குறுக்கே கௌசிக் வந்தாலும் செய்த காரியத்தை கவனத்தில் கொள்வது எப்படி?

 







பாண்டியன் ஹோட்டலுக்கு செல்கிறீர்கள். அங்கு சோற்றை சுண்ணாம்பு போட்டு வடிப்பார்கள். அதை கொஞ்சம் சாப்பிட்டாலே வயிறு அடைத்துவிடும். அதெல்லாம் இருக்கட்டும். அங்கு இருக்கும் பரிசாரகர் உங்களுக்கு சாப்பிட தயாராக உள்ள பல்வேறு உணவு வகைகளை காட்டுவார். என்னென்ன சாப்பிட்டீர்கள் என்பதை பணம் தராதவரை துல்லியமாக நினைவுவைத்து கல்லாவிலுள்ள முதலாளிக்கு கூறுவார். அப்படி கூறியவுடனே அதை மறந்துவிட்டு அடுத்த ஆளை கவனிக்க போய்விட்டார். ஒருவருக்கு அத்தனை இரைச்சலில், பரிமாறும் வேலைகளை செய்தபடியே அந்தந்த மேசையில் உள்ளவர்களுக்கு என்ன வேண்டும் என்று கேட்டபடியே என்ன சாப்பிட்டார் என்றும் நினைவு வைத்துக்கொள்கிறார். எப்படி சாத்தியமாகிறது? இதை ஸெய்கார்னிக் விளைவு என்று குறிப்பிடுகிறார்கள். 


அதாவது, நிறைவடைந்த செயலை விட நிறைவடையாமல் தொக்கி நிற்கும் செயலே பலரையும் ஈர்க்கிறது. எனவே, அதை கவனத்தில் கொண்டு நிறைவு செய்ய முயல்கிறார்கள். 


அதாவது ஒருவருக்கு வேலைகளை ஒதுக்கிவிட்டு அதன் இடையில் சில தடங்கல்களை செய்தால் முதலில் ஏற்றுக்கொண்ட வேலைகளை கவனமாக செய்யவேண்டும் என முயல்வார்கள். இதனால் அவரின் மூளை சுறுசுறுப்பாகி நினைவுகளை தீவிரமாக சேமிக்கிறது. ரஷ்யாவை சேர்ந்த உளவியலாளர் ப்ளூமா ஸெய்கார்னிக், தான் சாப்பிடப்போன ஹோட்டலில் பரிசாரகரின் நினைவுகளை வைத்தே நினைவுகளை வைத்த ஆய்வை செய்து சாதித்தார். இவரது ஆய்வுகளை கல்வி, விளம்பரம், ஊடகம் ஆகிய துறைகளில் இன்றைக்கும் பயன்படுத்தி வருகிறார்கள். 


கருத்துகள்