எனக்கென தனி கொலை உலகம் - டீன் கோரல் கோரதாண்டவம்!
ராணுவத்தில் டீன் கோரல் அசுரகுலம் டீன் கோரல் இளைஞர்களை செக்சுக்கு பயன்படுத்திவிட்டு தூக்கியெறிந்த டீன் கோரல், மொத்தம் 27 பேரை வைகுண்டம் அனுப்பி வைத்துவிட்டு நல்ல பிள்ளையாக இருந்திருக்கிறார். பிள்ளைகள் காணாமல் போனால் போலீஸ் என்ன செய்கிறது என்று கேள்வி வருகிறதா? அங்கிருந்த போலீஸ் எண்ணிக்கை மிக குறைவு. இருபது லட்சம் மக்களுக்கு 2,200 போலீசார்தான். எனவே, காணவில்லையா கண்பிடிப்போம் என எதிர்கால வார்த்தைகளைப் போட்டு பதில் சொல்லி பெற்றோர்களை அனுப்பிவிட்டு ரெகுலர் வேலைகளைப் பார்த்தனர். அவர்கள் கொஞ்சம் உஷாராக இருந்திருந்தால், முதலிலேயே ஹென்லியை பிடித்திருக்கலாம். நிறைய பேர் தனக்கு என்ன நடக்கிறது என்று தெரியாமல் பலியாகி இருக்கவும் மாட்டார்கள். இப்போது நாம் வருத்தப்பட்டு என்ன பிரயோஜனம்? கோரலின் கதையைப் பார்ப்போம். டெக்சாசின் மேற்குப்பகுதியிலுள்ள ஹூஸ்டனில் வாழ்ந்த டீன் கோரல் நேர்த்தியான ஆள். தனது தாய் நடத்தி வந்த மிட்டாய்கடையில் மிட்டாய்களை தயாரித்து பக்கத்திலுள்ள குழந்தைகளுக்கு இலவசமாக கொடுப்பான். இதனால் மிட்டாய்காரன் என அப்பகுதியில் கோரலுக்குப் பெயர். 1973 ஆம் ஆண்ட