இடுகைகள்

சத்யதேவ் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

ஊழல் செய்வர்களை பாம் வைத்து கொல்வான் கோட்ஸே! - கோட்ஸே - சத்யதேவ், ஐஸ்வர்யா லட்சுமி, பிரம்மாஜி

படம்
  கோட்ஸே சத்யதேவ், ஐஸ்வர்யா லட்சுமி, பிரம்மாஜி, பிருதிவிராஜ் director - gopi ganesh pattaphi ஒரு தொழிலதிபரின் வீட்டில் இந்தி பேசும் கொள்ளைக்காரர்கள்   நுழைந்துவிடுகிறார்கள். அவர்களிடமிருந்து கர்ப்பவதியான பெண்ணைக் காக்க வைஷாலி என்ற பெண் அதிகாரி முயல்கிறார். ஆனால் அதற்குள் மேலதிகாரி தலையிட்டு ஒருவனை சுட்டு வீழ்த்த இன்னொருவன் கர்ப்பிணியின் கழுத்தை அறுத்துவிடுகிறான். இந்த சம்பவம் நடந்தபிறகு ஐஸ்வர்யா குற்றவுணர்ச்சி கொண்டு தனது வேலையை ராஜினாமா செய்ய நினைக்கிறார். ஆனால் மேலதிகாரி அதை ஏற்கவில்லை.   பிறகு அவரை   மாநில அரசு உயர் அதிகாரிகள் அவசர வேலைக்காக என்று அழைக்கிறார்கள். அழைத்தால் அங்கு ஒருவர் தான் வைஷாலி   என்ற அதிகாரியிடம் மட்டும்தான் பேசுவேன் என்கிறார். அங்கு பணயக் கைதியாக இருப்பவர், ஐஸ்வர்யாவின் துறை தலைவர்.   தன்னை கோட்ஸே என்று சொல்லிக் கொண்டு முக்கியமான முதல்வருக்கு நெருக்கமான ஆட்களை கடத்தியவர் யார், அவரது உண்மையான அடையாளம் என்ன, ஏன் அப்படி கடத்தி சிலரைக் கொல்கிறார், பிறரை சித்திரவதை செய்கிறார் என்பதே படத்தின் முக்கியமான பகுதி. மக்களுக்கு எந்த நன்மையும் செய்யாமல் அவர்களது கனவு

ஒலியே இல்லாத உலகை உருவாக்க முயல்பவனின் வாழ்க்கையில் வரும் இசை! குவ்வா கோரிங்கா -

படம்
  குவ்வா கோரிங்கா தமிழில்  காதல் பறவைகள் சத்தமே பிடிக்காமல் அலர்ஜியாக இருப்பவன், தாயின் இசை ஆர்வத்தை நிறைவேற்றுவதற்காக வயலின் இசைக்கும் பெண் என இருவரும் அருகருகே அறை அமைந்தால் எப்படியிருக்கும்.  அதுதான் படத்தின் கதை.  படத்தில் லாஜிக் பார்க்க நிறைய விஷயங்கள் இருக்கிறது. ஆனால் அதை பார்க்காமல் இருந்தால் படம் ரசிக்கும்படி இருக்கும். குறிப்பாக சத்யதேவ், பிரியா லால் ஆகியோரின் இரு அறைகளும் ஒருவர் பேசுவதை எளிதாக பிறர் கேட்பது போல இருப்பது.  இதுதான் படத்தின் முக்கியமான அம்சம்.  சத்யதேவைப் பொறுத்தவரை அவருடைய இயல்பில் எளிதாக படத்தில் நடித்து விடுகிறார். ஆனால் பிரியா லால் விஷயத்தில் இது சரியாக நடக்கவில்லை. அதாவது, தன்னை பிரியா பயன்படுத்திக்கொண்டார் என்பதை அவரது அப்பா மூலம் சத்யதேவ் அறியும் காட்சி. அதற்கு பின்னான பிரியா லாலின் காட்சிகள் அழுத்தமானவை. அதில் பிரியா அந்தளவு அழுத்தமாக நடிக்கவில்லை.  படத்தில் சத்யதேவின் பாத்திரத்திற்கு சைலன்சர், பிரியாவுக்கு வயலின் என்று பெயர். நிஜப் பெயரை விட இதுவே படத்தின் தன்மைக்கு மிக பொருத்தமாக ஒத்து வருகிறது. சத்யாவுக்கு, அதிக சத்தம் வராத ஒரு எஞ்சினை தயாரிப்பதே கனவ

கிராமத்தின் மீது விண்கலம் விழுந்தால்....- ஸ்கைலேப் - தெலுங்கு 2022

படம்
  ஸ்கைலேப் தெலுங்கு ஆந்திரத்திலுள்ள பழமையான நம்பிக்கைகள் மாறாத ஊர். அங்கு தீண்டாமை இருக்கிறது. பள்ளிக்கூடத்தை கூட அதற்காக பூட்டி வைத்துள்ளனர். தலித்துகளை கோவிலுக்குள் அனுமதிப்பதில்லை. அந்த இனத்திற்குள் யாராவது உடல்நலக்குறைவு வந்தால் கூட அவர்களை வைத்தியர் தொட்டு பார்ப்பதில்லை. இந்த நேரத்தில் அங்கு ஸ்கைலேப் என்ற விண்கலம் விழுவதாக செய்தி வருகிறது. மரண பயத்தில் உள்ள மக்களின் மனதில் என்னென்ன மாற்றங்கள் ஏற்படுகின்றன என்பதுதான் மையக் கதை.  இதில் முக்கியமான கதை கௌரி என்ற ஜமீன்தாரின் மகள், மருத்துவ உரிமம் தடை செய்யப்பட அதனை திரும்ப பெற 5 ஆயிரம் ரூபாய் பணத்தைப் பெற தாத்தாவைத் தேடி வரும் ஆனந்த் ஆகிய இருவரைச் பற்றியது.  இந்த படத்தை நித்யாமேனன் தயாரித்து நடித்திருக்கிறார். தனது பரம்பரை, சொத்து காரணமாக தான் மேதாவி என நினைத்துக்கொண்டு சிபாரிசில் ஹைதராபாத்தில் உள்ள பத்திரிக்கையில் வேலை செய்கிறார். ஆனால் இவரது கட்டுரை பிரசுரமானாலும் கூட இலக்கணமும், அதில் எழுதும் விஷயங்களும் சரியாக இருப்பதில்லை. இதை கௌரி பெரிதாக கண்டுகொள்வதில்லை. இதனை மெல்ல அவர் உணர்ந்துகொண்டு சிறந்த பத்திரிக்கையாளராக எப்படி மாறினார் என