வாத்துக்குஞ்சுகள் தனது தாய், வளர்ப்பு தாயிடம் காட்டும் பாசம் உருவாகும் விதம்! - கான்ராட் லாரன்ஸ் ஆய்வு

 








அமெரிக்க உளவியலாளர் கார்ல் லாஸ்லி பற்றி பார்ப்போம். இவர் பாவ்லோவ் உள்ளிட்ட பிற உளவியலாளர்கள் விலங்குகளை குறிப்பிட்ட நிபந்தனைகளை வைத்து செயல்களை செய்ய வைத்து உணவு தருவதை ஆர்வமாக கவனித்தார். குறிப்பிட்ட நிபந்தனைகளை விதித்து விலங்குகளின் மூளையில் வேதிமாற்றங்கள் ஏற்படுகின்றன என்று கூறியதை துல்லியமாக என்னவென அறிய நினைத்தார். ஆனால் இந்த சோதனை எதிர்பார்த்த முறையில் அமையவில்லை. அமையவில்லையெனில் கார்ல் எலிகளை வைத்து சோதனை செய்தார். அது சரிதான். ஆனால் இந்த சோதனையில் அவர் எதிர்பார்த்த பயன்கள் கிடைக்கவில்லை. 


குறிப்பிட்ட புதிர்களை தீர்த்து உணவுகளை பரிசாக பெற்ற எலிகளை பிடித்து மூளையில் அறுவை சிகிச்சை செய்தார். இந்தமுறையில் அதன் வெவ்வேறு பகுதிகளை நீக்கினார். அப்போதும் கூட எலிகள் புதிர்களை சரியாக தீர்த்து உணவைப் பெற்றன. அதில் பெரிய மாறுபாடு ஏதும் ஏற்படவில்லை. இந்த சோதனை மூலம் நினைவுகள் என்பவை மூளையில் குறிப்பிட்ட இடத்தில் மட்டுமே சேமிக்கப்படவில்லை என்று புரிந்துகொண்டார். 


ஆஸ்திரிய விலங்கியலாளர், மருத்துவர் கான்ராட் லாரன்ஸ் இயற்கைக்கும் விலங்குகளுக்கும் உள்ள தொடர்பு பற்றிய ஆய்வுகளை மேற்கொண்டு சில உண்மைகளை கண்டறிந்தார். ஆல்டன்பெர்க்கில் உள்ள கோடைகால பண்ணை வீட்டில் வாத்துகளை வளர்த்து வந்தார். இங்கு முட்டையிட்டு குஞ்சு பொரித்த வாத்து குஞ்சுகள் இளமைக்காலத்தில் தனது தாயிடம் நெருக்கமான தொடர்பு கொண்டிருந்தன. அப்படி பெற்ற தாய் இல்லாதபோது, பாசம் வளர்ப்பு தாயிடம் இடம் மாறியது. இதை இம்பிரிண்டிங் என கான்ராட் லாரன்ஸ் கூறினார். ஒருமுறை செய்த சோதனையில் முட்டையில் இருந்து வாத்துக்குஞ்சுகள் வெளியே வரும்போது அதற்கு எதிராக கருப்பு நிற ஷூக்களை அணிந்து நடந்தார். அதைப் பார்த்த வாத்துக் குஞ்சுகள், ஷூவை தமது தாய் என புரிந்துகொண்டு அதை பின்தொடரத் தொடங்கின. பின்னாளில் கூட அந்த குஞ்சுகள் வளர்ந்து பெரியதானாலும் பழக்கம் மாறவில்லை. 

வாத்துகுஞ்சுகள் மனதில் உருவாகும் பாச உணர்வு, இயற்கையானது. மரபணு சார்ந்து தோன்றுவது என கான்ராட் லாரன்ஸ் கூறினார். அவை மாற்றப்பட முடியாதவை. இயல்பாகவே உருவாகுபவை என்று ஆய்வு அடிப்படையில் பேசினார். 


கருத்துகள்