இடுகைகள்

உலகம்-வெனிசுலா 2 லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

ராணுவ கலக பயத்தில் அதிபர்!

படம்
வெனிசுலாவில் ராணுவக்கலக பயமா ? வெனிசுலாவில் மே .20 அன்று புதிய அதிபராக தேர்தலில் வென்ற நிக்கோலஸ் மதுரோ பதவியேற்றார் . தொடக்க உரையில் வெறுப்பு , சகிப்பின்மை ஆகியவற்றிலிருந்து விலகுவதாக கூறி ஜூன் 1 அன்று 39 அரசியல் கைதிகளை விடுவித்தார் . மதுரோ அரசை எதிர்த்த எதிர்கட்சி தலைவர்கள் , மாணவர்கள் , பத்திரிகையாளர்கள் , வங்கியாளர்கள் பிற மக்கள் என மொத்தம் 340 க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர் என்கிறது மனித உரிமைகள் அமைப்பு . அரசியலில் எதிர்ப்பு இல்லாமல் ஜெயிக்க எதிர்க்கட்சி உறுப்பினர்களை ஜெயிலில் அடைத்த மதுரோ , தற்போது அவர்களை விடுவிக்க காரணம் புரட்சி ஏற்பட்டுவிடுமோ என்ற காரணம்தான் . இவ்வாண்டில் மட்டும் ராணுவத்தைச் சேர்ந்த 35 அதிகாரிகள் கட்டம் கட்டி சிறையில் தள்ளப்பட்டுள்ளனர் . ஜனநாயகத்தை காப்பாற்ற ராணுவ தலைவர்களை உதவக்கோரிய எதிர்கட்சிகளிடமிருந்து அரசைக் காப்பாற்ற அமைச்சரவையில் ராணுவ ஆட்களாக நிரப்பிவருகிறார் மதுரோ . விடுவிக்கப்பட்டாலும் அனைவரும் வெளிநாட்டுக்கு செல்ல தடையுள்ளதோடு , தினசரி நீதிமன்றத்தில் கையெழுத்தும் போடவேண்டும் . லோபஸ்