பணத்திற்காக, வைரத்திற்காக, செல்வத்திற்காக விநாயகர் சிலையை துரத்தும் கூட்டம்!
கம் கம் கணேசா ஆனந்த் தேவர்கொண்டா, நயன் சரிகா தெலுங்கு மளிகை கடையை கொள்ளையடிக்கும் இரு திருடர்கள், நகைக்கடையை கொள்ளையடித்து வைரம் ஒன்றை லவட்டிக்கொண்டு தப்பிக்கிறார்கள். நகைக்கடை முதலாளியை வேறு சுட்டுவிடுகிறார்கள். அக்கடையின் பையன்தான், வைரத்தை திருடச்சொல்லி ஐடியா கொடுக்கிறான். வைரத்தை திருடியபிறகு, இரு திருடர்களை சுட்டுக்கொன்றுவிடுவது மறைமுக திட்டம். ஆனால், வைரத்தை திருடிய நாயகன், அவனது நண்பன் ஆகிய இருவருக்கும் எதற்கு கையிலுள்ள வைரத்தை கொடுத்துவிட்டு பணத்தை வாங்குவது? நேரடியாக வைரத்தை நாமே விற்றுக்கொள்ளலாமே என நினைக்கிறார்கள். வைரத்தோடு தப்பி ஓடுகிறார்கள். இது ஒரு கதை. இன்னொரு கதை. தேர்தல் நேரம், அதில் போட்டியிடுபவர், நூறு கோடி பணத்தை விநாயகர் சிலையில் வைத்து கடத்துகிறார். எல்லாம் மக்களுக்கு விநியோகம் செய்யத்தான். அந்த சிலை மாறிவிடுகிறது. யார் அதை மாற்றியது என ஆட்களை விட்டு தேடுகிறார். அதில் இரு திருடர்களும் சிக்கிக்கொள்கிறார்கள். படத்தில் இயக்குநர் ஒரு லாஜிக்கை மறந்துவிட்டார். அதாவது, ஹைதராபாத் திருடர்களில் ஒருவனான நாயகன், வைரத்தை அரசியல்வாதி தரப்பு கொண்டு வரும் முதல் விநாயகர் சி...