இதயத்தைக் காப்பாற்றும் டெக்னிக் என்ன?
SF இதயத்தை காப்பாற்றுவோம்! 1976 ஆம் ஆண்டு மருத்துவத்துறைக்கு மறக்கமுடியாத ஆண்டு. அந்த ஆண்டுதான் இங்கிலாந்து ஆராய்ச்சியாளர் மைக்கேல் டேவிஸ், இதயத்தில் ஏற்படும் ரத்த அடைப்பு பற்றி கண்டுபிடித்தார். இதன் விளைவாக பல்லாயிரம் இதய நோயாளிகள் காப்பாற்றப்பட்டனர். கொழுப்பு படிந்து ரத்தக்குழாய் அடைத்துக்கொள்வது, அதனை சரி செய்வது, ஆக்சிஜன் போதாமை, ரத்தக்குழாய் அடைப்புக்கான புதிய கண்டுபிடிப்புகள் என மருத்துவத்துறை யோசிக்கத் தொடங்கியது அப்போதுதான். ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு இதயக்குழாய்களில் கெட்ட கொழுப்பு படிந்து இறப்பு நேரிடும் அளவு, நான்கு மடங்கு அதிகமாக இருந்தது. இன்று என்ன மாறியிருக்கிறது. பெரியளவு மாற்றமில்லை. இன்றும் கூட இங்கிலாந்தில் ஏழுபேர்களுக்கு ஒருவர் என்ற அளவில் இதயநோய் மனிதர்களை தின்று வருகிறது. அடுத்தகட்ட ஆராய்ச்சிகள் ”இதயநோய் ஆராய்ச்சியில் நாம் போகவேண்டிய தொலைவு அதிகம். இதில் புதிய கண்டுபிடிப்புகள் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும்” என்கிறார் ஆராய்ச்சியாளரும் பேராசிரியருமான மெடின் அவ்கிரன். இதயத்தில் ஸ்கேன் செய்வது, ஸ்டென்ட் வைப்பது, அறுவை சிகிச்சை என நோய்க்கு ஏற்றபட