இடுகைகள்

வழக்கு லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

மீண்டும் அணுஉலைகள்!

படம்
  மீண்டும் அணுஉலைகள்! இந்தியா 100 ஜிகாவாட் அளவிலான அணுஉலைகளை 2047ஆம் ஆண்டுக்குள் அமைக்க திட்டமிட்டுள்ளது. உலக நாடுகள் அணுஉலைகள் ஆபத்தானவை என உணர்ந்து பின்வாங்கும் நிலையில், இந்தியா அணுஉலைகளை அதிகமாக அமைப்போம் என களமிறங்கி நாட்டை ஒளிரச்செய்ய முடிவு செய்துள்ளது. 2011ஆம் ஆண்டு தமிழ்நாட்டின் இடிந்தகரை, திருநெல்வேலியிலுள்ள கூடங்குளம் ஆகிய இடங்களில் அணுஉலைகளுக்கு எதிரான அமைதிப்போராட்டம் நடைபெற்றது. அதில் பங்கேற்றவர்கள் மீது தேசதுரோக வழக்கு பதியப்பட்டது. அதே ஆண்டில் ஜப்பானின் புகுசிமா அணுஉலை விபத்தில் கதிரியக்க பாதிப்பு தீவிரமாக உணரப்பட்டது. கசிவு ஏற்பட்டு கடல் நீரில் கலந்தது. இதை அடிப்படையாக வைத்து தமிழ்நாட்டு போராட்டக்காரர்கள், அணு உலை ஆபத்து என வாதிட்டனர். அறிவு, புத்திசாலித்தனம் என இரண்டுமே வடக்கு நாட்டு ஆட்களுக்கு கிடையாது என்பதால் எப்போதும் போல போராட்டக்காரர்கள் மீது வழக்கு தொடுத்தனர். 2004ஆம் ஆண்டு நடந்த சுனாமி போல ஒரு சம்பவம் நடந்தால், அதில் கூடங்குளம் அணுஉலை மாட்டினால் என மக்கள் பீதியுற்றனர். மக்கள் மீது அரசு ஏராளமான வழக்குகளை பதிவு செய்தது. இப்போதும் கூட முக்கியமான போராட்டக்காரர...

இடைத்தரகர்கள் இல்லாமல் நேரடியாக தலையிட்டு பிரச்னைக்கு தீர்வு காண்பதே ஒரே வழி!

படம்
      மக்கள் அதிகாரத்துவர்கள், ஒரு விஷயத்தில் நீதி கிடைக்கவேண்டுமென்றால் எந்த தரகர்களையும், செல்வாக்கு உள்ளவர்களையும் நாடுவதில்லை. அதில் அவர்கள் பெரிதாக நம்பிக்கை கொள்வதில்லை. நேரடியாக களத்தில் இறங்கி நடைபெறும் செயலை உடனே தடுக்க முயல்வார்கள். அதனால், இதை பார்ப்பவர்களுக்கு வன்முறை இயல்பு  கொண்டவர்கள் போல தோன்றலாம். ஆனால், உண்மையில் அவர்கள் அப்படியானவர்கள் இல்லை. செயலை உடனே தடுக்கவேண்டும் என நினைப்பார்கள். உடனே களத்தில் குதித்துவிடுவார்கள். இந்தியாவில் உள்ள மரங்களை வெட்டாமல் தடுத்த சிப்கோ இயக்கத்தை அறிவீர்கள். மரங்களை கட்டிப்பிடித்து தடுத்து இயற்கையைக் காத்தவர்கள். அதுபோலத்தான். இவர்களும் செயல்படுகிறார்கள். புல்டோசர்களைக் கொண்டு காடுகளை அழிக்கிறார்களா, அவர்களது வண்டியின் பெட்ரோல், டீசல் டேங்கில் சர்க்கரையைப் போட்டுவிடுவார்கள். அப்புறம் என்ன முழு எஞ்சினும் பழுதாகிவிடும். நாம் கவனிக்கவேண்டியது எதிர்தரப்பு எந்த மெக்கானிக்கிடம் செல்வார்கள் என்பதல்ல. நடைபெற்ற செயல் நின்றுபோனதல்லவா, அதுதான் மக்கள் அதிகாரத்துவர்களின் வெற்றி. இயக்கமாகவும் அவர்கள் மேலிருந்து கீழ் என ஆணையிட்டு ச...

மக்களின் புகார்களை பரிசீலித்து தீர்த்து வைக்க முயலும் அமலாக்கத்துறை! என்போர்ஸ்மென்ட் டிபார்ட்மென்ட் - சீன தொடர்

படம்
    என்ஃபோர்ஸ்மென்ட் டிபார்ட்மென்ட் சீன தொடர் 40 எபிசோடுகள் யூகு ஆப் சீனதொடர்களைப் பொறுத்தவரை இழு இழுவென இழுக்குதடி என பார்வையாளர்கள் சொல்லாவிட்டாலும் தயாரிப்பாளர்களே நாற்பது எபிசோடுகள் அவர்களாகவே போய்விடுகிறார்கள். இதில் உள்ளூர் ஓடிடியான யூகு சில எபிசோடுகளை இலவசமாகவும் மீதி அனைத்தையும் விஐபி என சந்தா கட்டி பார்க்கும்படி மாற்றி வைத்திருக்கிறது. அந்த வகையில் இத்தொடரின் பதினெட்டு எபிசோடுகள் மட்டுமே யூட்யூபில் இலவசமாக கிடைக்கிறது. பதினெட்டு எபிசோடுகளில் கதை எதை நோக்கி நகர்கிறது என புரிந்துகொள்ளலாம். கு லின், நீதிபதியாக இருக்கிறார். சட்டம் பற்றிய பரவலான அறிவுக்காக ஆறுமாதங்கள் வேறு துறையில் வேலை செய்வதற்காக பணிக்கிறார்கள். அப்படி அவர் குற்றப்பிரிவுக்கு மாற்றப்படுகிறார். அங்கு அதன் தலைவர் நீதிபதி சு என்பவரோடு முட்டல், மோதல் ஏற்பட்டு பிறகு உறவு நட்பாகி காதலாக மாறவும் தொடங்குகிறது. காதலுக்கு போகவேண்டாம். மக்கள் சேவையை எப்படி செய்கிறார்கள் என்று பார்ப்போம். எழுதி வைத்த சட்டமே பிரதானம். அதை உரியபடி நிறைவேற்றினால் போதும் என இறுக்கமாக நடந்துகொள்கிறார் சு.கு லின், சட்டம் இருக்கிறபடி இருக்க...

பழகும் பெண்களை சூனியக்காரியாக நினைக்கும் கொலைகாரனை பிடிக்க உதவும் பூச்சி வல்லுநர்!

படம்
  பழகும் பெண்களை சூனியக்காரியாக நினைக்கும் கொலைகாரனை பிடிக்க உதவும் பூச்சி வல்லுநர் இன்செக்ட் டிடெக்டிவ் 2 சீசன் சீன தொடர் யூட்யூப் பூச்சி வல்லுநர், தாய்லாந்துக்கு படிப்பதற்காக செல்கிறார். அங்குதான் அவரது காதலியும் கூட வேலை செய்வதற்காக வந்திருக்கிறார். இருவரும் சேர்ந்து வழக்குகளை புலனாய்வு செய்து தாய்லாந்து இன்ஸ்பெக்டரை சூப்பரிடெண்ட் லெவலுக்கு உயர்த்தி புரமோஷன் வாங்க வைப்பதே கதை. தொடரில் முக்கியமான கதை, தொடர்கொலைகளை செய்யும் சிசோபெரெனியா வந்த பிணக்கூராய்வு மருத்துவர் பற்றியது. அவர்தான் காவல்துறைக்கான பிணக்கூராய்வு செய்பவர். அவரை தொடக்கத்திலேயே பார்வையாளர்களுக்கு கொலையாளி என காட்டிவிடுகிறார்கள். முதன்மை பாத்திரங்கள் அவரை கொலையாளி என எப்படி அடையாளம் கண்டுபிடிக்கிறார்கள் என்பதே முக்கியமான திருப்புமுனை.  இந்த பாகத்திலும் நாயகன், நாயகிக்கு காதல் காட்சிகள் ஏதும் கிடையாது. முத்தம் கொடுக்கும்படி சூழல் இருந்தால், இன்ஸ்பெக்டர் நண்பன் அங்கு வந்துவிடுவான். நாயகன் ஜின்டாங் அல்ல ஜின்டியாங் என மாற்றி வாசியுங்கள். தவறாக தட்டச்சு செய்துவிட்டேன். ஜின்டியாங், ஜின்லிங் எப்போதும் போல காதல் வளர்க்க...

ஊபா சட்டத்தில் குற்றத்தை நிரூபிக்க முடியாமல் தடுமாறும் ஒன்றிய, மாநில அரசுகள்!

படம்
      ஊபா சட்டத்தில் குற்றத்தை நிரூபிக்க முடியாமல் தடுமாறும் ஒன்றிய, மாநில அரசுகள்! ஒன்றிய, மாநில அரசுகள் தங்கள் மீது விமர்சனங்களை முன்வைக்கிற, தலித், ஆதிவாசி மக்களின் உரிமைகளுக்கு பாடுபடுகிற போராளிகள் மீது பல்வேறு வழக்குகளை தொடுத்து வருகின்றன. அதில் முக்கியமானது பயங்கரவாத சட்டமான ஊபா. இச்சட்டத்தைப் பற்றி இடதுசாரி கட்சிகள் அளவுக்கு, அதிகம் பேசியவர்கள் யாரும் கிடையாது. அவர்களின் நாளிதழ், ஊடகங்கள் அனைத்திலும் ஊபா சட்டம் பற்றிய செய்திகள் இன்று வரைக்கும் வெளியாகி வருகின்றன. ஊபா என்பது சட்டவிரோத செயல்பாடுகளைத் தடுக்கும் நோக்கத்தில் கொண்டு வரப்பட்ட சட்டம். எப்போதும்போல, அரசியல் கட்சிகள் இதை தம் சொந்த சுயநலனுக்கு பயன்படுத்திக்கொண்டு மனித உரிமை போராளிகளை, திட்டங்களை கேள்வி கேட்பவர்களை சிறையில் அடைக்க பயன்படுத்துகின்றன. பெரும்பாலும் இந்த வழக்குகளில் குற்றங்களை நிரூபித்து தண்டனை வாங்கித்தருவதற்கு அரசு புலனாய்வு அமைப்புகள் விரும்புவதில்லை. இதனால் வழக்குகளில் இருந்து வெளியே வருபவர்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. அரசுகள், ஒருவரை உளவியல் ரீதியாக அச்சுறுத்தவே இதுபோன்ற அ...

ஆன்மிக குருவின் பாலியல் இச்சையை தீர்ப்பது கூட பெண் துறவிகளுக்கான சேவைதான்!

படம்
         ஆன்மிக குருவின் பாலியல் இச்சையை தீர்ப்பது கூட சேவைதான்! இந்தியத் தலைநகரில் நடந்த சம்பவங்களைப் பார்க்கப்போகிறோம். அத்ஹியாத்மிக் விஷ்வ வித்யாலயா என்ற ஆசிரமம் பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா? வட இந்தியாவில் இந்த ஆசிரமங்கள் இன்றும் செயல்பாட்டில் உள்ளன. அண்மையில் கோவையில் இருந்து கூட பதினாறு வயது சிறுமி, ஒருவர் ஏவிவி எனும் இந்த ஆசிரம கிளைக்கு ஓடிப்போனார். ஆம். நகைகளுடன் சென்று துறவியானார். இப்போது அந்த இளம்பெண்ணின் அம்மா, மகளை மீட்க சட்ட உதவியை நாடியிருக்கிறார். நீதிமன்றத்தைப் பொறுத்தவரை ஆசிரமத்தை நடத்தும் வழக்குரைஞர் அமோல் கோகனேவை ஒன்றும் செய்யவில்லை. மாறாக, துறவியான மகளை தினசரி நாற்பத்து ஐந்து நிமிடங்கள் சந்தித்துக்கொள்ளலாம் என கருணை காட்டியது. நீதிமன்றத்தில் கூட மாட்டு மூத்திரத்தை குடிக்கும் ஆட்கள்தானே நியமிக்கப்படுகிறார்கள். பெரிதாக பயன் ஒன்றும் இருக்காது. மக்களே ஒன்று திரண்டு ஏதாவது செய்தால்தான் பயனுண்டு. ஏவிவி என்ற ஆசிரமம் எப்படி இருக்கும் என்பதை கவனிப்போம். நான்கு மாடி கட்டிடங்களைக் கட்டி அதில் கன்னி கழியாத பெண்களை நேர்காணல் வைத்து குரு தீக்சித் தேர...

பாகிஸ்தானில் கல்வி கற்க போராடிய முஸ்லீம் எழுத்தாளரின் சுயசரிதை!

            வார்த்தைகளில் ஒரு வாழ்க்கை இஸ்மத் சுக்தாய் மொழிபெயர்ப்பு சசிகலா பாபு எதிர் வெளியீடு பாகிஸ்தானில் பிறந்து வளர்ந்த எழுத்தாளர் இஸ்மத் சுக்தாய். அவரின் சுயசரிதைதான் வார்த்தைகளில் ஒரு வாழ்க்கையாக மாறியுள்ளது. இஸ்லாம் மதத்தை தழுவியவராக இருந்து கல்விக்காக பெருமுயற்சி செய்து படித்து பள்ளிகளில் தலைமை ஆசிரியையாக பணியாற்றி பிறகு எழுத்தாளராக மாறியவர் இஸ்மத் சுக்தாய். இஸ்மத்தின் குடும்பத்தில் மொத்தம் பத்து பிள்ளைகள். ஆறு ஆண்கள், நான்கு பெண்கள். அப்பா, ஆங்கிலேய அரசில் நீதிபதியாக இருந்தவர். இதனால், செல்வாக்காக வளர்ந்தவர். நூலில் முஸ்லீம் பெண்ணாக வளர்வது, கல்வி சார்ந்த முக்கியத்துவம் எப்படியுள்ளது, திருமணம், அதன் சடங்குகள், ஆண்களுக்கான சுதந்திரம், பெண்களுக்கான தடைகள், பெண்களை முடக்கும் மூடநம்பிக்கைகள், இந்துக்களின் தீட்டு, புராண பெருமைகள், போலியான புனித நடவடிக்கைகள் என அனைத்தையும் போட்டு உடைத்திருக்கிறார். இஸ்மத்தின் இயல்பே மனதில் பட்டதை பேசுவது என இருந்ததால், குடும்பம் உறவினர்கள், கதைகளை வாசித்தவர்கள், முற்போக்கு எழுத்தாளர்கள், பிற்போக்கான இஸ்லாமியர்கள், நாளித...

சர்வாதிகார சட்டங்களால் அதிகரிக்கும் விசாரணைக் கைதிகள்!

படம்
        சர்வாதிகார சட்டங்களால் அதிகரிக்கும் விசாரணைக் கைதிகள்! இந்தியாவில் வலதுசாரி மதவாத கட்சி ஆட்சிக்கு வந்தது தொடங்கி அடக்குமுறை சட்டங்களில் மனித உரிமை போராட்டக்காரர்கள், கல்வியாளர்கள், சிந்தனையாளர்கள் கைது செய்யப்படுவதுஅதிகரித்தது. கைதானாலும் விசாரணை முறைப்படி முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யாமல் சிறையில் தள்ளி சட்ட உரிமைகளைப் பறிக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இதை எழுதும்போது, ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்தவரான மனிஷ் சிசோடியாவுக்கு பிணை கிடைத்து வெளியே வந்திருக்கிறார். அவரை அமலாக்கத்துறை, பல்வேறு போலி குற்றச்சாட்டுகளை சுமத்தி சிறையில் அடைத்து வைத்திருந்தது. எதிர்க்கட்சிகளின் வெற்றியை, விமர்சனங்களை பொறுக்கமுடியாத மதவாத கட்சி, அரசு அமைப்புகளை பயன்படுத்தி தலைவர்களை சிறையில் அடைத்து வருகிறது. இதற்கு ஏதுவாக புதிய குற்றவியல் சட்டங்கள் வடமொழியில் உருவாக்கி நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன. இதில் ஒருவரின் அடிப்படை சட்ட, மனித உரிமைகளை பறிக்கும் அம்சங்கள் ஏராளமாக உள்ளன. இந்திய குற்றவியல் சட்டம் 1860 இன்படி, 32 லட்சம் பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர...

அரசின் சர்வாதிகாரம், பயங்கரவாதத்தை தட்டிக்கேட்கும் ஹேக்டிவிஸ்டுகளின் வரலாறு!

படம்
  கோடிங் டெமாக்கிரசி மௌரின் வெப் எம்ஐடி பிரஸ் கட்டுரை நூல்  உலக நாடுகளில் உள்ள அரசு சர்வாதிகாரத்தை எதிர்க்கும் கணினி போராளிகளைப் பற்றிய நிறை, குறை, போராட்டங்கள், வளர்ச்சி, வீழ்ச்சி பற்றிப் பேசுகிற நூல் இது.  அடிப்படை மதவாத நாடுகள், மதவாத நாடாக மாறிவரும் இந்தியா போன்ற நாடுகள், ஒற்றைக் கட்சி சர்வாதிகாரத்தில் இயங்கும் சீனா, ரஷ்யா போன்ற நாடுகளில், ஜனநாயகம் கிடையாது. அதை மரபான ஊடகங்கள், பத்திரிகைகள், தன்னார்வ அமைப்புகள் பேச முடியாது. அப்படி பேசினால் உடனே அந்த நபர்கள் காணாமல் போய்விடுவார்கள். சிறையில் விசாரணையின்றி காலவரையின்றி வைக்கப்படுவார்கள். விஷம் வைத்து அல்லது சித்திரவதை செய்து கொல்லப்படுவார்கள். இதுதான் சர்வாதிகார அரசில் உள்ளவர்களுக்கு நேரும் நிலைமை. ஆனால் இதெல்லாம் அடையாளம் தெரிந்து செயல்படும் ஆட்களுக்குத்தான்.  அதே சர்வாதிகார நாட்டில் இணையத்தில் இயங்கும் ஹேக்டிவிஸ்டுகள் உண்டு. இவர்கள் கணினி கோடிங்கைக் கற்றுக்கொண்டு அதை வைத்து அரசு செய்யும் குற்றங்களை உலகிற்கு கூறிக்கொண்டிருப்பார்கள். இவர்கள் குழுக்களாக அல்லது தனியாக இயங்கி வருவார்கள். இவர்களை பிடித்து சிறையில் அடை...

தேர்தல், அரசியலில் தலையிடாமல் தள்ளி நிற்க முயலும் டெக் நிறுவனங்கள்!

படம்
  கீழ்த்தரமாக பேசுவது அரசியலில் இயல்பாக இருக்கிறது. அதை இன்னும் புதிய உயரங்களுக்கு காவிக்கட்சி ஆட்கள் கொண்டு சென்று வருகிறார்கள். எதிராளி பேசும் விதமாக அதற்கு நிகராக அதை விட கீழ்த்தரமாக பேச நிறைய ஆட்கள் தயாராகி வருகிறார்கள். தனிநபர்கள் பேசுவது வேறு. அதையே டெக் நிறுவனங்கள், இணையத்தில் பதிலாக அளிப்பது வேறு. குறிப்பிட்ட கட்சி சார்ந்து தவறான பதில்களை அல்லது அவர்களுக்கு பிடிக்காதது போல நேர்மையாக பதில் சொன்னால் கூட தொழில் செய்யமுடியாது.  இந்த விதிகளை யாரும் மீறமுடியாது. மீறினால் உடனே அமலாக்கத்துறை, வருமானவரித்துறை, தேசியபாதுகாப்பு, உளவுத்துறை என பல்வேறு அமைப்புகள் தொழிற்சாலைகளுக்கு, அலுவலகங்களுக்கு வந்து சோதனையிடுவார்கள். பிறகு தேர்தல் பத்திரங்களில் காசு கொடுத்தால் மட்டுமே தொழில் பிழைக்கும். இல்லையெனில் லஞ்ச, ஊழல் வழக்கு பதிவாகும். தேசதுரோகி என பிழைப்புவாத ஊடகங்கள் அலறுவார்கள். இதற்கு யாரும் விதிவிலக்கு கிடையாது. இப்படி மிரட்டி பணம் பிடுங்குவதில் காவிக்கட்சி அதிகாரத்தில் இருப்பதால் கெட்டிக்காரத்தனம் காட்டுகிறது.  கூகுள், அரசியல் கருத்துகளைக் கூறுவது தொடர்பான பிரச்னையில், எந்த க...

குடும்பத்தை அழித்தவர்களை நிதானமாக துப்பறிந்து கொல்ல முயலும் நாயகன்!

படம்
  Decline c drama  7 episodes சீன தொடர் சர்வ சாதாரணமாக 24, 35 என எபிசோடுகளை இழுத்துவிட்டு பார்வையாளர்களை கஷ்டப்படுத்துவது வழக்கம். ஆனால், இப்போது சில தொடர்கள் அதன் மையப்பொருட்களை பொறுத்து எபிசோடுகளை சுருக்கி வருகிறார்கள். கிடைக்கும் பயனாக, நமக்கு டேட்டா சற்று மிச்சமாகிறது.  கதையை, துண்டு துண்டாக கூறி முக்கியமான முழுக்கதையை ஒருவழியாக இறுதியாக சொல்லி முடிக்கிறார்கள். நாயகன் ஒரு துப்பறிவாளன். நன்றாக வாழ்ந்து அழிந்துபோன குடும்பத்தின் வாரிசு. சீன நகரங்களில் நடக்கும் அமானுஷ்ய கொலைகளை ஆராய்ந்து குற்றங்களைக் கண்டுபிடிப்பதே அவனது வேலை. எதற்காக இதை செய்கிறான் என்பது அவனது குடும்பம் படுகொலையான விவகாரம் சம்பந்தப்பட்டது. கதையின் இடையே நாயகன் தனது கடந்தகாலம் பற்றி அவனது தற்காப்புக்கலை தெரிந்த நண்பனிடம் கூறுகிறான். அவன் அந்தளவு நெருக்கமான நண்பனா என்று கேட்டால், அதற்கு பதில் சொல்வது கடினம்.  ஒரு நாடக குழு நகரத்திற்கு வருகிறது. அதில் உள்ள பதினொரு பேர்களில் ஒன்பது பேர் கொல்லப்பட்டுவிடுகிறார்கள். இரண்டுபேர் மட்டும் காணவில்லை. இதன் பின்னாலுள்ள மர்மத்தை நாயகன் சூ சென்க்ஸி கண்டுபிடிக்கிறா...

புத்தக கடை உரிமையாளரைக்கொன்ற கொலையாளி - 11 ஆண்டுகள் போராடி பிடித்த காவல்துறை!

படம்
  உணமையான சமத்துவமான நீதி என்பது உலகில் எங்குமே இல்லை. ஏனெனில் மனிதர்களிடையே சாதி, மதம், இனம், அந்தஸ்து, செல்வாக்கு, சமூக அடுக்கு என்ற வகையில் ஏராளமான பாகுபாடுகள் உள்ளன . அரசியலமைப்பு அடிப்படையில் சாமானியர் ஒருவருக்கு நீதி கிடைக்கும் இடம நீதிமன்றம், ஆனால் அங்குள்ள நீதிபதிகள் மனிதர்கள்தான். அவர்கள், மனதிலுள்ள முன்முடிவுகளும் கருத்துகளும் கூட தீர்ப்பில் வெளிப்படுகிறது. ஆதாரங்கள் அடிப்படையில் மட்டுமே பார்த்து தேவையான சட்டப்பிரிவுகளை சுட்டிக்காட்டி தண்டனை வழங்குவது சரியானது. பெரும்பாலான நேரங்களில் அரசியல் அழுத்தங்கள், இறந்துபோனவரின் குடும்ப செல்வாக்கு, பணபலம், ஏழையின் நிர்க்கதியான பலவீன நிலை கூட தீர்ப்பை மாற்ற வைக்கிறது. இப்போது இங்கே நீங்கள் வாசிக்கப்போகும் குற்றச்சம்பவம் கூட அத்தகையதுதான்.  ஒரு புத்தக்கடையை வயதான பெண்ணும், அவரது கணவரும் சேர்ந்து நடத்தி வருகின்றனர். இவர்களுக்கு ஒரு பெண் பிள்ளை உண்டு. அவர் வழியாக பேரப்பிள்ளைகளும் பிறந்துவிட்டார்கள். வயதான பெண்ணுக்கு புத்தகடை மேல் தனிப்பிரியம் உண்டு. இவர் ஒருநாள் கடையில் கத்தியால் குத்தப்பட்டு கொல்லப்பட்டு கிடந்தார். அதே கடையில்தான...

நேரடி சாட்சியத்தில் ஏற்படும் பிழைகளை கண்டறிந்த உளவியலாளர்!

படம்
  ஒரு மோசமான விபத்து நடைபெற்றிருக்கும். அதை பல்லாண்டுகளுக்கு பிறகும் சம்பவ இடத்தில் இருப்பவர் நினைவுகூரலாம்.அதற்கு என்ன காரணமாக இருக்கும்? அந்த விபத்தில் அவருக்கு சம்பந்தமான யாரோ ஒருவர் மாட்டிக்கொண்டு இறந்திருப்பார். அல்லது நினைத்துப் பார்க்க முடியாத அதி்ர்ச்சியை விபத்து சம்பவம் உருவாக்கியிருக்கும். காலப்போக்கில், இதை ஒருவர்  எத்தனை முறை மீள கூறினாலும் அதில் தகவல்கள் மாறிப்போயிருக்க வாய்ப்பகள் உள்ளது. குறிப்பாக எதனால் தூண்டப்பட்டு விபத்து சம்பவத்தை ஒருவர் நினைவுகூருகிறார் என்பது முக்கியம்.  கார்கள் இரண்டு சாலையில் எதிரெதிரே வருகின்றன. திடீரென மோதிக்கொள்கின்றன. இதைப் பார்த்தவர்களிடம் கார்களின் வேகம், உடைந்த பொருட்கள், அங்கு சுற்றியிருந்த பொருட்கள் பற்றி கேள்வி கேட்டால் பலரும் பலவிதமாக பதில்களை கூறுவார்கள். இதிலுள்ள உண்மையைக் கண்டுபிடிப்பது கடினம். இதைத்தான் உளவியலாளர் ஆய்வு செய்து கண்டுபிடித்து கூறினார். இதற்கான அவசியம் என்ன வந்தது? நீதியைக் காப்பாற்றத்தான்.  அப்போது நீதிமன்றங்களில் குழந்தைகளை பாலியல் சீண்டல் செய்தவர்களுக்கு எதிரான வழக்குகள் அதிகம் வந்தன. இதில் நேரடி ...

0.1 சதவீத உண்மையைக் கண்டுபிடிக்க போராடும் குற்றவியல் வழக்குரைஞர்!

படம்
  99.9 கிரிமினல் லாயர் ஜே டிராமா  இருபது எபிசோடுகள் - இரண்டு சீசன்கள் குற்றவழக்குகளில் உள்ள உண்மையை கண்டுபிடித்து அரசு தரப்பை அடித்து நொறுக்கு கிரிமினல் வழக்குரைஞரின் கதை. மொத்தம் இருபது எபிசோடுகள். இரு சீசன்களையும் சேர்த்து... ஜப்பானில் கிரிமினல் வழக்குகளில் பெரும்பாலும் குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை வழங்கப்பட்டு விடுகிறது. தப்பிக்கும் ஆட்களின் சதவீதமே 0.1தான். இதைத்தான் வழக்குரைஞர் மியாமா சவாலாக எடுத்துக்கொண்டு சாதிக்கிறார். போலியாக சாட்சிகளை தயாரித்து சரிவர விசாரிக்காமல் குற்றவாளிகளாக்கி தண்டிக்கும் நீதித்துறைக்கு எதிராக தனியாக நின்று போராடுகிறார். இந்த போரில் மெல்ல மதார்மா நிறுவனத்தையே ஈடுபடுத்துகிறார்.  மதார்மா நிறுவன தலைவருக்கும், மியாமாவுக்கும் பழைய தொடர்பு ஒன்று இருக்கிறது. அது என்னவென்று இருவரும் ஒருகட்டத்தில் அறிகிறார்கள். ஆனால் அதை வெளிப்படையாக கூறுவதேயில்லை. மதார்மா நிறுவன தலைவரே நேரடியாக மியாமாவை தனது நிறுவனத்தில் சேர சொல்லுகிறார். சம்பளமும் கூட அதிகமாக பேசுகிறார். அன்றைய சூழலில் மியாமா வழக்கில் வென்றாலும் சம்பளம் என்பது குறைவாகத்தான் கிடைக்கிறது. அதில்தான...

ஏஐயை கூகுளின் சேவையில் கொண்டு வர பொறுப்புணர்வோடு செயல்படுகிறோம்! - சுந்தர் பிச்சை

படம்
          சுந்தர் பிச்சை , கூகுளின் இயக்குநர் . பொதுவாகவே நல்ல மனிதர் என்று புகழ் பெற்றவர் . ஏஐ உலகில் கூகுள் தடுமாறுகிற நேரத்தில் அவர்தான் ஏராளமான சுமைகளை சுமக்கிறார் . கூகுளின் மீது அமெரிக்காவில் கூட தேடல் எந்திரம் தொடர்பாக ஏகபோகத்துவம் என்று சொல்லி வழக்குகளை பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள் . 2015 ஆம் ஆண்டில் கூகுளுக்கு வந்தவர் எட்டே ஆண்டுகளில் அதன் இயக்குநராக முன்னேறினார் . சமகாலத்தில் பணியாளர்கள் நீக்கம் . கூகுள் நிறுவனங்கள் ஒன்றாக இணைப்பு , ஏஐ தொழில்நுட்பத்தை தேடலில் இணைப்பது , சாட்ஜிபிடியை மைக்ரோசாஃப்ட் நிறுவனம் தன்னுடன் இணைத்துக்கொண்டதில் இருந்து கூகுள் தடுமாறி வருகிறது . அதுபற்றி அதன் இயக்குநர் சுந்தர் பிச்சையுடன் உரையாடினோம் . கூகுள் இருபத்தைந்து ஆண்டுகளை நிறைவு செய்திருப்பதை ஒரு லட்சத்திற்கும் அதிகமாக ஊழியர்களுடன் கொண்டாடி மகிழ்ந்திருக்கிறீர்கள் . அவர்களுக்கு கடிதம் எழுதியிருக்கிறீர்கள் . உலகின் நன்மைக்காக கூகுள் தொழில்நுட்பங்களை மேம்படுத்துகிறது என்று கூறப்படுவதை இன்று பலரும் எதிர்த்து விமர்சனங்களை எழுப்புகிறார்களே ? தொழில்ந...