இடுகைகள்

காங்கேயம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

நில்லாமல் காற்று வீசும் நகரத்திற்கு பயணம்!

 நில்லாமல் காற்று வீசும் நகரத்திற்கு பயணம்! தாராபுரத்திற்கு குறிப்பிட்ட இடைவெளியில் சென்று நண்பரை சந்தித்து வருவது வழக்கம். அந்த நகரில் உள்ள நண்பர், இலக்கியங்களை வாசிக்க கூடியவர். அதோடு பல்வேறு ஊடகங்களில் தேசிய கட்சி சார்ந்து விவாதிக்க கூடியவர். அந்த கட்சி சார்ந்த ஆதரவு நிலை எனக்கு கிடையாது. நூல்களை வாசிக்க கூடியவர் என்பதால் பலமுறை நூல்களை இரவல் வாங்கி வந்திருக்கிறேன். தான் வாசித்த நூல்களை இரவல் கொடுத்தவர், சிலமுறை பழைய நூல்களை அன்பளிப்பாக வைத்துக்கொள்ளவும் கொடுத்திருக்கிறார். கடன் வாங்கி பிறரது தலையில் மசாலை அரைக்கும் மூத்த சகோதரர் வழியாக அறிமுகம் கிடைக்கப் பெற்றவர்.  கிளம்பும் நாளன்று அதிகாலையில் எழுந்தால், அப்போதே தந்தையார் தனக்கான சமையலை தொடங்கியிருந்தார். இரண்டரை மணிக்கு எழுந்து சமையல் செய்துவிட்டு நடைபயணத்தை ஒரு கி.மீ.அளவுக்கு அமைத்துக்கொள்பவர், தேநீர் அருந்த செல்வார். பிறகு, நான்கு மணியைப் போல திரும்ப வீட்டுக்கு நடந்து வருபவர், டிவியை ஓடவிட்டு பாடல்களைப் பார்த்துக்கொண்டு இருப்பார். பிறகு அதை ஐந்து மணிக்கு அமர்த்திவிட்டு மோட்டார் விட்டு வீட்டின் வெளியே உள்ளே வாழை, கொய்யா...