கொலைகாரக்கருவிகளும் கண்டறியப்பட்டவைதான்!

 

 

 

Comic, Fear, Flee, Fright, Game Asset Call, Horror, Man

 

 

 

 

 

புதிய சாதனங்கள் வாழ்க்கையை நடத்த உதவுகின்றன. அதற்கான கண்டுபிடிப்புகள் நடந்த அதேசமயம். மதத்திற்கு எதிராக நடைபெறும் அறிவியல் புரட்சிகளை ஒடுக்க பல்வேறு கொடூரமான கருவிகளை மதவாதிகள் கண்டுபிடித்தனர். இதனால் பல்வேறு கொடூரமான கருவிகள் உருவாயின. அரசுக்கு எதிரானவர்கள், மதத்திற்கு ஊறு விளைவிப்பவர்கள், கட்டுப்பாடுகளை மீறும் பெண்கள் என அனைவரையும் பயத்தின் பிடியில் வைக்க ஏராளமான கொலைக்கருவிகள், சித்திரவதை சாதனங்கள் உருவாக்கப்பட்டன. அவற்றில் சிலவற்றை பார்ப்போம்.


காளைக்குள் கொதிகலன்


குற்றவாளியை உலோகத்தில் உருவான காளையின் வயிற்றுக்குள் இறக்கிவிடுவார்கள். அதன் வயிற்றின் கீழே நெருப்பை மூட்டினால் என்னாகும்? உள்ளே இருப்பவர் உயிரோடு ரோஸ்ட் ஆவார். மரணம் உறுதி. ஆனால் அதனை ரசிக்கும் விதமாக செய்யவேண்டுமே? மரண பயத்தில் அலறுபவரின் குரல் வெளியே டிடிஎஸ் ஒலியில் கேட்கும்படி செய்வதற்கான ஒலி அமைப்பு காளையில் கழுத்து பக்கம் அமைக்கப்பட்டிருந்தது. இந்த ஒலி விலங்கின் உறுமலாக கேட்கும். இதனை பெரிலஸ் என்று க்ரீஸ் நாட்டு கண்டுபிடிப்பாளர் உருவாக்கினார். இதில் வதைபடுபவர்களின் ஒலியை அருமையான மெலடி என்று கூறினார். ஆனால் அதனை எப்படி நிரூபிப்பது. எனவே, மன்னர் பெரிலஸை தூக்கி இதனுள் போட்டார். கீழே நெருப்பு மூட்டியபின் பெரிலஸிடமிருந்து வரும் ஒலியைக் கேட்டபிறகே அவரை விடுவித்தார்.



சிலுவைப்பாடு!


2500 ஆண்டுகளுக்கு முன்னர் ரோமானியர்கள் பயன்படுத்திய வதை முறை. யேசு கிறிஸ்து இம்முறையில்தான் யூதர்களால் கொல்லப்பட்டார். சிலுவை மரத்தில் ஒருவரை க்கட்டி அவரின் கால்களை உடைத்து நொறுக்குவார்கள். இதனால் உடலின் எடையை தாங்கும் சக்தியை கால்கள் இழந்துவிடும். உடலின் பாரத்தை கால்கள் மட்டுமே தாங்கும். 24 மணிநேரம் ஒருவர் அப்படியே பசியால் வாடி துடிதுடித்து இறப்பார்.


தலைக்கு மேல் கத்தி


பிரெஞ்சு மருத்துவர் ஜோசப் கில்லட்டின், குற்றவாளிகளை தண்டிக்கும் முறையை கண்டுபிடித்தார். இது எப்படி செயல்படுகிறது. சிம்பிள், கூர்மையான கத்தியை உயரத்தில் தூக்கி கட்டியிருப்பார்கள். கயிற்றை அவிழ்த்து குற்றவாளியின் தலையை குழியில் நகரமுடியாதபடி பிடித்தால் மீதியை கத்தி பார்த்துக்கொள்ளும். நொடியில் தலை வெட்டுபட்டு கீழே உருளும். பிரெஞ்சு புரட்சியில் நிறைய பேரின் தலை உருள கில்லட்டின் காரணமானது. இதை இயக்கியவர்கள் நாடங்கும் பிரபலமானார்கள்.



மின்சார சொர்க்கம்.


அமெரிக்காவில் நடைமுறையில் இருந்த நாகரிக மரண தண்டனை. இதில் உட்கார வைக்கப்படுபவர்களுக்கு நகரமுடியாதபடி கையிலும் காலிலும் இரும்பு காப்புகள் பொருத்தப்படும். பின்னர் 2 ஆயிர்ம வோல்ட் மின்சாரத்தை தலையில் பொருத்தப்படும் இரும்பு ஹெட்மெட் மூலம் பாய்ச்சுவார்கள். அதில் ஸ்பான்ஞ் ஒன்றை தண்ணீரில் நனைத்து வைத்திருப்பார்கள். இதனால் மின்சாரம் சீராக உடலில் பாயும். இவர்களின் தண்டனையை ஒருவர் பார்ப்பது மிக கொடூரமாக இருக்கும் என்பதால் முகத்தில் துணியிட்டு மறைப்பார்கள். பாயும் மின்சாரம் உடலிலுள்ள பல்வேறு உறுப்புகளை செயலிழக்கசெய்து இறுதியாக இதயத்தின் செயல்பாட்டிற்கு மங்களம் பாடும்.


சக்கரத்தின் சக்தி


சக்கரங்களில் முள் முனைகள் இருக்கும். அதற்கு நடுவில் குற்றவாளியை படுக்கை வசமாக கட்டி வைத்து சுற்றுவார்கள். பின்னர் சுத்தி வைத்து கை, கால் என ஒவ்வொன்றாக அடித்து பிளப்பார்கள். இதையும் தாண்டி உயிருடன் இருந்தால் அவருக்கு உணவு கொடுக்காமல் குஞ்சு, குருவிகள் கொத்தி தின்னும்படி விட்டு கொல்வார்கள். இதில் நாம் தெரிந்துகொள்வது மெல்ல மரணம் ஒருவரை ஆக்கிரமிக்கவேண்டும் என அன்று நினைத்தார்கள் என்பதே.


இடம் மாறும் எலும்புகள்


ஒருவர் உண்மையை சொல்ல மறுத்தால், நடைபெறும் தீவிர விசாரணை முறை. ஏர்போர்ட்டில் வரும் கன்வேயர் பெல்ட் முறை போன்று உள்ள ரேக்கில் குற்றவாளியை கட்டி வைத்து இருபுறமும் நின்று குறிப்பிட்ட விசையை இழுத்தால் அவரின் உடல் நீளும். இதனால் ஒருவர் உடனே இறந்துவிட மாட்டார். ஆனால் இறந்தால் நன்றாக இருக்கும் என நினைக்க வைப்பார்கள். உடலிலுள்ள எலும்புகள் இடம்மாறும் சித்திரவதை முறை இது.


ஆணிக்கதவு


சிறிய இரும்பு அறை. அதில் குற்றவாளியை உள்ளே தள்ளி மெதுவாக கதவை மூடுவார்கள். கதவு முழுவதும் ஆணிகள் இருக்கும். மெல்ல உடலை பொத்தலாக்க ரத்தப்பெருக்கு அதிகமாகி குற்றவாளி இறந்துபோவார். சாவு மெதுவாக வரவேண்டும் என்பதை லட்சியமாக கொண்ட முறை இது.


குத்திக்கிழி


விசாரணை முறையில் பயன்படும் கருவி. ஒருவரின் வாயில் இக்கருவியை உள்ளே வைத்து அதனை இயக்குவார்கள். இதனால் கருவி விரியும்போது வாய் கிழிந்துவிடும். இறப்பு நேராது. ஆனால் உடல் உறுப்புகளை கிழித்து அறுவை சிகிச்சை செய்யும்படி ஆக்கிவிடுவார்கள்.




கருத்துகள்