பசிக்கும் உணவுக்கும் என்ன தொடர்பு?





Slums, India, Girl, Poor, Lovely, Street, Hindu
pixabay


பசியும் ஆசையும்!

நமக்கு பசி ஏற்படுவது அவசியமான தேவை. தூக்கம், பசி என்ற இரண்டுமே உடலின் அடிப்படைத் தேவை. உடலுறவு போன்றவை பிற ஆசைகள். உடலின் ஆற்றல் குறையும்போது இரண்டு விஷயங்கள் நமக்கு ஏற்படும். ஒன்று பசி, மற்றொன்று தூக்கம்.

பசி எப்படி தோன்றுகிறது? வயிற்றிலுள்ள குடல்பகுதி, கொழுப்பு சேகரிக்கும் பகுதி, மூளை, கண்கள், வாய் ஆகியவற்றால் பசி உருவாகிறது. கட்டுப்படுத்தப்படுகிறது. மதிய நேரத்தில் நிலாச்சோறு உணவகத்தைப் பார்த்தவுடனே எப்படி பசிக்கிறது? நீங்கள் அந்த உணவகத்தைப் பார்க்கிறீர்கள். அங்கு வடை, போண்டா தட்டில் இருக்கிறது. பல்வேறு நிறங்களில் உள்ள உணவுகளை அங்குள்ள மக்கள் வேகமாக அள்ளி சாப்பிடுகிறார்கள். இதைப்பார்க்கும் கண்கள் மூளைக்கு சிக்னல் கொடுக்க, மூளை வயிற்றை சோதனையிட்டால் அங்கு உணவு இருக்கிறதா என்பது தெரிந்துவிடும். உடனே வயிற்றில் சத்தம் கேட்கத்தொடங்க, வாயில் உமிழ்நீர் சுரக்கத் தொடங்குகிறது.

நீர் 

உடலில் எளிதாக உட்கிரகிக்கப்படுகிறது. தாகத்தைப் போக்குகிறது. உடலைக் குளிர்விக்கிறது.

ஃபைபர் 

பல்வேறு தானியங்களில் நிறைந்துள்ளது. செரிக்க கடினமானது. எனவே வயிற்றை நிறைத்து சாப்பிட்ட உணர்வைத் தருகிறது.

புரதம்

புரதம் நிறைந்துள்ள பருப்பு, இறைச்சி போன்ற உணவுகளை வெறித்தனமாக தின்றால், வயிறு நிறைந்துவிடும். சாப்பிடும் ஆசையைத் தூண்டும் லெப்டின் சுரப்பைக் கட்டுப்படுத்துகிறது. எனவே சாப்பிட என்ன  இருக்கிறது என்று அடுத்தவர் ட்ராயரை தேட மாட்டீர்கள்.முக்கியமாக நீங்கள் நீங்களாக இருப்பீர்கள். 

திராட்சைப்பழம்

இப்பழத்தின் மணம் உங்களின் நாக்கை கட்டிப்போட்டு லேஸ், சீட்டோஸ் தேடுவதைத் தடுக்கிறது.


உடற்பயிற்சி 

ஏரோபிக் உடற்பயிற்சிகளை தினசரி செய்து வந்தால் தற்காலிகமாக பசியைக் கட்டுப்படுத்த முடியும்.

நன்றி - ஹவ் இட் வொர்க்ஸ் இதழ்