மனதில் தேங்கியுள்ள மோசமான மனநல குறைபாட்டை, பதற்றத்தை தணிக்கும் உளவியல் சிகிச்சை முறை - ஜோசப் வோல்பே

 








தென் ஆப்பிரிக்காவில் உள்ள ஜோகன்ஸ்பர்க்கில் பிறந்தவர் ஜோசப் வோல்பே. விட்வாட்டர்ஸ்ராண்ட் பல்கலைக்கழகத்தில் மருத்துவம் படித்தார். பிறகு ராணுவத்தில்சேர்ந்து பிடிஎஸ்டி குறைபாட்டிற்கு சிகிச்சை அளித்தார். இந்த குறைபாட்டை அப்போது வார் நியூரோசிஸ் என்று அழைத்தனர். நோயின் அறிகுறியை அறியாமல் மனநல குறைபாட்டிற்கு சிகிச்சை அளிக்க முயன்றார். இதற்கான ஆய்வுகளில் தீவிரமாக ஈடுபட்டார். பிறகு 1960ஆம் ஆண்டு அமெரிக்க குடியுரிமை பெற்று வர்ஜீனியா பல்கலைக்கழகத்திற்கு சென்றார். அங்கு சிறிதுகாலம் பணியாற்றிவிட்டு டெம்பிள் பல்கலைக்கழகத்தில் இணைந்தார். குண இயல்பு சார்ந்த சிகிச்சை மையம் ஒன்றை உருவாக்கி எண்பத்திரெண்டு வயது வரையில் இயங்கினார். நுரையீரல் புற்றுநோய் பாதிப்பால் காலமானார். 


முக்கியமான படைப்புகள் 


1958 psychology by reciprocal inhibition

1969 practice of behavioral therapy

1988 life without fear


இருபதாம் நூற்றாண்டின் தொடக்கம் வரை பல உளவியலாளர்களும் பிராய்ட் கூறிய மனப்பகுப்பாய்வு சார்ந்தவற்றில்தான் இயங்கினர். ஆழ்மனதில் உள்ள முரணான சக்திகளால் மனப்பதற்றம் ஏற்படுகிறது என்று கருதி வந்தனர். ஆழ்மனத்தில் உள்ள தன்னுணர்வு நிலை சார்ந்த அனுபவங்களை மையமாக கொண்டே இவற்றைக் கூறமுடியும். ஆனால் இதை உளவியலாளர் ஜோசப் வோல்பே மாற்றினார். இவர் இரண்டாம் உலகப்போரில் ஈடுபட்டு மனநல குறைபாட்டில் அவதிப்பட்டவர்களுக்கு மருத்துவ சிகிச்சை செய்தார். ஆனால் இவருக்கு ஃபிராய்டிய முறை பெரிதாக கைகொடுக்கவில்லை. அவர்களது வாழ்க்கையில் நடந்த மோசமான வன்முறை சம்பவங்கள் அடிக்கடி நினைவுக்கு வந்து அவர்களை மனப்பதற்றத்திற்குள் தள்ளின. 


வோல்பேவிற்கு இவான் பாவ்லோவ், வாட்சன் ஆகியோர் செய்த உளவியல் ஆய்வுகள் மீது ஆர்வம் இருந்தது. இந்த இருவருமே விலங்குகள், குழந்தைகள் ஆகியோர் மீது ஊக்கமூட்டுதல் சோதனையை செய்து அதில் வெற்றிகண்டவர்கள். குறிப்பிட்ட சூழலில் கட்டுப்படுத்தும்போது ஒருவரின் குண இயல்புகளை மாற்றியமைக்க முடியும் என அறிந்த வோல்பே, கற்ற பாடத்தை போரில் மனநல குறைபாடு கொண்ட வீரர்களுக்கு பயன்படுத்த முடிவு செய்தார். ஒருவருக்கு ஒரே நேரத்தில் மனப்பதற்றம், நெகிழ்வான மனநிலை என இரண்டிலும் இருக்கமுடியாது என கூறியவர். தனது நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் முறையை உருவாக்கினார். 


நோயாளியை நாற்காலியில் உட்கார வைத்து அவரை பதற்றப்படுத்தும் மோசமான சம்பவத்தை பிரச்னையை நினைவுகூர வைத்து பிறகு ஒரு நிலையில் அதை நினைக்காதீர்கள். உடலை தளர்த்தி நெகிழ்வாக வைத்துக்கொள்ளுங்கள் என்று சொன்னார். இதை ரெசிபுரோகல் இன்ஹிபிசன் என்று கூறினார். இந்தமுறையில் ஒருவரின் மனதில் இருந்த பயம், பதற்றம் மெல்ல குறைந்து இயல்பான நிலைக்கு வந்தார். இந்த சிகிச்சை முறையில் நோயாளியின் பயம் எதன் மீது, எந்தளவு ஆழமாக உள்ளது என்பதெல்லாம் அவசியமில்லை. மருத்துவர் சொல்வதை நோயாளி கேட்டு நடந்தாலே போதுமானது. எலிகளின் மீதுள்ள பயம், விமானத்தில் பறக்க பயம் ஆகியவற்றை வோல்பே கண்டறிந்த முறை மூலம் எளிதாக தீர்க்க முடியும். இவரின் சிகிச்சை முறை இன்று வரை நடைமுறையில் பயனுள்ளதாக உள்ளது. நோயின் அறிகுறிகளை அடிப்படையாக கொண்டு இயங்கும் முறை இது. 

டெனர்.காம்

கருத்துகள்