பழமொழியைக்கூட கவனித்து எழுதி வருகிறேன்!
benyamin/indian express எனக்கு கிடைத்த விருது பிராந்திய எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் பென்யாமின் , மலையாள எழுத்தாளர் . பென்யாமின் எழுதிய அல் அரேபியன் நாவல் ஃபேக்டரி , ஜாஸ்மின் டேஸ் ஆகிய இரு நாவல்களும் வாசகர்களுக்கு இடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன . ஒன்றின் தொடர்ச்சியாக நீளும் இரு நாவல்களிலும் மத்திய கிழக்கில் ஏற்பட்ட அரேபிய வசந்தம் எனும் போராட்டம் பற்றிய மையத்தைக் கொண்டுள்ளன . 2014 ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியான நூல் 2018 ஆம் ஆண்டு ஜேசிபி எனும் இலக்கிய விருதைப் பெற்றது . இதன் மையம் அரசுக்கு எதிரான கிளர்ச்சி , வன்முறை , மக்கள் போராட்டத்தைப் பற்றியது . இதனை இந்தியாவுக்கும் கூட நினைத்துப் பார்க்கமுடியும் . ஏனெனில் இங்கும் அரசுக்கு எதிரான போராட்டங்கள் கொரோனாவை விட தீவிரமாக நடைபெற்று வருகின்றன . இப்போது என்ன எழுதிக்கொண்டிருக்கிறீர்கள் . தற்போதைய இந்திய அரசியல் பொருளாதார சூழல் உங்களுக்கு எழுதுவதற்கு உதவுகிறதா? இன்று இந்தியாவில் உள்ள அரசியல் நிலைமை பற்றிய நூல்கள் அடுத்த பத்தாண்டுகளில் அதிகம் வெளிவரும் . நான் தற்போது கேரளத்திலிருந்து மலேசியாவிற