அரசின் கல்வித்திட்டங்களுக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது! - பேராசிரியர் கிருஷ்ணகுமார்
பேராசிரியர் கிருஷ்ணகுமார் கல்வியாளர் டிஜிட்டல் கல்விமுறை என்பது கல்வி கற்பதை பெரும் பிரிவினைக்குள்ளாக்கி இருக்கிறது. இதன் பின்விளைவுகள் என்னவாக இருக்கும்? பள்ளிகள் பெருந்தொற்று காரணமாக தொடர்ச்சியாக மூடப்பட்டிருப்பது மாணவர்களின் கல்வியை பாதிக்கும். நிலப்பரப்பு ரீதியாக எங்கு நோய்த்தொற்று அதிகம் பாதிக்கிறது என்பதை கண்டுபிடிக்கவேண்டும். கல்வி நிறுவனங்களை திறப்பது, மூடுவது என்பதை அரசு கூறக்கூடாது. அதனை ஊரக அளவில் உள்ள நிர்வாகத்தினர் நோயின் பெருக்கத்தைப் பொறுத்து தீர்மானித்துக்கொள்வதாக இருந்தால் நன்றாக இருக்கும். மதிய உணவு வழங்குவதிலும் இதேபோன்ற சூழல்தான் நிலவுகிறது. எதற்கு பள்ளிகளில் வழங்கும் உணவை தடுத்தார்கள் என்றே புரியவில்லை. சாதாரணமாக எடுக்கும் வகுப்புகளுக்கு மாற்றாக வரும் ஆன்லைன் கல்வி முறை மாணவர்களுக்கு பெரியளவில் மாற்றாக இருக்காது என்பது ஆசிரியர்களுக்கும் தெரியும். மாணவர்களுக்கு மேசைக்கணினி, டேப்லெட், ஸ்மார்ட்போன் என எதையும் கொடுக்காமல் எப்படி அவர்களுக்கு டிஜிட்டல் வழி கல்வியை கற்றுத்தருவது? ஏழை மாணவர்களுக்கு ஆன்லைன் கல்வி என்பது எட்டாத ஒன்றுதான். ஆன்லைனில் கல்வி கற்ற மாணவர்கள் இ