இடுகைகள்

காஜல் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

ஓவர் பேச்சு கணவனைப் பிரிய வித்தியாசமாக யோசிக்கும் மனைவி! ஹே சினாமிகா - பிருந்தா

படம்
  ஹே சினாமிகா இயக்கம் பிருந்தா இசை  கோவிந்த் வசந்தா ஒளிப்பதிவு  ப்ரீத்தா கதை - திரைக்கதை - பாடல்கள் -வசனம்  மதன் கார்க்கி நவீன கால திருமண உறவு பற்றி பேச முயலும் படம். மனைவிக்கு ஹவுஸ் ஹஸ்பெண்டாக இருக்கும் கணவரின் ஓயாத பேச்சு பிடிக்கவில்லை. இதனால் அவரை எப்படி கழற்றிவிடுவது என யோசிக்கிறார். இதற்காக உளவியல் வல்லுநர் ஒருவரின் உதவியை நாட அதன் விளைவு என்னாகிறது என்பதே கதை.. மௌனாவை பார்த்ததும் யாழனுக்குப் பிடித்துப்போய் விடுகிறது. காதலைச் சொல்லுகிறார். மௌனாவுக்கும் சம்மதம்தான். மணம் செய்துகொள்கிறார்கள். ஆனால் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகுதான் வெடிகுண்டு வெடிக்கிறது. யாழன் வீட்டில் சமையல், தோட்ட வேலைகளை செய்கிறான். மௌனா கட்டுமான நிறுவனத்தில் வேலை செய்கிறாள்.  மனைவியின் சம்பளத்தில்தான் யாழன் பொருட்களை வாங்குகிறான். அவனிடம் உள்ள கெட்ட பழக்கம் என மௌனா நினைப்பது, பேசுவது. நாம் எப்படி தன்னியல்பாக சுவாசிக்கிறோமோ அதுபோல பேசுபவன் என காட்சிகளாக காட்டுகிறார்கள். அது அந்தளவு ஒட்டவில்லை. யாழன் பேசுவது குறிப்பிட்ட மனிதர்களுக்கு பிடிக்காமல் இருந்தாலும், பேசும் விஷயங்களில் நியாயமான தன்மை உள்ளது.  ஆனால் மௌனாவுக்

படிக்காம ஜெயிச்சோமடா! - இரண்டு வெற்றிக்கதைகள்

படம்
இந்தியாவில் சுயமாக ஏதாவது கற்று வென்றவர்கள் அதிகம். காரணம் நம்முடைய கல்விமுறை அப்படி. துறுதுறுவென ஓடுபவர்களை, யோசிப்பவர்களை பள்ளி விரைவில் வெளியேற்றிவிடும். இதனால் சமூகத்தில் உருப்படியான மனிதர்கள் உருவாகியிருக்கிறார்கள். அவர்களில் சிலர் இதோ. .. மும்பையில் வாழும் அருண்குமார் மாதம் 80 ஆயிரம் சம்பாதிக்கிறார். இத்தனைக்கும் அவரது கல்வித்தகுதி பத்தாவதுதான். எப்படி சாத்தியமாகிறது என அவரது குடும்பத்தினருக்கும் புரியவில்லை. அவர்கள் அதிகம் கல்வி கற்காதவர்கள். இவரது குடும்பம் உத்தர்காஷி மாவட்டத்திலுள்ள மன்பூரில் வசிக்கிறது. ஆகாஷ், வீட்டு வேலைகளுக்கான உதவியாளராக வந்து இன்று கோடிங் கற்று ஐபோன்களுக்கான ஆப்ஸ்களை உருவாக்கி வருகிறார். இவரது தந்தை அசாம் போலீசில் ஓட்டுநராக பணிபுரிந்துகொண்டு டெல்லியில் வசித்தனர். டேராடூனில் உள்ள பள்ளியில் ஆகாஷ் சேர்க்கப்பட்டார்.  ஒருமுறை கல்விக்கட்டணத்தை அறை வாடகைக்காக செலவழித்துவிட்டார் ஆகாஷ். பள்ளி நிர்வாகம். அவரை பள்ளியிலிருந்து இடைநீக்கம் செய்தது. உடனே தன் கிடாரை எடுத்துக்கொண்டு மும்பைக்கு இசை தொடர்பான வேலை கிடைக்கும் என வந்துவிட்டார். அங்கு ஹவுசிங்.