இடுகைகள்

எதிர் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

பாகிஸ்தானில் கல்வி கற்க போராடிய முஸ்லீம் எழுத்தாளரின் சுயசரிதை!

            வார்த்தைகளில் ஒரு வாழ்க்கை இஸ்மத் சுக்தாய் மொழிபெயர்ப்பு சசிகலா பாபு எதிர் வெளியீடு பாகிஸ்தானில் பிறந்து வளர்ந்த எழுத்தாளர் இஸ்மத் சுக்தாய். அவரின் சுயசரிதைதான் வார்த்தைகளில் ஒரு வாழ்க்கையாக மாறியுள்ளது. இஸ்லாம் மதத்தை தழுவியவராக இருந்து கல்விக்காக பெருமுயற்சி செய்து படித்து பள்ளிகளில் தலைமை ஆசிரியையாக பணியாற்றி பிறகு எழுத்தாளராக மாறியவர் இஸ்மத் சுக்தாய். இஸ்மத்தின் குடும்பத்தில் மொத்தம் பத்து பிள்ளைகள். ஆறு ஆண்கள், நான்கு பெண்கள். அப்பா, ஆங்கிலேய அரசில் நீதிபதியாக இருந்தவர். இதனால், செல்வாக்காக வளர்ந்தவர். நூலில் முஸ்லீம் பெண்ணாக வளர்வது, கல்வி சார்ந்த முக்கியத்துவம் எப்படியுள்ளது, திருமணம், அதன் சடங்குகள், ஆண்களுக்கான சுதந்திரம், பெண்களுக்கான தடைகள், பெண்களை முடக்கும் மூடநம்பிக்கைகள், இந்துக்களின் தீட்டு, புராண பெருமைகள், போலியான புனித நடவடிக்கைகள் என அனைத்தையும் போட்டு உடைத்திருக்கிறார். இஸ்மத்தின் இயல்பே மனதில் பட்டதை பேசுவது என இருந்ததால், குடும்பம் உறவினர்கள், கதைகளை வாசித்தவர்கள், முற்போக்கு எழுத்தாளர்கள், பிற்போக்கான இஸ்லாமியர்கள், நாளித...

உடலைத் தீய்க்கும் பாலைவனப் பயணத்தில் இயற்கையைப் புரிந்துகொள்ளும் பெண்! தடங்கள் -ராபின் டேவிட்சன்

படம்
  தடங்கள் ராபின் டேவிட்சன் தமிழில் – பத்மஜா நாராயணன் எதிர் வெளியீடு   அமெரிக்காவைச் சேர்ந்த பெண்மணி, ஆஸ்திரேலியாவின் பாலைவனத்தை தனியாக கடக்கிற பயணத்தை, அதற்கான திட்டமிடலை, போராட்டத்தை க்கூறுகிற கதை இது. நூல் மொத்தம் 300 பக்கங்களைக் கொண்டுள்ளது. இந்த பக்கங்கள் முழுவதும் ஒட்டகங்கள், அவற்றை வளர்ப்பது, பாதுகாப்பது, பராமரிப்பது பற்றித்தான் அதிகம் பேசப்பட்டுள்ளது. டூக்கி, கோலியாத், ஜெலிகா ஆகிய ஒட்டகங்களோடு ஆசிரியருக்கு இருக்கும் உறவானது, மனிதர்களோடு இருக்கும் உறவை விட உறுதியானதாக மாறுகிறது. டிக்கிட்டி எனும் பெண் நாயை ஆசிரியர் இழக்கும் சமயம், ஆசிரியரின் மனதிற்குள் நடக்கும் விரக்தி, வெறுமை நம்மையும் பற்றிக்கொள்கிறது. பாலைவனப் பரப்பு மனித மனங்களில் ஏற்படுத்தும் பாதிப்புகளை   விளக்கும் பகுதிகள் சிறப்பாக எழுத்து வடிவம் பெற்றுள்ளன. வெப்பம், மிக அதிக வெப்பம், தாங்க முடியாத வெப்பம் என்பதே அங்கு பயணிப்பவர்கள் அனுபவிக்கவேண்டிய சூழ்நிலை. இந்த நிலையில் ஒருவர் சந்திக்கும் அனுபவங்கள் என்னவாக இருக்கும்? காட்டு ஒட்டகங்களின் தாக்குதல், சுற்றுலா பயணிகளின் நாகரிகமே இல்லாத புகைப்பட வ...

வாய்தா கிடைக்காத வட்டார வழக்கு! -

படம்
  மயிலாப்பூர் டைம்ஸ் வாய்தா கிடைக்காத வட்டார வழக்கு இந்திய ஒன்றியத்தில் நிறைய வாய்க்கால் வரப்பு தகராறுகள் உண்டு. இவை மதம், இனம், மொழி  என பலதரப்பட்டது. இதில் முக்கியமானதாக தேசியக்கட்சிகள் மதத்தை நினைக்கின்றன. அதை முக்கியப்படுத்தி மக்களைப் பிரித்து மண்டலமாக்கினால் தேர்தலில் ஜெயித்து விடலாம் என நினைக்கின்றனர். ஆனால் அதுவும் கூட கடினம்தான். தமிழ் பேசுபவர்களில்  நிறைய வேறுபாடுகள் உண்டு.  அதுதான் மண்டல ரீதியான வட்டார வழக்கு. கோவையிலும், ஈரோட்டிலும், திருவண்ணாமலையிலும் பேசுவது தமிழாக இருந்தாலும் அதில் என்ன பேசுகிறார்கள், எதைக் குறிப்பிடுகிறார்கள் என்று புரிந்துகொள்வது கடினம். குறிப்பிட்ட பொருளை என்ன வார்த்தை கொண்டு சொல்ல வருகிறார்கள் என்பதில்தான் அனைத்தும் மாட்டிக்கொள்கிறது. நான் சென்னைக்கு வந்த புதிதில் பேசும்போது, என்னுடைய ஊரில் இருப்பதாக நினைத்துக்கொண்டே பேசுவேன். இதெல்லாம் அறையில் இருந்த எனது ஊர்க்கார அண்ணன்களுக்கு சரிதான். அவர்கள் புரிந்துகொண்டார்கள். எந்த பிரச்னையும் இல்லை. ஆனால், அதுவே வெளியில் போய் பேசும்போது நிறைய பிரச்னைகள் கிளம்பின.  மயிலாப்பூரில் லக்கி என்...