கொல்லப்படும் பெண்களுக்கு அழகு முக்கியமா? - சைக்கோ டைரி

 







இனத்தை குறிவைத்து கொலை

பொதுவாக சீரியல் கொலைகார ர்களை அவர்கள் எந்த இனத்தைச் சேர்ந்தவர்களோ அந்த இனத்தைச் சேர்ந்தவர்களைத்தான் கொலை செய்வார்கள், வல்லுறவு செய்வார்கள் என நம்பிக்கை நிலவுகிறது. ஆனால் அது உண்மை இல்லை. 

ஒருவர் குறிப்பிட்ட இனக்குழுவினர் வாழும் இடத்தில் வசிக்கிறார் என்பதே இதில் முக்கியமானது. அங்கு அவர் பார்ப்பது, பேசுவது என அனைவருமே குறிப்பிட்ட இனத்தைச் சேர்ந்த பெண்களாக இருப்பது தற்செயலானதுதானே? எனவே அவர்களை எளிதாக பின்தொடர்ந்து கொலை செய்ய முடியும். 

மற்றபடி வெள்ளையர்கள் இனவெறியுடன் கருப்பர்களை அல்லது கருப்பர்கள் வெள்ளையர்களை மட்டுமே என்று கொலை செய்வது கிடையாது. இன்று அது பழிக்குப்பழி விளையாட்டாக இருந்தாலும் கூட சீரியல் கொலைகார ர்களைப் பொறுத்தவரை கொலை என்பதுதான் விஷயமே ஒழிய அவர்களின் சாதி, மதம், இனம், மொழி எல்லாம் அனாவசியமானவை. 

தோற்றம் முக்கியம்

சீரியல் கொலைகார ர்களைப் பொறுத்தவரை தன்னை பாடாய்படுத்திய அம்மாவை நேரடியாக பழிவாங்க முடியாது போகும் வாய்ப்புகள் உண்டு. செய்வதற்கும் மனமில்லாத நிலையில் பிற பெண்களின் மீது கோபத்தை காட்டி கொல்லுவார்கள். இதில் தாடை இப்படி, தலைமுடியின் நிறம், உடல்வாகு என பல்வேறு விஷயங்களை உருவாக்கியது பத்திரிகையாளர்கள்தான். உண்மையில் கொலைசெய்த சீரியல் கொலைகார ர்களுக்கு பெண் சென்னையா, கோவையா என்பதல்லாம் முக்கியமே கிடையாது. கிடைக்கிற வாய்ப்பை பயன்படுத்திக் கொல்லவேண்டும். அப்படி கொல்லும்போது அவர்கள் கெஞ்சுவதும், கொஞ்சுவதும், அலறுவதும்தான் உழைப்பிற்கான ஊதியம். 

எப்படி தேர்ந்தெடுக்கிறார்கள்?

கொஞ்சம் பொசுக்கென்ற பெண்களைத்தான். அப்போதுதான் அவர்களை எளிதாக மிரட்டி, பணிய வைத்து கொல்ல முடியும். திருமணமான அனைத்து விஷயங்களையும் பார்த்துவிட்ட பெண்களை ஏமாற்றமுடியாது. காதல் சமாச்சாரங்களை பிரயோகிக்க முடியாது. பெர்க், ஜெம்ஸ் சாப்பிடும் இளம் பெண்கள், கல்லூரி செல்லும் பெண்கள் இதற்கு சரியானவர்கள். சீரியல் கொலைகார ர்களைப் பொறுத்தவரை பெண்களை மிரட்டினால் பணிய வேண்டும். அவர்கள் தேக்வாண்டோ கற்றது போல சண்டை போட்டால் கொல்லும் லட்சியம் என்னவாவது? எனவே அதற்கு பங்கம் வராதது போல பெண்களை பார்த்து பார்த்து தேர்ந்தெடுத்து கொல்கிறார்கள். 

தனியாக சந்திக்கும் ஆபத்து

சீரியல் கொலைகார ர்களைப் பொறுத்தவரை யாரை கடத்தினால் பிறருக்கு சந்தேகம் வராதோ அவர்களையே முதலில் மடக்குவார்கள். அப்படிப் பார்த்தால் விலைமாதுக்கள்தான் முதலில் வருகிறார்கள். இவர்களை யாரும் காணவில்லை என்று தேடமாட்டார்கள். இவர்களை இங்கே பார்த்தேன் என யாரும் காணாமல் போன உடனே புகாரும் கொடுக்க மாட்டார்கள். உடல் எங்காவது சாலை ஓரம் அழுகிக் கிடக்கும். பொருட்களை வைத்து அடையாளம் கண்டுபிடிப்பதற்குள் கொலையாளி அடுத்த கொலைக்கான திட்டமிடலில் இருப்பார். வேறு மாநிலம் கூட சென்று எல்லை தாண்டிய கொலைகளை செய்யலாம். அனைத்திற்கும் வாய்ப்பிருக்கிறது. 

அடுத்து, தனியாக வீட்டில் வாழ்பவர்கள். இவர்களை சட்டென யாரும் இருக்கிறார்களா இல்லையா என தேட மாட்டார்கள். பால், பேப்பர் இரண்டு நாளைக்கு வேண்டாம் என போர்டு வைத்துவிட்டு இவர்கள் இல்லாத நேரத்தில் திருடவும் கூட வாய்ப்பு உண்டு. காட்டுப்பகுதியில் நேரமே எழுந்து இறக்குமதி செய்யப்பட்ட ஷூக்களை அணிந்துகொண்டு சாலைகளில் வாக்கிங் செய்பவர்கள் அடுத்து பாதிக்கப்படும் பட்டியலில் வருகிறார்கள். 

பாட் ப்ரௌன்






கருத்துகள்