அலர்ஜிக்கான அறிகுறிகள் எவை?

 

 

 

Woman, Act, Naked, Skin, Sexy, Female, Eroticism

 

போலியான அலர்ஜி என்பது உணவில் உள்ள கலப்படங்களால் அதிகம் நடைபெறுகிறது. உணவில் கலக்கப்படும் பதப்படுத்தும் பொருட்கள், ஊக்கமூட்டிகள், உலர்ந்த திராட்சை, உருளைக்கிழங்கு பொருட்கள், ஹஸ்டாமைனை ஊக்குவிக்கும் சீஸ், ஒயின் ஆகிய பிற பொருட்களும் அலர்ஜிக்கு முக்கிய காரணமாக அமைகின்றன.


எளிதாக அலர்ஜி பாதிக்கப்படும் நிலையில் உள்ளவர்களை மேலே சொன்ன பொருட்கள் அதிகம் பாதிக்கும். இவர்களுக்கு என்ன பாதிப்பு ஏற்பட்டது என்பதை சாதாரண சோதனைகளில் கண்டுபிடிக்க முடியாது. ஆன்டிபாடியான ஐஜிஇயை இதில் இருக்கிறதா என்று சோதிப்பார்கள். போலியான அலர்ஜி என்பது நோயாளிக்கு செரிமானக் கோளாறு உள்ளதா என்பதை சோதிக்க உதவுகிறது.


குடல் பகுதியில் பால் பொருட்களால் ஏற்படும் அலர்ஜி, டைரமைன், ஹிஸ்டாமைன் ஆகியவை கொண்ட உணவுகளால் ஏற்படும அலர்ஜி. சீஸ், மது, துனா, சாஜேஜ் உணவுகள் இதற்கு காரணமாக அமைகின்றன.


குளூட்டேன், ஒயின்களில் உள்ள பொருட்கள் காரணமாக அலர்ஜி ஏற்படுகிறது.


உரம், உணவு நிறமிகள், பதப்படுத்தும் பொருட்கள், ஊக்கமூட்டிகள் காரணமாக ஏற்படும் பொதுவான அலர்ஜி.


அறிகுறிகள்


அலர்ஜியால் வீக்கம், மூச்சுத் திணறல், தோல் சிவப்பது ஆகியவை முக்கிய அறிகுறிகளாக வெளிப்படும். உடலில் ஹிஸடாமைன் வெளிப்பட்டு விட்டது என்பதை இந்த அறிகுறிகள்தான் பிறருக்கு வெளிப்படுத்தும். இரு்மல் வந்தால் உடனே ஒருவருக்கு ஆ்ஸ்துமா இருக்கிறது என்று அர்த்தமில்லை. அறிகுறிகள் தீவிரமாக இருந்தால் உடனே மருத்துவரை அணுகி அவரின் ஆலோசனைகளைப் பெறுவது அவசியம்.


அலர்ஜியின் வகைகள்


முதல் வகை


ஆன்டிபாடி ஐஜிஇ வெளிப்படுவதால், உடலில் அதீத உணர்வு தீவிரம் ஏற்படும்.


இரண்டாம் வகை


குடலில் ஏற்படும் செல் பாதிப்பு. இந்த வகையில் ஐஜிஜி உடலில் வெளிப்படுவதால் அலர்ஜி ஏற்படுகிறது.,


மூன்றாவது வகை


ஐஜிஜி ஆன்டிபாடி ரத்தத்தில் கலந்து பல்வேறு திசுக்களை தாக்கும் நிலை.


அதீத உணர்வுகள் குறைந்து, டி லிம்போசைட்ஸ் செல்கள் இணைந்து உடலில் வீக்கம் ஏற்படுத்துவது.


முதல்வகை அலர்ஜியில் ஐஜிஇதான் அலர்ஜி எதிர்வினைகளுக்கு முக்கியமான காரணம். ஐஜிஜி காரணமாக ஏற்படும் அலர்ஜி, போலியான அலர்ஜிகளும் இதில் முக்கியமான பங்கு வகிக்கின்றன.


அலர்ஜியில் உடனடியாக ஏற்படும் அபாயம் என்பது மூச்சுவிட சிரமமாக இருப்பது, அனபைலாட்டிக் அதிர்ச்சி ஏற்படுவது என இரண்டைச் சொல்லலாம். இதன் காரணமாக ரத்தம் மெல்ல நீர்த்துப்போகத் தொடங்கும். உடலில் ரத்த அழுத்தம் குறைந்து, நோயாளி நிலைகுலைந்து விழுந்து இறப்பார்.


அலர்ஜியில் இரண்டாவது, மூன்றாவது, நான்காவது வகை அறிகுறிகளும் உண்டு.


நெஞ்சு எரிச்சல், மலக்கட்டு, வயிற்றுப்போக்கு, வாய்ப்புண், இரைப்பை அழற்சி, பெருங்குடல் அழற்சி ஆகியவை செரிமானம் சார்ந்து ஏற்படும். சுவாசிப்பது தொடர்பாக மூச்சுக்குழாய் அழற்சி, ஆஸ்துமா, இருமல் ஆகியவை ஏற்படுகின்றன. மூட்டு இணைப்புகள் தொடர்பாக இணைப்புகள் வலி, இணைப்பு பகுதிகள் விறைப்புத்தன்மை அடைவது ஆகியவை ஏற்படுகின்றன. பொதுவாக மைக்ரேன் தலைவலி, சோர்வு, மன அழுத்தம், உடல் பருமன் ஆகியவையும் நேருகின்றன.


உணவுப்பொருட்கள், சூழல் சார்ந்து அலர்ஜி ஏற்பட்டாலும் கூட பல்வேறு நோய்களுக்கு சாப்பிடும் மருந்துப்பொருட்களே அலர்ஜி முதல் போலி அலர்ஜி வரை தூண்டிவிடுகின்றன. இவை நோய் எதிர்ப்பு சக்தி அலர்ஜி பாதிப்பை ஏற்படுத்தும் முன்னரே தங்கள் வேலையை காட்டி விடுகின்றன.


உடல்நலத்தைப் பாதிக்கும் வெளிப்பொருள்


தொடுவது, சாப்பிடுவது, சுவாசிப்பது வழியாக உடலுக்குள் சென்று நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டிவிட்டு ஒவ்வாமையை ஏற்படுத்தும் பொருட்களை ஆங்கிலத்தில் அலர்ஜென் என்று குறிப்பிடுகின்றனர். குறிப்பிட்ட புரதங்களால் ஆன பொருட்களே அலர்ஜியை உடலில் தூண்டுகின்றன. இதில் இவற்றின் அளவு முக்கியமானது. இப்படி பாதிப்பை ஏற்படுத்தும் பொருட்கள் அளவில் சிறியவையாக இருந்தாலும் உடல் உருவாக்கும் புரதத்துடன் இணைந்துவிடுகின்றன. மகரந்தம், தூசிகள், மருந்துகள், பூச்சிகளின் விஷம், விலங்குகளின் எச்சில், சிறுநீர் ஆகியவையும் பாதிப்பை ஏற்படுத்த போதுமானவை. பொதுவாக அலர்ஜி ஏற்படுத்தும் பொருட்களாக பால், முட்டை, மீன், உலர்ந்த பழங்கள், சாக்லெட் ஆகியவற்றை வகைப்படுத்துகின்றனர்.


கண்டுபிடிக்கலாமா?


அலர்ஜிக்கான சோதனைகள் தனியாக உள்ளன. அவற்றைப் பயன்படுத்தி கண்டறியலாம். தொழிற்சாலைகள், சலவைப் பொருட்களால் ஏற்படும் அலர்ஜியை அலர்ஜி சோதனையில் க்ண்டுபிடிக்க முடியாது. இதனை சற்று யூகித்துதான் அறியமுடியும்.


சுவாசிப்பது மூலம் ஏற்படும் அலர்ஜி, சுவாச மண்டலத்தை முதலில் பாதிப்பு மூச்சுத் திணறல், ஆஸ்துமா ஆகிய பிரச்னைகளை ஏற்படுத்துகிறது. தொடுதல் மூலம் ஏற்படும் பாதிப்புகளாக எக்சிமா, தோல் புண் ஆகியவற்றைக் கூறலாம். இவற்றுக்கு காரணமாக சில தாவரங்கள், சலவைப் பொருட்கள், அழகுசாதனப் பொருட்கள், நீர், உலோகம் ஆகிவவை காரணமாக அமைகின்றன. மருந்துகளில் அலர்ஜியை தூண்டும் பொருட்கள் அதிகம். குறிப்பாக ஆஸ்பிரின், பென்சிலின் என இரண்டுமே உடலில் பாதிப்பை ஏற்படுத்தக் கூடியன. இவற்றில் பூஞ்சைகளை பயன்படுத்துகின்றனர். விட்டமின்கள், அனஸ்தீசியாவும் அலர்ஜியை தூண்டிவிடும் வேலையை கச்சிதமாக செய்கின்றனர். இப்படி பாதிப்பு ஏற்படுவது நபர்களைப் பொறுத்து மாறுபடும்.


மருந்துகளை அளவு தாண்டி அதிகம் சாப்பிடுவத அலர்ஜியை வேகப்படுத்தும். இதன் காரணமாக ஒருவருக்கு அனபைலாட்டிக் அதிர்ச்சி ஏற்பட்டு சுவாச மண்டல பாதிப்பு ஏற்படும். சுயநினைவை இழப்பவர்கள், இறக்கவும் வாய்ப்புள்ளது. பல்வேறு உடல் உறுப்புகள் அலர்ஜியால் ஒரே நேரத்தில் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது.




கருத்துகள்