இடுகைகள்

ஷி ச்சின்பிங் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

தி பொலிட்டிகல் தாட் ஆப் ஷி ச்சின்பிங் ! - book review

படம்
 தி பொலிட்டிகல் தாட் ஆப் ஷி ச்சின்பிங்  ஒலிவியா செங், ஸ்டீவ் யுயி சங் ட்சங் கட்டுரை நூல் 297 பக்கங்கள் ஷி ச்சின்பிங் தனது அரசின் நிர்வாக சாதனைகளைப் பற்றி பிரசாரத்துறை மூலம் ஏராளமான நூல்களை எழுதி தொகுத்து வெளியிட்டுள்ளார். அவற்றை பல்வேறு மொழிகளிலும் மொழிபெயர்த்து விற்று வருகிறார்கள். அந்த நூல்களை படித்த நூலாசிரியர்கள், அதை வைத்து ஷி என்ன யோசிக்கிறார், உண்மையில் அவரது நாட்டில் நடந்த சம்பவங்கள், அதைப் பின்பற்றி அவர் என்ன யோசித்தார், செய்தார். கட்சியினர் என்ன நினைத்தனர் என்று விளக்கமாக எழுதியிருக்கிறார்கள்.  ஷியின் ஆளுமை, கட்சியில் தன்னை வளர்த்துக்கொண்ட பாங்கு ஆகியவை தொடக்கத்தில் விளக்கமாக கூறப்பட்டுவிடுகின்றன. டெங், மாவோ ஆகியோரிடமிருந்து அவர் வேறுபடும் விதம் பற்றி மெதுவாக பல்வேறு திட்டங்களை அவர் எப்படி செயல்படுத்தினார், அதில் அடைந்த ஆதாயம் என கூறிக்கொண்டே வருகிறார்கள். நூலில் அத்தியாயம் தொடங்கும்போது அதில் கூறியுள்ள செய்திகள், இறுதியாக முடியும்போது படித்த விஷயங்கள் என்னென்ன என பாடநூல் போல வடிவமைப்பை பின்பற்றி இருக்கிறார்கள். இதுபோன்ற அமைப்பு எதற்கு என புரியவில்லை.  ஷி எ...

கட்சி, நாட்டிற்காக தன்னை தியாகம் செய்துகொள்ளும் மக்களே தேவை - ஷி ச்சின்பிங்

படம்
  விசுவாசம் அனைத்துக்கும் மேலானது! தாய்நாடு என்று கேள்விப்பட்டிருப்போம். ஆனால் சீன அதிபர் ஷி ச்சின்பிங், வெளிநாட்டில் வாழும் சீனர்களை உங்கள் தந்தை நாட்டிற்கு நன்றிக்கடனை திருப்பிச் செலுத்துங்கள் என்று பேசுகிறார். எதற்காக? உலகம் முழுக்க சீன மக்கள் புலம்பெயர்ந்து வாழ்கிறார்கள். அதற்கு உள்நாட்டு அரசியல் நிலைமை, வேலையின்மை, கல்வி, தொழில்வாய்ப்பு என பல்வேறு காரணங்கள் இருக்கலாம். இவர்களை ஷி, பொதுவுடைமைக் கட்சியின் கீழ் ஒருங்கிணைக்க நினைக்கிறார். அனைவருக்கும் தனிக்கனவுகள் உண்டு, ஆனால், அதிபர் காணச்சொல்வது சீனக்கனவை. அது அனைவருக்குமான கனவு என்பதாக கட்டமைக்கிறார்.  நாடு, கட்சி, அதிபர் ஷி ச்சின்பிங் என மூன்றையும் சீனாவிலுள்ள மக்கள் நேசிக்கவேண்டும். காதலிக்க வேண்டும். வாழ்க்கையை அப்படியே அர்ப்பணிக்க வேண்டும். அதன் பெயர்தான் விசுவாசம். கட்சியை மட்டுமே மையப்படுத்திய தேசப்பற்று. அப்படியல்லாது கேள்வி கேட்பவர்களை, கட்சி உறுப்பினர்கள் மீது ஊழல் பாலியல் புகார்களை சொல்பவர்களை ஷி மன்னிப்பதில்லை. பாலியல் புகார் சொன்ன டென்னிஸ் வீராங்கனை ஒருவர் காணாமல் போனார். திரும்ப வந்தபோது தனது ஓய்வை அறிவித்துவி...

ஆப் வழியாக மக்களை, கட்சி உறுப்பினர்களை கண்காணிக்கும் ஷி ச்சின்பிங்!

படம்
  ஆப் வழியாக கண்காணிப்பு சீனாவில் ஷி ச்சின்பிங் செல்வாக்கு என்பது தானாக வளர்ந்தது என்று கூறுவதை விட அதை அதிகாரத்தைப் பயன்படுத்தி கட்சியின் செல்வாக்கில் வளர்த்தெடுத்து வருகிறார்கள் என்றுதான் கூறவேண்டும். ஏற்கெனவே ஷி யின் உரைகளை நூலாக வெளியிட்டு கட்சி பள்ளிகளில் பாடமாக வைத்துவிட்டனர். அடுத்தகட்டமாக, ஆப் ஒன்றை உருவாக்கி வெளியிட்டனர். மிகப்பெரிய அதிகாரத்திடமிருந்து கற்றுக்கொள்ளுங்கள் என்பதுதான் ஆப்பின் பெயர். ஷி ச்சின்பிங் சிந்தனைகளிலிருந்து அரசு அதிகாரிகள், கட்சி உறுப்பினர்கள், ஆசிரியர்கள் என பலரும் கற்றுக்கொள்ளலாம். இதை கட்சியின் பிரச்சார நிறுவனம் கண்காணிக்கும். 2019ஆம் ஆண்டு வாக்கில் ஆப்பில் பதிவு செய்துள்ளவர்களின் எண்ணிக்கை 100 மில்லியனைத் தாண்டுகிறது. பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை 40-60 சதவீதமாக உள்ளது. இந்த ஆப்பை பொதுவுடைமைக் கட்சிக்காக தயாரித்து கொடுத்தது அலிபாபா குழுமம். குழந்தைகளின் விளையாட்டுப் பள்ளி தொடங்கி பல்கலைக்கழகம் வரை ஷி ச்சின்பிங் எண்ணங்கள் வண்ணங்களைப் பற்றி ஒருவர் படிக்காமல் தேர்வு எழுதாமல் வெளியே வரமுடியாது. கொரோனா காலத்தில் ஷியின் ஆப் பயன்பாடு, அதிகரித்தது. ...

கோபோ, ஸ்மாஷ்வேர்ட் வலைத்தளங்களில் வெளியாகியுள்ள மின்னூல்கள்!

          தூக்குமேடையில் சுருக்குக் கயிறு (Thookumedaiyil surukku kayiru) anbarasu shanmugam and அருளையா தீசன் https://books2read.com/u/bzxgQE ஹரி ஓம் தத் சத் (Hari om dat sat) anbarasu shanmugam and தாய் கண்ணன் https://books2read.com/u/bzxeDj விழித்தெழும் தேசம் (Vizhithelum Desam) anbarasu shanmugam and தென்னன் https://books2read.com/u/m2DoRr

உலகிற்கு சிந்தனையால் வழிகாட்டும் சீன செவ்வியல் சிந்தனையாளர்களின் கருத்துகள்!

படம்
  ஷி ச்சின்பிங் - ஹவ் டு ரீட் கன்பூசியஸ் அண்ட் அதர் கிளாசிக் திங்கர்ஸ் ஸான் பாங்சி சிஎன் டைம்ஸ் புக்ஸ் 2013 - 2014 என இரண்டு ஆண்டுகளில் சீன அதிபர் உள்நாடு, வெளிநாடுகளில் பல நூறு பேச்சுகளை பேசியுள்ளார். அப்படி பேசியுள்ளதில் சீன இலக்கிய எடுத்துக்காட்டுகள் அதிகம் இருந்தன. இருநூறுக்கும் மேற்பட்ட சீன பழமொழிகள் நூலில் இடம்பெற்றுள்ளன. அவற்றை ஷி எங்கே, எப்படி, என்ன பொருளில் சொன்னார் என நூலாசிரியர் விவரித்துக் கூறியிருக்கிறார். நூலில் உள்ள மேற்கோள்கள் கல்வி, அரசு, அரசியல் என பல்வேறு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு ஒரு பிரிவுக்கு இருபத்தைந்து முதல் முப்பத்தைந்து வரை மேற்கோள்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. மேற்கோள்களை கூறிவிட்டு அதை அதிபர் ஷி எப்படி பயன்படுத்தினார், என்ன பொருளில் என விளக்கிவிட்டு விரிவான விளக்கத்திற்கு செல்கிறார்கள். இப்பாதையில் நாம் பழமொழியை, கருத்தை சொன்னவர் பெயர், அவரது தகவல்களை சுருக்கமாக அறிய முயல்கிறது. அறிவுக்கூர்மை எளிதாக மரணத்தை கையோடு கூட்டி வரும் என்பதுபோல, பெரும்பாலான சீன சிந்தனையாளர்கள், தத்துவவாதிகள் தாம் சொன்ன கருத்துக்காக செயல்பாட்டிற்காக சிறைவாசம் அனுபவித்து பிறகு, தூக்...

பரஸ்பர வளர்ச்சிக்காக ஆப்பிரிக்க நாடுகளோடு இணைந்து நடைபோடும் சீனா - மக்கள் சீன குடியரசு 75 ஆண்டுகள்

படம்
      மக்கள் சீன குடியரசு - 75 ஆண்டுகள் உலக நாடுகள் சிறப்பாக இயங்கினால்தான் சீனா நன்றாக செயல்பட முடியும். சீனா நன்றாக செயல்படும்போது, முழு உலகமும் இன்னும் மேம்படும் என 2023ஆம் ஆண்டு சீன அதிபர் ஷி ச்சின்பிங், மூன்றாவது பாதை மற்றும் சாலை திட்டத்தின் உரையில் கூறினார். சீனாவில் 1.4 பில்லியன் மக்கள் வாழ்கின்றனர். இவர்களோடு, பல்வேறு சவால்களை சந்தித்து பயணிப்பது சாதாரண காரியமல்ல. 2049ஆம் ஆண்டு சீன நாட்டை புத்துயிர்ப்பு செய்வதுதான் லட்சியமாக கொண்டு சீன அரசு இயங்கி வருகிறது. அந்த ஆண்டில் மக்கள் சீன குடியரசு, தனது நூற்றாண்டைக் கொண்டாடும் நாள். மக்கள் சீன குடியரசு நிலப்பரப்பு ரீதியாக, மக்கள்தொகை ரீதியாக பெரிய நாடு. இப்படி பல்வேறு சவால்களைக் கொண்ட நாடு எப்படி ஒரே திசையில் பயணிக்கிறது என ஆச்சரியமாக உள்ளது. 1978ஆம் ஆண்டு சீனாவில் நடந்த பொருளாதார மாற்றங்கள், சீர்திருத்தங்கள் முக்கியமான சாதனைகள் என்று கூறவேண்டு்ம். அவை அனைத்து பிரிவு மக்களுக்கும் வளமை சேர்ப்பதாக மாறியுள்ளது. இதன் கூடவே கிராம, நகர வளர்ச்சி போதாமைகள், காற்று, நீர் மாசுபாடு, கோவிட், ரஷ்யா உக்ரைன் போர்  ஆகிய சவால்களையும...

ஆப்பிரிக்காவில் அடிப்படை கட்டமைப்பிற்கு உதவி வளர்ச்சியை பகிர்ந்து கொண்ட சீனா!

    ஆப்பிரிக்காவை நவீனமயமாக்கும் சீனா! உங்கள் நண்பரோடு செல்லும் பாதையை பகிர்ந்துகொள்ளுங்கள் என்று ஆப்பிரிக்க பழமொழி ஒன்றுண்டு. யார் நம்புகிறார்களோ இல்லையோ சீனா அதை நம்புகிறது. சீனாவும், ஆப்பிரிக்காவும் பரஸ்பர நலன்களுக்காக இணைந்தே பயணிக்கின்றன. அண்மையில் சீனா, ஆப்பிரிக்காவுக்கான ஒத்துழைப்பு மாநாடு சீனாவில் நடைபெற்றது. இதில் ஐம்பது ஆப்பிரிக்க நாட்டு தலைவர்கள் பங்கேற்றனர். 1970ஆம் ஆண்டு சீனாவில் இருந்து ஐம்பதாயிரம் தொழிலாளர்கள், பொறியாளர்கள் ஆப்பிரிக்காவின் தான்சானியா, ஜாம்பியா நாடுகளுக்கு இடையிலான ரயில்பாதை திட்டத்தை செயல்படுத்த வந்தனர். கடந்த ஐம்பது ஆண்டுகளில் ரயில்பாதை பணியில் ஏற்பட்ட பல்வேறு விபத்துகளில் மொத்தம் எழுபது சீன தொழிலாளர்கள், பொறியாளர்கள் இறந்துள்ளனர். இவர்களுக்கென நினைவுத்தூண்களை தான்சானியாவில் எழுப்பி உள்ளனர். 1,860 கி.மீ தொலைவுக்கு ரயில் பாதையை சீனா, ஆப்பிரிக்காவில் உருவாக்கியுள்ளது. அப்பாதை இரு நாடுகளின் நல்லுறவுக்கான சாட்சியாக உள்ளது. சீனா ரயில்வே கன்ஸ்ட்ரக்சன் கார்ப் நிறுவனம், நைஜீரியாவில் நாற்பத்து மூன்று ஆண்டுகளாக இயங்கி வருகிறது. அதில் இஸ்ஸா பாத்திமா அப்லோ...

சீனா - இந்தியா ராணுவ வலிமையில் முன்னிலை பெறுவது யார்?

படம்
      ராணுவ வலிமையில் முன்னிலை பெறுவது யார்? இன்றோ நாளையோ நிச்சயமாக ஆதிக்கத்தை அதிகாரத்தை நிலைநாட்டுவதற்கான போர் நடைபெறும். அது உறுதி. அப்போது அதில் யார் வெல்வது என்பதை ஒரு நாடு எந்தளவு செலவு செய்து ராணுவத்தை உருவாக்கியுள்ளது என்பதைப் பொறுத்தே கூற முடியும். இந்திய அரசு, இணையத்தின் கட்சி சார்ந்த கேலி வதைக்குழுக்களை வைத்து வெல்ல முடியாது. இந்துமத ராணுவ வீரர்கள் மட்டுமே போராடி வெற்றியைப் பெற்றுவிடுவார்களா என்றும் புரியவில்லை.   சீனா, சாங்காய் கூட்டுறவு அமைப்பில் இடம்பெற்ற நாடுகளுடன் ராணுவப் பயிற்சிகளை செய்து வருகிறது. அவர்கள் உருவாக்கியுள்ள பயிற்சிகளின் கூடவே, மேற்கு நாடுகளின் போர்முறைகளை அறிய வேண்டுமே?  அதற்காக பாகிஸ்தானின் நட்பு உதவுகிறது. அந்த நாட்டு ராணுவத்திற்கு அமெரிக்க அரசு பயிற்சி அளிக்கிறது. இப்படியாக சீனா தன்னை ராணுவத்தில் வலிமையான நாடாக வளர்த்துக்கொண்டுள்ளது. புள்ளிவிவரங்களைப் பார்ப்போம். ராணுவ வீரர்களின் எண்ணிக்கை சீனா - 20,35,000 இந்தியா - 14,55,550 ராணுவ பட்ஜெட் சீனா - 231.4 பில்லியன் டாலர்கள் இந்தியா - 75 பில்லியன் டாலர்கள் விமானங்கள் சீனா - 3,304 இந...

மழைப்பேச்சு பாட்காஸ்ட் - வறுமை ஒழிப்பு எனும் தேசம் தழுவிய களப்பணி

படம்
  autoplay player               https://archive.org/details/2024-08-08-18-58-14

சற்றும் பொருட்படுத்த தேவையில்லாத மனிதன் - இநூல் வெளியீடு

படம்
            வறுமை என்பது நாட்டை எளிதாக பின்தங்கிய நிலைக்கு கொண்டு செல்லக்கூடியது. வறுமையை புனிதமாக கொண்டாடும் அவலத்தில் கூட மனிதர்களை தள்ளுகிறது. வறுமையை ஒழிக்க, வெளிநாட்டினருக்கு தெரியாமல் சேரியில் ஏழைகள் வாழும் பகுதியை மறைத்து துணி கட்டுவது, தடுப்புச் சுவர் எழுப்புவது, மைய நகருக்கு அப்பால் கொண்டுபோய் மறைத்து குடிவைப்பது ஆகியவற்றை வலதுசாரி மதவாத சீரிய சிந்தனையாளர்கள் சிலர் செய்துவருகிறார்கள். இதெல்லாம் ஏழைகளை முற்றாக அழித்து கூடவே வறுமையையும் ஒழித்துவிடலாம் என்று எண்ணுபவர்களின் குரூரக்கனவு. இந்த இடத்தில் சீனா, வேளாண்மையை மட்டும் நம்பியுள்ள மக்களை எப்படி கல்வி அறிவு கொடுத்து, தொழில் பயிற்சிகளை அளித்து உற்பத்தி துறைக்கு நகர்த்தியது என்பதைப் பற்றி இந்த நூல் கூறுகிறது. இந்தப் பணியில், நாடெங்கும் உள்ள கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்கள், தன்னார்வலர்கள் பங்கேற்றனர். அன்றைய கட்சி உறுப்பினரான ஷி, நிங்டே கிராமத்திற்கு சென்று தங்கி வறுமை ஒழிப்பு பணிகளை மேற்கொண்டார். அதில் எதிர்கொண்ட பிரச்னைகள், மக்களின் கருத்துகள், அவர்களின் எதிர்காலம் மீதான ஆசை, வாழ்க்கை நிலை, வருமானம்...

விரைவில்... சற்றும் பொருட்படுத்த தேவையில்லாத மனிதன் - ஷி ச்சின்பிங் இநூல் வெளியீடு

படம்
       

எங்கெல்லாம் கல்வியறிவு குறைவாக உள்ளதோ, அங்கெல்லாம் வறுமையான ஏழை மக்கள் உருவாகிறார்கள்! - ஷி ச்சின்பிங்

படம்
1949ஆம் ஆண்டு சீனாவில் மக்கள் குடியரசு மலர்ந்தது. அந்த காலம்தொட்டே நாம் கல்வியில் நிறைய முன்னேற்றங்களைப் பெற்று வருகிறோம். வரலாற்று ரீதியாக கல்வி மேம்பாடு பற்றி பெருமை கொள்வதற்கான நிறைய விஷயங்கள் நம்மிடையே உண்டு. 1949ஆம் ஆண்டுக்கு முன்னர் நிங்டே பகுதி பின்தங்கிய நிலையில் இருந்தது. இன்று நாம் அங்கு பள்ளிகளைக் கட்டியுள்ளோம். விவசாயிகளின் பிள்ளைகள் பல்கலைக்கழகத்தில் படித்து வருகிறார்கள். இத்தோடு திருப்தி அடைந்துவிடலாமா?, இல்லை. மாறிவரும் கல்வியில் வரும் புதிய மேம்பாடுகளை அறிந்து கொள்ளவேண்டும். கல்வி என்பது பொருளாதாரம், சமூக மேம்பாடு ஆகியவற்றோடு பிரிக்க முடியாத தொடர்புடையது. கல்வியைப் பயன்படுத்தி உள்ளூர் பொருளாதாரம், சமூகம் ஆகியவற்றை மேம்படுத்த முடியும். மேற்சொன்ன கருத்துகளின் அடிப்படையி்ல நிங்டேவில் உள்ள கல்வி நிலையைப் பார்ப்போம். அப்போதுதான் கல்வி பற்றிய கவனத்தைப் பெறமுடியும். நடைமுறை சூழலைப் பார்த்து வேகமாக முடிவெடுத்து தீர்மானிக்க வேண்டிய நிலையை புரிந்துகொள்ள லாம். நிங்டே பொருளாதார அடிப்படையில் பின்தங்கியுள்ளது. அதேநேரம் கல்வியிலும் மோசமாக உள்ளதா? அப்படி பார்ப்பது சரியா? ...

வணிக நடைமுறைகளை நகல் செய்தால் வெற்றி பெற முடியாது! - ஷி ச்சின்பிங்

படம்
ஒ ருமுறை நாம் பறக்கத் தொடங்கி கடலைத் தாண்ட முயன்றால் தட்பவெப்பநிலை, உலக நாடுகளின் சந்தைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். இதில் போராடி பிழைத்து சமாளித்து நிற்க வேண்டும். வணிகத்திற்கு ஏற்ற மாதிரி நிங்டே, ஷியாபு, ஃபுவான், ஃபுடிங் ஆகிய பகுதிகள் உள்ளன. இதில், முதல் இரண்டு பகுதிகள் மட்டுமே வணிகத்திற்காக திறக்கப்பட்டுள்ளது. அடுத்துள்ள இரண்டு பகுதிகளும் வணிகத்திற்கு ஏற்ப தங்களை தகுதிப்படுத்திக்கொள்ள முயன்று வருகின்றன. நிங்டே, ஷியாபு ஆகிய இருபகுதிகளும் நாம் செல்லவேண்டிய திசையைக் காட்டுகின்றன. அந்த வழியில் நாம் செல்லவேண்டுமெனில், அதற்கு நம் உழைப்பு தேவைப்படுகிறது. சூழலின் அவசரத்தைப புரிந்துகொண்டு நிலையை அங்கீகரிப்பது அவசியம். வணிகத்திற்காக பின்தங்கியுள்ள பகுதியை திறந்து வைப்பது என்பது எளிதல்ல. காலம், இடம், உற்பத்தி சார்ந்த சிக்கல்கள், வணிக மாதிரிகள் என நிறைய சவால்கள் உள்ளன. திறந்த முறையைப் பின்பற்றும் பிற நகரங்கள், சிறப்பு பொருளாதார மண்டலங்களை அப்படியே நகல் எடுப்பது உதவாது. நம்முடைய நடைமுறை சார்ந்த சூழல்களைக் கருத்தில் கொண்டு வணிக முறைகளை உருவாக்கிக்கொள்ள வேண்டும். வணிகத்திற்காக ஒ...

முக்கிய பிரச்னைகளில் எதற்கு முன்னுரிமை அளிப்பது என்பதைக் கற்பது அவசியம்! - ஷி ச்சின்பிங்

படம்
சீனாவின் பரந்து விரிந்த நிங்டே பகுதிகள், சந்தைக்கு ஏற்றபடி வலிமையானவையாக மாற வேண்டும். அதில் எந்த சந்தேகமுமில்லை. ஆனால், தற்போதைய நிலையில் அவற்றை பலவீனமாக உள்ள பறவை என்றுதான் குறிப்பிட வேண்டும். கம்யூனிஸ்ட் கட்சியின் அறிவுறுத்தல்படி, கடந்த ஜூன் மாதம் நிங்டேவுக்கு வந்தேன். அதற்குப் பிறகு அடுத்தடுத்த மாதங்களில் எனது சக பணியாளர்களும் வந்து இணைந்துகொண்டனர். தெற்குப்பகுதியில் உள்ள ஸெஜியாங் பகுதியில் உள்ள வென்சூ, கங்க்னன், யூகிங் ஆகிய நிங்டேவின் அண்டைப் பகுதிகளுக்கு சென்று குழுவாக பார்வையிட்டோம். எல்லையற்ற கடலில் மீனை வாழச்செய்வது, பரந்து விரிந்த ஆகாயத்தில் பறவையை பறக்க வைப்பது என்பது போன்ற செயல்தான் இதுவும். வறுமை ஒழிப்பிற்காக பல்வேறு திட்டங்களை யோசித்தோம். நிங்டேவின் பொருளாதாரத்தை உயர்த்தி அதை சிறப்பாக இயங்க வைப்பது எப்படி என அனைவரும் கலந்துரையாடினோம். நிங்டே விவசாயத்தை அடிப்படையாக கொண்ட பகுதி. அதுவே தனி உலகம் போல இருந்ததால் உலகிடமிருந்து செய்திகள் ஏதும் அங்கு பெரிதாக வரவில்லை. அங்கு, அதைப்பற்றி கவலையே இல்லாமல் தினசரி பணிகள் நடந்து வந்தன. ஆனால், அங்குள்ள சந்தை பின்தங்கியதாக ...

சமையல் எண்ணெய்யை எரிபொருள் கண்டெய்னரில் ஏற்றிச்சென்ற சீன அரசு நிறுவனம்!

படம்
            சமையல் எண்ணெய்யும், எரிபொருட்களும் ஒரே கன்டெய்னரில்..... சீனாவில் புலனாய்வு செய்தி என்பது அரிதிலும் அரிதானது. அங்குள்ள கம்யூனிஸ்ட் கட்சி, நாடு முழுவதிலுமுள்ள ஊடக செய்திகளைக் கண்காணித்து கட்டுப்படுத்தி வருகிறது. குறிப்பிட்ட செய்திகளை பரப்ப வேண்டுமெனில் பரப்புகிறது. இல்லையெனில் அவற்றை நீக்கிவிடுகிறது. அந்த வகையில், அண்மையில் சமையல் எண்ணெய்யை எரிபொருள் லாரியில் கொண்டு சென்றது தொடர்பான செய்தி ஒன்றை வெய்போ சமூக வலைத்தளத்தில் இருந்து நீக்கியது. பெய்ஜிங் நியூஸ் என்ற ஊடகம், சீன அரசு நிறுவனம் ஒன்று, தனது எரிபொருள் லாரியில் கொண்டு சென்ற சமையல் எண்ணெய்யை சுகாதாரமின்றி கையாண்டதை புலனாய்வு செய்து கட்டுரையாக நாளிதழில் பிரசுரித்தது. அதுதொடர்பான வீடியோவையும் இணையத்தில் பதிவிட்டது. அதில் வேடிக்கை, சுகாதார சிக்கலுக்கு உள்ளானது சீனாவின் அரசு நிறுவனம். அதன் பெயர் சினோகிரெய்ன். இந்த நிறுவனம் தொடர்பான விசாரணைகளை சீன அரசு தொடங்கியது. இப்படி தொடங்குவதற்கு வெய்போவில் பயனர்கள், அரசை குறைசொல்லி பதிவுகளை இடத்தொடங்கியதே முக்கிய காரணம். முறையாக விசாரணை செய்து தவறுகளை தீர்ப்ப...

சதுரங்கம் ஆடும் போர்வீரன் - இநூல் வெளியீடு

படம்
            சீன நாட்டின் அதிபரான ஷி ச்சின்பிங், வறுமை ஒழிப்பு, இணைய பாதுகாப்பு, ஊழல் ஒழிப்பு, சீனக்கனவு, வெளிநாட்டு வணிகம் தொடர்பாக பேசிய இருபது உரைகளைக் கொண்ட நூல் இது. இந்த உரைகளின் வழியாக மக்களுக்கு எளிமையாக கூறவரும் செய்தியை எப்படி எடுத்துச்சொல்கிறார், அதன் வழியாக எதிர்பார்க்கும் விஷயங்களையும் நிதானமாக எடுத்து வைப்பதைக் காணலாம். இளம் வயதில் கட்சி உறுப்பினராக இருக்கும்போதே மக்கள் பிரச்னைகளைப் பற்றி உள்ளூர் நாளிதழில் 232 கட்டுரைகளை எழுதியிருக்கிறார் ஷி. பிரச்னைகளை தீர்வுகளை நோக்கி மக்கள் விவாதிக்கும்படி நகர்த்தினார். இக்கட்டுரைகளை வாசித்த மக்கள், அதன் எளிமையான வடிவத்தையும், பிரச்னைகளை பேசும் முறையையும் பாராட்டினர். இப்படி மக்களுக்காக செய்த செயல்களின் வழியாக மக்களின் செயலாளர் என்ற பெயரைப் பெற்றார். இந்த நூலை வாசிக்கும் ஒருவர் மக்களை நேசிக்கும் தலைவர், என்னென்ன விஷயங்களை கவனத்தில் கொள்கிறார். நாட்டை முன்னேற்ற விரும்புகிறவர், எந்தெந்த அம்சங்களில் கவனம் செலுத்தவேண்டும் என்பதைப் புரிந்துகொள்ள முடியும். சர்வாதிகார நாடு, ஒற்றைக்கட்சி ஆட்சிமுறை என ச...

விரைவில்... சதுரங்கம் ஆடும் போர்வீரன் இநூல்.....

படம்
 அட்டைப்படம் இப்போது....      

சீனாவின் வெளியுறவுக்கொள்கை!

படம்
  சீனாவின் வெளியுறவுக்கொள்கை! அமைதியான நல்லுறவு நோக்கத்தை அடிப்படையாக கொண்ட ஐந்து அம்சங்களை அடிப்படையாக கொண்ட வெளியுறவுக்கொள்கை உருவாக்கப்பட்டு எழுபது ஆண்டுகள் ஆகிவிட்டன. 1954ஆம்ஆண்டு ஜூன் 28ஆம் தேதி வெள்ளிக்கிழமை அன்று, சீனாவும், இந்தியாவும் வெளியுறவு கொள்கையை ஏற்றுக்கொண்டு ஒப்பந்தமிட்டன. அண்மையில், இதை நினைவுகூறும் வகையில், பெய்ஜிங் நகரில் விழா நடத்தப்பட்டது. இதில், சீனாவின் பிரதமர் லீ குவாங், அதிபர் ஷி ச்சின்பிங் ஆகியோர் பங்கேற்று உரையாற்றினர். மனித குலத்தின் எதிர்காலத்திற்கான அமைதியான ஒத்திசைவு கொண்ட வாழ்வை உருவாக்குவது என கொள்கைகள் பற்றி கூறப்பட்டது. உண்மையில் சீனா, இந்த கொள்கைகள் வழியாக என்ன நினைக்கிறது, உலகம் பற்றிய அதன் பார்வை என்ன என்பதைப் பார்ப்போம். இந்தியாவில் சீனாவின் வெளியுறவு கொள்கையை பஞ்ச சீல கொள்கை என்று அழைப்பார்கள். இக்கொள்கையை முன்னாள் பிரதமர் ஜவகர்லால் நேரு, நடைமுறைப்படுத்தி இயங்கினார். அண்டை நாடுகள் மற்றும் மேற்கு நாடுகள் தொடர்பான உறவுகளை தீர்மானித்த கொள்கை இது. பிரிட்டிஷாரின் காலனி ஆதிக்கத்தில் இருந்து இ்ந்தியா போராடி மீண்ட  ஆண்டு, 1947. இதற்கு காந்தி தல...