இடுகைகள்

சதி லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

எதிர்கால ஆபத்துகளை உணர்ந்து தன்னைக் காத்துக்கொள்ள முயலும் தீயசக்தி இனக்குழுவின் இளவரசன்!

 அன்ரிவல்டு வில்லன் மங்கா காமிக்ஸ் பேடோ.ஐஓ கொரியாவில் வாழ்பவர் தான் எழுதிய காமிக்ஸில் நுழைந்து துணை பாத்திரமாக மாறுகிறார். அந்த நிலையில் தனக்கு வரும் ஆபத்துகளை முன்னே உணர்கிறார். அதிலிருந்து தன்னைக் காத்துக்கொள்ள முனைகிறார். அது சாத்தியமானதா என்பதே கதையின் மையம்.  நாயகன், ஃபர்ஸ்ட் மூன் கல்ட் என்ற இனக்குழுவின் நான்காவது இளவரசன். அதாவது தீயசக்தி இனக்குழு. குடித்துவிட்டு பெண்களை புணர்ந்துகொண்டு வாழ்வதே வாழ்க்கை லட்சியமாக வாழ்கிறான். திடீரென அவனது உடலுக்குள் புதிய ஆன்மா புகுந்தவுடன் அனைத்தும் மாறுகிறது. எதிர்காலத்தில் தற்காப்பு அணி கூட்டமைப்பின் வீரன் தாய் என்பவனால் வாளால் வெட்டி கொல்லப்படுவதை அறிகிறான். அந்த சம்பவம் நடக்க பத்து ஆண்டுகளே உள்ளது. அதற்குள் தன்னைக் காத்துக்கொள்ள வேண்டும். நாயகன் உடல் பலவீனமானது. எனவே, அதை வலு செய்ய முயல்கிறான். எதிர்காலம் ஒருவனுக்கு தெரிவது புனைவு கதைக்கு சிறந்த திருப்புமுனை. பிறரை விட புத்திசாலியாக நிறைய வாய்ப்புகளை பயன்படுத்திக்கொள்ள முடியும். ஆதரவு அணிகளை அமைக்கலாம். எதிரிகளை முன்னமே ஒடுக்கலாம். நட்பை உருவாக்கிக் கொள்ளலாம்.  அந்த வகையில் நாயக...

பிஎஸ்என்எல் 5ஜி - கொடி பறக்குது!

படம்
            வினோதரச மஞ்சரி பிஎஸ்என்எல் 5ஜி - கொடி பறக்குது! சில வாரங்களாகவே தனியார் செல்போன் நிறுவனங்களின் தடாலடி விலையேற்றம் பற்றி செய்தி ஊடகங்களில் வெளிவந்துகொண்டிருந்தது. தனியார் நிறுவனங்களின் விலையேற்றத்தில் சிறுபான்மை ஒன்றிய அரசு தலையிட முடியாது என கைவிரித்தது. இது  அகண்ட பாரதத்தில் புதிய காட்சியல்ல. நாட்டின் ஆட்சித் தலைவருக்கு நெருக்கமான நண்பர்தான் விலையேற்றிய செல்போன் நிறுவனத்தை நடத்தி வருகிறார். வாங்கிய நிதிக்கான விசுவாசம் இருப்பதில் தவறில்லை. சில ஆண்டுகளுக்கு முன்னர், அம்பானியின் செல்போன் நிறுவனத்திற்கு இலவசமாக டேட்டா கொடுக்கிறார்கள் என்று மாறிய பெருங்கூட்டம், இப்போது விலையேற்றத்தால் புலம்பி புகார்களை வாசித்தபடி பொதுத்துறை நிறுவனமான பிஎஸ்என்எல்லுக்கு மாறிக்கொண்டிருக்கிறார்கள். பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ஊழியர் ஒருவர், மகிழ்ச்சியுடன் கூறிய தகவல்படி வாடிக்கையாளர் எண்ணிக்கை இருபத்தெட்டு லட்சம் என கொள்வோம். இத்தனை பேர்களுக்கு பிஎஸ்என்எல் என்ன வசதிகளை செய்துதரும்? இப்போது உள்ள பெரும்பகுதி செல்போன் டவர்களை, அம்பானி நிறுவனத்திற்கு கட்டாய வாடகைக்கு தரவ...

ஆராய்ச்சியாளர்களின் பிணங்களைத் திருடி அழிவு சக்தியாக்கும் சதிகாரக்கூட்டம்!

படம்
            லாரன்ஸ் மற்றும் டேவிட் மிரட்டும் திகிலூட்டும் நிமிடங்கள் லயன் காமிக்ஸ் நன்றி -ஆர்எம் அமெரிக்காவின் புளோரிடாவில் நடைபெறும் கதை. அங்குள்ள பிளாஸ்டிக் பொருட்களை ஆராய்ச்சி செய்பவருடன் லாரன்ஸ் அண்ட் டேவிட் ஆகிய இருவரும் விடுமுறைக்காக சென்று தங்கியிருக்கிறார்கள். அப்போது ஒருநாள் காட்டு வாத்து வேட்டைக்காக செல்கிறார்கள். அங்கு, ஆராய்ச்சியாளர் மர்மமான முறையில் மாரடைப்பு வந்து இறந்துபோகிறார். இறந்த அடுத்தநாளே அழைக்காமல் இருவர் வந்து சவப்பெட்டி செய்பவர்கள் என்று கூறி உடலை அடக்கம் பண்ணலாமா என்று கேட்கிறார்கள். இது லாரன்ஸ், டேவிட்டிற்கு சந்தேகத்தை தருகிறது. பிறகு, உடலை ஆராய்ச்சியாளரின் கடைசி ஆசைப்படி அவரின் சொந்த ஊருக்கு கொண்டு செல்கிறார்கள். செல்லும் வழியில் ஜீப்பின் பிரேக் பிடிக்காமல் வண்டி விபத்துக்குள்ளாகிறது. அதில், லாரன்ஸ் டேவிட் அடிபட்டு மயக்கமாகிறார்கள். சவப்பெட்டிக்கு மட்டும் ஏதும் ஆகவில்லை. இவ்வளவு பெரிய விபத்தில் எப்படி சவப்பெட்டி அப்படியே இருக்கும் என்று திறந்து பார்த்தால் அதில் செங்கற்கள் இருக்கிறது. ஆராய்ச்சியாளரின் உடலைக் காணவில்லை. இரு புலனாய்...

தொழிலதிபரான மனைவி சொத்தை அபகரிக்க திட்டம் போடும் கணவர்!

படம்
  மணி மணி ஜேடி சக்ரவர்த்தி, பிரம்மானந்தம், கோட்டா சீனிவாசராவ் மணி படத்தின் இரண்டாவது பாகம். இந்த படத்தைப் புரிந்துகொள்ள முதல் பாகத்தை பார்ப்பது நல்லது. இல்லையெனில் முதல் நான்கு நிமிடங்களுக்கு போடும் காட்சிகளைப்பார்த்தால் கூட போதும்தான்.  ஆன்ட்டி ஜெயசுதா நிறுவனம் ஒன்றை நடத்துகிறார். அவரிடம் போஸ், சக்ரவர்த்தி என இருவர் வேலை செய்கிறார்கள். அங்கு புதிதாக ஒரு பெண் வந்து வேலை கேட்கிறார். சக்கரவர்த்தி அவரின் அழகில் மயங்கி வேலைக்கு பரிந்துரை செய்கிறார். அந்த பெண் வந்தது முதலே சக்ரவர்த்தி மீது பிரியமாக இருக்கிறார். ஜெயசுதாவின் சொத்தை அபகரிக்க அவரது கணவர் சுப்பாராவ் முயல்கிறார். அதற்கு ரவுடி ஒருவரை அணுகுகிறார். அவர்தான் அலாவுதீன். சொத்தில் ஐம்பது சதவீதம் எனக்கு கொடுத்தால், ஜெயசுதாவை கொல்வதாக வாக்கு கொடுக்கிறார். இதற்கிடையில், சக்ரவர்த்தியால் பாதிக்கப்பட்ட பிரம்மானந்தம் மனநல மருத்துவமனையில் இருந்து தப்பி வெளியே வருகிறார். இவர், சக்ரவர்த்தியைக் கொல்ல முயல்கிறார். இப்படி பல்வேறுகதைகள் நடக்கின்றன.  படத்தில் நாயகர்கள் என்று சொன்னால் பிரம்மானந்தம், கோட்டா சீனிவாசராவ் ஆகியோரைத்தான் சொல்ல ...

சதியின் இறுதி முடிவு - கடிதங்கள் - கதிரவன்

படம்
            தின்பண்ட நிர்பந்தம் ! அன்பிற்கினிய நண்பர் கதிரவனுக்கு , வணக்கம் . இன்றும் நான் அலுவலகம் சென்றேன் . சற்று ரிலாக்சாக வேலை செய்ய சனிக்கிழமை உதவுகிறது . ஆனால் என்ன நான் வாங்கும் சில தின்பண்டங்களை டெய்லி கதிர் செக்யூரிட்டிகளிடம் பகிர்ந்து சாப்பிடும் நிர்பந்தம் உள்ளது . அவ்வளவுதான் . வரும் வாரத்தில் தொடங்கும் நாளிதழ் வேலைகள் மெல்ல சுணங்குவது போல தோன்றுகிறது . எழுதும் ஆட்களை கண்டுபிடிப்பது கடினமாக உள்ளது . நானே எழுதினால் அதுவெறும் செய்திக்கட்டுரை என்கிறார்கள் . பிறகு என்னதான் செய்வது என்றால் நம்மைப் பார்த்து கையை விரிக்கிறார்கள் . பிழைப்பு இப்படித்தான் ஓடுகிறது . வேர்ட் ஆப் ஹானர் என்ற வெப் தொடரைப் பார்த்துக்கொண்டிருக்கிறேன் . மாண்டரின் மொழி தொடர் . எம்எக்ஸ் பிளேயரின் தமிழ்மொழிபெயர்ப்பு . தொன்மையான தற்காப்புக்கலை வல்லுநர்கள் ஆயுதக்கிடங்கு ஒன்றை உருவாக்கி வைத்திருக்கிறார்கள் . அதை பல்வேறு தனி மனிதர்கள் , தற்காப்புக்கலை மடங்கள் அடைய ஆசைப்படுகின்றன . அதை அடைந்தால் அவர்கள்தான் சீன நாட்டையே ஆளும் சக்தி பெறுவார்கள் . ஆயுதக்கிடங்கை அடையும் ...

துரத்தும் துரோக சதிவலையில் மாட்டிக்கொள்ளும் இளவரசன் பால்! - டுயூன் 2021

படம்
  டுயூன் ஆங்கிலம் ஆங்கிலத் திரைப்படம். ஹாலிவுட்டில் ஏற்கெனவே எடுக்கப்பட்ட படம். இதனை நவீன தொழில்நுட்பத்தில் வினோதமான பல்வேறு பொருட்களை வைத்து பாத்திரங்களைக் கொண்டு உருவாக்கியிருக்கிறார்கள்.  என்ன கதை? இதுவேறுவகையான உலகம். இப்போது உலகம் என்பது விண்வெளியில் தான் உள்ளது. அங்குள்ள பல்வேறு உலகங்களை கட்டுப்படுத்துவது பேரரசர். அவருக்கு கீழே உள்ள கப்பம் கட்டும் சிற்றரசர்கள் பலர் உண்டு. அதில் புகழ்பெற்றது, அட்ரெய்டஸ். இதற்கு எதிரி பாரோன்.  பாரோன், பல்வேறு ஆண்டுகளாக அதாவது எண்பது ஆண்டுகளாக அராக்கிஸ் எனும் பாலைவனத்தை கைக்குள் வைத்து ஆள்கிறார்கள். அங்குள்ள ஸ்பைஸ் எனும் கனிம வளமே முக்கியமான காரணம். ஆனால் திடீரென பேரரசர், அந்த பாலைவனம் இனி அட்ரெய்டஸிற்கு சொந்தம். பாரோன் அங்கிருந்து வெளியேறவேண்டும் என கூறிவிடுகிறார். இதனால் அங்கு அட்ரெய்டஸ் அரச குடும்பமும், ராணுவமும் செல்கிறது. ஆனால் அது அட்ரெய்டஸ் குடும்பத்தை அழிக்க பேரரசர் விரிக்கும் வலை. சதித்திட்டம் என்பதை அட்ரெய்டஸ் அரசர் டியூக் அறிவதில்லை. அறிந்தாலும் சொல்லாமல் இருக்கிறார் என கொள்ளலாம்.  அவருக்கு ஒரே நம்பிக்கை அவரது மகன் பால்...

சூரியவம்சிகளை அழிக்க பாசுபாஸ்திரத்தை ஏவும் சிவன்! - வாயுபுத்திரர் வாக்கு- அமிஷ் திரிபாதி

படம்
  சிவா முத்தொகுதி வாயு புத்திரர் வாக்கு அமிஷ் திரிபாதி வெஸ்ட்லேண்ட் முதல் இரு பாகங்களில்... இதுவரை..... குணாக்களின் தலைவரான சிவன், நீலகண்டர் என அடையாளம் காணப்படுகிறார். அவரை அடையாளம் கண்ட சூரிய வம்சிகள் தங்களுக்கு ஏற்ப அவரை மூளைச்சலவை செய்கின்றனர். இதனால் சோமரஸம் தயாரிக்கும் ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்து சந்திரவம்சிகளால் உருவானது என நம்புகிறார். இதனால் போர் நேரிடுகிறது. இதில் சந்திரவம்சிகள் தோற்றுப்போகின்றனர் அயோத்யாவின் ஸ்வத்பீட மன்னர் திலீபர், தோற்றுப்போனாலும் அதுபற்றி பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை. ஆனால் சூரியவம்சிகள் பக்கம் நீலகண்டர் இருப்பது அவரை நிலைகுலைய வைக்கிறது. உண்மையில் நீலகண்டர்  சூரியவம்சி மற்றும் சந்திரவம்சிகளுக்கு பொதுவான ஆளுமை, கடவுள். இதை நீலகண்டர் உணர வாசுதேவர்கள் உழைக்கிறார்கள். டெலிபதி மூலம் அவரிடம் தொடர்புகொண்டு மனதில் எழும் கேள்விகளுக்கு பதில் சொல்லுகிறார்கள்.  சிவனுக்கு இயல்பிலேயே டெலிபதி திறன் உள்ளது. ஆனால் அதனை செயல்படுத்த சற்று உயர்ந்த இடத்திலுள்ள கோவில்களுக்கு செல்லவேண்டியுள்ளது. முதல்பாகத்தில் சிவன் நீலகண்டராக மாறுகிறார். தேவகிரி செல்கிறார். சூரிய...

உடன்கட்டை ஏறும் கொடூரத்தை ஒழித்த ராஜாராம் மோகன் ராய்!

படம்
  சதி - உடன்கட்டை ஏறும் பழக்கம் ராஜாராம் மோகன்ராய் இந்திய வரலாற்றில் ராஜாராம் அளவுக்கு எதிர்ப்பையும் வெறுப்பையும் சந்தித்தவர்கள் யாரேனும் இருப்பார்களா என்று தெரியவில்லை. அண்மையில் தெலுங்கில் வெளியாகி பல்வேறு மொழிகளில் டப் செய்யப்பட்ட ஷியாம் சிங்கா ராய் படம் கூட ராஜாராம் மோகன் ராயின் சீர்திருத்த தன்மையை தழுவி எடுக்கப்பட்டிருந்த படம்தான். பதினெட்டு, பத்தொன்பதாம் நூற்றாண்டில் நடைமுறையில் இருந்த சதி எனும் உடன்கட்டை ஏறும் பழக்கத்தை ஒழிப்பதில் பிரிட்டிஷாரோடு சேர்ந்து முயன்றார் ராஜா.  கணவர் இறந்தபிறகு மனைவியை நெருப்பிட்டு கணவரின் தகனமேடையில் உயிரோடு எரிப்பதுதான் சதி எனும் பழக்கம். இந்த கொடூரத்தால் நிறைய பெண்கள் வாழ நினைத்தும் வேறுவழியின்றி படுகொலை செய்யப்பட்டனர். அப்போது குழந்தை திருமணமும், சாதி ஒடுக்குமுறையும் தீண்டாமையும் சமூகத்தில் புழக்கத்தில் இருந்தது. இதனை ராஜாராம் மாற்ற நினைத்து போராடினார்.  வங்காள மாகாணத்தில் 1772ஆம் ஆண்டு மே 22ஆம் தேதி பிறந்தவர், ராம் மோகன் ராய். இவர், ஹூக்ளியில் உள்ள ரத்னாகர் நகரில் பிறந்தார். இந்து குடும்பத்தில் பிறந்த ராய், சமஸ்கிருதம், பெர்சியன், ஆங...

காங்கிரஸ் கட்சியில் ஒற்றுமை இருக்கிறது என நானே ஒப்புக்கொள்ள மாட்டேன்! - ஜெய்ராம் ரமேஷ், காங்கிரஸ் தலைவர்

படம்
ஜெய்ராம் ரமேஷ்  ஜெய்ராம் ரமேஷ் மூத்த காங்கிரஸ் தலைவர் ஜெய்ராம் ரமேஷ் தனிப்பட்ட தகவல் பாதுகாப்பு கமிட்டி பற்றிய மசோதாவில் நாடாளுமன்ற கமிட்டியின் செயல்பாடு என்ன? கடந்த இரு ஆண்டுகளாக கமிட்டி செயல்பாட்டில் உள்ளது? நவம்பர் 22 அன்று நாங்கள் இதுபற்றிய அறிக்கையைப் பெற்றோம். கமிட்டி தலைவர், பிபி சௌத்ரி பற்றி எனக்கு நல்ல அபிப்பிராயமே உள்ளது. அவர் சிறந்த ஜனநாயகவாதி. ஆட்சியில் உள்ள மூத்த தலைவர்கள், இதனை எதிர்த்து வந்தார்கள் என்பது எனக்குத் தெரியும்.  காங்கிரஸ் ஆட்சியில் உள்ள மாநிலங்களில் கூட அதிகாரத்திற்கான போட்டி நடைபெற்று வருகிறது. இது எப்போது முடிவுக்கு வரும்? நாங்கள் ஜனநாயகப்பூர்வமான வெளிப்படையான கட்சி. எங்கள் கட்சியில் ஒருவர் வெளிப்படையாக கருத்துகளை கூற முடியும். இந்தியாவை அதன் தனித்துவமான தன்மையோடு வெளியே காட்டுகிறோம். காங்கிரஸ் கட்சியில் ஒற்றுமை, ஒழுக்கம், சுய கட்டுப்பாடு உள்ளது என நீங்களே கூறினாலும் நான் அதனை ஏற்க மாட்டேன். இதனை காங்கிரஸ் தலைவர் சோனியாவே பலமுறை கூறியுள்ளார். நான் இப்போது இதனை புதிதாக கூறவில்லை. பாஜகவை எதிர்க்கும் ஒரே தேசிய அளவிலான கட்சி காங்கிரஸ் மட்டுமே.  தி...

மருத்துவத்தை வணிகமயமாக்கும் சதியைத் தடுக்கும் மக்கள் மருத்துவரின் கடைசி முயற்சி! - டாக்டர் ரொமான்டிக் 2

படம்
            டாக்டர் ரொமான்டிக் சீசன் 2 பத்து எபிசோடுகள்   இந்த முறை தலைமை மருத்துவமனையின் பவுண்டேஷன் தலைவராக டாக்டர் டூ பதவியேற்கிறார் . மூன்று ஆண்டுகள் அவமானப்பட்டபிறகு அதற்கு பழிவாங்க காத்திருக்கிறார் . அதற்கான வாய்ப்பு அவருக்கு இருக்கிறது . டோல்டம் மருத்துவமனையை மூடிவிட்டு , அங்கு ஆடம்பர மருத்துவ சேவைகளை வழங்கும் மையத்தை கட்ட நினைக்கிறார் . ஆனால் அதற்கு தடையாக அவரே நியமித்த பேராசிரியர் பார்க் இருக்கிறார் . பார்க்கைப் பொறுத்தவரை அவர் நல்ல மனிதர் அல்ல . ஆனால் சிறந்த மருத்துவர் . எந்த நோயாளியாக இருந்தாலும் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பை தீர்மானித்துதான் ஆபரேஷன் செய்வார் . ஆனால் அவரது இந்த கொள்கை டோல்டம் வந்ததும் செமையாக அடிவாங்குகிறது . அங்கு சீப் டாக்டராக உள்ள டீச்சர் கிம் இவரை சிம்பிளாக தைரியமில்லாத துணிச்சல் இல்லாத கோழை என்று திட்டுவதோடு , பார்க்கும்போதெல்லாம் ஜஸ்ட் லைக் தட் கேலிசெய்து விடுகிறார் . இதனால் பார்க்கின் ஈகோ கடுமையாக காயம்படுகிறது . முக்கியமாக அவர் டீச்சர் கிம்மை விட தகுதி குறைவானவர் கிடையாது . ஆனால் கடந்த காலத்...

உண்மைக் காதலை பெண்ணின் உடலில் தேடும் விந்து முந்துதல் பிரச்னை கொண்ட இளைஞன்! - ஹே பிரபு - 2 தமிழ்

படம்
            ஹே பிரபு இந்தியில் எடுக்கப்பட்ட வெப் சீரிஸ்தான் . முதல் பாகத்தைப் பற்றி முன்னமே எழுதியிருக்கிறோம் . அதிக நாட்கள் இடைவெளிக்குப் பிறகு அடுத்த சீசன் வந்திருக்கிறது . அதிக நாட்கள் இடைவெளி இருந்தாலும் அதனை சரிக்கட்டும்படி நிறைய 18 பிளஸ் ஐட்டங்களை சேர்த்திருக்கிறார்கள் . தொடரின் அட்டகாச அம்சம் . மிக இயல்பான தமிழ் கெட்டவார்த்தை வசனங்கள்தான் . இதனை இங்கு எக்சாம்பிள் காட்டினால் சரியாக இருக்காது . எம்எக்ஸ் பிளேயரில் பார்த்துவிடுங்கள் . இந்த சீரிசில் தருண் பிரபுக்கு முக்கியமான பிரச்னைகள் , காதல் , செக்ஸ் , குடும்ப பொறுப்பு , அவனது ட்விட்டர் எதிரி சார்மினாருடன் மோதல் என கலந்துகட்டிய அனுபவம் உள்ளது . கூடுதலாக காமெடிக்கென அவனது நண்பன் சிக்கா அறிமுகமாகிறான் . சிக்கா , ஷாயாலி எனும் ஆடு , அவனது பீம்பாய் வேலையாள் என கலகலப்பு சிலசமயம் கதையோடும் , பெரும்பாலான சமயம் தனியாகவும் பயணிக்கிறது . யூட்யூபில் சூர மொக்ககை வீடியோக்களை தயாரிப்பதுதான் சிக்காவின் முழுநேர , பகுதிநேர , ஏன் ஹாபி கூட . இதனால் அவருக்கு ஏற்படும் காமெடி அனுபவங்கள்தான் காமெடி ...