இடுகைகள்

வெறுப்பு பேச்சு லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

வாக்குவங்கி அரசியல் - சமகாலத்தின் நவீன பிரித்தாளும் கொள்கை

படம்
              வாக்கு வங்கி எனும் சூழ்ச்சி  வாக்குவங்கி அரசியல் - சமகாலத்தின் நவீன பிரித்தாளும் கொள்கை  சில சமயங்கள் தொடர்ந்து அடக்குமுறைக்கு ஆட்படுத்தப்படும்  சிறுபான்மை இனக்குழுவில்  இருப்பது  குறித்து எண்ணி ஆச்சர்யமுறுவேன். நான் முஸ்லீமோ (அ) தலித்தோ அல்ல. பெண்ணும் அல்ல. வடகிழக்கு பகுதியைச் சேர்ந்தவனும் இல்லை. இந்தியாவின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்தவர்களைவிடவும் வடகிழக்குப் பகுதியைச் சார்ந்தவர்கள் பெரிதும் தோற்றத்தில் வேறுபடுகிறவர்கள் ஆவர். வங்கியில் வெளிநாட்டில் வேலை செய்தபோது, இந்தியர்களை வித்தியாசம் பாராட்டும் தன்மை என்னை சிறுபான்மையினராக உணரச்செய்தது. இன்றும் அந்த பாகுபாடான மனநிலை அற்பத்தனமானது என்றே நினைக்கிறேன்.  சிறுபான்மை சமுதாயத்தை சேர்ந்தவர்களது உணர்ச்சிகளை முழுமையாக என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை. இன்றும் இந்தியாவைச் சேர்ந்த சிறுபான்மை சமுதாயத்தைச் சேர்ந்த உறுப்பினர்களுக்கு அறிவுரை கூற அதிக துணிச்சல் தேவைப்படுகிறது. அவர்களின் சூழலை உணர்ந்து பேச நம்மில் பெரும்பான்மை இனக்குழு சார்ந்தவர்களுக்கு கூட முழுமையான தகு...

சுய ஒழுங்கு சமூக வலைத்தளங்களுக்கு முக்கியமா? -

படம்
                சுய ஒழுங்கு சமூக வலைத்தளங்களுக்கு முக்கியமா ? ஹார்வர்ட் பிசினஸ் ரிவ்யூ இதழில் மூன்று வல்லுநர்கள் சமூக வலைத்தளங்கள் தங்களைத் தாங்களே ஒழுங்குமுறைபடுத்திக் கொள்ளவேண்டுமென கூறியுள்ளனர் . அமெரிக்காவில் கேபிடல் ஹில் தாக்குதலுக்கு சமூக வலைத்தளங்களே காரணமாக இருந்தன . இச்சம்பவம் நடைபெற்று ஒரு மாதத்திற்குப் பிறகு சமூக வலைத்தளங்களை ஒழுங்குபடுத்தும் சட்டங்களை பிரதமர் மோடி உருவாக்கினார் . இதற்கு வாட்ஸ்அப் , ட்விட்டர் ஆகிய நிறுவனங்கள் எதிர்ப்பு தெரிவித்து வழக்கு தொடுத்துள்ளன . இதுபற்றிய தகவல்களைப் பார்ப்போம் . உலகிலுள்ள 33 சதவீத நாடுகள் சமூக வலைத்தளங்களை கட்டுப்பாடுகளுடன் இயங்க வலியுறுத்தியுள்ளன . மூன்றில் ஒரு நாடு சமூக வலைத்தளங்களை சட்ட ரீதியாக கட்டுப்படுத்தியுள்ளது . உலகில் 13 சதவீத நாடுகள் சமூக வலைத்தளங்களை முழுமையாக தடுத்துள்ளன . வட அமெரிக்காவில் கட்டுப்பாட்டு சட்டங்கள் கிடையாது . ஆனால் தென் அமெரிக்காவில் சட்டங்கள் உள்ளன . 2015 ஆம் ஆண்டு தொடங்கி முப்பது நாடுகளில் நான்கு நாடுகள் சமூக வலைத்தளங்களை தடுக்கத் தொ...

இளைஞர்களின் மீதான இணையத் தாக்குதல் அதிகரிப்பு!

படம்
the conversation இணையம்தான் இன்று மக்கள் கூடும் டிஜிட்டல் பொது இடங்களாக உள்ளன. மக்கள் கூடும் இடங்களில் நடைபெறும் கேலி, கிண்டல், வன்முறை, ஆபாசப்பதிவுகள்  என அனைத்தும் டிஜிட்டல் உலகிலும் நடைபெறுகிறது. தேசிய குற்ற ஆவண காப்பகம் வெளியிட்ட தகவல் அறிக்கையில் பத்தில் ஒரு இந்தியர் இதுபோன்ற இணையத்தாக்குதல்களை சந்தித்து வருவதாக தெரிய வந்துள்ளது. ஆண்டுதோறும் இந்த எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. சைல்ட் ரைட்ஸ் அண்ட் யூ எனும் தன்னார்வ அமைப்பு டில்லி பகுதியில் எடுத்த ஆய்வுப்படி, இளைஞர்கள் மீதான தாக்குதல் (13-18) 22.4 சதவீதம் அதிகரித்துள்ளதாக தெரிய வந்துள்ளது. இளைஞர்களில் நான்கில் ஒருவர் மார்பிங் செய்த புகைப்படத்தைப் பார்ப்பதாகவும், அதுபற்றி காவல்துறையில் புகார் செய்வதில்லை என்றும் தெரிய வந்துள்ளது. 2017ஆம் ஆண்டை விட பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதான இணையத்தாக்குதல் அதிகரித்துள்ளது. மொத்தத்தில் இணையம் சார்ந்த குற்றங்கள் 2018ஆம் ஆண்டில் 25 சதவீதம் அதிகரித்துள்ளன. இணையத்தில்  சொற்கள் சார்ந்த வன்முறை இயல்பானதாக மாறிவிட்டது. தொலைவில் இருப்பதாலும், முகம் தெரியாது என்பதாலும் தன்னுடைய ம...