உணவில் தில்லுமுல்லு! - கலப்படத்தின் ஆபத்து
pixabay பாலில் வேதிப்பொருட்களை கலப்பது, கோதுமை மாவில் சோயா மாவு கலப்பு, எண்ணெயில் ஆர்ஜிமோன் எண்ணெய் கலப்பு என கலப்படம் இல்லாத உணவு வணிகம் கிடையாது என்று ஆகிவிட்டது. வணிகத்திற்கு கருணை கிடையாது என்பதால் உணவில் பாரபட்சம் பார்க்காமல் கல், மண், மலிவான எண்ணெய்களை கலந்து விற்கிறார்கள். அனைத்து தில்லுமுல்லுகளையும் செய்துவிட்டு மேட் இன் இந்தியா என்று பிரின்ட் செய்து விற்பனைக்கு அனுப்பி விடுகிறார்கள். சாதாரண உணவில் உள்ள கலப்படத்தைக் கண்டறிய சற்று கூர்மையான நாக்கும் அறிவும் தேவை. 2013ஆம் ஆண்டு உலகளவில் டின்னில் அடைக்கப்பட்ட இறைச்சிப் பொருட்களை சோதனை செய்தனர். அதில் மாட்டு இறைச்சி என்று எழுதப்பட்ட டின்களில் மாட்டிறைச்சிக்கு பதிலாக குதிரை இறைச்சி உள்ளீடு செய்யப்பட்டிருந்தது. கறிகளில் என்ன தீண்டாமனை என அதிலும் கலப்படம் செய்து உலகளவில் மாட்டிறைச்சி உணவுகளுக்கான சந்தையை தில்லாலங்கடி ஆட்கள் குலைத்தனர். பால் பொருட்களில் பலரும் தில்லுமுல்லு வேலைகளைச்செய்கிறார்கள். இன்று உங்கள் கையில் கிடைக்கும் பால் பாக்கெட்டை பால் பண்ணையில் நான்கு நாட்களுக்கு முன்னரே வேதிப்பொருட்களை சேர்த்து குறிப்பிட்ட