செக்ஸ் என்பது இரண்டாம் பட்சம்தான்!

 






செக்ஸ் என்பது இரண்டாம் பட்சம்தான்

கொலை செய்யும்போது, ஒருவரைக் கொல்வதே சீரியல் கொலைகார ர்களுக்கு பாலுறவின் உச்ச இன்பத்தை கொடுக்கிறது. அதனை எப்படி சித்திரவதை மூலம் நீட்டிப்பது என்பதை மட்டுமே அவர்கள் யோசிப்பார்கள்.

 இப்போது இந்தியாவில் ராஃபியா என்ற முஸ்லீம் பெண்ணை கூட்டு வல்லுறவு செய்து கொன்றிருக்கிறார்கள். கழுத்தை அறுத்து, மார்பகங்களை வெட்டிஎடுத்தது, கழுத்தை அறுத்தது ஆகியவற்றை அவர் குற்றுயிராக இருக்கும்போது செய்திருக்க வாய்ப்புகள் அதிகம். ஊழலை வெளியே சொல்லிவிடுவார் என நினைத்து துறைசார்ந்த அதிகாரிகளே இதனை செய்திருக்கிறார்கள். 

 இதன்மூலம் அந்த கொலைகார ர்கள் தங்களது அதிகாரத்தை வெளிப்படுத்துகிறார்கள். இதில் மாறுபாடான விஷயம், வல்லுறவு என்பதுதான். பொதுவாக சீரியல் கொலைகார ர்களுக்கு இரையை கொல்வதே முக்கியம். அதில் உடலை வெட்டுவது, கண்களை தோண்டி வெளியே எடுப்பது, பாலுறுப்பில் கண்ணாடி பாட்டில்களை திணிப்பது, அமிலத்தை ஊற்றி முகத்தை சிதைப்பது ஆகியவை நடக்கும். ஆனால் வல்லுறவை பெரும்பாலும் அவர்கள் செய்வதில்லை. விந்தணுக்களை வைத்து குற்றவாளிகளை நெருங்கும் வாய்ப்பு அதிகம் என்பதை அவர்கள் உணர்ந்திருக்கிறார்கள். 


இயல்பான ஒருவருக்கு ஏற்படும் பாலுறவு இச்சை, சீரியல் கொலைகாரர்களுக்கு ஏற்படாது. அவர்களுக்கு கொலை செய்தபிறகு வீடு சென்றாலும் விதம்விதமாக சித்திரவதை செய்து கொன்றதை நினைத்து சுய இன்பம் அனுபவிப்பார்கள். கொலையாளியை கொன்றுவிட்டு கூடுதலாக நேரம் கிடைத்தால் அங்கேயே சுய இன்பம் அனுபவிப்பதும் உண்டு. இதிலிருந்து நாம் தெரிந்துகொள்ளவேண்டியது.ஒருவரின் உடல் மீதான முழு அதிகாரத்தை சீரியல் கொலைகாரர்கள் கொண்டிருக்கிறார்கள். அதுதான் அவர்களை வலிமையாக்குகிறது. சாதாரண உலகில் அவர்களை யாருக்கும் பிடிக்காது. ஆனால் அவர்கள் அவர்களுக்கு என  உருவாக்கிய உலகில் அவர்கள்தான் நாயகன். பிறர் அனைவருமே பொருட்கள் போலத்தான். அவர்கள் அப்படித்தான் அவர்களை கருதுகிறார்கள். 

குற்றம் கண்ணில் தெரியாது

நோய் பயம் காரணமாக, காவல்துறையிடம் பிடிபடக்கூடாது என்பதற்காகவும் கூட ஆணுறையை சீரியல் கொலைகாரர்கள் பயன்படுத்துகிறார்கள். ஐ சா தி டெவில் படத்தில் வரும் வில்லன் இந்த ரகத்தைச் சேர்ந்தவர். பெண்ணை வலுக்கட்டாயப்படுத்தி புணர்பவன், அதனை குரூரமாக செய்வதால் வலி ஏற்படும். சந்தோஷத்தோடு வலியும் ஏற்படுத்துவான் என அவனது நண்பன் இதைப்பற்றி பேசுவான். 

பெண்ணை கொன்றுவிட்டு அவள் உடலை பக்கத்தில் வைத்தபடி சுய இன்பம் அனுபவிப்பதும் வல்லுறவு செய்ததற்கு ஒப்பானதே. இதை எப்படி இல்லை என்று கூறமுடியும். விந்து முந்துதல், விந்தணுக்கள் குறைவாக உள்ள பிரச்னை கொண்ட கொலைகாரர்கள் பெண்களை தாக்கி அவர்களை வல்லுறவு செய்யும்போது, அவர்களின் பாலுறுப்புகள் கடுமையாக பாதிப்பு அடையும். இப்படி ஏற்பட்ட பாதிப்பை பெண்கள் தாமதமாகவே உணர்வார்கள்.  

 pat brown


கருத்துகள்