திரைப்படம் ஒன்றை உருவாக்கினேன். சினிமா சூழல்கள் படங்களை உருவாக்குவதற்கான நம்பிக்கையை தரவில்லை என்பதால் பலர் வற்புறுத்தியும் நான் அடுத்த படத்தை எடுக்கவில்லை. மலையாளம் , மராத்தி வட்டாரங்களில் வலுவா