இடுகைகள்

மீன்கள் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

அன்டார்டிகாவின் வெடால் கடலில் வாழும் மீன்கள்!

படம்
  லட்சக்கணக்கான   மீன்கள் வாழும் காலனி! அன்டார்டிகாவில் வெடால் கடல் அமைந்துள்ளது. இங்கு, 500 மீட்டருக்கு கீழே தான் ஏராளமான மீன்கள் இனப்பெருக்கம் செய்கின்றன. 240 சதுர கி.மீ. தொலைவில் லட்சக்கணக்கான மீன்களின் வளை இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். இதுபற்றிய ஆய்வறிக்கை கரன்ட் பயாலஜி என்ற இதழில் வெளியாகியுள்ளது. கடலில் வாழும் ஐஸ் மீன்கள் இங்குள்ள சூழலுக்கு எந்த விதத்தில் பயனளிக்கிறது என ஆராய்ச்சியாளர்கள் இதுவரை ஆராய்ச்சி செய்யவில்லை.  ஜெர்மனியைச் சேர்ந்த ஆழ்கடல் ஆய்வாளர் ஆடுன் பர்சர், ஐஸ் மீன்களைப் பற்றிய தகவல்களை கண்டறிந்தார். இவர் ஜெர்மனியின் ஆல்ஃபிரட் வெக்னர் பல்கலைக்கழகத்தில் பணிபுரிகிறார். ஐஸ்கட்டிகளை துளைத்துச் செல்லும் வாகனத்துடன் சென்றவர், ஆராய்ச்சியை பதிவு செய்துள்ளார். கடல் படுகையை ஒலி மூலம் வரைபடமாக்கியுள்ளார்.  ஆய்வாளர்கள், நீருக்குள் சென்று ஆய்வு செய்தபோது, வட்டவடிவிலான வளையைக் கண்டனர். அங்கு, சிறுகற்களை அடுக்கி அதில் ஐஸ்ஃபிஷ் தனது முட்டைகளை இட்டிருந்தது. இந்த மீன் இனம், அன்டார்டிகாவில் மட்டுமே காணப்படுகிறது. இங்குள்ள கடுமையான குளிரையும் சமாளித்து மீன் வாழப்பழகிவிட்ட

சிம்பன்சிகள் அரசியல்வாதிகளாக முடியுமா? - மிஸ்டர் ரோனி

படம்
மிஸ்டர் ரோனி  தாவரங்கள் இசையைக் கேட்கின்றனவா? 1973ஆம் ஆண்டு வெளியான சீக்ரெட் லைஃப்  ஆப் பிளான்ட்ஸ் நூலில் தாவரங்கள் இசையைக் கேட்கின்றன என்ற தகவல் கூறப்பட்டிருந்தது. ஆனால் உண்மையில் அப்படி கேட்கவில்லை என ஆராய்ச்சியாளர்கள் கூறினர். தற்போது, தாவரங்கள் ஹிப்ஹாப், ராப் இசையைக் கேட்பதில்லை. ஆனால் பூச்சிகளின் ஓசையை கிரெஸ், ஸ்வீட் பீஸ் ஆகிய தாவரங்கள் கேட்பதாக ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். அதிர்வுகளை அறியும் தன்மை தாவரங்களில் இருக்கின்றன. எனவே இசை மூலமாக அதிர்வுகளை தாவரங்கள் சரியாக உள்வாங்கிக்கொள்கின்றன என்ற தகவலும் தெரிய வந்துள்ளது. ஈக்கள் பாடுகின்றனவா? பழ ஈக்கள் தம் இணையை ஈர்க்க பாடுகின்றன. இவை மூன்று வித பாடல்களை குரல் மாற்றங்களுடன் பாடுகின்றன. முக்கியமாக பாடுவது, பெண் இணையை ஈர்க்கத்தான். கொசுக்கள் பறக்கும்போது வரும் ஒலி, அதன் இறக்கையை வேகமாக வீசுவதால் ஏற்படுகிறது. மீன்கள் தம் கழிவை எப்படி வெளியேற்றுகின்றன? சிறுநீரில் நைட்ரஜன் பொருட்கள் நிரம்பியிருக்கும். இது நீரில் கரையக்கூடியது. ஏரி, ஆறு போன்ற இடங்களிலுள்ள மீன்களின் கழிவு சற்று திடமாக இருக்கும். ஆனால் கடலில் உள்ள மீன்கள் உப்ப

மீன்களைக் காப்பாற்றிய கடல் சூழலியலாளருக்கு அங்கீகாரம்!

படம்
indian women blog கடல் சூழலியலாளருக்கு ஃப்யூச்சர் பார் நேச்சர் விருது! திவ்யா கர்நாட், தன் இணையதளத்தில் மீன் தொடர்பான பல்வேறு உணவு வகைகளைப் பட்டியலிட்டுள்ளார். அதோடு சீசனில்  கடலில் கிடைக்கும் மீன்வகைகளை அதி துல்லியமாக பதிவு செய்துள்ள அக்கறைக்குத்தான் அவருக்கு ஃப்யூச்சர் ஃபார் நேச்சர் விருது (2019) கிடைத்துள்ளது. சென்னையில் பிறந்து வளர்ந்த பெண், திவ்யா.  சிறுவயதிலிருந்து விலங்குகள் மீதான பிரியம், அவரை சூழலியலாளராக மாற்றியுள்ளது.  currentaffairsadda நான் முதலில் கால்நடை மருத்துவராகவே முயன்றேன். ஆனால் காட்டுயிர் சார்ந்த துறையில் காலூன்றி உள்ளேன் என புன்னகைக்கிறார். கல்லூரியில் படிக்கும்போது கடல் ஆமைகள் பாதுகாப்பு இயக்கத்தில் இணைந்து செயல்பட்டிருக்கிறார். ஆலிவ் ரிட்லி ஆமைகளுக்காக தமிழ்நாடு மற்றும் ஒடிஷாவில் பணியாற்றிவர் இவர். ஆமைகளை மீனவர்கள் அழிப்பது போல காட்சியை ஊடகங்கள் உருவாக்கினாலும் அதனை உண்மையில்லை என்று மறுக்கிறார் திவ்யா. சீசனில்லாத போது, மீன்பிடி தடைக்காலத்திலும அவர்களுக்கு வாழ்வாதாரமாக மாறுவது இந்த ஆமைகள்தான். இவற்றை விற்று வரும் பணத்தை, வாழ்வ