இடுகைகள்

தத்தெடுப்பு லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

இணையத்தில் செல்லப்பிராணி வீடியோக்கள் உங்களுக்குப் பிடிக்குமா?

படம்
  நாய், பூனை வீடியோக்களை இணையத்தில் பார்ப்பீர்கள். பொதுவாக சீரியசாக பொருளாதார கட்டுரைகளை எழுதும் எங்கள் இதழ் ஆசிரியர் கூட தன்னை ரிலாக்ஸ் செய்துகொள்ள இணையத்தில் நாய்களைப் பற்றிய வீடியோக்களைத் தேடி பார்ப்பது வழக்கம். ஆனால் நமக்கு நன்றாக இருக்கிறது ஆனால் இப்படி வீடியோக்களை எடுப்பதற்காக நாய்களை சித்திரவதை செய்வது நியாயமா என்று விலங்கு நல அமைப்புகள், விலங்கு நேசர்கள் குழுவினர் குரல் எழுப்புகின்றனர். உச்சமாக ஈரோடு மாவட்டம் விஜயமங்கலத்தில் எழுத்தாளர் வா.மு. கோமு கூட யூட்யூப் வீடியோவுக்காக நாயை சித்திரவதை செய்யும் சிலரைப் பற்றிய புகைப்படத்தை பேஸ்புக்கில் பகிர்ந்திருந்தார்.  இதைப்பற்றிய சில தகவல்களைப் பார்ப்போம்.  இணையத்தில் ஆயிரக்கணக்கிலான நாய், பூனை குறும்பு வீடியோக்கள் கிடைக்கின்றன. இதனைப் பார்ப்பவர்களின் எண்ணிக்கை லட்சக்கணக்கில் உள்ளது.  யூட்யூபில் நாய், பூனைகளை கொடுமைப்படுத்தும் வீடியோக்களுக்கு இடமில்லை என்று கூறப்பட்டுள்ளது. ஆனால் இதை எப்படி தடுப்பது என்பது பற்றி தெளிவாக தெரியவில்லை. இதனை நடைமுறைப்படுத்துவதும் கடினம்.  2021ஆம் ஆண்டு சாரிட்டி இன்டர்நேஷனல் கேட் கேர் அமைப்பு, இதுபோல வீடியோக்

குழந்தைகளின் தத்தெடுப்பு குறைந்துவருகிறது!

படம்
  இந்தியா போன்ற பல்வேறு மக்கள், இனக்குழுக்கள், சமயங்கள், கலாச்சாரங்கள் உள்ள நாட்டில் த த்தெடுப்பது என்பது எளிதாக நடக்க கூடியது அல்ல. சொந்த ரத்த த்தில் குழந்தை உருவாக வேண்டும் என்பதை இங்குள்ளவர்கள் தீவிரமாக நம்புகிறார்கள். இதனால், வெளிநாடுகளில் உள்ளவர்கள் த த்தெடுப்பதை எளிதாக செய்துவிட இந்தியர்கள் இதனை ஏற்பதில் இன்னமும் தயக்கம் காட்டுகின்றனர். தத்தெடுப்பதை முறைப்படி செய்ய அரசு அமைப்பு காரா உள்ளது. இந்த அமைப்பில் பதிவு செய்தால் உடனே குழந்தை கிடைத்துவிடாது. அதற்கென நீங்கள் தவமே செய்யவேண்டும்.  ஏன் என்று கேட்டால், அரசு அமைப்பில் உள்ள நடைமுறை சார்ந்த சடங்குகள், சம்பிரதாயங்கள் எல்லாவற்றையும் பத்து முதல்  ஐந்து மணிக்குள் தான் செய்வார்கள். எனவேதான் இந்த தாமதம் நேருகிறது. இன்னொரு சிக்கல், அரசு அமைப்பு செய்வதால் எந்த தவறும் நேர்ந்துவிடக்கூடாது என்ற பயமும் அதிகாரிகளை உலுக்குகிறது. 2010ஆம் ஆண்டு தொடங்கி, இன்றுவரையில் இந்தியாவில்  குழந்தைகளை த த்தெடுப்பது சற்றே வளர்ந்து மிகவும் தேய்ந்த தொனியில் சென்றுகொண்டிருக்கிறது. இந்திய மாநிலங்களில் குழந்தைகளின் த த்தெடுப்பில் மகாராஷ்டிரம் முன்னிலையில் உள்ளது.

குழந்தைகளை தத்தெடுப்பதில் உள்ள சட்டரீதியான பிரச்னைகள்!

படம்
          சட்டவிரோத தத்தெடுப்பும் , பிரச்னைகளும் பொதுவாக இந்திய சமூகத்தில் திருமணம் என்பது முக்கியமானது . அதுதான் ஆண்களுக்கும் , பெண்களுக்கும் சமூகத்தில் அங்கீகாரத்தை தருகிறது . மகன் , மகள் பிறக்கும்போது அவர்களின் வாழ்க்கை முழுமை பெறுகிறது . மரணத்தில் கூட ஒருவருக்கான சடங்குகளை அவரின் ரத்த வழிகளைச் சேர்ந்தவர்தான் செய்யவேண்டும் என்பதுதான் இந்து மத நம்பிக்கை . திருமணமான பெண்கள் , கர்ப்பம் தரிக்கவில்லை என்றால் மெல்ல சித்திரவதைகள் தொடங்கும் . மலடி என்று அழைப்பதோடு , அந்த பெண்ணின் கணவர் மறுமணம் செய்துகொள்ளவேண்டுமென கூறுவதும் தொடங்கும் . இதற்கும் மேலாக இப்படி குழந்தை பெறாத பெண்களை சமூக புறக்கணிப்பு செய்து விழாக்களில் தவிர்ப்பதும் இயல்பாக நடக்கிறது . இதனை பெரும்பாலும் பெண்களே வன்மத்துடன் செய்கிறார்கள் . சட்டரீதியான தத்தெடுப்பு என்பதை பெற்றோர் பலரும் ஏற்காமல் அவசரப்படுகிறார்கள் . இதனால் தரகர்கள் உள்ளே புகுந்து சட்டவிரோதமாக குழந்தைகளை தத்தெடுக்க உதவுகின்றனர் . முதலில் இதற்கென தனியாக தொகையை வாங்குபவர்கள் பின்னர் , பெற்றோரின் சென்டிமெண்ட்டை பயன்படுத்தி அவர்களை மிரட்டி தொக

இந்திய தெருநாய்களுக்கு ஆதரவளிக்கும் பெண்மணி!

படம்
வீரா, ராணி, பொங்கி ஆகிய நாய்கள் இன்று அமெரிக்காவிலும் கனடாவிலும் வாழ்ந்த வருகின்றன. இத்தனைக்கும் அவை மதிப்பான உயர்ந்த ரக நாய்கள் கிடையாது. தெருவில் பிறந்து வளர்ந்தவைதான். அமெரிக்காவின் சியாட்டிலில் வாழ்ந்து வந்த ஜெசிகா ஹால்ட்ஸன், தன் வாழ்க்கையில் ஏற்பட்ட சில சிக்கல்களை பயணம் தீர்க்கும் என நம்பினார். அதற்காக இந்தியாவுக்கு வந்து டில்லியில் அறை எடுத்து தங்கினார். சொந்த சோகத்தை மறைக்க முயன்று தோற்ற நேரத்தில் தெருவில் அடிபட்டு அலறும் நாயின் குரலைக் கேட்டார். அந்த நாயை உடனே தூக்கிக்கொண்டு கால்நடை மருத்துவரைப் பார்த்தபோது, அந்நாய்க்கு இடும்பெலும்பு உடைந்திருப்பதோடு, தொற்றுநோய் பாதிப்பும் இருக்கிறது என்று கூறி மருந்து எழுதினார். இந்தியாவில் 30 இலட்சத்திற்கு மேற்பட்ட தெரு நாய்கள் இருப்பதை பின்னர் அறிந்துகொண்டார். தான் காப்பாற்றிய டெல்லி என்ற நாயை தன்னுடனே சிகிச்சை செய்து வைத்துக்கொண்டார். அதன் பெயரிலேயே காப்பகம் ஒன்றை உருவாக்கி செயல்பட்டு வருகிறார். இந்த அமைப்பு 2018 ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்பு, இந்தியாவில் செயல்படும் பிற விலங்கு நல அமைப்புகளுடன் இணைந்து த