மாற்றுப் பாலினத்தவர்கள் ஒன்றாக திரண்டால் மட்டுமே அவர்களுக்கான உரிமைகளைப் பெற முடியும்!
ராமசுவாமி ஈக்குவலி ஸ்டோரிஸ் பை பிரண்ட்ஸ் ஆப் தி க்யுர் வேர்ல்டு என்ற பெயரில் நூல் வெளியாகியுள்ளது . இதனை ஶ்ரீனி ராமசுவாமி , ராமகிருஷ்ண சின்கா ஆகியோர் இணை ஆசிரியர்களாக பணியாற்றி தொகுத்துள்ளனர் . இதில் 45 பேரின் கதைகள் உள்ளன . நூலைப்பற்றி அவர்களிடம் பேசினோம் . கூட்டணி என்பது பற்றி என்ன நினைக்கிறீர்கள் ? மாற்றுப்பாலினத்தவர்கள் ஒன்றாக இணைந்து பல்வேறு சவால்களை எதிர்கொண்டால்தான் அவர்கள் இ்ங்கு வாழ முடியும் . இதைத்தான் நாங்கள் எழுதியுள்ள நூலில் குறிப்பிட்டுள்ளோம் . ஒருவர் தனது வாழ்க்கை அனுபவத்திலிருந்து பிறரை புரிந்துகொள்ள முடியும் . இதற்கு அவர்கள் ஒன்றாக இணைவது முக்கியமானது . நீங்கள் வெளியே வருவது பற்றி கூறுகிறீர்கள் . அதைப்பற்றி விளக்குங்களேன் . வெளியே வருவது என்று நான் கூறியது , தங்களது விருப்பம் பற்றி மாற்றுப் பாலினத்தவர்கள் வெளிப்படையாக பேச வேண்டும் என்பதுதான் . பெற்றோர்கள் , ஆசிரியர்கள் , நிறுவனங்கள் என அனைவரும் மாற்றுப்பாலினத்தவரின் கொள்கை உருவாக்கத்தில் பங்களிக்க கூடியவர்கள் . இவர்கள் அனைவருமே ஒரு கூட்டணியாக திரண்டால் தங்களுக்கான கோரிக்கைகளை எளி