கொலை செய்ய சிறந்த ஆயுதம்! - சைக்கோ டைரி

 




ஆயுதம் செய்வோம்

சீரியல் கொலைகார ர்களின் டேவிட் பெர்கோவிட்ஸ், ஜான் ஆலன் முகமது, ஜான் லீ மால்வோ ஆகியோர்தான் துப்பாக்கியைப் பயன்படுத்தி இரையை போட்டுத்தள்ளியவர்கள். கத்தி, சுத்தியல், ரம்பம், இறைச்சிவெட்டும் கத்தி என வேறுபட்ட ஆயுதங்களை சீரியல் கொலைகாரர்கள் பயன்படுத்துகின்றனர். அவர்களைப் பொறுத்தவரை ஆயுதம் என்பது பெரிய முக்கியத்துவம் வாய்ந்தது கிடையாது. 

மண்டையிலேயே போட்டு பிடிக்கும் பெண்களை, குழந்தைகளை, ஆன்டிகளை கையில் எடுக்கும் ஆயுதம் பயமுறுத்தவேண்டும். கொடூரமாக சித்திரவதை செய்யவேண்டும். ஆனால் அவர்கள் நெடுநேரம் உயிருடன் இருக்கவேண்டும். இதுதான் பொதுவான சீரியல் கொலைகார ர்களின் மனநிலை. துப்பாக்கியை எடுத்து டுபுக் என சைலன்ஸரை சொருகி போட்டுத்தள்ளினால் அதில் என்ன சுவாரசியம் இருக்கப்போகிறது?

எனவே, இரும்பு கம்பி, கண்ணாடி பாட்டில், கத்தி, கபடா என தேடும் சீரியல் கொலைகார ர்கள் துப்பாக்கியை வேறு ஆயுதம் கிடைக்கவில்லை என்றால் மட்டுமே எடுப்பார்கள். டேவிட் பெர்கோவிட்ஸ், துப்பாக்கியால் தான் எளிதாக ஒருவரை கொல்ல முடிகிறது என்பதால் அதனைத் தேர்ந்தெடுத்தார்.  ஆண்களைப் பொறுத்தவரை இதில் வேடிக்கை அதிகம் இருக்கவேண்டும். 

பெண்களை இதில் பேசவிட்டால் அவர்களும் ஏங்கிப் போவார்களே? பெண்கள் தங்கள் குழந்தைகளை இல்லை தோழியின் குழந்தைகளை கொல்லும் முறை பெரும்பாலும் மென்மையாக இருக்கும். வன்முறை கொஞ்சம் குறைவு. குளியலறையில் தண்ணீரில் முக்கி கொல்வது, விஷம் கொடுப்பது, மயங்க வைத்து கொல்வது என கொலை வேட்டையை நடத்துவார்கள். இந்த முறைகளால் ஒருவர் இறந்தாலும் கூட அவர்களை எளிதில் கண்டுபிடிக்க முடியாது. 

மருத்துவர்கள், செவிலியர்களைப் பொறுத்தவரை அவர்கள் சீரியல் கொலைகாரர்களாக இருந்தால் கண்டுபிடிப்பது மிகவும் கடினம். மருந்தை தவறாக கொடுத்தால் உள்ளுறுப்புகள் பழுதாகி இறப்பார்கள். மருந்துதான் பிரச்னை என்றாலும் பொதுவாகவே மருத்துவர்களை இரண்டாவது கடவுளாக அனைவரும் பார்க்கிறோம். எனவே, அவர்களை குற்றவாளியாக்கி கூண்டில் நிறுத்துவதை யாரும் விரும்புவதில்லை. அதனை ஆதரிக்கவும் மாட்டார்கள். 

நான் ஒரு அம்மா, என் குழந்தையை நானே கொல்வேனா? என்று ஒரு அம்மா ஒப்பாரி வைத்தால் நீதிமன்றமே நிச்சயம் கண்கள் வியர்க்க மயங்கி விடும். இதனால் நிறைய குற்றங்கள் சட்டத்தின் கண்களில் படாமலே போய்விடுகிறது. குழந்தைகளை அதிக கட்டுப்பாடு கண்டிப்பு காட்டி அடித்து உதைத்து வதைப்பவர்களையும் இதில் சேர்க்கலாம். இதன் குறைந்தபட்சம் உடலில் காயங்கள் என்றால், அதிகபட்சம் உள்ளுறுப்புகள் காயமாகி அவர்கள் நாட்பட நோயாளியாகி திடீரென இறப்பார்கள். 

கொலை செய்யும் நேரம்

ஜெயமோகன் எழுதிய நாவலான இரவுதான் இதற்கான விடை. கொலை செய்யும் வெறி அதிகரிக்கும்போது அவர்கள் பகலில் கூட கொலை செய்வதற்கான முயற்சியை தொடங்குவார்கள். ஆனால்  கொலை செய்து பழகும்போது இரவுதான் ஏற்றதாக இருக்கிறது. அந்த நேரத்தில்தான் பெண்கள் வெளியே வந்து மந்தை மாடாக நடப்பார்கள். ஆண்களோடு மதுபான மயக்கத்தில் மூக்கோடு மூக்கை உரசிக்கொண்டு நடப்பார்கள். பார்களில் ஸ்காட்சையும் காக்டெய்லையும் குடித்துவிட்டு கவிழ்ந்து கிடப்பார்கள். கிளப்புகளில் கெட்ட ஆட்டம் போட்டுவிட்டு வீட்டுக்கு போக டாக்சியை பிடிக்க நிற்பார்கள். 

இந்த நேரம்தான் சீரியல் கொலைகாரர்களுக்கான பிரைம் டைம். அதைப் பயன்படுத்திக்கொண்டு பெண்களையும், டீனேஜ் பெண்களையும் மடக்குவார்கள். பொதுவாகவே பெண்கள் தங்கள் முகத்தையும் கண்ணாடியையும், தங்கள் அழகை பிறர் பார்க்கவேண்டும் என்பதையும் ஒதுக்கி வைத்துவிட்டு விழிப்புணர்வோடு இருந்தால் ஆபத்துகளை எதிர்கொள்ளாமல் தப்பிக்கலாம். 

பாட் ப்ரௌன்





கருத்துகள்