இடுகைகள்

மது லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

குளிர்பானமா? மதுபானமா?

படம்
B fizz குளிர்பானம் பற்றி....### நீங்கள் சொல்வது மிகவும் சரிதான். பார்லே அக்ரோவின் "பி ஃபிஷ்" குளிர்பானத்தின் மார்க்கெட்டிங், மது அல்லாத ஒரு பானத்தை "பீர் போன்ற சுவை" என்று விளம்பரப்படுத்துவது, **சரியான விளம்பரமா? (Misleading Advertisement)** என்கிற பெரிய கேள்வியை எழுப்புகிறது. 'மால்ட் பேஸ்டு' (மால்ட் - தானிய முளைப்பு சாரம்) என்று சொன்னாலே போதும்; அது ஒரு சத்தான, இனிப்பான பானம் என்று புரிந்து கொள்ளலாம். அதை நேரடியாக "பீர்" உடன் ஒப்பிட்டு, **பீர் கோப்பை படத்தை** போடுவது, **குழப்பத்தை ஏற்படுத்தும் (Ambiguity)** நோக்கத்தையே காட்டுகிறது. ### 1. FSSAI-யின் விதிகள் என்ன சொல்கின்றன? FSSAI (Food Safety and Standards Authority of India) விதிகள் மிகத் தெளிவானவை: - **தவறான விளம்பரத்திற்குத் தடை:** எந்த ஒரு உணவுப் பொருளின் விளம்பரமும் **தவறானதாகவோ (False)** அல்லது **தவறாக வழிநடத்தக்கூடியதாகவோ (Misleading)** இருக்கக் கூடாது . - **மது பானங்களுக்கான சிறப்பு விதி:** **0.5%** அளவுக்கு மேல் ஆல்கஹால் உள்ள பானங்கள் மட்டுமே 'மது பானங்கள்' என வகைப்படு...

சீனாவின் பன்மைத்தன்மை கொண்ட உணவு கலாசாரத்தை சுவாரசியமாக விளக்கும் நூல்!

படம்
  A History of Food Culture in China By Rongguang Zhao Translated by Gangliu Wang and Aimee Yiran Wang 2015 இந்த நூல், சீனாவில் உள்ள உணவு வகைகள், அதன் தெற்கு, வடக்கு கலாசார வேறுபாடுகள், தின்பண்டங்கள், அறுசுவை பதார்த்தங்கள், மதுபான வகைகள், வெளிநாட்டு உணவு வகைகள், கலாசாரம் ஏற்படுத்திய தாக்கம், பல்வேறு நாடுகளுக்கு மன்னர் அனுப்பி வைத்து பிரதிநிதிகள் சேகரித்து வந்த அறிவியல், சமையல் தொடர்பான அறிவு என ஏராளமான விஷயங்களைப் பற்றி விளக்குகிறது.  நூலில் பல்வேறு உணவு பதார்த்தங்களுக்கான பெயர்களை சீன மொழியில் வாசிக்க முடிவது மகிழ்ச்சி. ஒரு தின்பண்டத்தை குறிப்பிட்ட திருவிழாவுக்கென தயாரிக்கிறார்கள். அதன் பின்னாலுள்ள கதை. அதில் மையமாக உள்ளது ஆணா, பெண்ணா என ஏராளமான விஷயங்களை நூலாசிரியர் விளக்கி கூறுகிறார். அவற்றை வாசிக்கும்போதே ஆச்சரியமாகிறது. உண்மையில் சீனாவில் உணவு கலாசாரம் ஒற்றைத்தன்மையானது அல்ல. பன்மைத்தன்மை கொண்டது. அந்த கலாசாரம், மேற்கத்திய உணவு, மதுபானங்களைக் கூட உள்ளே ஏற்றுக்கொண்டு வளர்ந்து வருகிறது. நூலின் இறுதிப்பகுதியில் பிரெஞ்சு நாட்டினர் ஆண்ட பகுதிகளில் இருந்த உணவுப்பழக்கவழக்கம், மத...

ஓமியோபதி மருந்துகளால் உருவாக்கப்படும் செயற்கையான வியாதி!

      மருந்து = நஞ்சு ஓமியோபதி ஓமியோபதி மருந்துகளை தோல் நோய்க்கு சாப்பிடும்போது, வெளியில் தடவுவதற்கு கொடுக்கும் மருந்து பொதுவாக சூழல்களால் ஏற்படும் எரிச்சலை, அரிப்பை தடுக்க மட்டுமே. மற்றபடி உள்ளுக்குள் கொடுக்கும் தாய் திராவகம், இனிப்பு உருண்டை மருந்துகள், சப்பி சாப்பிடும் இனிப்பு மாத்திரைகள் மட்டுமே நோயைத் தீர்க்கும். தொடக்கத்தில் ஓமியோபதிக்கு கொடுத்த மருந்துகள், இருக்கும் நோயை அதிகப்படுத்தின. காளான்படை என வைத்துக்கொள்வோம். இந்த ஒவ்வாமை நோய்க்கான உணவு பிரச்னையை நான் முன்னமே குறிப்பிட்டிருக்கிறேன். சித்த மருந்துகளை சாப்பிட்டபோது, உள்ளுக்கும் மருந்துகளை சாப்பிடவேண்டும். வெளியிலும் நெய் மருந்துகளை பூசவேண்டும். பூசி வைத்து ஒரு மணிநேரம் அல்லது அரைமணிநேரம் வைத்து கழுவ வேண்டும். தலைமுதல் பாதம் வரை எனக்கு கொப்புளங்கள் வெடித்து அதில் சீழும் ரத்தமும் வந்தது. மருந்துகள் விலை அதிகம், தங்கியிருந்த வீட்டில் குளிக்க, குடிக்க நீர் பிரச்னை என்றாலும் கூட வேறுவழியில்லை என்பதால், சித்த மருத்துவத்தை கடைபிடிக்க நேரிட்டது. சென்னையில், வழக்குரைஞர் தொடங்கிய ஆயுர்வேத மருத்துவக்கல்லூரி மருத்துவமனைய...

நகரில் திடீரென நெருப்பால் எரிந்து இறந்துபோகும் மனிதர்கள்! - பின்னணியை ஆராயும் இரண்டு காவல் அதிகாரிகள்!

படம்
  அல்டிமேட் சீக்ரெட் சீன திரைப்படம்  ஐக்யூயி ஆப்  சீன நகரம். அங்கு நடைபெறும் அரசியல் பிரச்னைகளால் அதன் நிம்மதியை அழிக்க சிலர் முயல்கிறார்கள். அதற்காக பேய் கொலை செய்கிறது என நம்பும்படியான ஜெகஜால பேய் முகமூடி தோற்றத்தில் சிலரை நெருப்பால் எரித்துக் கொல்கிறார்கள். அதைப்பற்றி காவல்துறை அதிகாரிகள் இருவர் எப்படி விசாரித்து அறிகிறார்கள் என்பதே கதை.  சட்டவிரோதமாக தயாரிக்கப்பட்ட மருந்துப்பொருள் பற்றிய கதை. ஆனால் அதை கதையில் கொண்டு வந்து விளக்குவதற்குள் நமக்கு படம் பார்க்கும் ஆர்வமே போய்விடுகிறது. நாயகன், காவல்துறை அதிகாரி. ஆனால் எப்போதும் சரக்கு போட்டுக்கொண்டு விலைமாதுக்களின் மடியே கதியென்று கிடக்கிறான். ஏன் அப்படி? அவனுக்கென்று முன்னாள் காதலி இருப்பாள். ஆனால் அவள் இன்னொரு வசதியான ஆளை திருமணம் செய்து செட்டிலாகிவிட்டாள் என்பதே காரணம். அந்த செய்தி, அதிலுள்ள உண்மை மனதை வருத்தும்போதெல்லாம் நாயகன் மது அருந்துகிறான். எப்போதெல்லாம் வருந்துகிறான்? எப்போதுமேதான். படம் முழுக்க நாயகன் மது போதையிலேயே இருக்கிறான்.  இவனுக்கு நேர் மாறாக ஆன்ம ஆற்றல் கொண்டவனாக இன்னொரு காவல் அதிகாரி, பச்சை...

அண்ணன் கள்ளக்கடத்தல் செய்ய, காவல்துறை அதிகாரியான தம்பி அதைத் தடுக்க... ரன்வே - திலீப், காவ்யா, இந்திரஜித்

படம்
  ரன் வே திலீப், இந்திரஜித் சுகுமாரன், காவ்யா மாதவன் தம்பி காவல்துறை அதிகாரி, அண்ணன் மதுபான பாட்டில்களைக் கடத்தும் குற்றவாளி   என இருந்தால் அவர்களது சொந்த வாழ்க்கை, தொழில்வாழ்க்கை என்னவாகும்? இருவருக்கும் எதிராக இருக்கும் தொழில் எதிரிகள் ஒன்று சேர்ந்தால் இறுதியாக வெல்வது உறவா? கடமையா என்பதே திரைப்படத்தின் கதை. முதல் காட்சியில் காவ்யா மாதவன் அவரது தந்தையுடன் வாடகைக்காக வீடு வருகிறார். அந்த வீட்டின் மூத்த பிள்ளை உண்ணி, துபாயில் வேலை பார்க்கிறார். அவர்தான் வீட்டு செலவுகளைப் பார்த்துக்கொள்கிறார். இளைய பிள்ளை பாலு காவல்துறைக்கான தேர்வு எழுதிக்கொண்டிருக்கிறார். தங்கை பள்ளியில் படிக்கிறாள். இவர்கள் குடும்பத்திற்கு தொழில் செய்த காரணத்தால் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக பெரும் கடன் உள்ளது. அதைக்கட்டுவதற்குத்தான் உண்ணி துபாய் சென்றிருக்கிறான் என அவன் அம்மா கூறுகிறாள். இதை வாடகைக்கு வந்தவர்களுக்கும் கதையாக கூறுகிறார்கள். படத்தில் காவ்யா மாதவன் பாத்திரம் பாடல்களுக்கு மட்டும் பயன்படுகிறது. மற்றபடி கதையில் பெரிய உதவி ஏதும் கிடையாது. உண்ணி என்ற பெயரை நினைத்துப் பார்த்து அவர் பாட்டுக்கு மனதில...

காந்தியின் அடிப்படை சிந்தனைகளை உருவாக்கிய நகரம்!

படம்
  காந்தி படிக்கச்சென்ற இங்கிலாந்தின் லண்டன் நகரம் . அந்த நகரம்தான் ஆங்கில தேசத்தின் சட்டங்களோடு அவரின் மனவலிமையையும் திடமாக உருவாக்கிய இடம் . இங்கு அவர் படித்த மத ரீதியான நன்னெறி நூல்களும் , சந்தித்த நூல்களும் காந்தி என்ற அடையாளத்தை வலிமையாக்கின . அதைப்பற்றி விரிவாகப் பார்ப்போம் . வைஷ்ணவ குலத்தில் பிறந்த காந்தி இந்து , சமணம் ஆகிய மதத்தினரின் பல்வேறு சடங்குகளை அறிந்துகொள்ள அவரது அம்மாவே காரணம் . லண்டன் நகரில் வழக்குரைஞர் படிப்பிற்காக தங்கியிருந்த காலகட்டம் அவரை சிந்தனையாளராக மாற்றியது . வாழ்க்கை முழுமைக்குமான லட்சியவாத கருத்துகளை அவர் லண்டனில்தான் பெற்றார் . 1888-1891 ஆண்டில் லண்டனில் சட்டம் படிக்க வழக்குரைஞராக காந்தி சென்றார் . பிறகு , 1906-1931 காலகட்டத்தில் , அரசியல் காரணங்களுக்காகவும் பணிக்காகவும் நான்கு முறை காந்தி பயணித்தார் . இந்தியா காலனி தேசமாக இருந்தது . இ்ங்கிலாந்து அதனை ஆண்டு வந்த பேரரசு . இதனால் லண்டன் நகரம் பல்வேறு முக்கியமான தலைவர்கள் வந்து செல்லும் இடமாக புகழ் பெற்றிருந்தது . காந்தி முதல்முறையாக லண்டனுக்கு வந்தபோது தன்னோடு டைரி ஒன்றை வைத்திருந்தார் . அதில் பல்வேறு கு...

கண்ணில் தென்படும் டிஷர்ட் அழகிகள்! - கடிதங்கள் - கதிரவன்

படம்
  12.3.2022 மயிலாப்பூர் அன்புள்ள தோழர் கதிரவனுக்கு, வணக்கம். எப்படி இருக்கிறீர்கள்? எங்கள் மேன்ஷனில் கேரளத்து சேட்டா ஒருவர் தங்கியிருந்தார். அவரைப் பற்றி எனக்கு நினைவில் உள்ள சித்திரம் மலமோ, சிறுநீரோ இதோ வந்துவிட்டது என்ற நிலையில்தான் அவருக்கு நினைவுக்கு வரும். உடனே 50 மீட்டர் தூரத்திலுள்ள பொதுகழிவறைக்கு உசேன் போல்ட் போல ஓடுவார். விஷ்க் என்ற காற்று உராயும் சத்தம் தான் கேட்கும். ஆள் கடந்திருப்பார். அண்மையில் தான் ஆளைக்காணோம். அறையைக் காலி செய்துவிட்டார் என்று தகவல் கிடைத்தது. அறையை சுத்தம் செய்த கோபி அண்ணா, சேட்டன் நிறைய மதுப்புட்டிகளை குடித்துவிட்டு எறிந்திருக்கிறார் என்றார். அடுத்தவர்களை பிரச்னை செய்யாமல் அறையில் வைத்து குடித்திருக்கிறார் என மகிழ வேண்டியதுதான்.  புதிதாக ஏழு பேர் தங்கும் அறையில் தங்கியுள்ளவர்கள், சினிமா ஆட்கள் போல. சில பெண்கள்  நடிக்கும் வாய்ப்புக்காக வந்துபோய்க்கொண்டு இருக்கிறார்கள். புதிதாக சந்தைக்கு வரும் டீஷர்டுகளை இந்த வகையில் அறிந்துகொள்ள ஆண்டவன் அருள் பாலித்திருக்கிறான். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பித்து. என்ன சொல்வது? இன்று இதழின் சீஃப் டிசைனர் எழுத...

கட்டற்ற உணர்ச்சியால் பாதிக்கப்படும் எழுத்தாளர்கள்! - வினோத் பாலுச்சாமி - கடிதங்கள்

படம்
  வினோத் அண்ணாவுக்கு,  வணக்கம். நேற்று ஆலிவர் அண்ணாவோடு பேசினேன். அவர் தனக்குத்தானே கண்ணாடியில் பேசுவது போன்ற மனநிலையில் இருந்தார். தொடர்ச்சியாக எனக்கு எந்த வாய்ப்புமே தராமல் ஏதேதோ பேசினார். நான் அவருக்கு இன்ஸ்டால் செய்து தந்த டேட்டிங் ஆப்பை அழித்துவிட்டாராம். தனது தொழிலைப் பார்க்கப் போகிறாராம். அவர் சிங்காரப்பேட்டை போனார் என்று சொன்னேன் இல்லையா? அங்கு ஏதோ மந்திரித்து விட்டார்கள் போல.   தொடர்ச்சியாக அவரின் பழக்கப்படி இரண்டு இரவுகள் ஆல்கஹாலை வாய்க்குள் சரித்துக் கொண்டால் எல்லாம் சரியாகிவிடும் என நினைக்கிறேன். 2 ஆண்டுகளுக்கு பிறகு திருவண்ணாமலையில் தான் கோழிக்கறி சாப்பிட்டேன். அதுவும் உடல் எப்படி எதிர்வினை தருகிறதோ என்ற பதற்றத்தில்தான். இதனை மெல்ல உடலுக்கு பழக்கிக்கொள்ள நினைத்தேன். ஆனால் அது நினைத்தபடி வேலைக்காகவில்லை. நான் அலுவலகத்திற்கு நடந்து செல்வதால் பருப்பு, கீரையைப் பயன்படுத்தி வந்தேன். ஆனால் மெல்ல அதுமட்டுமே போதாது என்று புரிந்தது. செஞ்சியின் ராணி கோட்டை, ராஜா கோட்டை ஏறியபோது எனது உடல் தடுமாறத் தொடங்கியது. மெல்ல கால்கள், தொடை, கணுக்கால் என அனைத்துமே நடுங்கத் தொட...

ஊக்கப்படுத்துவதை எப்படி செய்வது? - சூப்பர் டெமோ - மயிலாப்பூர் டைம்ஸ் Extended

படம்
  மயிலாப்பூர் டைம்ஸ்  ஊக்கப்படுத்துங்க ப்ரோ? பொதுவாக சோகத்தில் மூழ்குவது ஒரு இன்பம். அதில் ருசி கண்டுவிட்டால் பிறகு வேறெதுவே தேவையில்லை என ஜெயமோகன் தன் மீட்சி நூலில் கூறியுள்ளார். இதுபோல ஆட்களிடம் சிக்கினால் என்னாகும் தெரியுமா? நேரம் வீணாவதோடு நம் உடலில் ஏதாவது உருப்படியாக செய்யலாம் என்று திட்டமிட்ட ஆற்றலும் வெட்டியாக தீர்ந்துபோகும்.  செயலின்மை படைப்பு சார்ந்து செயல்படுபவர்களுக்கு வருவதுதான். ஆனால் அதிலேயே வெயில் கடுமைக்கு குளிர்ந்த நீரின் சேற்றில் எருமை புரள்வது போல அப்படியே நின்றால் எப்படி? திருவண்ணாமலைக்கு செல்லும்போது அப்படி ஒருவரை சந்திப்பேன் என்று நினைக்கவில்லை. புகைப்படக்காரர் தினேஷ் சாந்தமூர்த்தி அப்படியொரு நிலையை உருவாக்கினார். நான் அங்கு வருவதாக போன் செய்தபோது அவருடைய வீட்டில் உறவினர்கள் இருந்தார்கள். சரி, என போனை வைக்க நினைத்தபோது சட்டென கோபப்பட்டவர், உடனே போனை வெக்காத, ஒருமணிநேரம் கழிச்சு கூப்பிடு என்றார்.  பிறகு போன் செய்தபோது, அவர் வேறு ஒருவருடன் பேசிக்கொண்டிருந்தார். தினேஷ் அண்ணாவுக்கு முக்கியமான பழக்கம் இருக்கிறது. ஒரு விஷயத்தை இரண்டு முறை சொன்னால் உட...

அமைச்சரை கொலைசெய்த பழியில் மாட்டிக்கொள்ளும் காமெடி குண்டர்கள்! - ஜாதி ரத்னாலு - அனுதீப்

படம்
              ஜாதி ரத்னாலு  Director: Anudeep KV Produced by: Nag Ashwin Writer(s): Anudeep KV     ஏஜெண்ட் சாய் ஶ்ரீனிவாசா படத்திற்கு பிறகு நவீன் பொலிசெட்டி தெலுங்கில் நகைச்சுவை நடிப்பில் பின்னி எடுத்துள்ள படம்தான் ஜாதி ரத்னாலு.  ஜோகிபேட்டில் மது, சூது என அனைத்து போங்குத்தனங்களிலும் ஈடுபடும் மூன்று நண்பர்கள் திடீரென வாழ்க்கையில் உயர்ந்துவிடலாம் என நினைத்து ஹைதராபாத் கிளம்புகிறார்கள். அங்கு நேரும் காமெடி களேபரங்களே கதை.    ஶ்ரீகாந்த் லேடீஸ் எம்போரியத்தில் இளம் முதலாளியாக ஶ்ரீகாந்த், ஊரில் யாரும் அவரை பெரிதாக மதிப்பதில்லை. பெண்களுக்கு எந்த சேலைக்கு எந்த வளையல் மேட்சிங் என்று சொல்வதில் புகழ்பெற்றவன். ஆனால் இந்த புகழ் பெண்கள் வேடத்தில் நடிப்பதற்கும், அவர்களுக்கு கல்யாணத்திற்கும் பூப்புனித நன்னீராட்டு விழாவுக்கு சரியான உடைகளை தேர்ந்தெடுத்து கொடுக்கவும்தான் உதவுகிறது. ஆனால் அவருக்கென காதல் மனைவி கிடைக்க  ராஜதந்திரங்களை பயன்படுத்தியும் பயனில்லை. அடுத்து சேகர், பிறக்கும்போது வீட்டில் அரிசி குக்கர் விசிலடிக்கும்போது பிறந்தவன்....

டிஷர்ட் ஜீன்ஸ் அணிந்து பணி செய்வது பணித்திறனை பாதிக்குமா?

படம்
  cc         ஷாம்பெய்ன் பாட்டிலைத் திறந்து அதில் ஸ்பூன் ஒன்றை போட்டால் அது புதிய பானம் போலவே இருக்குமா? அறிவியல் பூர்வமாக இதற்கு எந்த ஆதாரங்களும் கிடையாது. பொதுவாக குடித்துவிட்டு மீந்த பானங்களில் வெள்ளி ஸ்பூன்களை போட்டுவைத்தால் அதிலுள்ள கேஸ் போகாமல் அப்படியே இருக்கும் என நம்புகிறார்கள். ஆனால் இது உண்மையல்ல. 1994ஆம் ஆண்டு பேராசிரியர் ரிச்சர்ட் ஜரே என்பவர், இதுபற்றி ஆராய்ந்தார். இவர் கலிபோர்னியாவில் உள்ள ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்தவர். 26 மதுபான சுவையை அறியும் வல்லுநர்களைக் கொண்டு சோதித்தார். இச்சோதனையில் ஸ்பூன் பயன்படுத்தப்பட்ட சாதனங்கள் எந்தத வகையில் சுவையை ஊக்குவிக்கவில்லை என்பது உறுதியானது. மதுபானம் சுவையாக கார்பன்டை ஆக்சைடு் வாயுவுடன் இருக்கவேண்டுமா? அதனை குளிர்சாதனப்பெட்டியில் வையுங்கள். போதும். டிஷர்ட் ஜீன்ஸ் அணிந்து பணி செய்வது பணித்திறனை பாதிக்குமா? பாதிக்க வாய்ப்புண்டு. இதெல்லாம் உளவியல் சார்ந்த தன்மை. பல் மருத்துவர் அணியும் வெண்ணிற கோட், சமையல்கலைஞர் அணியும் உடை ஆகியவை அவர் செய்யும் வேலை நமக்கு மட்டுமல்ல அவருக்கும் உணர்த்தும். இதனை என்குளோத்ட...

தம்பி மனைவியின் அத்துமீறிய உறவால் தூக்குதண்டனைக்கு உள்ளாகும் அண்ணன் வாழ்க்கை! மௌனம் சம்மதம்

படம்
    மௌனம் சம்மதம்     மௌனம் சம்மதம் மது இளையராஜா தம்பி மனைவியை கொன்ற வழக்கில் தொழிலதிபர் ஜெய்சங்கர் மாட்டிக்கொள்கிறார். அவர் பேசுவதற்கு வாய்ப்புகளே வழங்கப்படாமல் தூக்குதண்டனை வழங்கப்படுகிறது. இதனை எப்படி உடைத்து, வழக்குரைஞர் மம்மூட்டி அவரை வெளியே கொண்டுவருகிறார் என்பதுதான் கதை. நிதானமாக நடைபெறும் படம். நடந்த விஷயங்களை தொழிலதிபரின் வீட்டில் வாழும் ஒவ்வொருவரும் அவரவர் பார்வையில் சொல்லுகிறார்கள். இதைத்தான் நாம் பார்க்கிறோம். இதன் வழியாக நாம் நினைப்பதும், வழக்கை எப்படி மம்மூட்டி தீர்க்கிறார் என்பதையும் குறைந்த பட்ச சண்டைகளுடன் சொல்லியிருக்கிறார் இயக்குநர். மம்மூட்டி, அமலா ஆகியோர் இடையிலான தொடக்க காட்சியே அசத்தலாக இருக்கிறது. பொதுவாக மோசமாக கண்ணில் தென்படும் ஒருவரை நல்லவராக காட்டுவது, அப்படி நினைப்பது கூட கடினம். அதனை இந்த கதாபாத்திரத்தில் செய்து காட்டியிருக்கிறார் இயக்குநர். பாடல்கள் அனைத்தும் கேட்கும் பார்க்கும் ரகமாக உள்ளன. திரில்லர் படத்தில் பாடல்கள் ஹிட் ஆவது அவசியமில்லை என்று நினைக்கிற காலம் இது. நிதானமான படத்தில் பல்வேறு கதாபாத்திரங்கள் மீது சந்தேகப்பட வாய்ப்பு உள்...

பீர் குடித்தால் ஹேங் ஓவர் ஏற்படுகிறதா?

படம்
giphy மிஸ்டர் ரோனி பீர் குடிப்பதற்கு முன்பு ஒயின் குடித்தால் ஹேங்ஓவர் ஏற்படாது என்கிறார்களே? அது உண்மையா? இந்த விஷயத்தில் பாதிப்பு ஏற்படுத்துவது ஆல்கஹால்தான். இதில் பல்வேறு மதுபானங்களில் உள்ள ஆல்கஹால் அளவுதான் போதை ஏற்படுத்துகிறது. பீர் குடிப்பதற்கு முன்பு வைன் என்பது ஆராய்ச்சிப்படி மோசமான தலைவலியை சிலருக்கு ஏற்படுத்தியது. அடிப்படையில் மது குடித்தால் உடலிலுள்ள நீரை டீ, காபியை விட வேகமாக வெளியேற்றுகிறது. இதன் காரணமாக உங்களுக்கு உடலில் நீரின் அளவு மிகவும் குறைகிறது. இதனால் காலையில் தலைவலி கண்டிப்பாக ஏற்படும். இதனைத் தவிர்க்க வைனை முன்னால் குடித்து பீரை பின்னால் குடிக்கலாமா என்று கேட்க கூடாது. மதுவை குறைவாக அருந்தினால் பாதிப்பு குறைவாக இருக்கும். மதுவை கல்லீரல் பிரித்து செரிக்கும்போது அசிட்டால்டிஹைடு எனும் நச்சுப்பொருள் உருவாகிறது. இதுவும் உங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது. எனவே எதைக்குடித்தாலும் நீரை குறிப்பிட்ட இடைவெளியில் நீங்கள் குடித்தே ஆகவேண்டும். ஒரு மணி நேரத்திற்கு ஒரு லிட்டர் நீர் நமது உடலில் இருந்து வெளியேறியே ஆகவேண்டும். இதனை எப்போதும் நினைவில் கொள்ளுங்கள்....

மது அருந்தினால் உடலில் என்ன நடக்கிறது?

படம்
ஆல்கஹால் ஊக்கமூட்டியா என்ற சந்தேகம் பலருக்கும் இருக்கும். இதனைக் குடித்தவுடன் உடலில் நெகிழ்வுத்தன்மை ஏற்பட்டது போன்ற இலகுவான தன்மை ஏற்படும். காற்றில் பறப்பது போல. இதனால்தான் இலகுவான இந்நேரத்தில் பல்வேறு ரகசிய விஷயங்களை நண்பர்களிடம் கொட்டி விடுகின்றனர். ஆனால் அதேசமயம் இதனை குடித்தான் பேசினான் என்று ஒதுக்கிவிட முடியாது. குடித்தாலும் அம்மாவுக்கும், மனைவிக்கும் வேறுபாடு தெரியாமல் போவதில்லை என்பதை கவனத்தில் கொள்ளுங்கள். ஊக்கமூட்டியா அல்லது மூளைத்திறன் குறைப்பு மருந்தா காபி, டீ ஆகியவற்றை குடிக்கிறீர்கள். இவற்றின் அளவு அதிகமானால் என்னாகும்? சிம்பிள். தூக்கம் வராது. இரவில் டீ, காபி குடிப்பதை தொடர்ந்தால் இன்சோம்னியா எனும் தூக்க குறைவு பிரச்னை எழும். அதுவே ஆறுமணிக்கு ஆபீஸ் விட்டதும் மது அருந்துவதை வழக்கமாக்கினால் என்னாகும்? உங்களின் இதயத்துடிப்பு குறையும். மூளை ரிலாக்ஸ் ஆனது போல தோன்றும். ஆனால் உங்கள் உடலில் ஒட்டுமொத்த பணிகளையும் மது தடுத்து மாய உலகை உருவாக்குகிறது. டீ, காபி ஆகியவற்றிலுள்ள காஃபீன் உடலை ஊக்கமூட்டி, தூங்கி வழிந்துகொண்டிருந்தால் கூட உங்களுக்கு கூடுதலாக அரைமணிநேரம் ப...