அனைவருக்கும் ஒரே ஊதியம் என்பது சமூக வேறுபாடுகளை ஒழிக்கும்! உண்மையும் உடான்ஸூம்

 

 

 

 

Is Your Favorite Telugu Comedian On Our List? - BookMyShow ...

 

 



பேய்விளக்கு (Ghost lights) வெளிச்சத்தை வேற்றுகிரகவாசிவாசிகள் ஏற்படுத்துகின்றனர்.

ரியல்: வேற்றுகிரகவாசிகள் என்ற கருத்தே அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்படவில்லை. அப்புறம் எப்படி அவர்கள் பேய்விளக்கு வெளிச்சத்தை ஏற்படுத்த முடியும்? காரில் வேகமாக சாலையில் செல்லும்போது, அதிலுள்ளவர்களுக்கு சாலையின் குறிப்பிட்ட இடங்களில் தானாக வெளிச்சம் தோன்றியது. இதனை பேய்விளக்கு வெளிச்சம் என்கின்றனர். அமெரிக்காவில் உள்ள ஓக்லஹாமா, டெக்ஸாஸ் ஆகிய நகரங்களிலும், உலகின் பல்வேறு பகுதிகளிலும் இந்த வெளிச்சம் அடையாளம் காணப்பட்டுள்ளது. ஆனால் இந்த வெளிச்சம் தோன்றுவதற்கான காரணங்கள் அறிவியல்பூர்வமாக விளக்கப்படவில்லை. வேகமாகச் செல்லும் காரின் விளக்குகள்தான், பார்ப்பவர்களுக்கு இயக்கமின்றி பேய்விளக்கு வெளிச்சமாக தோன்றுகின்றன என சிலர் சொன்னாலும் அது நிரூபிக்கப்படவில்லை. வேற்றுகிரகவாசிகள், பேய், பூமித்தட்டு நகர்வு என பல்வேறு காரணங்களை இந்த வெளிச்சத்திற்கு காரணமாக மக்கள் சொல்லி வருகின்றனர்.

ஸ்ட்ரெய்ட் ஜாக்கெட்டுகள் இன்றும் மக்களின் பயன்பாட்டில் உள்ளன.

ரியல்: ஸ்ட்ரெய்ட் ஜாக்கெட்டுகள் என்பது மனநோயாளிகள் பிறரையும், தங்களைத் தாங்களே தாக்கிக்கொள்ளாமல் இருப்பதற்காகவும் பயன்படுத்தும் ஆடை வகை. தற்போது இதனை மனநல மருத்துவமனைகளிலும், சிறைகளிலும் கூட பயன்படுத்துவதைக் குறைத்துவிட்டார்கள். பல்வேறு உடல், மனநலக் குறைபாடு கொண்டவர்களைக் கட்டுப்படுத்த குறைவான எண்ணிக்கையில் ஸ்ட்ரெய்ட் ஜாக்கெட்டுகள் பயன்பாட்டில் உள்ளன.. அமெரிக்காவில் சிறையில் உள்ள கைதிகளைக் கட்டுப்படுத்த ஸ்ட்ரெய்ட் ஜாக்கெட்டுகளைப் பயன்படுத்தக் கூடாது என 2010ஆம்ஆண்டு அமெரிக்க பார் அசோசியேஷன் மூலம் சட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.

சூரியன் இல்லாவிட்டாலும் நம்மால் உயிர்வாழ முடியும்

ரியல்: சாத்தியமே அல்ல. சூரியனை மையமாக வைத்தே பூமியிலுள்ள அனைத்து உயிர்களும் வாழ்கின்றன. சூரியன் இல்லை என்றால் ஒளிச்சேர்க்கை நின்றுபோக, முதலில் தாவரங்கள், விலங்குகள், அடுத்த நாமும் அழிவைச் சந்திப்போம். சூரியன் இல்லாத ஒரே வாரத்தில் பூமியின் வெப்பநிலை மெல்ல குறைந்து ஜீரோ டிகிரி செல்சியஸிற்கு மாறும். பகல், இரவு என நேரம் தெரியாமல் நாம் வாழ்வோம். சூரியனின் ஈர்ப்புவிசையால் பூமி வட்டப்பாதையில் சுற்றிவருகிறது. சூரியன் இல்லையென்றால் அப்படியே பால்வெளியில் வேறிடத்திறகு நகர்ந்து சென்றுவிடும். இருளும், குளிர்ச்சியும் அதிகரிக்க இறுதியில் அனைத்து உயிரினங்களும் இறப்பைச் சந்திப்பது உறுதி.

நூறு ஆண்டுகள் அனைவராலும் வாழ முடியும்!

ரியல்: நூறு ஆண்டுகள் வாழ்வதற்கு சுற்றுப்புறச்சூழல்களோடு மரபணுக்களின் ஆதரவும் தேவை. இப்போதுள்ள நவீன வசதிகளால் இந்தியாவில் சராசரி ஆயுள் 67 வயதாக (2010-14) நீட்டிக்கப்பட்டுள்ளது என்கிறது நிதிஆயோக் அறிக்கை. இவற்றை சாத்தியப்படுத்தியது ஆன்டிபயாட்டிக்ஸ் மற்றும் புற்றுநோய் பாதிப்பைக் கட்டுப்படுத்தும் மருந்துகள்தான். பொதுவாக ஒரு நாட்டில் வயதானவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கிறது என்றால் அங்கு குழந்தை பிறப்பு சதவீதம் குறைவாக இருக்கிறது என்று பொருள். தாய்லாந்து, இஸ்ரேல் ஆகிய நாடுகளில் உள்ள மக்கள் நீண்டகாலம் வாழ்வதாக ஆய்வாளர்கள் கண்டறிந்துளனர். இயற்கைப் பேரிடர்கள், பொருளாதார மந்தநிலை, கொள்ளைநோய்கள் ஆகியவற்றிடமிருந்து தப்பி நூறு வயது வாழ்வது இன்றைக்கும் சவாலானதே ஆகும்.

Film News: Top Telugu Comedians Remuneration List 

அனைவருக்கும் சம ஊதியம் என்பது பாகுபாடுகளை ஒழிக்கும்.

ரியல்: இந்தியாவில் இப்போதே சேமிப்பு முதலீடுகள் வீழ்ச்சியடைந்து அனைத்து மக்களும் அரசிடம் நிதியுதவி வழங்க கேட்டுக்கொண்டிருக்கிறார்கள். மக்கள் செய்யும் பணிகளின் மதிப்புகளையும் உணராமல், அனைவருக்கும் ஒரே ஊதியம் என்று நிர்ணயிப்பது, சமூகத்தில் பதற்றத்தை ஏற்படுத்தும். திறனுடைய மக்கள் அனைவரும் தீவிரமான கவலையும், எதிர்காலத்தை பற்றிய பயத்தையும் கொண்டே வாழ்வார்கள். அரசின் அனைத்து துறைகளும் கடுமையான தேக்கத்தில் வீழும். முதலாளிகள் கிடைக்கும் பணத்தை பெரும்பாலும் பதுக்குவார்கள். இதனால் அரசுக்கு நியாயமாக கிடைக்கும் வரிவருவாயும் கூட கிடைக்காது. நாட்டில் ஊழலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. திறமை இருப்பவர்கள் அதைக் காட்டி அதிக ஊதியம் பெறுவதற்கான வாய்ப்பு இல்லாதபோது அங்கு புதிய கண்டுபிடிப்புகளும் நடக்காது. சமூக, பொருளாதார, கலாசார அளவிலும் பாதிப்புகள் ஏற்படவே வாய்ப்பு உள்ளது.




கருத்துகள்