ஒரு கி.மீ. தூரத்தில் ஆட்களை அடையாளம் காணும் அமெரிக்கா!



Image result for face recognition



முகமறிதல் சோதனையில் முன்னேறும் அமெரிக்கா!



அமெரிக்க ராணுவம் முகமறிதல் சோதனையில் அடுத்தகட்ட முன்னேற்றத்தை அடைந்துள்ளது. ராணுவத்துறை உருவாக்கிய சிறிய கருவி, ஒரு கி.மீ. தூரத்திற்கு முன்பாகவே ஒருவரை அடையாளம் கண்டுவிடும் என்று கூறப்படுகிறது.

அமெரிக்காவின் சிறப்பு பணிகளைச் செய்யும் சோகாம் எனும் அமைப்பு இதற்கான பொறுப்புகளை ஏற்று செயல்பட்டு வந்தது. 2019ஆம் ஆண்டு முகமறிதல் சோதனைக்கான மாதிரி கருவியை உருவாக்கி விட்டனர். மேலதிக தகவல்களை ராணுவ அமைச்சகம் வெளியிடவில்லை.

குற்றச்செயல்பாடுகளில் தொடர்புடையவர்களை கண்டறிய இக்கருவி ட்ரோன்களின் பொருத்தப்படவிருக்கிறது. இவற்றை சட்ட ஒழுங்குத் துறைக்கு ராணுவ அமைச்சகம் வழங்கப்போகிறது. இதன்மூலம் குற்றம் செய்பவர்களை எளிதாக ட்ரோனை பறக்கவிட்டே பிடித்துவிடலாம். அமெரிக்காவிலுள்ள செக்யூர் பிளானட் எனும் அமைப்பு, எஸ்எல்ஆர் கேமரா பொருத்தப்பட்டு மக்களை கண்காணிக்க ஏற்பாடானது. ஆனால் இதில் கேமராவின் திறன் மற்றும் ட்ரோன் ஏற்படுத்திய இரைச்சல் தொல்லையாக இருந்தது. இதில் பல்வேறு மேம்பாடுகளை ராணுவ அமைச்சகம் உருவாக்கி வருகிறது. மேற்சொன்ன திறனில் ஒருவரை பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம் அளவுக்கே சோதிக்க முடியும். ஆஸ்திரேலியாவிலுள்ள நிறுவனம், முகமறிதல் சோதனையில் குறிப்பிடத்தக்க வெற்றியைப் பெற்றுள்ளது. இந்தியானாவிலுள்ள ஆய்வாளர்கள் சிக்கல்களைத் தீர்த்து வெற்றி பெற உழைத்து வருகின்றனர். ட்ரோன்களில் இந்த தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி யாரை வேண்டுமானாலும் கொல்ல முடியும் என்கிறது ஆம்னெஸ்டி இன்டர்நேஷனல் அமைப்பு.

நன்றி - நியூ சயின்டிஸ்ட்