இடுகைகள்

சூரியன் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

இங்கிலாந்தில் அமைந்துள்ள புதிரான கல்தூண்கள் - ஸ்டோன்ஹென்ச்

படம்
  ஸ்டோன்ஹென்ச் அமைந்துள்ள இடம் வில்ட்ஷையர், இங்கிலாந்து சிறப்பு கலாசார இடம் நிலவுக்கே சென்றாலும் தேயாத செருப்பெல்லாம் வேண்டாம். கொஞ்சம் நல்ல பிராண்ட் செருப்பை வாங்கிப் போட்டுக்கொண்டு செல்லுங்கள். மழை பெய்தால் வழுக்கிவிடும் ஜாக்கிரதை. பார்க்க தமிழ்நாட்டின் கிராமங்களில் அமைந்துள்ள சுமைதாங்கிக் கற்கள் போலவே இருக்கும். சுமைதாங்கி கற்களை யார் அமைத்தார்கள் என்பது ஊர்காரர்களுக்குத் தெரியும். ஏனெனில் கர்ப்பிணியாக இருந்து குழந்தை பெறும் நேரத்தில் எதிர்பாராதவிதமாக இறக்கும் பெண்ணின் நினைவுக்காக சுமைதாங்கிக் கற்கள் அமைக்கப்பட்டன. இங்கிலாந்தில் உள்ள ஸ்டோன்ஹென்ச் என்னும் இவ்வகை கற்கள் யாரால், எதற்காக அமைக்கப்பட்டன என்று தெரியாது. கேள்விகளுக்கு பதில் தெரியாது என்று நிறைய இருந்தாலும் கூட இந்த கல் தூண்களுக்கு பெருமைக்கு குறைவில்லை. புதிரான கல் தூண்கள் அமைக்கப்பட்ட காலம் 3,500 ஆக இருக்கலாம். ஆண்டுதோறும் இதை பார்க்கவரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை கூடிக்கொண்டே செல்கிறது. இதில் உள்ள சில கற்களுக்கு பெயர்கள் கூட வைக்கப்பட்டுள்ளது. ஆனால் அனைத்து கற்களின் பெயர்கள் இன்னும் கண்டறியப்படவில்லை. ஆல்டர், சினிஸ்டர

சூரிய ஒளி நம்மை மகிழ்ச்சியாக மாற்றுகிறதா? - பதில் சொல்லுங்க ப்ரோ?

படம்
  சூரிய ஒளி நம்மை மகிழ்ச்சியாகவும் ஆரோக்கியமாகவும் மாற்றுகிறதா? உலகம் முழுக்கவே சூரிய ஒளி மிகுந்த நாட்களை உற்சாகமான நாளாகவே நினைக்கிறார்கள்.  சூரிய வெளிச்சம், மனித உடலின் உயிரியல் கடிகாரம் சிறப்பாக செயல்பட அவசியம். புற்றுநோயை விலக்கும், ரத்த அழுத்த பாதிப்பை குறைக்கும் வைட்டமின் டி சத்து, சூரிய ஒளியில்  உள்ளது.  2016ஆம் ஆண்டு அமெரிக்காவில் செய்த ஆய்வில் சூரிய ஒளி உற்சாகத்தையோ, மேகமூட்டமான மனநிலை மன அழுத்தத்தையோ உருவாக்குவதில்லை என தெரிய வந்தது. இந்த ஆய்வில் 38 ஆயிரம் பேர் பங்கேற்றனர்.  ஃபாக்போ (Fogbow)என்றால் என்ன? பனிக்காலத்தில் சிறிய பனித்துளிகளின் வழியே ஒளி ஊடுருவுகிறது. இதனால், ஒளிவிலகல் ஏற்பட்டு ஃபாக்போ உருவாகிறது. வளைய வடிவிலும் வெள்ளை நிறத்திலும் ஃபாக்போ இருக்கும். பனித்துளிகள், மழைத்துளிகளை விட அளவில் சிறியன.    https://www.sciencefocus.com/the-human-body/does-sunshine-make-us-happier-and-healthier/ https://journals.sagepub.com/doi/10.1177/2167702615615867 https://www.sciencefocus.com/planet-earth/what-is-a-fogbow/

பூமிக்கு வரும் எதிர்கால ஆபத்துகள்!

படம்
பூமிக்கு வரும் எதிர்கால ஆபத்து! வாழ்க்கை  என்பது அழிவுக்குப் பிறகு மீண்டும் தொடங்கக் கூடியது. இப்படித்தான் 40 லட்சம் ஆண்டுகளுக்கு முன்னர்  பூமியில் உயிரினங்கள் உருவாகி வாழத் தொடங்கின என சொல்லுகிறார்கள் சில அறிவியலாளர்கள். இக்காலகட்டங்களில் விண்கல் மோதல், உயிரினங்களின் அழிவு, மீண்டும் உயிரினங்களின் தோற்றம் என மாறி மாறி நடந்து வந்திருக்கிறது. இந்த சுழற்சி நிற்காமல் தொடர்கிறது. இப்போது முந்தைய காலத்தை விட தொழில்நுட்பம் வளர்ந்துவிட்டது. இனி வரும் ஆபத்துகள் எப்படியிருக்கும் என்பதைப் பார்ப்போம்.  விண்கல் தாக்குதல் 6,600 கோடி ஆண்டுகளுக்கு முன்னர் பூமியில் மோதிய பெரும் விண்கல் தாக்குதலால் டைனோசர் உள்ளிட்ட உயிரினங்கள் அழிந்து போயின. எதிர்காலத்திலும் அப்படி நடக்க வாய்ப்புள்ளதா? 10,000 கோடி ஆண்டுகளுக்கு ஒருமுறை பூமி பெரும் விண்கல் தாக்குதலை சந்திக்க வேண்டியிருக்கும் என்று அமெரிக்க விண்வெளி அமைப்பான நாசா கூறியுள்ளது. 2017ஆம் ஆண்டு இதுபற்றிய கட்டுரையொன்று நேச்சர் இதழில் வெளியாகியுள்ளது. இக்கட்டுரையில், சூரிய மண்டலத்தில் உள்ள பல்லாஸ் (pallas), வெஸ்டா (vestas) இரு கோள்கள் பூமியைத் தாக்கினால் உயிரினங்

வாழ்க்கையைக் காப்பாற்றும் பழக்க வழக்கங்கள்! - உடல், மனதின் இயல்பான பழக்கங்கள்

படம்
              ஆபத்து கால நடவடிக்கைகள் ! உடலைப் பொறுத்தவரை ஆயுளுக்கும் நமக்கு பாதுகாவலராகவே செயல்படுகிறது . மிகவும் இக்கட்டான நேரம் என்றால் உடல் தானியங்கியாக தன்னைப் பாதுகாத்துக்கொள்வதில் இறங்கிவிடும் . இதனை ஒருவர் தவிர்க்கவே முடியாது . நீரில் இறங்கினால் , நீச்சலடிப்பது , நெருப்பைப் பார்த்தால் அது ஏற்படுத்தும் விளைவுகளை அறிந்து எச்சரிக்கையாவது , நாய் துரத்தினால் இயல்பாகவே ஓடத் தயாராவது என சில விஷயங்களைக் குறிப்பிடலாம் . நவீன நகர வாழ்க்கையில் இந்த செயல்பாடுகள் ஒருவரின் சிந்தனை வாழ்க்கை முறையைப் பொறுத்து மாற்றங்களை காண்கிறது . அடிப்படையில் தன்னைக் காத்துக்கொள்வதுதான் இதில் முக்கியமானது . அப்படி சில அம்சங்களை கீழே காண்போ்ம் தாக்குதல் அல்லது தப்பித்தல் ஆபத்து என்று வரும்போது ஒன்று அதனை எதிர்ப்பது அல்லது அங்கிருந்து உயிரைக் காப்பாற்றிக்கொண்டு ஓடுவது என இரண்டில் ஒன்றைத் தான் தேர்ந்தெடுக்க முடியும் . அதுதான் விலங்காக இருந்து நாம் பெற்ற அடிப்படை இயல்பு . இன்று இதே அம்சம் வெவ்வேறு வகையில் வெளிப்படுகிறது . உயிருக்கு ஆபத்தான நிலையில் இதயத்துடிப்பு அதிகரிக்கிறது . உடல்

உயிரினங்கள் வாழ முக்கியமான சூழல்கள் என்ன?

படம்
                    உயிரினங்கள் வாழ முக்கியமான சூழல்கள் என்ன ? உலகில் 8.7 மில்லியன் உயிரினங்கள் பல்வேறு விதமான சூழல்களில் வாழ்ந்து வருகின்றன . உலகில் உயிரினங்கள் தாக்குப்பிடித்து வாழ்வதற்கான முக்கியமான காரணங்கள் என்னவென்று தெரியுமா ? உணவு , நீர் , இருப்பிடம் , வெப்பநிலை , வெளிச்சம் . வெப்பநிலை என்பது அடிக்கடி மாறினால் உயிரினங்கள் வாழ்வது சிக்கலாகிவிடும் . ஆனால் இதெல்லாம் தாண்டி இருட் படர்ந்த குகைகளில் உயிரினங்கள் வாழ்கின்றன . காற்று சுற்றுப்புறத்திலுள்ள காற்று முக்கியமானது . இதனை உயிரினங்கள் சுவாசித்துத்தான் உணவு ஆற்றலாக மாற்றப்படுகிறது . இதனை ரெஸ்பிரேஷன் என்று குறிப்பிடுகின்றனர் . வெப்பம் இதனை ஒளி , வெப்பம் என இருவகையில் கூறலாம் . குறிப்பிட்ட வெப்பநிலை அப்படியே தொடரவேண்டும் . அப்படி இல்லாதபோது உயிரினங்கள் வாழ்க்கை நிலையாக தொடர்வது கடினம் . இருப்பிடம் இருப்பிடம் என்பது உயிரினங்கள் ஓய்வெடுப்பதற்கும் , பிற எதிரி விலங்குகளிடமிருந்து ஓய்வெடுக்கவும்தான் . இப்படி இடம் இல்லாதபோது , உயிரினங்கள் எளிதாக வேட்டையாடப்பட வாய்ப்புள்ளது . உணவு

சூரியக்கடிகாரம் தோன்றியது எப்படி?

படம்
          இன்று ஸ்மார்ட்போனில் மணி பார்க்கத் தொடங்கிவிட்டதால் பெரும்பாலான கை கடிகாரங்கள் அனைத்துமே அந்தஸ்தைக் காட்டும் கடிகாரங்களாக மாறிவிட்டது . இதனால் கடிகார நிறுவனங்கள் பிராந்தியப் பெருமை பேசும் கடிகாரங்களை தயாரிக்கின்றன . தங்கம் , பிளாட்டினம் , வைரம் என அதனை அலங்கரித்து வருகின்றன . சூரியக் கடிகாரம் சூரியன் கிழக்கில் உதித்தவுடன் அதன் நிழல் எப்படி விழும் என்பதை குச்சி வைத்து கணிக்கும் முறை . மோசமானது என்று இன்று கூறலாம் . ஆனால் அன்றைக்கு இதுவே பெரிய விஞ்ஞானமுறை . ஆனால் இதை வைத்து இரவில் மணி பார்க்க முடியாது . இதற்காக நட்சத்திரங்களை கூட்டிக்கழித்து வரிசையைப் பார்த்து மணியைச் சொல்லும் முறையை கிரேக்கநாட்டு மக்கள் கண்டறிந்தனர் . எகிப்தில் நீர் கடிகாரம் கூட முயன்றார்கள் . உருளை வடிவ கட்டிடத்தில் நீரை நிரப்பி வெளியேறும் நீர் அளவைக் கணித்து நேரத்தை கண்டுபிடிக்கலாம் . ஆனால் பனிக்காலத்தில் நீர் உறைந்துவிடுவதால் இதில் நேரத்தைக் கணிக்க முடியாது . பாக்கெட் வாட்சுகள் , கைகடிகாரங்கள் பெண்டுலமாடி கடிகாரம் ஓடிக்கொண்டிருந்த நிலையில் அதனை மாற்றியது பாக்கெட் கடிகாரங்க

அனைவருக்கும் ஒரே ஊதியம் என்பது சமூக வேறுபாடுகளை ஒழிக்கும்! உண்மையும் உடான்ஸூம்

படம்
            பேய்விளக்கு (Ghost lights) வெளிச்சத்தை வேற்றுகிரகவாசிவாசிகள் ஏற்படுத்துகின்றனர் . ரியல் : வேற்றுகிரகவாசிகள் என்ற கருத்தே அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்படவில்லை . அப்புறம் எப்படி அவர்கள் பேய்விளக்கு வெளிச்சத்தை ஏற்படுத்த முடியும் ? காரில் வேகமாக சாலையில் செல்லும்போது , அதிலுள்ளவர்களுக்கு சாலையின் குறிப்பிட்ட இடங்களில் தானாக வெளிச்சம் தோன்றியது . இதனை பேய்விளக்கு வெளிச்சம் என்கின்றனர் . அமெரிக்காவில் உள்ள ஓக்லஹாமா , டெக்ஸாஸ் ஆகிய நகரங்களிலும் , உலகின் பல்வேறு பகுதிகளிலும் இந்த வெளிச்சம் அடையாளம் காணப்பட்டுள்ளது . ஆனால் இந்த வெளிச்சம் தோன்றுவதற்கான காரணங்கள் அறிவியல்பூர்வமாக விளக்கப்படவில்லை . வேகமாகச் செல்லும் காரின் விளக்குகள்தான் , பார்ப்பவர்களுக்கு இயக்கமின்றி பேய்விளக்கு வெளிச்சமாக தோன்றுகின்றன என சிலர் சொன்னாலும் அது நிரூபிக்கப்படவில்லை . வேற்றுகிரகவாசிகள் , பேய் , பூமித்தட்டு நகர்வு என பல்வேறு காரணங்களை இந்த வெளிச்சத்திற்கு காரணமாக மக்கள் சொல்லி வருகின்றனர் . ஸ்ட்ரெய்ட் ஜாக்கெட்டுகள் இன்றும் மக்களின் பயன்பாட்டில் உள்ளன . ரியல் : ஸ்ட்ரெய்ட் ஜாக்கெட்டுக

பருவகாலங்களால் நம் உடல்நிலையில் நோய்கள் ஏற்படுகின்றன என்பது உண்மையா? பொய்யா?

படம்
                1. உடல் வலிக்கும் , பருவ காலங்களுக்கும் தொடர்பிருக்கிறது . ரியல் : வீட்டில் உள்ள உங்கள் தாத்தா , பாட்டி ஆகியோர் மழை , வெயில் , பனி பல்வேறு பருவக்காலங்களிலும் முதுகுவலி , மூட்டுவலி என்று புலம்பிக்கொண்டிருப்பதை பார்த்திருப்பீர்கள் . வலிக்கான ஆதார காரணம் பருவகாலமல்ல . உடலில் ஏற்படும் வலியை அது ஊக்கப்படுத்தலாம் . உடலில் வலியை அது உருவாக்குவதில்லை என்பதே ஆஸ்திரேலிய ஆய்வாளர்களின் அறிக்கை சொல்கிற தகவல் . முதுகுவலி , மூட்டுவலி ஏற்படுவதற்கான முதன்மையான காரணத்தைக் கண்டுபிடித்து சரிசெய்தால் , அவர்கள் பருவகாலங்களை குறைசொல்ல வேண்டியிருக்காது . அரிதாக குறிப்பிட்ட பருவச்சூழல் , மூளையிலுள்ள செரடோனின் சுரப்பை அதிகரிக்கிறது . இதனால் சென்சிடிவ்வான உடலைக் கொண்டவர்களுக்கு ஒற்றைத்தலைவலி போன்ற பிரச்னைகள் ஏற்படுவது உண்டு . 2. கிராஷ் டெஸ்ட்டுகளில் பயன்படுத்தப்படும் மாடல்களால் மனிதர்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறைகின்றன . ரியல் : கார்களில் ஏற்படும் விபத்துகளில் மனிதர்களின் இறப்பைக் குறைக்க டம்மி மாடல்கள் உதவுகின்றன . இவற்றைப் பயன்படுத்தி கார் தயாரிப்பு நிறுவனங்கள் சோதனைகள

ரோலர்கோஸ்டரில் செல்லும்போது கீழே விழ வாய்ப்புள்ளதா?

படம்
      ரியலா ? ரீலா ?   1. ஒருவர் தும்மினால் அவருக்கு மற்றவர்கள் , காட் பிளெஸ் யூ சொல்லவேண்டும் . ரியல் : மதம் சார்ந்த இரண்டு கருத்துகள் இதன் பின்னே இருக்கின்றன . ரோமில் பிளேக் நோய் பரவிக்கொண்டிருந்த காலகட்டம் . போப் கிரிகோரி ( கிரிகோரி தி கிரேட் ), யாராவது தும்மினால் அவர் பிளேக் நோயால் பாதிக்கப்பட்டிருக்கக் கூடும் . எனவே அவர் அந்நோயிலிருந்து குணமாக காட் பிளெஸ் யூ சொல்லி பிரார்த்தியுங்கள் என்று மக்களைக் கேட்டுக்கொண்டார் . அடுத்து , தும்மலின்போது இறைவனின் ஆசி பெற்ற மனித ஆன்மா உடலிலிருந்து வெளியேறுகிறது . எனவே அதைத் தடுக்கவும் , வெளியிலுள்ள தீய சக்திகள் பிறரைத் தாக்காமல் இருக்கவும் மக்கள் காட் பிளெஸ் யூ சொல்லத் தொடங்கினர் என்கிறது வரலாறு . 2. வைக்கோலைப் பயன்படுத்தி வீடு கட்ட முடியும் ரியல் : மண் , சுண்ணாம்பு , கற்கள் கொண்டு நம் முன்னோர்கள் வீடு கட்டினர் . பின்னாளில் சிமெண்ட் , மணல் , செங்கற்கள் என புழக்கத்திற்கு வந்தன . இன்று உலகில் பசுமை வீடுகள் என்றழைக்கப்படும் கட்டட வகைகளில் வைக்கோல் கட்டடங்களும் ஒன்று . உலர்ந்த இறுக்கமாக பின்னப்பட்ட வைக்கோல்களைப் பயன்படுத்தி வீட