இடுகைகள்

சுட்டோமு லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

கொலை செய்ய எலி சொன்னது தவறா?

படம்
அசுரகுலம் சுட்டோமு மியசாகி 1988 ஆம் ஆண்டு வாக்கில் ஜப்பான் மக்களை பயமுறுத்தி சைக்கோ கொலைகாரரின்  பெயர் சுட்டோமு மியசாகி. அங்குள்ள சிறுவர், சிறுமிகளை மட்டும் கடத்தி சித்திரவதை செய்து கொன்று நீட்டாக பேக்கேஜ் செய்து அவர்களுக்கு வீட்டுக்கு அனுப்பி பெற்றோரின் மனநிலையை உடைப்பது சுட்டோமுவுக்கு ரொம்ப பிடிக்கும்.  சுட்டோமுவின் தாத்தா இறந்துபோன மூன்று மாதங்களுக்கு பிறகு வேட்டையைத் தொடங்கினார். அன்று ஆக.22, 1988 ஆம் ஆண்டு. மாரி கொன்னோ என்ற நாலு வயது சிறுமி வீட்டின் வெளியே தன் தோழியுடன் விளையாடிக் கொண்டிருந்தார்.  அவளைப் பார்க்க பார்க்க சுட்டோமுவின் மனதில் இருள் சாத்தானின் நிழல் படிந்தது. உடனே பாய்ந்தவர் அச்சிறுமியை தூக்கிக்கொண்டு  மரங்கள் நிறைந்த காட்டுக்கு கொண்டு சென்று கழுத்தை திருகி ஆசையாக கொன்றார்.  இரண்டு மாதங்களுக்குப் பிறகு மசாமி யோசிஸாவா என்ற அடுத்த இலக்கை குறிவைத்தார் இருபத்தாறு வயதேயான சுட்டோமு. அதிகமில்லை ஏழுவயதான சிறுமி. தூக்கிச்சென்று கொன்னோவைக் கொன்ற அதே இடத்தில் வைத்து கொன்றார். அடுத்து டிச. 12 அன்று நான்கு வயது சிறுமி எரிகா நன்பாவை கடத்