இடுகைகள்

மது லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

அண்ணன் கள்ளக்கடத்தல் செய்ய, காவல்துறை அதிகாரியான தம்பி அதைத் தடுக்க... ரன்வே - திலீப், காவ்யா, இந்திரஜித்

படம்
  ரன் வே திலீப், இந்திரஜித் சுகுமாரன், காவ்யா மாதவன் தம்பி காவல்துறை அதிகாரி, அண்ணன் மதுபான பாட்டில்களைக் கடத்தும் குற்றவாளி   என இருந்தால் அவர்களது சொந்த வாழ்க்கை, தொழில்வாழ்க்கை என்னவாகும்? இருவருக்கும் எதிராக இருக்கும் தொழில் எதிரிகள் ஒன்று சேர்ந்தால் இறுதியாக வெல்வது உறவா? கடமையா என்பதே திரைப்படத்தின் கதை. முதல் காட்சியில் காவ்யா மாதவன் அவரது தந்தையுடன் வாடகைக்காக வீடு வருகிறார். அந்த வீட்டின் மூத்த பிள்ளை உண்ணி, துபாயில் வேலை பார்க்கிறார். அவர்தான் வீட்டு செலவுகளைப் பார்த்துக்கொள்கிறார். இளைய பிள்ளை பாலு காவல்துறைக்கான தேர்வு எழுதிக்கொண்டிருக்கிறார். தங்கை பள்ளியில் படிக்கிறாள். இவர்கள் குடும்பத்திற்கு தொழில் செய்த காரணத்தால் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக பெரும் கடன் உள்ளது. அதைக்கட்டுவதற்குத்தான் உண்ணி துபாய் சென்றிருக்கிறான் என அவன் அம்மா கூறுகிறாள். இதை வாடகைக்கு வந்தவர்களுக்கும் கதையாக கூறுகிறார்கள். படத்தில் காவ்யா மாதவன் பாத்திரம் பாடல்களுக்கு மட்டும் பயன்படுகிறது. மற்றபடி கதையில் பெரிய உதவி ஏதும் கிடையாது. உண்ணி என்ற பெயரை நினைத்துப் பார்த்து அவர் பாட்டுக்கு மனதில் கற்பனை

காந்தியின் அடிப்படை சிந்தனைகளை உருவாக்கிய நகரம்!

படம்
  காந்தி படிக்கச்சென்ற இங்கிலாந்தின் லண்டன் நகரம் . அந்த நகரம்தான் ஆங்கில தேசத்தின் சட்டங்களோடு அவரின் மனவலிமையையும் திடமாக உருவாக்கிய இடம் . இங்கு அவர் படித்த மத ரீதியான நன்னெறி நூல்களும் , சந்தித்த நூல்களும் காந்தி என்ற அடையாளத்தை வலிமையாக்கின . அதைப்பற்றி விரிவாகப் பார்ப்போம் . வைஷ்ணவ குலத்தில் பிறந்த காந்தி இந்து , சமணம் ஆகிய மதத்தினரின் பல்வேறு சடங்குகளை அறிந்துகொள்ள அவரது அம்மாவே காரணம் . லண்டன் நகரில் வழக்குரைஞர் படிப்பிற்காக தங்கியிருந்த காலகட்டம் அவரை சிந்தனையாளராக மாற்றியது . வாழ்க்கை முழுமைக்குமான லட்சியவாத கருத்துகளை அவர் லண்டனில்தான் பெற்றார் . 1888-1891 ஆண்டில் லண்டனில் சட்டம் படிக்க வழக்குரைஞராக காந்தி சென்றார் . பிறகு , 1906-1931 காலகட்டத்தில் , அரசியல் காரணங்களுக்காகவும் பணிக்காகவும் நான்கு முறை காந்தி பயணித்தார் . இந்தியா காலனி தேசமாக இருந்தது . இ்ங்கிலாந்து அதனை ஆண்டு வந்த பேரரசு . இதனால் லண்டன் நகரம் பல்வேறு முக்கியமான தலைவர்கள் வந்து செல்லும் இடமாக புகழ் பெற்றிருந்தது . காந்தி முதல்முறையாக லண்டனுக்கு வந்தபோது தன்னோடு டைரி ஒன்றை வைத்திருந்தார் . அதில் பல்வேறு குறிப்

கண்ணில் தென்படும் டிஷர்ட் அழகிகள்! - கடிதங்கள் - கதிரவன்

படம்
  12.3.2022 மயிலாப்பூர் அன்புள்ள தோழர் கதிரவனுக்கு, வணக்கம். எப்படி இருக்கிறீர்கள்? எங்கள் மேன்ஷனில் கேரளத்து சேட்டா ஒருவர் தங்கியிருந்தார். அவரைப் பற்றி எனக்கு நினைவில் உள்ள சித்திரம் மலமோ, சிறுநீரோ இதோ வந்துவிட்டது என்ற நிலையில்தான் அவருக்கு நினைவுக்கு வரும். உடனே 50 மீட்டர் தூரத்திலுள்ள பொதுகழிவறைக்கு உசேன் போல்ட் போல ஓடுவார். விஷ்க் என்ற காற்று உராயும் சத்தம் தான் கேட்கும். ஆள் கடந்திருப்பார். அண்மையில் தான் ஆளைக்காணோம். அறையைக் காலி செய்துவிட்டார் என்று தகவல் கிடைத்தது. அறையை சுத்தம் செய்த கோபி அண்ணா, சேட்டன் நிறைய மதுப்புட்டிகளை குடித்துவிட்டு எறிந்திருக்கிறார் என்றார். அடுத்தவர்களை பிரச்னை செய்யாமல் அறையில் வைத்து குடித்திருக்கிறார் என மகிழ வேண்டியதுதான்.  புதிதாக ஏழு பேர் தங்கும் அறையில் தங்கியுள்ளவர்கள், சினிமா ஆட்கள் போல. சில பெண்கள்  நடிக்கும் வாய்ப்புக்காக வந்துபோய்க்கொண்டு இருக்கிறார்கள். புதிதாக சந்தைக்கு வரும் டீஷர்டுகளை இந்த வகையில் அறிந்துகொள்ள ஆண்டவன் அருள் பாலித்திருக்கிறான். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பித்து. என்ன சொல்வது? இன்று இதழின் சீஃப் டிசைனர் எழுதிய சிறுகதை தேற

கட்டற்ற உணர்ச்சியால் பாதிக்கப்படும் எழுத்தாளர்கள்! - வினோத் பாலுச்சாமி - கடிதங்கள்

படம்
  வினோத் அண்ணாவுக்கு,  வணக்கம். நேற்று ஆலிவர் அண்ணாவோடு பேசினேன். அவர் தனக்குத்தானே கண்ணாடியில் பேசுவது போன்ற மனநிலையில் இருந்தார். தொடர்ச்சியாக எனக்கு எந்த வாய்ப்புமே தராமல் ஏதேதோ பேசினார். நான் அவருக்கு இன்ஸ்டால் செய்து தந்த டேட்டிங் ஆப்பை அழித்துவிட்டாராம். தனது தொழிலைப் பார்க்கப் போகிறாராம். அவர் சிங்காரப்பேட்டை போனார் என்று சொன்னேன் இல்லையா? அங்கு ஏதோ மந்திரித்து விட்டார்கள் போல.   தொடர்ச்சியாக அவரின் பழக்கப்படி இரண்டு இரவுகள் ஆல்கஹாலை வாய்க்குள் சரித்துக் கொண்டால் எல்லாம் சரியாகிவிடும் என நினைக்கிறேன். 2 ஆண்டுகளுக்கு பிறகு திருவண்ணாமலையில் தான் கோழிக்கறி சாப்பிட்டேன். அதுவும் உடல் எப்படி எதிர்வினை தருகிறதோ என்ற பதற்றத்தில்தான். இதனை மெல்ல உடலுக்கு பழக்கிக்கொள்ள நினைத்தேன். ஆனால் அது நினைத்தபடி வேலைக்காகவில்லை. நான் அலுவலகத்திற்கு நடந்து செல்வதால் பருப்பு, கீரையைப் பயன்படுத்தி வந்தேன். ஆனால் மெல்ல அதுமட்டுமே போதாது என்று புரிந்தது. செஞ்சியின் ராணி கோட்டை, ராஜா கோட்டை ஏறியபோது எனது உடல் தடுமாறத் தொடங்கியது. மெல்ல கால்கள், தொடை, கணுக்கால் என அனைத்துமே நடுங்கத் தொடங்கியிருந்தது.  சாத

ஊக்கப்படுத்துவதை எப்படி செய்வது? - சூப்பர் டெமோ - மயிலாப்பூர் டைம்ஸ் Extended

படம்
  மயிலாப்பூர் டைம்ஸ்  ஊக்கப்படுத்துங்க ப்ரோ? பொதுவாக சோகத்தில் மூழ்குவது ஒரு இன்பம். அதில் ருசி கண்டுவிட்டால் பிறகு வேறெதுவே தேவையில்லை என ஜெயமோகன் தன் மீட்சி நூலில் கூறியுள்ளார். இதுபோல ஆட்களிடம் சிக்கினால் என்னாகும் தெரியுமா? நேரம் வீணாவதோடு நம் உடலில் ஏதாவது உருப்படியாக செய்யலாம் என்று திட்டமிட்ட ஆற்றலும் வெட்டியாக தீர்ந்துபோகும்.  செயலின்மை படைப்பு சார்ந்து செயல்படுபவர்களுக்கு வருவதுதான். ஆனால் அதிலேயே வெயில் கடுமைக்கு குளிர்ந்த நீரின் சேற்றில் எருமை புரள்வது போல அப்படியே நின்றால் எப்படி? திருவண்ணாமலைக்கு செல்லும்போது அப்படி ஒருவரை சந்திப்பேன் என்று நினைக்கவில்லை. புகைப்படக்காரர் தினேஷ் சாந்தமூர்த்தி அப்படியொரு நிலையை உருவாக்கினார். நான் அங்கு வருவதாக போன் செய்தபோது அவருடைய வீட்டில் உறவினர்கள் இருந்தார்கள். சரி, என போனை வைக்க நினைத்தபோது சட்டென கோபப்பட்டவர், உடனே போனை வெக்காத, ஒருமணிநேரம் கழிச்சு கூப்பிடு என்றார்.  பிறகு போன் செய்தபோது, அவர் வேறு ஒருவருடன் பேசிக்கொண்டிருந்தார். தினேஷ் அண்ணாவுக்கு முக்கியமான பழக்கம் இருக்கிறது. ஒரு விஷயத்தை இரண்டு முறை சொன்னால் உடனே மூக்கு விடைத்து

அமைச்சரை கொலைசெய்த பழியில் மாட்டிக்கொள்ளும் காமெடி குண்டர்கள்! - ஜாதி ரத்னாலு - அனுதீப்

படம்
              ஜாதி ரத்னாலு  Director: Anudeep KV Produced by: Nag Ashwin Writer(s): Anudeep KV     ஏஜெண்ட் சாய் ஶ்ரீனிவாசா படத்திற்கு பிறகு நவீன் பொலிசெட்டி தெலுங்கில் நகைச்சுவை நடிப்பில் பின்னி எடுத்துள்ள படம்தான் ஜாதி ரத்னாலு.  ஜோகிபேட்டில் மது, சூது என அனைத்து போங்குத்தனங்களிலும் ஈடுபடும் மூன்று நண்பர்கள் திடீரென வாழ்க்கையில் உயர்ந்துவிடலாம் என நினைத்து ஹைதராபாத் கிளம்புகிறார்கள். அங்கு நேரும் காமெடி களேபரங்களே கதை.    ஶ்ரீகாந்த் லேடீஸ் எம்போரியத்தில் இளம் முதலாளியாக ஶ்ரீகாந்த், ஊரில் யாரும் அவரை பெரிதாக மதிப்பதில்லை. பெண்களுக்கு எந்த சேலைக்கு எந்த வளையல் மேட்சிங் என்று சொல்வதில் புகழ்பெற்றவன். ஆனால் இந்த புகழ் பெண்கள் வேடத்தில் நடிப்பதற்கும், அவர்களுக்கு கல்யாணத்திற்கும் பூப்புனித நன்னீராட்டு விழாவுக்கு சரியான உடைகளை தேர்ந்தெடுத்து கொடுக்கவும்தான் உதவுகிறது. ஆனால் அவருக்கென காதல் மனைவி கிடைக்க  ராஜதந்திரங்களை பயன்படுத்தியும் பயனில்லை. அடுத்து சேகர், பிறக்கும்போது வீட்டில் அரிசி குக்கர் விசிலடிக்கும்போது பிறந்தவன். அவன் நினைப்பு எப்போதுமே சோறு, அதற்கு குழம்பு, கூட்டு, பொரியல் என்ன வ

டிஷர்ட் ஜீன்ஸ் அணிந்து பணி செய்வது பணித்திறனை பாதிக்குமா?

படம்
  cc         ஷாம்பெய்ன் பாட்டிலைத் திறந்து அதில் ஸ்பூன் ஒன்றை போட்டால் அது புதிய பானம் போலவே இருக்குமா? அறிவியல் பூர்வமாக இதற்கு எந்த ஆதாரங்களும் கிடையாது. பொதுவாக குடித்துவிட்டு மீந்த பானங்களில் வெள்ளி ஸ்பூன்களை போட்டுவைத்தால் அதிலுள்ள கேஸ் போகாமல் அப்படியே இருக்கும் என நம்புகிறார்கள். ஆனால் இது உண்மையல்ல. 1994ஆம் ஆண்டு பேராசிரியர் ரிச்சர்ட் ஜரே என்பவர், இதுபற்றி ஆராய்ந்தார். இவர் கலிபோர்னியாவில் உள்ள ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்தவர். 26 மதுபான சுவையை அறியும் வல்லுநர்களைக் கொண்டு சோதித்தார். இச்சோதனையில் ஸ்பூன் பயன்படுத்தப்பட்ட சாதனங்கள் எந்தத வகையில் சுவையை ஊக்குவிக்கவில்லை என்பது உறுதியானது. மதுபானம் சுவையாக கார்பன்டை ஆக்சைடு் வாயுவுடன் இருக்கவேண்டுமா? அதனை குளிர்சாதனப்பெட்டியில் வையுங்கள். போதும். டிஷர்ட் ஜீன்ஸ் அணிந்து பணி செய்வது பணித்திறனை பாதிக்குமா? பாதிக்க வாய்ப்புண்டு. இதெல்லாம் உளவியல் சார்ந்த தன்மை. பல் மருத்துவர் அணியும் வெண்ணிற கோட், சமையல்கலைஞர் அணியும் உடை ஆகியவை அவர் செய்யும் வேலை நமக்கு மட்டுமல்ல அவருக்கும் உணர்த்தும். இதனை என்குளோத்டு காக்னிஷன் என்று கூறலாம

தம்பி மனைவியின் அத்துமீறிய உறவால் தூக்குதண்டனைக்கு உள்ளாகும் அண்ணன் வாழ்க்கை! மௌனம் சம்மதம்

படம்
    மௌனம் சம்மதம்     மௌனம் சம்மதம் மது இளையராஜா தம்பி மனைவியை கொன்ற வழக்கில் தொழிலதிபர் ஜெய்சங்கர் மாட்டிக்கொள்கிறார். அவர் பேசுவதற்கு வாய்ப்புகளே வழங்கப்படாமல் தூக்குதண்டனை வழங்கப்படுகிறது. இதனை எப்படி உடைத்து, வழக்குரைஞர் மம்மூட்டி அவரை வெளியே கொண்டுவருகிறார் என்பதுதான் கதை. நிதானமாக நடைபெறும் படம். நடந்த விஷயங்களை தொழிலதிபரின் வீட்டில் வாழும் ஒவ்வொருவரும் அவரவர் பார்வையில் சொல்லுகிறார்கள். இதைத்தான் நாம் பார்க்கிறோம். இதன் வழியாக நாம் நினைப்பதும், வழக்கை எப்படி மம்மூட்டி தீர்க்கிறார் என்பதையும் குறைந்த பட்ச சண்டைகளுடன் சொல்லியிருக்கிறார் இயக்குநர். மம்மூட்டி, அமலா ஆகியோர் இடையிலான தொடக்க காட்சியே அசத்தலாக இருக்கிறது. பொதுவாக மோசமாக கண்ணில் தென்படும் ஒருவரை நல்லவராக காட்டுவது, அப்படி நினைப்பது கூட கடினம். அதனை இந்த கதாபாத்திரத்தில் செய்து காட்டியிருக்கிறார் இயக்குநர். பாடல்கள் அனைத்தும் கேட்கும் பார்க்கும் ரகமாக உள்ளன. திரில்லர் படத்தில் பாடல்கள் ஹிட் ஆவது அவசியமில்லை என்று நினைக்கிற காலம் இது. நிதானமான படத்தில் பல்வேறு கதாபாத்திரங்கள் மீது சந்தேகப்பட வாய்ப்பு உள்ளது. இதில் தம்பி சர

பீர் குடித்தால் ஹேங் ஓவர் ஏற்படுகிறதா?

படம்
giphy மிஸ்டர் ரோனி பீர் குடிப்பதற்கு முன்பு ஒயின் குடித்தால் ஹேங்ஓவர் ஏற்படாது என்கிறார்களே? அது உண்மையா? இந்த விஷயத்தில் பாதிப்பு ஏற்படுத்துவது ஆல்கஹால்தான். இதில் பல்வேறு மதுபானங்களில் உள்ள ஆல்கஹால் அளவுதான் போதை ஏற்படுத்துகிறது. பீர் குடிப்பதற்கு முன்பு வைன் என்பது ஆராய்ச்சிப்படி மோசமான தலைவலியை சிலருக்கு ஏற்படுத்தியது. அடிப்படையில் மது குடித்தால் உடலிலுள்ள நீரை டீ, காபியை விட வேகமாக வெளியேற்றுகிறது. இதன் காரணமாக உங்களுக்கு உடலில் நீரின் அளவு மிகவும் குறைகிறது. இதனால் காலையில் தலைவலி கண்டிப்பாக ஏற்படும். இதனைத் தவிர்க்க வைனை முன்னால் குடித்து பீரை பின்னால் குடிக்கலாமா என்று கேட்க கூடாது. மதுவை குறைவாக அருந்தினால் பாதிப்பு குறைவாக இருக்கும். மதுவை கல்லீரல் பிரித்து செரிக்கும்போது அசிட்டால்டிஹைடு எனும் நச்சுப்பொருள் உருவாகிறது. இதுவும் உங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது. எனவே எதைக்குடித்தாலும் நீரை குறிப்பிட்ட இடைவெளியில் நீங்கள் குடித்தே ஆகவேண்டும். ஒரு மணி நேரத்திற்கு ஒரு லிட்டர் நீர் நமது உடலில் இருந்து வெளியேறியே ஆகவேண்டும். இதனை எப்போதும் நினைவில் கொள்ளுங்கள்.

மது அருந்தினால் உடலில் என்ன நடக்கிறது?

படம்
ஆல்கஹால் ஊக்கமூட்டியா என்ற சந்தேகம் பலருக்கும் இருக்கும். இதனைக் குடித்தவுடன் உடலில் நெகிழ்வுத்தன்மை ஏற்பட்டது போன்ற இலகுவான தன்மை ஏற்படும். காற்றில் பறப்பது போல. இதனால்தான் இலகுவான இந்நேரத்தில் பல்வேறு ரகசிய விஷயங்களை நண்பர்களிடம் கொட்டி விடுகின்றனர். ஆனால் அதேசமயம் இதனை குடித்தான் பேசினான் என்று ஒதுக்கிவிட முடியாது. குடித்தாலும் அம்மாவுக்கும், மனைவிக்கும் வேறுபாடு தெரியாமல் போவதில்லை என்பதை கவனத்தில் கொள்ளுங்கள். ஊக்கமூட்டியா அல்லது மூளைத்திறன் குறைப்பு மருந்தா காபி, டீ ஆகியவற்றை குடிக்கிறீர்கள். இவற்றின் அளவு அதிகமானால் என்னாகும்? சிம்பிள். தூக்கம் வராது. இரவில் டீ, காபி குடிப்பதை தொடர்ந்தால் இன்சோம்னியா எனும் தூக்க குறைவு பிரச்னை எழும். அதுவே ஆறுமணிக்கு ஆபீஸ் விட்டதும் மது அருந்துவதை வழக்கமாக்கினால் என்னாகும்? உங்களின் இதயத்துடிப்பு குறையும். மூளை ரிலாக்ஸ் ஆனது போல தோன்றும். ஆனால் உங்கள் உடலில் ஒட்டுமொத்த பணிகளையும் மது தடுத்து மாய உலகை உருவாக்குகிறது. டீ, காபி ஆகியவற்றிலுள்ள காஃபீன் உடலை ஊக்கமூட்டி, தூங்கி வழிந்துகொண்டிருந்தால் கூட உங்களுக்கு கூடுதலாக அரைமணிநேரம் ப

மது, மட்டன் கொண்ட டின்னருக்குப் பிறகு?

படம்
கிறிஸ்துமஸ் டின்னர் சாப்பிட்டால் என்னாகும்? ஷாம்பெய்ன், விஸ்கி, ரம், பிளம் கேக்குகள், பிரியாணி என கலந்துகட்டி அடித்திருப்பீர்கள். இதனால் வயிற்றுக்குள் என்ன நடக்கும் என்று தெரிந்தகொள்ள ஆசையா? இதோ.. 5 நிமிடங்கள் மது, உங்கள் ரத்தத்தில் தேளின் விஷம் போல வேகமாக ஏறும். முதல் சிப்பில் இந்த மாற்றம். பெரும்பாலும் மதுவை சிறுகுடல் ஏற்றுக்கொள்ளும் பின்னரே அவை வயிற்றுக்குள் சேகரமாகும். மது ரத்தசெல்களின் செயல்திறனை குறைக்கின்றன. இதனால் வயிறு மெல்ல சூடாகிறது. ஒரே நாளில் கேக்,பிரியாணி, மது என வெளுப்பது உடலில் கலோரியை அதிகரிக்கிறது. ஆனால் என்ன கொண்டாட்டம் என்பதே பெரும்பாலும் சாப்பாடுதானே? 20 நிமிடங்கள் வயிற்றின் கொள்ளளவு என்பது ஒரு லிட்டர்தான். எனவே வெறித்தனமாக பஃபே விருந்தில் வேட்டையாடி, மாஸா குடித்து தீர்த்தாலும் மூத்திரம் முந்திக்கொண்டு வந்துவிடும். ஒருமணி நேரத்திற்கு ஒரு லிட்டம் சிறுநீர் உடலில் இருந்து வெளியேறுகிறது. இதுபோன்ற மொடாக்குடி விருந்துகளில் ஹரி படத்தில் பிரியன் கேமரா சுற்றுவது போல வேகமாக நடைபெறும். எனவே மூச்சு வாங்கியபடி வெஸ்டர்ன் கக்கூசில் குடலை கழுவ வேண்டி இருக்க

மதுவால் ஏற்படும் ஹேங்ஓவர் பிரச்னை - சமாளிப்பது எப்படி?

படம்
giphy ஆண்டு இறுதியை நெருங்கி விட்டோம். அதனால், பார்ட்டி பண்ணலாம் வா என்றால் கோரிக்கையையும் மறுக்கமுடியாது. பேசியபடி குடிப்பதிலும் அளவு அதிகரிக்கிறது. இதனால் அடுத்தநாள் என்னாச்சு என தலையைப் பிடித்தபடி பலரும் எழுகிறார்கள். உண்மையில் மது அருந்துவதால் உடலுக்கு என்னாகிறது? மது அருந்துவது உடலில் கடுமையான நீரிழப்பை ஏற்படுத்துகிறது. இதனால்தான் மது குடித்தவர்களுக்கு, சிறுநீர் கழிக்கும் உணர்வு ஏற்படுகிறது. கல்லீரலை மட்டும் மது பாதிப்பதில்லை. குடலையும் பாதிக்கிறது. மது அருந்துபவர்களுக்கு, அதன் மூலம் வயிற்றில் அசிட்டால் டிஹைடு என்ற நச்சுப் பொருள் உருவாகிறது. இதுவே ஹேங்ஓவரின் வாந்தி, குமட்டல், சோர்வு ஆகியவற்றின் காரணி. சிலர் சிவப்பு வைன், பார்பன் பருகுவார்கள். அவர்களது நம்பிக்கை, அதில் வாந்தி போன்ற பிரச்னைகள் அடுத்த நாள் ஏற்படாது என்பது அவர்களது எண்ணம். ஆனால் உண்மையில் ஜின், வோட்காவை விட மோசமான பிரச்னைகளை மேற்சொன்ன பானங்களே ஏற்படுத்துகின்றன. இதிலும் சிலருக்கு மட்டும் அதிக போதை பாதிப்பு ஏற்படுகிறது. ஆராய்ச்சியில் அவை மரபணு மற்றும்  குடிப்பவரின் வயது, எடை சார்ந்தவை என்று கண்டறியப்

டாஸ்மாக் விற்பனை சரிவு, மாசுபாட்டில் சௌகார்பேட்டை டாப் 1!

படம்
நடந்து முடிந்த ஒளி உற்சவத் திருவிழாவில் மார்வாடி, சேட்டுகள் கொண்ட சௌகார் பேட்டை மாசுபாட்டை அதிகம் நிகழ்த்தியுள்ளது. கடந்த ஆண்டை விட மாசுபாட்டின் அளவு குறைவு என்பது மகிழ்ச்சி. காற்றில் உள்ள அனுமதிக்கப்பட்ட மாசுக்களின் அளவு 100 எனும்போது, சௌகார்பேட்டையில் தீபாவளி அன்று பட்டாசு வெடிக்கப்பட்டதில் 128  மைக்ரோகிராம் எனும் அளவில் மாசுத்துகள்கள் அதிகரித்துள்ளன. பட்டாசுகளின் ஒலி அளவு 55 டெசிபல் பாதுகாப்பான அளவு என அரசு கூறியது. 73 டெசிபலில் பட்டாசு வெடித்து தீபாவளியை டரியல் ஆக்கி உள்ளனர் சென்னை குடிமகன்கள். அரசுக்கு அவசர உதவியை நாடி 27 போன் அழைப்புகள் வந்துள்ளன. தீபாவளி ராக்கெட்டை மூடிய வீட்டுக்குள் விட்டு தீப்பற்றியது, பைக்கில் தீப்பற்றியது, ராக்கெட் எல்பிஜி கேஸில் தாக்கி தீப்பற்றியது என புகார்களின் பட்டியல் செல்கிறது. அரசு மருத்துவமனையில் தீபாவளி பட்டாசு தொடர்பான பிரச்சனைகளுக்காக 75 பேர் சிகிச்சை பெற்றுள்ளனர். டாஸ்மாக்கில் தீபாவளி வருமானம் 355 கோடியாக உள்ளது. சாதாரண நாட்களில் வருமானம் 330 கோடி என்றால் விற்பனை வளர்ச்சியை புரிந்துகொள்ளலாம். மதுரை, சிவகங்கையில் குருபூஜை காரண

மதுத்தடை வளர்ச்சியை குலைக்கும் - சேட்டன் பகத்!

படம்
giphy.com நான் மதுத்தடை தவறு என்று சொல்வதற்காக வருத்தப்படவில்லை. முக்கியமான குறிப்பு, நான் மது அருந்துபவனல்ல. குஜராத்தில் இன்றும் மதுவுக்கு தடை உள்ளது. காந்தி போர்பந்தரில் பிறந்ததால் அரசு அவருக்கு மரியாதை செய்வதற்காக இத்தடையை நீக்காமல் அப்படியே பெயரளவுக்கு காப்பாற்றி வருகிறது. மணிப்பூர், மிசோரம், ஏன் கேரளத்தில் கூட மது தடை அமலாகி பின் கைவிடப்பட்டது. இந்தியர்கள் பொதுவாக சிக்கலான பிரச்னைகளைப் பற்றி பேச மறுக்கின்றனர். யாருக்கும் எந்த பாதிப்பும் வராத சினிமாவை கையில் எடுத்துக்கொண்டு நட்பை வளர்க்கிறார்கள். நான் அதைக் குறையாக கூறவில்லை. முக்கிய விவகாரங்களில்  அவர்கள் சரியான அதிரடி முடிவுகளை எடுத்தே ஆகவேண்டும். மது தடை என்ற முடிவை நான் எதிர்க்கிறேன். அது இந்தியாவின் வளர்ச்சிக்கு எதிரானது என்று உறுதியாக நம்புகிறேன். உண்பது, உடுப்பது, வணங்குவது போன்ற விவகாரங்களில் அரசு தலையிடக்கூடாது என்பது என் கருத்து. மது தடையால் குஜராத் அரசு கோடிக்கணக்கான ரூபாய்களை இழக்கிறது. இதற்காக மக்களின் தினசரி பயன்பாட்டுப் பொருட்களின் விலையை உயர்த்தி வருகிறது. இது தவறான முறைதானே? மது விற்பது என்பதும், அதன

பேச்சுலர் பார்ட்டி ரகசியங்கள்! - தெரிஞ்சுக்கோ டேட்டா!

படம்
giphy.com தெரிஞ்சுக்கோ! வண்டி வாங்கினாலும் சரி, ஃபேப் இந்தியாவில் காட்டன் குர்தா வாங்கினாலும் சரி ட்ரீட் வெச்சே ஆகணும் என அடம்பிடிக்கிறார்கள் மில்லினிய அன்பர்கள். அப்புறம் வேற வழி? இன்று குறிப்பிட்ட தின கொண்டாட்டங்களை விட வலிய உருவாக்கும் இதுபோன்ற கொண்டாட்டங்கள் ஹேங் ஓவர் சினிமாக்களிலேயே வந்துவிட்டது. உடனே இந்தியாவுக்கு டவுன்லோடு செய்யும் பழக்கம் உருவாகி வருகிறது. அதுபற்றிய ஜாலி டேட்டா! கடந்த ஆண்டில் மட்டும் பேச்சுலர் பார்ட்டிக்கு செலவான தோராய தொகை 1400 டாலர்கள். இங்கிலாந்தில் பேச்சுலர் பார்ட்டி சந்தை மதிப்பு 1 பில்லியன் பவுண்டுகளாக வளர்ந்துள்ளது. ஒருவருக்கு இந்த பார்ட்டியில் ஆகும் செலவு 471 பவுண்டுகள் ஆகும். குறைந்தது இப்பார்ட்டியில் பத்து பேர் கலந்துகொள்கிறார்கள். மூன்று நாள் பேச்சுலர் பார்ட்டியில் தோராயமாக 5 காக்டெய்ல் பானங்கள் பயன்படுத்தப்படுகின்றன. உலகளவில் கல்யாண சந்தை மதிப்பு 300 பில்லியன் டாலர்களாக உள்ளது. நன்றி- க்வார்ட்ஸ் 

மது குடித்தால் மூளைக்குள் என்னாகிறது?

படம்
ஏன்?எதற்கு?எப்படி? - மிஸ்டர் ரோனி மது குடித்தால் பதற்றம் ஏன் அதிகரிக்கிறது? காதலில் பிரேக் அப் ஆகியிருக்கிறது என்றால் டாஸ்மாக்கில் போய் கல்ப்பாக சரக்கு போட்டீர்கள் என்றால் உடனே போனை எடுத்து காதலியிடம் சண்டை போடுவீர்கள். வம்பு இழுப்பீர்கள். காரணம், மது உள்ளே சென்றதும் உங்கள் மூளையில் உடலை தளர்வு செய்வது போன்ற உணர்வை ஏற்படுத்துகிறது. அதேசமயம் அப்போது உங்கள் மனதை எது ஆட்கொண்டிருக்கிறதோ அந்த உணர்வை சற்றே உயர்த்தும். இதன்காரணமாக கோபத்துடன் டாஸ்மாக் செல்பவர்கள், சரக்கை அடித்து விட்டு வெளியே வரும்போது கொலை செய்துவிடலாம் என்ற எண்ணத்துடன் இருப்பார்கள். எனவே, ஃபாரம் மாலில் எலைட் பார் திறந்திருக்கிறார்கள். அங்கு வாங்கி வீட்டில் வைத்து அருந்திவிட்டு கலவரம் செய்யாமல் கமுக்கமாக படுத்து தூங்குங்கள். செய்தி - படம் - பிபிசி

குடிக்கும்போது ஆவேசப்படுவது ஏன்?

படம்
மிஸ்டர் ரோனியின் ஏன்?எதற்கு?எப்படி? சிலர் மது அருந்தியதும் ஆவேசப்படுகிறார்களே ஏன்? மது அருந்தியவுடன் எல்லோரும் எல்லாவற்றையும் மறந்துவிடுவதில்லை. சிலருக்கு அது சாக்கு. சில விஷயங்களை அதைச் சாக்காக வைத்து சொல்லலாம். இது உளவியல். அறிவியல்படி என்ன சொல்ல லாம்? மூளையின் முன்முகுளப் பகுதியில் சுய கட்டுப்பாட்டு, முடிவெடுக்கும் பகுதி ஆகியவற்றை மது பாதிக்கிறது. இப்பகுதி மழுங்கும்போதுதான், இதுவரை பார்த்திராத ஜேப்படித் திருடர்களோடு ஜோக் அடித்து சிரிப்பதும், அவர்களோடு சேர்ந்து வண்டியில் வேகமாக செல்வதும், குற்றங்களில் ஈடுபடுவதும் நடக்கிறது. சாதாரணமாக பார்க்கும்போது சைலன்ஸ் ப்ளீஸ் சொல்லாமல் அமைதியாக இருப்பவரும், குடிக்கும்போது டி.ஆர் மாதிரி ஆகிவிடுகிறார். நன்றி பிபிசி

குடிமகனே... இந்தியாவின் குடிமகனே!

படம்
ஆல்கஹால் குடிகாரர்கள் உலகமெங்கும் ஆல்கஹால் பருகும் அளவு அதிகரித்து வருகிறது. இதிலும் சீனர்கள் இந்தியர்களை மிஞ்சி விட்டார்கள். அண்மையில் இதுகுறித்து லான்செட் அமைப்பு ஆய்வு செய்து அறிக்கை வெளியிட்டுள்ளது. தொண்ணூறுகளை விட 2017 ஆம் ஆண்டுவரையிலான காலகட்டத்தில் வயது வந்தோர் பருகும் ஆல்கஹாலின் அளவு பத்து சதவீதம் கூடியுள்ளது.  மால்டோவா அனைத்து நாடுகளிலும் முன்னிலை வகிக்கிறது. இதற்கடுத்து ரஷ்யா, பிரான்ஸ், போர்ச்சுக்கல் ஆகிய நாடுகள் வருகின்றன. மால்டோவா நாடு தனிநபராக குடிக்கும் ஆல்கஹால் அளவு பதினைந்து லிட்டர்.  தொண்ணூறுகளில் உலகில் குடிக்கும் மதுபானங்களின் சராசரி அளவு 5.9 லிட்டராக இருந்தது. தற்போது இந்த அளவு 6.5 லிட்டராக மாறியுள்ளது. இந்தியாவில் 40 சதவீத ஆண்களும் 22 சதவீத பெண்களும் மது அருந்துகின்றனர். இது தொண்ணூறுகளைவிட இருமடங்கு அதிகம். இந்த எண்ணிக்கை இப்படியே வளர்ந்தால் உலகமெங்கும் 2030 ஆம் ஆண்டு அரைவாசி வயது வந்தோர் மதுவருந்தும் பழக்கத்திற்கு அடிமையாகி இருப்பார்கள். உலக சுகாதார நிறுவனம் இது குறித்து பிரசாரத்தை செய்து வருகிறது. 2025 ஆம் ஆண்டுக்குள் 10 சதவீத மக்களை இப்பழக்க

போதைக்கு பயன்படும் தூக்க குறைபாடு மருந்து!

படம்
it's D Pharmacy இன்சோம்னியா மருந்து போதைக்கு பயன்படுகிறதா? நைட்ராஸெபாம்(Nitrazepam) எனும் மருந்து சர்ச்சைக்குள்ளாகி வருகிறது. காரணம், இதனை போதைக்காக மது, கஞ்சா உள்ளிட்ட பிற போதைப்பொருட்களும் பயன்படுத்தி அதிக போதையைப் பெற்று வருகின்றனர். பிற பெயர்கள் பட்டன், படையப்பா, நைட்ரஸ் நைட்ராஸெபாம் தூக்க குறைபாடு, பதற்றம் ஆகிய பிரச்னைகளுக்காக மருத்துவர்களால் பயன்படுத்தப்பட்டு வருகிறது. பக்கவிளைவுகள் என்ன? மூச்சுத்திணறலை ஏற்படுத்தும். மனநிலை மாற்றங்களைத் தரும். குறிப்பாக கோபம், குழப்பம், பதற்றம், சோர்வான மனநிலை, நினைவுத்திறன் இழப்பு, அரைத்தூக்க நிலை, உணர்ச்சியற்ற நிலை. கர்ப்பிணிகள் சாப்பிட்டால் குழந்தையின் உடல்நலனுக்கு பாதிப்பைத் தரும் என மருத்துவர் சி.ஜே. ஜான்  எச்சரிக்கிறார். நன்றி: TOI

போலி சாராயத்தில் பறிபோகும் உயிர்கள்!

படம்
TOI விதவைகள் கிராமம் உ.பியிலுள்ள புசைனா கிராமத்தில் விதவைகள் அதிகரித்துள்ளனர். என்ன காரணம்?  மது. இங்குள்ளு 300 குடும்பங்களில் 150 குடும்பங்களில் ஆண்கள் பலியாவது, மதுவினால்தான்.  கடந்த 65 ஆண்டுகளில் ஒரு குடும்பத்தில் குறைந்தது 5 ஆண் உறுப்பினர்கள் உயிரிழப்பது இங்கு சாதாரணமாகியுள்ளது. போலி சாராயத்தை அருந்தியே இந்த மரணங்கள் சம்பவித்துள்ளன. பத்து ரூபாய் பவுச்களில் இந்த போலி சாராயம் கிடைப்பது மரணங்களை பரவலாக்கியுள்ளது. உ.பி மற்றும் உத்தர்காண்ட் ஆகிய இரு மாநிலங்களிலும் பொதுவான மரணங்களுக்கு காரணம், போலி சாராயம்தான். புசைனா கிராம மக்களின் எண்ணிக்கை  4 ஆயிரத்து எட்டு. ஆண்களை இழந்து வறுமையில் வாடும் பெண்களால் இன்னும் கள்ளத்தனமாக பலரின் வாழ்வை அழிக்கும் போலி சாராயத்தை ஒழிக்க முடியவில்லை. பலரும் போலிச்சாராயத்தைப் பற்றி பேச மறுக்கிறார்கள். காரணம் தெரிந்ததுதான். சாராய மாஃபியாக்களின் அச்சுறுத்தல் வாழ்வுக்கே உலை வைத்துவிடுமே? இங்குள்ள நெக்ஸி தேவி தன் கணவரை மட்டுமல்ல நான்கு பிள்ளைகளையும் போலி சாராயத்துக்கு பலி கொடுத்துள்ளார். சுனிலா தேவிக்கு இளம் வயதில் நான்கு பெண்கள் உண்டு. இவரது