இடுகைகள்

பசுமைப்பட்டாசு லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

நச்சுப்பொருட்களைக் கொண்ட பட்டாசுகளை கைவிடலாமா?

படம்
தீபாவளிக்கு பட்டாசுகளை வெடிப்பது என்பது கூடினாலும் குறைவதில்லை. வெடிப்பது மகிழ்ச்சிக்கான விஷயமாக இருந்தாலும் இதிலுள்ள வேதிப்பொருட்கள் காற்றை தொடர்ச்சியாக மாசுபடுத்தி வருகிறது. இதனை கவனத்தில் கொண்டு உச்சநீதிமன்றம், காற்றை  மாசுபடுத்தும் பேரியம் உப்புகளைக் கொண்டு பல நிறுவனங்கள் பட்டாசுகளை தயாரிக்கின்றன. மேலும் இதனை தயாரிப்பவர்களின் பெயர்களும் பட்டாசுகளில் இடம்பெயர வேண்டும் என்று கூறியது. ஆனால் எந்த முன்னேற்றமும் இதில் ஏற்படவில்லை. சுற்றுச்சூழல்துறை அமைச்சகம் விதிகளை மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க தயாராகி வருகிறது. மேலும் காற்று மாசுபடுதல் காரணமாக குறைப்பிரசவத்தில் குழந்தைகள் பிறப்பதும் அதிகரித்து வருகிறது.  மூன்று ஆண்டுகளுக்கு முன்னரே உச்சநீதிமன்றம், பட்டாசுகளை வெடிக்க தடை விதித்தது. குறைந்த மாசுபாடுகளைக் கொண்ட பசுமை பட்டாசுகளை வெடிக்கலாம் என பரிந்துரைத்தது. இதுதொடர்பான வழக்கை அர்ஜூன் கோபால்தாஸ் மற்றும் சிலர், அரசியலமைப்புச்சட்டம் 21 யைச் சுட்டிக்காட்டி தொடுத்தனர். பட்டாசுகள் வெடிப்பதால் பல்வேறு வேதித்துகள்களும் வாயுக்களும் வெளியாகின்றன. இதில் கடும் வெடிச்சத்தமும், பல்வேறு வண்ண ஒளியும