மனநலனைக் கட்டுப்படுத்தும் உயிரிவேதியியல் மருந்துகள் - மனமறிந்து பழகு இறுதிப்பகுதி!
pixabay மனமறிந்து பழகு! - இறுதிப்பகுதி வேதிப்பொருட்களால் சிகிச்சை ஒருவருக்கு சூழல்களாலும் , தன்னுடைய குழந்தைப்பருவ வலி நிரம்பிய அனுபவங்களாலும் பாதிப்பு ஏற்படலாம் . அதன் காரணமாக ஏற்படும் பாதிப்புகள் இயல்பாக , பழக்கவழக்கமாக மாறிவிடுவதை தெரபிகளால் மட்டுமே குணப்படுத்திவிட முடியாது . அதற்காகவே வேதியியல்ரீதியான மருந்துகள் பயன்படுத்தப்படுகின்றன . அமெரிக்காவில் 2017 ஆம் ஆண்டு எடுத்த ஆய்வுப்படி , அங்கு 1999 முதல் 2014 வரையிலான காலகட்டத்தில் மன அழுத்த மருந்துகளின் பயன்பாட்டு அளவு 95 சதவீதம் கூடியுள்ளது . இதற்கு முக்கியக் காரணம் , தொழில்துறை மாற்றங்கள் , பொறுப்புகள் கூடியுள்ளதும் , உறவு சார்ந்த சிக்கல்களும் முக்கிய காரணமாக உள்ளன . இவற்றுக்கு தெரபியோடு மூளையிலுள்ள செரடோனின் போன்ற மனநிலையை மாற்றும் சுரப்புகளைக் கட்டுப்படுத்த மருந்துகள் வழங்கப்படுகின்றன . இவற்றை மருத்துவரின் பரிந்துரைப்படி குறிப்பிட்ட அளவு மட்டுமே பயன்படுத்தவேண்டும் . இந்த மருந்துகளுக்கும் உடல் கட்டுப்பட மறுத்தால் , இறுதிக்கட்டமாக மூளையில் சிறிய அளவு மின்சாரம் செலுத்தப்படும் . இப்போது மனநல சிகிச்சைகளுக்குப் பயன்படும் மருந்த