இடுகைகள்

மாணவர்கள் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

குறுக்கே கௌசிக் வந்தாலும் செய்த காரியத்தை கவனத்தில் கொள்வது எப்படி?

படம்
  பாண்டியன் ஹோட்டலுக்கு செல்கிறீர்கள். அங்கு சோற்றை சுண்ணாம்பு போட்டு வடிப்பார்கள். அதை கொஞ்சம் சாப்பிட்டாலே வயிறு அடைத்துவிடும். அதெல்லாம் இருக்கட்டும். அங்கு இருக்கும் பரிசாரகர் உங்களுக்கு சாப்பிட தயாராக உள்ள பல்வேறு உணவு வகைகளை காட்டுவார். என்னென்ன சாப்பிட்டீர்கள் என்பதை பணம் தராதவரை துல்லியமாக நினைவுவைத்து கல்லாவிலுள்ள முதலாளிக்கு கூறுவார். அப்படி கூறியவுடனே அதை மறந்துவிட்டு அடுத்த ஆளை கவனிக்க போய்விட்டார். ஒருவருக்கு அத்தனை இரைச்சலில், பரிமாறும் வேலைகளை செய்தபடியே அந்தந்த மேசையில் உள்ளவர்களுக்கு என்ன வேண்டும் என்று கேட்டபடியே என்ன சாப்பிட்டார் என்றும் நினைவு வைத்துக்கொள்கிறார். எப்படி சாத்தியமாகிறது? இதை ஸெய்கார்னிக் விளைவு என்று குறிப்பிடுகிறார்கள்.  அதாவது, நிறைவடைந்த செயலை விட நிறைவடையாமல் தொக்கி நிற்கும் செயலே பலரையும் ஈர்க்கிறது. எனவே, அதை கவனத்தில் கொண்டு நிறைவு செய்ய முயல்கிறார்கள்.  அதாவது ஒருவருக்கு வேலைகளை ஒதுக்கிவிட்டு அதன் இடையில் சில தடங்கல்களை செய்தால் முதலில் ஏற்றுக்கொண்ட வேலைகளை கவனமாக செய்யவேண்டும் என முயல்வார்கள். இதனால் அவரின் மூளை சுறுசுறுப்பாகி நினைவுகளை தீவிர

இங்கிலாந்தில் உள்ள அரசுபள்ளிகளை பழுதுபார்க்க நிதி ஒதுக்க மறுக்கும் பிரதமர்!

படம்
  இங்கிலாந்தில் அரசுப்பள்ளி கட்டிடங்கள் பழுதுபார்க்க பணமின்றி தடுமாறி வருகின்றன. இந்த கட்டுமானங்கள் ராக் எனும் கான்க்ரீட் கலவையால் கட்டப்பட்டவை. இந்த வகை கான்க்ரீட் அதிக எடையில்லாதது என்பதால் கட்டுமான நிறுவனங்கள் இதை தேர்ந்தெடுத்தன. கான்க்ரீட் அதாவது சிமெண்டிற்கு காலாவதி நாள் உண்டு என்பதே பலருக்கும் தெரிவதில்லை. இதை அரசும் கண்டுகொள்ளாமல் இருப்பதுதான் அங்கு பேசுபொருளாக உள்ளது. ராக் கான்க்ரீட் கலவை வீடுகளின் மேற்கூரை மாடிகள், சுவர்கள் கட்டப்பயன்படுத்தப்படுகிறது. இங்கிலாந்தில் அரசு பள்ளிகள், மருத்துவமனைகள் மற்றும பிற கட்டுமானங்கள் அனைத்துமே ராக் கலவையால் கட்டப்பட்ட காலம் ஒன்றுண்டு. அதுதான் 1950 முதல் 1990கள் வரை. தேசிய தணிக்கை அலுவலகம், 196 ஆய்வறிக்கை அடிப்படையில் 65 பள்ளிகளில் இருபத்து நான்கு பள்ளிகளுக்கு உடனடியாக பழுதுபார்ப்பு அவசியம் என பரிந்துரைத்துள்ளது. கல்வித்துறை செய்த ஆய்வுகளில் ராக் கான்க்ரீட்டில் முழுமையாக கட்டப்பட்ட 572 பள்ளிகள் ஆபத்தில் உள்ளன என தெரியவந்துள்ளது. ராக் கலவைக்கான காலாவதி முப்பது ஆண்டுகள் ஆகும். இந்த வகையில் 38 சதவீத பள்ளிகள், அதாவது 24 ஆயிரம் பள்ளிகள் தங்கள்

மேற்கு நாடுகளின் கல்வி நிறுவனங்களைக் கண்காணிக்கும் சீன அரசு!

படம்
  டியூக் பல்கலைக்கழகம், சீனா நியூயார்க் பல்கலைக்கழகம், சீனா லிவர்பூல் பல்கலைக்கழகம், சீனா வெளிநாட்டு பல்கலைக்கழகங்களை கண்காணிக்கும் சீனா! சீனா, தனது நாட்டிற்குள் வெளிநாட்டினரின் சிந்தனைகள் நூல் வழியாக அல்லது வேறு எந்த வழியாக வருவதையும் விரும்புவதில்லை. இதற்கு எடுத்துக்காட்டாக அங்கு செயல்பட்டுவரும் நியூயார்க் பல்கலைக்கழகம், டியூக் பல்கலைக்கழகம், லிவர்பூல் பல்கலைக்கழகம் ஆகியவற்றில் நடந்து வரும் மாற்றங்களைக் கூறலாம். இங்கு அமெரிக்காவின் சுதந்திரமான சிந்தனை கொண்ட பேராசிரியர்களை பல்கலைக்கழக போர்டில் உள்ள கம்யூனிச கட்சியினர் மெல்ல அகற்றி வருகின்றனர். பாடநூல்களையும் மாற்றச்சொல்லி அழுத்தம் கொடுத்து வருகின்றனர். சீனாவில் வந்து கல்வித் தொழில் சேவையை செய்யும் அமெரிக்க பல்கலைக்கழகங்கள் அனைத்திலும் சீன அரசின் பங்களிப்பு உண்டு. அதாவது, தொழில் கூட்டாளி. எனவே, இந்த அடிப்படையில் கம்யூனிச கட்சி உறுப்பினர்   போர்டில் அமர்ந்து சீன அரசின் பல்வேறு கல்வித் திட்டங்களை, விருப்பு வெறுப்புகளை நடைமுறைப்படுத்தி வருகிறார். இதை பல்கலைக்கழகம் மறுக்க முடியாத சூழ்நிலையில் உள்ளது. மேற்குநாடுகளின் அறிவியல், பொறியிய

ஒருவரின் முழுமையான திறனை உணரவைப்பதே கல்வி - ஜே.கிருஷ்ணமூர்த்தி

படம்
  தி ரைட் கைண்ட் ஆஃப் எஜூகேஷன் ஆங்கில நூலில் இருந்து… ஜே.கிருஷ்ணமூர்த்தி தமிழாக்க வடிவம்   வாழ்க்கை என்பது நீர்நிலை என எடுத்துக்கொண்டால், அதில் ஒருவர் நீரை வாளி மூலம் அள்ளி எடுத்தால் அந்த வாளியின் கொள்ளளவுக்கே நீர் கிடைக்கும். பெரிய பாத்திரம் வைத்து அள்ளினால், அதிக நீர் கிடைக்கும். அதன் மூலம் ஒருவர் நீர்தேவையை தீர்த்துக்கொள்ளலாம். பற்றாக்குறையை சமாளித்து வாழலாம். ஒருவர் இளமையாக இருக்கும்போது, தன்னைப் பற்றிய தேடுதலை செய்ய அதிக நேரம் கிடைக்கும். பல்வேறு விஷயங்களைப் பற்றி அவர் ஆராய்ந்து பார்க்கலாம். இந்த சமயத்தில் பள்ளி என்பது ஒருவரின் பொறுப்புகள், ஆர்வம் பற்றி பல்வேறு விஷயங்களைத் தெரிந்துகொள்ள உதவலாம். இந்த நேரத்தில் அவர்கள் தங்கள் மனதில் பல்வேறு புள்ளிவிவரங்கள், தொழில்நுட்ப அறிவு என போட்டு அடைத்துக்கொள்ள வேண்டியதில்லை. இளைஞர்களின் மனம் என்பது வளம் நிறைந்த மண் போல. அதில் பயமின்றி, மகிழ்ச்சியான வளர்ச்சிக்கு உகந்த விஷயங்கள் உருவாகி வளர வேண்டும். சுதந்திரமும் முழுமையான இயல்பையும் சிறுவர்களுக்குக் கற்றுக்கொடுப்பது அவசியம்.   எளிமையாக ஒருவர் வாழும்போதுதான் முழுமையான நிலையை கற்றுக்

மாணவர்கள் கல்வி கற்க உதவும் தி பைசைக்கிள் புராஜெக்ட்!

படம்
  தி பைசைக்கிள் புராஜெக்ட் மகாராஷ்டிரத்தைச் சேர்ந்தவர், ஹேமந்த் சாப்ரா. இவர் 2009ஆம் ஆண்டு தி பைசைக்கிள் புராஜெக்டைத் தொடங்கினார். இதன்படி நகரங்களில் உள்ள சிறுவர்கள் பயன்படுத்திய சைக்கிள்களைப் பெறுகின்றனர். அதை பெயிண்ட் அடித்து பழுது நீக்குகின்றனர். பிறகு பள்ளிகளை தேர்ந்தெடுத்து அதில் நீண்ட தொலைவிலிருந்து வரும் மாணவர்களை பட்டியலிடுகின்றனர்.  அவர்களுக்குத்தான் சைக்கிள் வழங்கப்படுகிறது. இந்த பைசைக்கிள் புராஜெக்ட் திட்டத்தை ஹேமந்த் சாப்ரா, அவரது மனைவி சங்கீதா, பத்திரிகையாளர் சைமோனா டெரோன் ஆகிய மூவரும் தான். இதில் சைமோனா டெரோன் மூலம் தான் சமூகத்தில் உள்ள நிறைய மனிதர்களின் தொடர்பு கிடைத்தது.. இப்படித்தான் பழைய சைக்கிள்களைப் பெற்று அதை ஹேமந்த் சாப்ரா தனது வீட்டின் அருகில் உள்ள நஸீம் என்பவரிடம் கொடுத்தார். அவர், மாணவர்களுக்கென குறைந்த விலையில் பழைய சைக்கிள்களை நகாசு பார்த்து கொடுத்திருக்கிறார். இதற்கு முக்கியமான காரணம், நஸீமின் தம்பியும் பள்ளியில் படித்துக்கொண்டிருந்த மாணவர்தான்.  ஹேமந்த் சாப்ராவின் அப்பா, சிறுவயதில் ஒருமுறை சொன்ன சம்பவமே பைசைக்கிள் புராஜெக்ட் தொடங்கப்பட முக்கியமான காரணம். பள

கனிமவியல் பற்றி படிக்க மாணவர்களை ஊக்குவித்தவர்! விளாதிமிர் வெர்னால்ஸ்கை

படம்
  விளாதிமிர் வெர்னால்ஸ்கை (Vladimir vernadsky 1863 -1945) கனிமவியலாளர் ரஷ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் பிறந்தேன். பல்கலைக்கழகத்தில் புவி அறிவியல் துறையின் தந்தை என புகழப்பட்ட வாசிலி வாசிலியேவிச் டோகுசாவ்  தான் எனது ஆசிரியர் மற்றும் வழிகாட்டி. புவிவேதியியல் துறையை உருவாக்கியவர்களில் எனக்கும் முக்கியப் பங்குண்டு. விளாதிமிர் கனிமவியல், புவியியல், வேதியியல் ஆகிய பாடங்களைப் படித்து முதுகலைப் பட்டம் பெற்ற ஆண்டு 1887. இத்தாலி, பிரான்ஸ், ஜெர்மனி ஆகிய நாடுகளுக்குச் சென்றவர் கிரிஸ்டல்லோகிராபி படிப்பைப் படித்தார். 1890-1911 காலகட்டத்தில் மாஸ்கோ ஸ்டேட் பல்கலைக்கழகத்தில் கனிமவியல், கிரிஸ்டல்லோகிராபி பற்றிய பாடங்களை மாணவர்களுக்கு கற்றுக்கொடுத்தார்.  ரஷ்யாவில் முதன்முறையாக கனிமவியல் பற்றி படிக்க  மாணவர்களை ஊக்கப்படுத்தியவர்,விளாதிமிர் தான்.  ரஷ்யாவில் புரட்சி ஏற்பட்டபிறகு, கதிர்வீச்சு, அதன் ஆற்றல், பூமியில் உயிரினங்கள் ஏற்படுத்திய தாக்கம் பற்றி ஆராய்ச்சி செய்யத் தொடங்கினார். 1928ஆம் ஆண்டு செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில்,  உயிரிவேதியியல் ஆய்வகம் ஒன்றை உருவாக்கி, அதனை நடத்தினார்.  முக்கிய படைப்பு, 

இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு மாணவர்கள் சந்திக்கும் பிரச்னைகள்!

படம்
  பெருந்தொற்று இரண்டு ஆண்டுகளை வீணாக்கியிருக்கிறது. இதனை எப்படி புரிந்துகொள்ளலாம். தொழில், கல்வி, நம் வாழ்க்கை, இதுவரை போட்டிருந்து திட்டங்கள் என எப்படி வேண்டுமானாலும் வைத்துக்கொள்ளலாம். அதிகம் அடி வாங்கியது, சமூக வாழ்க்கையை தொலைத்த குழந்தைகள்தான். இதில் வேறு மூடநம்பிக்கை கொண்ட அரசியல் கட்சிகள் நோயைப் பற்றிய அச்சத்தை அறிவியல் மூலமாக தீர்க்காமல், கைதட்டுங்கள், விளக்கேற்றுங்கள், பிரார்த்தனை செய்யுங்கள் என கூறிக்கொண்டிருந்தன.  இதனால் அதிகம் பாதிக்கப்பட்டது குழந்தைகள்தான். பள்ளி சென்றுகொண்டிருந்த, பள்ளி செல்லவேண்டிய பிள்ளைகள் அனைத்துமே இன்று சமூக வாழ்வை தொலைத்து தனியாக உள்ளனர்.  மும்பையில் மூன்றாவது வகுப்பு படிக்கும் மாணவி அவள். மாஸ்க்கை கழற்றச்சொல்லி எவ்வளவு வற்புறுத்தியும் கழற்றவில்லை. ஆசிரியருக்கோ, நோய் பயமில்லை என்று சொல்லி தொண்டை தண்ணீர் வற்றியதுதான் மிச்சம். அவர் அந்த மாணவியின் முகத்தை பார்த்தே 600 நாட்களுக்கு மேலாகிறது. அதே மாணவி நடன வகுப்பில்  கலந்துகொண்டாள். அப்போது சக மாணவனின் கையை பிடித்ததுதான் தாமதம். உடனே போய் சானிடைசர் போட்டு கையை சுத்தப்படுத்தினாள். சுகாதாரம் பற்றிய பதற்றம்

மாணவர்களிடையே தேய்ந்து வரும் எழுதும் பழக்கம்! - விளைவு என்ன?

படம்
  தேயும் எழுதும் பழக்கம்! பெருந்தொற்று காலகட்டம் மாணவர்களின் கல்வியை பின்னோக்கி நகர்த்தியது. கூடவே, எழுதும் பழக்கத்தை குறைத்துள்ளது. இதன் காரணமாக, மீண்டும் எழுதுவதற்கு பயிற்சி தேவைப்படும் நிலையில் மாணவர்கள் உள்ளனர். ஸ்மார்ட்போன், கணினி, டேப்லெட், பல்வேறு ஆப்கள் என யாருக்குமே பேனாவை பிடித்து எழுதும் அவசியம் இல்லை. பள்ளிகளில்மட்டும் தான் மாணவர்கள் பல்வேறு எழுத்து வேலைகளை செய்கிறார்கள். பள்ளிக்கு செல்லாமல் இருக்கும் மாணவர்களின் மனநிலை பற்றி பலரும் கவலைப்பட்டனர். ஆனால், இரண்டு ஆண்டுகள் எதையும் எழுதாமல் இருக்கும் மாணவர்கள் பள்ளி தொடங்கியதும் எப்படி எழுதுவார்கள் என இப்போதுதான் பெற்றோர் யோசிக்கத் தொடங்கியுள்ளனர். இதற்காக டில்லி, மும்பை உள்ளிட்ட பெருநகரங்களில் எழுத்துப் பயிற்சிக்கான மையங்கள் உருவாகி வருகின்றன. மும்பையில் கையெழுத்துப் பயிற்சி அளித்து வருகிறார் குன்சால் கலா. இவரது வகுப்பில், 5 ஆயிரம் பேர்களுக்கு மேல் பயிற்சியளித்துள்ளார். எழுதுவதில் சுணங்கினால் எழுத்து தேர்வுகளை நேரத்திற்கு எழுத முடியாது என்பதே பெற்றோரின் கவலை. மாணவர்கள் பலருக்கும் பேனா, பென்சிலை சரியாக விரல்களில் பிடிப்பதே மறந்

புதிய இந்தியாவில் மாணவர்கள் கற்க வேண்டிய வாழ்க்கைத் திறன்கள்!

படம்
  புதிய இந்தியாவில் வாழ்வதற்கு கற்றுக்கொள்ள வேண்டிய வாழ்க்கைத் திறன்கள் என்னென்ன? வாழ்க்கைத் திறன்கள் என்பது வாழ்க்கையை எளிதாக நடத்திச்செல்ல உதவுபவை. இவற்றை கற்றால் நிறைய இடர்பாடுகளை எளிதாக கடந்துசெல்ல முடியும். சவால்களை சந்திக்கலாம். எவரெஸ்டில் ஏறலாம். செங்கடலில் குதித்து நீந்தலாம். பாராகிளைடிங் செய்யலாம். இத்தனையும் சாத்தியம். புதிய தலைமுறை குழந்தைகளுக்கு இப்படி இந்தியாவில் என்னென்ன திறன்களைக் கற்றுக்கொடுக்கலாம் என்ற பரிந்துரை பயிற்சிகள் இதோ... பொய் சொல்லும் கலை - ஆர்ட் ஆஃப் லையிங்  5 வயதுக்கும் மேற்பட்டவர்கள் நிஜத்தை தீர்மானமாக மறைத்து நினைத்தே பார்க்க முடியாத ஆனால் சற்றேறக் குறைய நம்பும்படியான பொய்களை சொல்லவேண்டும். சொல்லும் பொய்யை யாரேனும் கண்டுபிடித்தால் கூட அதற்கு காரணம் என பயிற்சி மாணவர்கள் ஒருவரை குறை சொல்லிவிடலாம். இதை எந்த குற்ற உணர்ச்சியுமின்றி மாணவர்கள் பயில பொய் சொல்லித்தரும் ஆசிரியர் நியமிக்கப்படுவார். இவர்களுக்கு பயிற்சி வகுப்புகள் தினசரி உண்டு. கூடுதலாக களப்பணி செய்தால்தானே பொய் சொல்லும் கலை சிறக்கும். வேலை இல்லாத, ஊட்டச்சத்து பாதிப்புகொண்ட பதினைந்து லட்ச ரூபாய் தனது 

சமூக வலைத்தளத்தில் இயங்கும் மக்கள்தான் மாறவேண்டும்! - டிஎம் கிருஷ்ணா, கர்நாடக வாய்ப்பாட்டுக் கலைஞர்

படம்
  டிஎம் கிருஷ்ணா, கர்நாடக வாய்ப்பாட்டுக் கலைஞர் டிஎம் கிருஷ்ணா வாய்ப்பாட்டு கலைஞர் இன்றைய மாணவர்கள் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? நான் மாணவனாக இருந்த காலத்தை விட இன்றைய மாணவர்கள் கவனத்துடன் சுயசிந்தனையுடன் இருக்கிறார்கள். நான் இந்தளவு கவனத்துடன் இருந்ததில்லை. என்னுடைய சக வயது உள்ளோர் பலரும் மாணவர்கள் சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்துகிறார்கள் என புகார் கூறுகிறார்கள். குறிப்பாக டிவிட்டர், இன்ஸ்டாகிராம். இந்த வகையில் அவர்கள் சமூக வலைத்தளங்களின் வழியாக வாழ்க்கை, அரசியல் பற்றிய உறுதியான கருத்துக்களை கொண்டிருக்கிறார்கள். நான் இந்தளவு கருத்துக்களோடு இல்லை என்பதே உண்மை. நான் மற்றவர்களிலிருந்து வேறுபட்டு இதனை வாய்ப்பாகவே பார்க்கிறேன். இந்த வகையில் நாம் கேட்க முடியாத பல்வேறு கேள்விகளை கேட்க முடியும். இந்த தளங்களை இந்த வகையில் சிறப்பாக பயன்படுத்தலாம். இதில் உள்ள சிக்கல், சிந்தனைகளில் உள்ள தடுமாற்றம்தான். நான் இருபது வயதில் இப்படித்தான் இருந்தேன்.  நீங்கள் உங்கள் கருத்துகளை வெளிப்படையாக பேசி வருபவர். கருத்துகளை வெளிப்படுத்தும் விதம் மாணவர்களிடம் எப்படி இருக்கிறது? அது வேறு வகையான இடம் என்று ந

இந்திய மாணவர்களுக்கு உதவும் இ கல்வித்திட்டங்கள்!

படம்
  அரசின் இணையவழி கல்வித் திட்டங்கள் பிஎம் இ வித்யா 2020ஆம் ஆண்டு அரசால் நடைமுறைப்படுத்தப்பட்ட கல்வித் திட்டம். இதில் பல்வேறு அம்சங்கள் உள்ளன. அவற்றைப் பார்ப்போம். தீக்ஷா அறிவை டிஜிட்டல் வழியில் பகிர்ந்துகொள்வதற்கான வலைத்தளம் என திட்டத்தை மொழிபெயர்க்கலாம். 2017ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட வசதி. பாடநூல்களில் உள்ள க்யூஆர் கோடுகளை ஸ்கேன் செய்தால் போதும். உடனே என்சிஇஆர்டி பாடநூல்களை படிக்க முடியும். இதனை 18 மொழிகளில் அணுக முடியும் என்பது முக்கியமான சிறப்பு அம்சம்.  நிஷ்த்தா இது ஆசிரியர்களுக்கான பயிற்சித் திட்டம். தேசிய அளவில் நடத்தப்படுகிறது. 11 மொழிகளில் இதனை ஆசிரியர்கள் கற்றுக்கொண்டு மாணவர்களுக்கு சிறப்பாக பாடங்களை நடத்தலாம்.  ஸ்வயம் 9ஆம் வகுப்பு முதல் முதுகலைப் படிப்பு வரையிலான பல்வேறு பாடங்களை ஆன்லைன் வழியாக கற்கலாம். இதனை யாரும் எங்கிருந்து வேண்டுமானாலும் அணுகி பாடங்களை கற்க முடியும் என்பது முக்கியமான அம்சம். பாடங்கள் அனைத்தும் இன்டராக்டிவானவை என்பதோடு இலவசம் என்பதையும் மனதில் குறித்துக்கொள்ளுங்கள்.   கடந்த ஆண்டு ஜனவரியில் மட்டும் பத்து மில்லியனுக்கும் அதிகமான மாணவர்கள் இதில் இணைந்தன

அரசுப் பள்ளிக் குழந்தைகளுக்கும் ஆங்கிலம் அவசியம்!

படம்
  ராதா கோயங்கா மும்பையிலுள்ள அரசுப்பள்ளி குழந்தைகளுக்கு ஆங்கிலத்தை கற்பிக்க ஆர்பிஜி நிறுவனம் முடிவெடுத்து செயல்பட்டு வருகிறது. தாய்மொழிக்கல்வியை பலரும் வலிமையாக பேசினாலும் வணிக மொழியாக வெற்றி பெற்றுள்ளது ஆங்கிலம்தான். அதனுடைய இடத்தை பிராந்திய மொழியோ, தேசியமொழியோ கூட பெறவில்லை என்பது நடைமுறை யதார்த்தம்.  அந்த வகையில் மும்பையிலுள்ள அரசுப்பள்ளிகளில் பெஹ்லாய் அக்சார் திட்டம் செயல்பட்டு வருகிறது. இதனை ராதா கோயங்கா என்ற பெண்மணி திட்டம் தீட்டி அரசு ஆதரவுடன் செயல்படுத்தி வருகிறார்.  கட்டாய கல்விச்சட்டத்தை மதிய உணவுத்திட்டத்துடன் சேர்ந்து நடைமுறைப்படுத்தியது அதன் வெற்றிக்கு உதவியது. அதைப்போலத்தான், நான் ஆங்கிலத்தில் பேசும் வகுப்பையும் கருதுகிறேன். இது அரசுப்பள்ளி மாணவர்கள் ஆங்கிலத்தில் பேசுவதற்கு உள்ள தடையை நீக்கும் என நம்புகிறேன் என்கிறார் ராதா.  பெஹ்லாய் அக்சார் குழுவினர் இவர் இப்பணிக்காக, தனது வேலையைக் கூட கைவிட்டுவிட்டு முழுமையாக இதனைச் செய்துவருகிறார். 2008ஆம் ஆண்டு தொடங்கிய ஆங்கில கல்வித் திட்டம் இது. ஆனால் அப்போது வெறும் தன்னார்வலர்களின் உதவியை மட்டுமே பெற்றார். ஆனால் திட்டத்தை நடைமுறைப்

பெருந்தொற்று காலத்தில் க்யூஆர் கோட் மூலம் கல்வி கற்பித்த ஆசிரியர்!

படம்
  புதிய கற்பித்தல் முயற்சி! மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள சோவநகர் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர், ஹரிஸ்வாமி தாஸ்.  இவர், பள்ளியில் படிக்கும் 2,900 மாணவர்களையும், அவர்களது குடும்ப நிலையையும் அறிந்தவர். கொரோனா நோய்த்தொற்று காரணமாக, பள்ளிகள் மூடப்பட்டபோது மாணவர்களுக்கு எப்படி கற்றுக்கொடுப்பது என யோசித்தார். சோவநகரில் ஏற்பட்ட மண் அரிப்பு, குடியிருப்புகள் மாற்றம் ஆகிய பிரச்னைகளையும் சமாளித்து மாணவர்களுக்கு கற்பித்து வந்தார்.  பள்ளிகள் மூடப்பட்டு பொதுமுடக்க காலகட்டம் நடைமுறையில் இருந்தது. தனது மாணவர்கள் சிலரின் வீடுகளுக்கு போனில் அழைத்தார் ஹரிஸ்வாமி தாஸ். ஏழை மாணவர்களில் 30 சதவீதம் பேர் ஸ்மார்ட்போன்களை பயன்படுத்தமுடியாத சூழல் இருந்தது. படிப்பதற்கான நூல்களும் கிடைக்கவில்லை என்று புகார் கூறினர். “என்சிஇஆர்டி நூல்களில் க்யூஆர் கோட் இருந்தது. ஆனால் மேற்குவங்க  மாநில அரசு பாடநூல்களில் இந்த வசதி கிடையாது. எனவே, அரசு வலைத்தளங்களிலிருந்து பாட நூல்களை தரவிறக்கி க்யூஆர் கோட் மூலம் அதனை அணுகும்படி வசதிகளை செய்தோம் ”  என்றார்.   தாஸின் மாணவர்கள் வீடுகளில், ஸ்மார்ட்போன்களை அவர்களது தந்தை அல்லது சகோதரர்கள்

தனது கிராம மக்களுக்கு அறிவுபுகட்ட நூலகத்தை அமைத்த பேராசிரியர்!

படம்
  pixabay கிராம மக்களுக்காக நூலகம் அமைத்த பேராசிரியர்!  உத்தரப் பிரதேசத்தின் கல்யாண்பூரில் கிராம மேம்பாட்டு நூலகம் தொடங்கப்பட்டுள்ளது. இதனை இங்கிலாந்தின் நாட்டிங்காம் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் பேராசிரியர் அருண்குமார் உருவாக்கியுள்ளார். அருணின் பூர்விக வீடு, இங்குதான் உள்ளது. கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம், 750 நூல்களைக் கொண்ட நூலகத்தை கிராமத்தினருக்கு  அமைத்துக்கொடுத்துள்ளார். அருண், டில்லி பல்கலைக்கழகத்தில் படித்தபோது அங்கு முதல்முறையாக நூலகத்திற்கு சென்றார்.  அங்கு அடுக்கப்பட்டிருந்த ஆயிரக்கணக்கான நூல்களை பார்த்து வியந்திருக்கிறார். அதற்கு முன்பு வரை அவர் நூலகத்திற்கு சென்றதேயில்லை. அவரது கிராமத்திலும் நூலகம் அமைந்திருக்கவில்லை என்பதுதான் இதற்கு முக்கியமான காரணம்.  நூலகத்தைப் பயன்படுத்தும் மாணவர்களுக்கும் அவருக்கும் நிறைய இடைவெளி இருப்பதை உணர்ந்தார். “நூலக வாசிப்பு, மாணவர்களுக்கு பாடநூல்களைத் தாண்டி இலக்கிய அனுபவத்தையும் தரும் என்பதை அனுபவப்பூர்வமாக உணர்ந்தேன் ” என்றார் பேராசிரியர் அருண்குமார்.  கல்யாண்பூரில் தொடங்கிய கிராம நூலகத்திற்கு முன்னோடி,  பன்சா கிராம நூலகம் ஆகும்.   இந்த நூல

மணல் சிற்பங்களை செய்து அசத்தும் கோவை அரசுப்பள்ளி மாணவர்கள்!

படம்
கடற்கரையில் சாதாரண மணல் வீடு கட்டும்போது அதற்கு வாசல், கதவு வைக்க அரும்பாடு படவேண்டியிருக்கிறது. இதில் அதனை சிற்பமாக வடித்தெடுக்க எந்தளவு நேரத்தை உழைப்பை போட வேண்டியிருக்கும். இதில்தான் கோவை மாணவர்கள் சாதித்துள்ளனர். கோவையில் உள்ள கிணத்துக்கடவு அரசுப்பள்ளி மாணவர் லோகநாதன், 2018ஆம் ஆண்டு மாநில அளவில் நடைபெற்ற மணல் சிற்ப போட்டியில் வென்றார். இதுதான் அந்த பள்ளியில் உள்ள கலை ஆசிரியர்களின் மதிப்பை பலருக்கும் தெரிய வைத்தது. ஏளனமாக பார்த்தவர்களை மதிக்க வைத்தது. கடந்த மூன்று ஆண்டுகளாக அப்பள்ளி ஆசிரியர்களான கௌசல்யா, ராஜ லட்சுமி ஆகியோர்தான், மாணவர்களை பெண்டு நிமிர்த்தி கலைப்பாடங்களை சொல்லித்தந்து கொண்டிருக்கிறார்கள். கல்வி அமைச்சகம் நடத்தும் கலா உத்சவ் போட்டிகளில் மாணவர்களை பயிற்றுவித்து படைப்புகளை சமர்ப்பித்து ஏராளமான பரிசுகளை பெற்று வந்திருக்கிறார்கள். படித்து மாத சம்பளத்திற்கு வேலைக்கு போனால் பரவாயில்லை என்ற நினைத்த மாணவர்களை கலைகளைப் படித்து ஆசிரியராக அதனை சொல்லிக்கொடுக்கலாம் என்று நினைக்க வைக்கும் அளவு இரு ஆசிரியர்களின் உழைப்பும் இருந்தது. 2018ஆம் ஆண்டு, நாங்கள் மாணவர்களுக்

வகுப்பிலிருந்து ஆதிதிராவிட, பட்டியலின மாணவர்களை வெளியேற்றிய பொதுமுடக்க காலம்!

படம்
  Photo TNIE லாக்டு அவுட் எமர்ஜென்சி ரிப்போர்ட் ஆன் ஸ்கூல் எஜூகேஷன் என்ற தலைப்பில் 1362 மாணவர்களிடம் ஆய்வு செய்து அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது . இந்த மாணவர்கள் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரையில் படிப்பவர்கள்.  நகர்ப்புறங்களில்  பத்து முதல் பதினான்கு வயது வரையிலான மாணவர்களின் கல்வி சதவீதம் 74 ஆக உள்ளது. கிராமப்புறங்களில்  இதன் அளவு 66 சதவீதமாக உள்ளது. தலித் மற்றும் ஆதிவாசி மாணவர்களில் 61 சதவீதமாக உள்ளது.  கிராமப்புறங்களில் ஆன்லைன் வழியாக கல்வி கற்பவர்களின் அளவு 15 சதவீதமாக உள்ளது. இதில் தலித் மற்றும் பட்டியலின மாணவர்களின் சதவீதம் 4 ஆக உள்ளது.  43 சதவீத தலித், பட்டியலின மாணவர்கள் பொதுமுடக்கம் காரணமாக பள்ளிக்கல்வியை ஒராண்டாக தொடரவேயில்லை.  45 சதவீத தலித், பட்டியலின மாணவர்களுக்கு பாடங்களில் சில எழுத்துக்களை மட்டுமே வாசிக்க முடிந்தது அதிர்ச்சிகரமான செய்தி.  இவர்களில் 55 சதவீத மாணவர்களிடம் ஸ்மார்ட்போன்கள் கிடையாது.  ஆதி திராவிடர் பள்ளிகளில் படித்து, விடுதிகளில் தங்கி வந்த மாணவர்கள் பொதுமுடக்க காலத்தில் வீடுகளுக்குச் சென்றனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் குழந்தை தொழிலாளர்களாக மாறிவிட்டனர்.  ஆ

தொடக்கப்பள்ளி மாணவர்களுக்காக தன்னை அர்ப்பணித்த ஆசிரியை! - தேசியளவில் சிறந்த ஆசிரியர் - ஜூலியானா உட்ருபே

படம்
              மாற்றம் தரும் ஆசிரியர் கடந்த இரு ஆண்டுகளாக கல்வி என்பது மாணவர்களுக்கு வகுப்பறையில் கற்றுத்தரும் வழக்கம் குறைந்துவிட்டது . அதற்கான காலம் கூடிவரவில்லை . நோய்த்தொற்று பாதிப்பால் கல்வித்தளம் என்பது முழுக்க இணையம் சார்ந்ததாக மாறிவிட்டது . இந்த சூழ்நிலையில் ஆசிரியர்கள் இதைப்பற்றி என்ன பேசுவார்கள் என்பது முக்கியம்தானே ? நடப்பு ஆண்டிற்கான தேசிய ஆசிரியர் பரிசை ஜூலியானா உட்ருபே பெற்றுள்ளார் . இனிக் கல்விமுறையில் தனித்தனி மாணவர்களுக்கான திறனைப் பொறுத்தே அவர்களுக்கு கல்வி கற்பிப்பது சிறந்தது . கல்விமுறையையும் வேறுபட்டு சிந்திக்கும் , செயல்படும் மாணவர்களுக்கானதாகவே மாறும் என்றார் உட்ருபே . இவரை கவுன்சில் ஆப் சீப் ஸ்டேட் ஸ்கூல் ஆபீசர்ஸ்அமைப்பு சிறந்த ஆசிரியராக தேர்ந்தெடுத்துள்ளது . உட்ருபே போன்ற அர்ப்பணிப்பான ஆசிரியர்கள் , புதுமைத்திறன் ஆகியவை இனக்குழு சார்ந்த மக்களின் கல்வி முன்னேற்றத்திற்கு உதவுவார்கள் என்றார் கவுன்சிலின் இயக்குநரான காரிசா மொஃபாட் மில்லர் . 2005 ஆம் ஆண்டு தொடங்கி இன்றுவரை சிறந்த ஆசிரியர் விருது பெற்றவர்களில் உட்ருபே மட்டும்தான் லத்தீன் பகுதியைச

அறிவியலை மாணவர்களுக்கு விளக்கும் 50 கட்டுரைகள்!- துளிர் அறிவியல் கட்டுரைகள்

படம்
            துளிர்  அறிவியல் கட்டுரைகள் ப. 152 விலை ரூ. 150 இந்த நூலில் துளிர் இதழில் வெளியான 50 முக்கியமான கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. இவை அனைத்துமே பொதுமுடக்கம் காரணமாக பிடிஎப் வடிவில் வெளியான துளிர் இதழ்களி்ல் வெளியானவை.  படிக்க ஏதுவான கட்டுரைகள் என்பதை விட நிறைய விஷயங்களைக் கொண்டுள்ள கட்டுரைகள் என்ற நோக்கில் படித்தால் ஏமாற்றங்களை சந்திக்காமல் இருக்கலாம்.  சோப்புகளை எப்படி வீட்டில் தயாரிப்பது என்ற கட்டுரை சிறப்பாக இருந்தது. எலும்புன்னா எனக்கு பிடிக்குமே என்ற கழுகு பற்றிய கட்டுரை, நோபல் பரிசு 2020, மணற்குளி நண்டுகள் ஆகியவற்றை படிக்க சிறப்பாக இருந்தன.   இந்த நூலில் இயற்பியல் வானியல், உயிரியல், வேதியியல், இயற்பியல் என பல்வேறு பிரிவுகள் பேசப்படுகின்றன. கட்டுரைகள் வழியாக அறிவியல் சார்ந்த அணுகுமுறையை எளிதாக புரிந்துகொள்ள முடிகிறது. தமிழ் படிக்கத் தெரிந்த குழந்தைகள் இந்நூலை படிக்க நினைத்தால் இதிலுள்ள தகவல்கள் அவர்களை ஆச்சரியப்படுத்தும் என்பது உறுதி.  கோமாளிமேடை டீம் நன்றி  பாலபாரதி பிரபாகர், தமிழ்நாடு அறிவியல் இயக்கம்    

மத்திய அரசுப்பள்ளியை முந்திய அரசுப்பள்ளி! - சாதித்தது எப்படி?

படம்
  தலைநகரில் அசத்தும் அரசுப்பள்ளி! டில்லியில் செயல்பட்டு வரும் அரசுப்பள்ளி, தேர்ச்சியிலும் பிற திறன்களிலும் அசத்தி வருகிறது.  கடந்த இரு ஆண்டுகளாக சிறந்த பள்ளிகள் பட்டியலில் கேந்திரிய வித்யாலயாவுக்கு இரண்டாமிடம்தான் கிடைத்தது. முதலிடம், அரசுப்பள்ளியான ராஜ்கிய பிரதிபா வித்யாலயாவுக்கு கிடைத்தது. மத்திய அரசு பள்ளியை முந்தும் அளவுக்கு அப்படியென்ன சிறப்பு இப்பள்ளியில் உள்ளது?  டில்லி அரசு நடத்தும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பள்ளிகளில் 7,9,11 வகுப்புகளில் சிறந்த மதிப்பெண்களை பெறும் மாணவர்களை இங்கு சேர்த்துகொள்கின்றனர். வகுப்பறைக்கு 35 பேர்தான். இதற்காக டில்லி அரசு தன் நிதியில் 28 சதவீதத்தை செலவு செய்துள்ளது. நாட்டில் பிற மாநிலங்கள் அதிகபட்சமாக 14.8 சதவீதம் கல்விக்காக நிதி ஒதுக்கியுள்ளன. இந்த பள்ளியில் படிப்பவர்களில் பெரும்பாலானோர்க்கு மாத வருமானமே ரூ.3000தான். ஆசிரியர்கள் அனைவருக்கும் டேப்லெட்கள் வழங்கப்பட்டுள்ளதால், காகிதப்பயன்பாடு குறைவு. “இங்கு மாணவர்கள் வருகைப்பதிவு குறைந்தால், அது பற்றி விசாரித்து ஆலோசனை அளிக்கும் வசதி உள்ளது’ என ஆச்சரியப்படுத்துகிறார் பள்ளி முதல்வரான தேஜ்பால் சிங்.  இங்குள்

ஆசிரியர்களின் கல்விச்சிந்தனைகளை வளர்க்கும் திட்டம்!

படம்
 கல்வித்துறையில் கண்டுபிடிப்புகளின் தேவை!  ஆசிரியர்களிடையே புதிய சிந்தனைகளை வளர்த்து கல்வித்திறனை அதிகரிக்க, மத்திய அரசு ஜீரோ இன்வெஸ்ட்மென்ட் இன்னோவேஷன்ஸ் ஆப் எஜூகேஷன் இனிஷியேட்டிவ்ஸ் (ZIIEI) திட்டத்தைச் செயற்படுத்தி வருகிறது.  இந்தியாவிலுள்ள பல்வேறு துறைகளில் புதிய கண்டுபிடிப்புகள் நடந்து வருகின்றன. ஆனால் கல்வித்துறையில் இந்த மாற்றங்கள் குறைவாக இருக்கின்றன. இதற்காக இந்திய அரசு, புதிய முயற்சிகளை நடைமுறைக்கு கொண்டு வர முயன்று வருகிறது.  பள்ளியில் மாணவர்களுக்கு கற்பிக்கும் முறைகளில் மாற்றம் கொண்டுவர ஆசிரியர்களின் பங்களிப்பு அவசியம். அவர்களின் ஆதரவின்றி மாணவர்களை ஊக்கப்படுத்துவது கடினம். இதனால் அவர்களுக்காகவே அரசு, அரவிந்தர் சொசைட்டியுடன் இணைந்து கல்வி மாற்றச் சிந்தனைகளை உருவாக்கி வருகிறது.  இதற்காக 2015ஆம் ஆண்டு உருவான (ZIIE)இத்திட்டத்தில் இந்தியா முழுக்க உள்ள திறமையான 65 ஆசிரியர்களை இணைத்துள்ளனர். இவர்களின் கல்வி பயிற்றுவிக்கும் யோசனைகளை அரசுப்பள்ளிகளில் செயற்படுத்த திட்டம் வகுத்துள்ளனர்.  கல்வித்துறையில் பிற துறைகளைப் போல அதனை கற்பிக்கும் முறை தொடங்கி பாடங்கள், தேர்வு, மதிப்பெண் என பல்