இடுகைகள்

அலர்ஜி லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

ஆழமான துயர் தரும் வலி - கடிதங்கள் - கதிரவன்

படம்
  ஆழமான துயர் தரும் வலி ! அன்பு நண்பர் கதிரவனுக்கு , வணக்கம் . நலமா ? உங்கள் உடல் , மனம் மேம்பட இறைவனை வேண்டுகிறேன் . மறைமலை அடிகள் எழுதிய கடித நூலொன்றைத் தரவிறக்கி வாசித்தேன் . தமிழ் , ஆங்கிலம் என இரண்டிலும் தேர்ந்து விளங்கிய ஆளுமை . தனித்தமிழில் எழுதுவது , சைவத்தைப் பரப்புவது என வாழ்ந்து வந்திருக்கிறார் . தமிழக அரசு இணைய மின் நூலகத்தில் நிறைய அரிய நூல்கள் கிடைக்கின்றன . இந்த நூலை அங்கிருந்தே தரவிறக்கி வாசித்தேன் . இன்று சன் மோகன்ராஜ் அண்ணா அறைக்குச் சென்றேன் . அவர் தனது மனைவி , குழந்தை ஆகியோரை சென்னைக்கு கூட்டி வர உபாயம் யோசித்து வந்தார் . வருமான வாய்ப்பை தேடிக்கொண்டிருக்கிறார் . மின்னல் முரளி மலையாளப் படம் பார்த்தேன் . கிராமத்து சூப்பர் ஹீரோ கதை . நன்றாக திட்டமிட்டு எடுத்திருக்கிறார்கள் . படத்தில் நம்மை யோசிக்க வைக்கும் எதிர்மறை நாயகன் பாத்திரம் ஷிபு தான் . அதாவது , நாடக கலைஞரான குரு சோமசுந்தரம் . இவர் , தனது அம்மா , காதலி என இருவரையும் வெவ்வேறு காலகட்டங்களில் சுற்றியுள்ளவர்கள் காரணமாகவே இழக்கிறார் . பூமியில் வாழ்வதற்கான பொருளை அவர் இழக்கும்போது கடுமையாக கோபமுறுகிறார் . அதில் ஏதும்

உண்மையைச் சொன்னால் மனதுக்கு உறுத்துமே? - கடிதங்கள் - கதிரவன்

படம்
  21.11.2021 மயிலாப்பூர் அன்புள்ள நண்பர் கதிரவனுக்கு, வணக்கம். நலமா?   அலர்ஜிக்கான மருந்துகளை தொடர்ச்சியாக சாப்பிட்டு வருகிறேன். பிரன்ட்லைன் சந்தா முடிந்துவிட்டது. இதுவரை வந்த இதழ்களை முழுமையாக படிக்க முடியவில்லை. நிதானமாகத்தான் படித்து வருகிறேன். இரண்டு இந்தியா  பற்றிய மீம்களைப் பார்த்து இருப்பீர்கள். வீர்தாஸ் என்ற தனிக்குரல் கலைஞர் அமெரிக்காவில் பேசியது சர்ச்சையாகி இருக்கிறது. தீக்கதிர் நாளிதழிலும் அதை செய்தியாக்கியிருந்தார்கள். உண்மையத்தான் பேசியிருந்தார். பெண்கள், சிறுபான்மையினர் மீதான தாக்குதலைப் பற்றி பேசி இருந்தார். உண்மையைச் சொன்னால் பலரின் மனதுக்கு உறுத்துமே? சங்கிகள் உடனே வரிந்துகட்டி  கிளம்பிவிட்டனர். இவர்களால் தேவையில்லாமல் கோர்ட்டின் நேரம் வீணாகிறது. வெட்டியாக ஒரு குற்றச்சாட்டு சொல்லி வழக்குகளை போட்டு வருகிறார்கள்.  கடந்த 16ஆம் தேதி பணமதிப்பு நீக்கம் செயல்படுத்தப்பட்டதை நினைவுகூரும் விதமாக தீக்கதிர் நாளிதழில் கட்டுரை வெளியாகியிருந்தது. அதைப் படித்தேன். இந்த செய்தியில் கார்ட்டூன் கதிரின்  கார்ட்டூனும் இடம்பெற்றிருந்தது. அதைப் பார்க்க மகிழ்ச்சியாக இருந்தது. உண்மையில் திறமையா

ஒவ்வாமையோடு வேறு பாதிப்புகளையும் ஏற்படுத்தும் வேதிப்பொருட்கள்- பொருட்களை வாங்கும்போது கவனிங்க!

படம்
              கவனம் கொள்ளாத வேறு சில ஆபத்துகள்! தாலேட்டுகளைப் பற்றி என்னென்ன ஆபத்துகள் என்று பார்த்தோம். அது மட்டும்தானா என்றால் கிடையாது. இது மலையாளப் படம் போல, ஒரே படத்தில் ஏராளமான நட்சத்திர நடிகர்கள் குணச்சித்திர பாத்திரத்தில் நடிப்பார்கள். அதேபோல நிறைய வேதிப்பொருட்கள் உடலை பாதிக்கின்றன. அவற்றில் சிலவற்றைப் பார்ப்போம். அசிடோன் மூச்சுக்குழல், ரத்தம், இதயம், கல்லீரல், சிறுநீரகம், தோல், மூளை, நரம்பியல் அமைப்பு என பாகுபாடில்லாம் நிறைய உறுப்புகளை பாதிக்கிறது. இங்கு குறிப்பிட்ட உறுப்புகள் குறைவுதான். அசிடோன் உள்ளே போகும்போது, உடலிலுள்ள நிறைய உறுப்புகள் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. பியூடேன், ஐசோபியூடேன் எடை குறைவான திரவம்தான். ஆனால் மூளையையும், நரம்பு அமைப்புகளையும் கடுமையாக பாதிக்கிறது. உடலில் நடக்கும் வேதிவினைகளை மூளைதான் தீர்மானிக்கிறது. அதுவே சீர்குலையும்போது, உடல் தடுமாறி தளரும். திர்வ பெட்ரோலியம். ஏர் ஃப்ரெஷ்னர் வகைகளில், திரவ பெட்ரோலியத்தை அடிப்படையாக கொண்ட பொருட்களை பயன்படுத்துகிறார்கள். வண்டிக்கு போடுவதை உடலுக்குள் அனுப்பினால் உறுப்புகள் மைலேஜ் காட்டுமோ என நினைக்காதீர்கள். எல்லாம

ஒவ்வாமையை கட்டுப்படுத்துவது எப்படி? சில வழிமுறைகளை அறிவோம் - ஒவ்வாமை நூலிலிருந்து...

படம்
                ஒவ்வாமைக்கு காப்பு! என்னதான் அதிநவீன பூட்டு என்றாலும் அதனை உடைக்கும் நுட்பமான புத்தி கொண்ட திருடனும் இருப்பான்தானே? நோய்க்கும் இது பொருந்தும். என்னதான் ஒவ்வாமை நிறைய பிரச்னைகளை ஏற்படுத்தினாலும் மருந்தை விட உணவு மூலமே நிறைய மாற்றங்களை செய்யலாம்., சில உணவுகளை சாப்பிடாமல் தவிர்த்தாலே உடல் நலமாகி தேறும். இப்போது உடல்நலம் காக்கும் சில சத்துகள், மருந்துகளைப் பார்ப்போம். கால்சியம் மெக்னீசியம் ஆகிய சத்துகள் உடலுக்கு முக்கியம். இவை தசைகளில் சேருவது அவசியம். தசைகளின் இறுக்கம், நெகிழ்வு ஆகிய இரண்டுக்கும் இந்த சத்துக்கள் தேவை. ஆஸ்துமா பாதிப்பு கொண்டவர்கள் இந்த சத்துகள் கொண்ட பொருட்களை சாப்பிடலாம். அப்படியல்லாதபோது 250 கிராம் கால்சியம், மெக்னீசியம் ஆகிய இரண்டையும் நான்கு முறை தினசரி எடுத்துக்கொண்டால் உடல் நலமாகும். இதில் ஆண்கள், பெண்களுக்கு சாப்பிடும் அளவு மாறும். எனவே மருத்துவரின் பரிந்துரை அவசியம் தேவை. ஆப்பிள், வெங்காயத்தில் உள்ள குயிர்செடின் என்ற வேதிப்பொருள்  உடலுக்கு முக்கியமானது. இது ஆன்டி ஆக்சிடன்டாக உடலில் ஒவ்வாமை பாதிப்பை கட்டுப்படுத்துகிறது. இதனை பைடோநியூட்ரியன்ட் என்று அ

ஒவ்வாமை புதிய மின்னூல் வெளியீடு - அமேஸானில் வாசிக்கலாம்

படம்
  புதிய மின்னூல் வெளியீடு ஒவ்வாமை ஒவ்வாமை என்பதை ஆங்கிலத்தில் அலர்ஜி என அழைக்கிறார்கள். இன்று, தொற்றுநோய்கள் பாதிப்பை பற்றி பலரும் பேசினாலும் கூட, அதற்கு நிகராக வளர்ந்து வரும் பிரச்னையாக நோயாக ஒவ்வாமை உள்ளது. இதனை குணப்படுத்த முடியாது. ஒவ்வாமை தரும் பொருட்களை சாப்பிடாமல், உடலுக்குள் செல்லாமல் தடுத்தால் உடல்நலம் சீர்பெறும். உண்மையில் ஒவ்வாமை என்றால் என்ன, அதை ஏற்படுத்துவது என்னென்ன பொருட்கள், நாம் வாழும் இடம், பயன்படுத்தும் பொருட்கள், உண்ணும் உணவு என்னென்ன பங்களிப்பை செய்கிறது என்பதைப் பற்றி நூல் விவரித்துள்ளது. இது சிறிய அளவிலான அறிமுக நூல்தான். ஆங்கிலத்தில் ஒவ்வாமையைப் புரிந்துகொள்ள சிகிச்சை செய்ய ஏராளமான நூல்கள் உண்டு. ஆனால் இந்த வகையில் தமிழில் இது புதிது. தமிழில் ஒவ்வாமையைப் பற்றிய எளிதாக தெரிந்துகொள்ள பாதுகாப்பாக இருக்க இந்த நூல் உதவும். நூலை அமேஸானில் வாசிக்க ஸ்கேன் செய்யுங்க.... வெப்சைட் லிங்கை கிளிக் செய்தும் வாசிக்கலாம்.... https://www.amazon.in/dp/B09TJMVW5W

காற்றில் மிதக்கும் மகரந்தத்தால் ஏற்படும் ஒவ்வாமை!

படம்
  மகரந்தத்தின் ஆபத்து ஒவ்வாமையை ஏற்படுத்துவதில் தாவரங்களின் மகரந்தம் முக்கியப் பங்கு வகிக்கிறது. இந்த மகரந்தம் காற்றிலுள்ள கார்பன் டை ஆக்சைடு, வெப்பம் ஆகியவற்றுடன் இணைந்து மக்களை பாதிக்கிறது. இது குறிப்பிட்ட பருவத்தில்தான் மக்களை பாதிக்கிறது என்பது உண்மை. ஆனால் பாதிப்பு கடுமையாக இருக்கும். பொதுவாக ஒரு பொருளிலுள்ள புரதம்தான் ஒவ்வாமைக்கு முக்கியமான காரணமாக இருக்கும்.  கிராமங்களில்தான் அதிகளவு தாவரங்கள், மரங்கள் உள்ளன. ஆனால் ஒவ்வாமையால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையைப் பார்த்தால், நகரத்தினர்தான் அதிகமாக இருக்கிறார்கள். இதற்கு முக்கியமான காரணம், நகர்ப்புறங்களில் பசுமைப்பரப்பு குறைந்துபோனதும், மாசுபாடு அதிகரித்து வருவதும்தான்.  இதற்கு தீர்வு ஒன்றே ஒன்றுதான். சுற்றுப்புறத்தையும் உங்களையும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும் அவ்வளவேதான். மரங்களிலிருந்து மகரந்தம் உருவாகி ஒருவரைத் தாக்குவதற்கு வாய்ப்பிருக்கிறது. இதனால் அக்டோபர் முதல் மார்ச் வரையிலான காலகட்டத்தில் கவனமாக இருக்கவேண்டும். ஆப்பிள், பேரிக்காய் செர்ரி, பெர்ரி போன்றவை கூட ஒவ்வாமையைக் கூட்ட வாய்ப்புள்ளது. எனவே இவற்றிலிருந்து சற்றுதள்ளி இ

அலர்ஜியை சோதிப்பதற்கான பல்வேறு சோதனைகளை அறிந்துகொள்வோம்!

படம்
          ஒவ்வாமையைப் பொறுத்தவரை இதனை சாதாரண நோய்களைப் போல மருத்துவச்சிகிச்சை அளிக்க முடியாது . இங்கு நாம் மோதப்போவது நமது உடலின் கவசகுண்டலமான நோய் எதிர்ப்பு சக்தியுடன் . இதனால் மருத்துவர்கள் சற்று எச்சரிக்கையாக இருப்பார்கள் ஒவ்வாமை என்று வரும் நோயாளியிடம் ஏராளமான கேள்விகளைக் கேட்பார்கள் . அவர்கள் வாழும் இடம் , சாப்பிடும் உணவுகள் , டயட் கடைப்பிடிக்கிறார்களா , அவர்களது படுக்கை எப்படி இருக்கிறது , செல்லப்பிராணிகளை படுக்கையில் படுக்க வைத்து உறங்குகிறார்களா , வேறு நோய்க்கான மருந்தை சாப்பிடுகிறார்களா என பல்வேறு விஷயங்களை கேட்பார்கள் . இதில் கிடைக்கும் பதில்களை வைத்துதான் ஒருவருக்கு என்ன மாதிரியான ஒவ்வாமை சோதனை செய்யவேண்டும் என மருத்துவர்கள் முடிவு செய்வார்கள் . ரத்த சோதனை , தோல் சோதனை என இருவகையில் ஒவ்வாமையைக் கண்டுபிடிக்க சோதனை செய்கிறார்கள் . இதன்மூலம் ஒருவரின் உடலில் உள்ள நோய் எதிர்ப்பு பொருட்களையும் , ஒவ்வாமைக்கான பாதிப்பு காரணிகளையும் கண்டுபிடிக்கலாம் . மூன்று ரத்த பரிசோதனை முறைகளை செய்து பார்ப்பார்கள் . முதல் இரண்டும் உடலில் கிருமிகளை எதிர்த்து போராடும் ஆன்ட

அலர்ஜிக்கான அறிகுறிகள் எவை?

படம்
        போலியான அலர்ஜி என்பது உணவில் உள்ள கலப்படங்களால் அதிகம் நடைபெறுகிறது . உணவில் கலக்கப்படும் பதப்படுத்தும் பொருட்கள் , ஊக்கமூட்டிகள் , உலர்ந்த திராட்சை , உருளைக்கிழங்கு பொருட்கள் , ஹஸ்டாமைனை ஊக்குவிக்கும் சீஸ் , ஒயின் ஆகிய பிற பொருட்களும் அலர்ஜிக்கு முக்கிய காரணமாக அமைகின்றன . எளிதாக அலர்ஜி பாதிக்கப்படும் நிலையில் உள்ளவர்களை மேலே சொன்ன பொருட்கள் அதிகம் பாதிக்கும் . இவர்களுக்கு என்ன பாதிப்பு ஏற்பட்டது என்பதை சாதாரண சோதனைகளில் கண்டுபிடிக்க முடியாது . ஆன்டிபாடியான ஐஜிஇயை இதில் இருக்கிறதா என்று சோதிப்பார்கள் . போலியான அலர்ஜி என்பது நோயாளிக்கு செரிமானக் கோளாறு உள்ளதா என்பதை சோதிக்க உதவுகிறது . குடல் பகுதியில் பால் பொருட்களால் ஏற்படும் அலர்ஜி , டைரமைன் , ஹிஸ்டாமைன் ஆகியவை கொண்ட உணவுகளால் ஏற்படும அலர்ஜி . சீஸ் , மது , துனா , சாஜேஜ் உணவுகள் இதற்கு காரணமாக அமைகின்றன . குளூட்டேன் , ஒயின்களில் உள்ள பொருட்கள் காரணமாக அலர்ஜி ஏற்படுகிறது . உரம் , உணவு நிறமிகள் , பதப்படுத்தும் பொருட்கள் , ஊக்கமூட்டிகள் காரணமாக ஏற்படும் பொதுவான அலர்ஜி . அறிகுறிகள் அலர்ஜி

அலர்ஜி ஏற்படுவதில் மரபணுக்களின் பங்கு!

படம்
            உடலில் அலர்ஜி பாதிப்பு ஏற்படும்போது ஹிஸ்டமைன் என்ற ஹார்மோன் உடலில் எரிச்சல் , வீக்கம் என சில பாதிப்புகளை ஏற்படுத்துகிறது . இதன் பணி என்பது உடலுக்கு பாதிப்பு ஏற்படுத்துவதல்ல . அலர்ஜி ஏற்படும்போது மட்டும் இப்படி நட்டு கழன்றது போல நடந்துகொள்ளும் . இதயத்திலுள்ள மின்தூண்டல் அளவு , ரத்த அழுத்த அளவு , வயிற்றிலுள்ள சீரணிக்கும் அமில அளவு ஆகிய்வற்றை கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ளும் ஹார்மோன் இதுதான் . ஹிஸ்டாமைன் என்பதற்கென தனி இடம் கிடையாது . அனைத்து இடங்களிலும் பரம்பொருள் போலவே பார்க்க கிடைக்கும் . அலர்ஜி பாதிப்பு ஏற்படும் என்றால் அனைத்து பொருட்களும் உயிர் போகும் அளவுக்கு பாதிப்பு ஏற்படுத்தாது . சில பொருட்கள் அலர்ஜி ஏற்படுத்துபவை என்றாலும் கூட அறிகுறிகளே இருக்காது . சில பொருட்கள் மட்டும் உயிரிழப்பு ஏற்படும் அளவுக்கு சித்திரவதை செய்துவிடும் . பொதுவாக உடனடியாக அலர்ஜி பாதிப்பு ஏற்படும் என்றால் இரண்டு மணிநேரம் தேவை . அதிகபட்சமாக ஆறு மணிநேரங்களில் அலர்ஜி பாதிப்புள்ளவருக்கு அறிகுறிகள் தெரியத் தொடங்கும் . ஆ்ஸ்துமா இந்த வகையில் சற்று தாமதமாக பாதிப்பைத் தொடங்கினாலும் அதி