பெண்களை சவால்களை ஏற்காவிட்டால் அவர்களால் வெற்றி பெற முடியாது!
உலக பெண்கள் தினம் வந்துவிட்டது . பெண்களுக்கு மரியாதை தரும் தினத்தில் அவர்களைப் பற்றி நான்கு வார்த்தை எழுதாவிட்டால் எப்படி ? ருச்சுதா திவேகர் ஊட்டச்சத்து நிபுணர் , எழுத்தாளர் நீங்கள் ஒன்றை விரும்பினால் போதும் . மற்றதெல்லாம் எளிமையானதுதான் . நான் மக்களின் வாழ்க்கைமுறையை மாற்றி அவர்களை உணவுமுறையை பின்பற்றச்செய்கிறேன் . அவர்களிடமிருந்து நிறைய விஷயங்களைக் கற்றுக்கொள்கிறேன் . இது என்னை பெரிதும் உற்சாகப்படுத்துகிறது . மக்கள் நம்புகிற , ஆனால் நீங்கள் எதிர்க்கும் உணவு தொடர்பான மூடநம்பிக்கைகள் என்ன ? அரிசி சாப்பாடு ஒருவரை பருமனாக்கும் . மாம்பழம் நீரிழிவை ஏற்படுத்தும் . நெய் சேர்த்துக்கொள்வது கொழுப்பை அதிகரிக்கும் என்றி மூன்றை முக்கியமாக சொல்லலாம் . நீங்கள் ஊட்டச்சத்து நிபுணராக என்னென்ன போராட்டங்களைச் சந்தித்தீர்கள் . நான் தேர்ந்தெடுத்த துறை பிறரிடமிருந்து வேறுபட்டது என்பதால் எனக்கு வந்த சவால்களும் வேறுவிதமானவை . மும்பைக்காரி என்பதால் ஓரளவு சமாளித்துவிட்டேன் . மேலும் என்னைச் சுற்றி உள்ளவர்களும் கூட இதுபோலவே சவால்களை சந்தித்து வந்தவர்கள் எ