வதை முகாமில் மூன்று ஆண்டுகள் சித்திரவதைகள் அனுபவித்து உளவியல் கொள்கைகளை உருவாக்கிய விக்டர் பிராங்கல்!

 










வியட்நாமைச் சேர்ந்த உளவியலாளர் விக்டர் ஃபிராங்கல். மன அழுத்தம், தற்கொலை எண்ணத்தை தடுப்பது ஆகியவற்றில் புகழ்பெற்ற வல்லுநர். 1942ஆம் ஆண்டு விக்டர் அவரது மனைவி, பெற்றோர், சகோதரர் ஆகியோர் நாஜிகளின் வதை முகாமுக்குகொண்டு செல்லப்பட்டனர். அங்கு மூன்று ஆண்டுகள் கடுமையான சித்திரவதையில் உயிர் பிழைத்தவர் விக்டர் மட்டுமே. 1946ஆம் ஆண்டு மேன்ஸ் சர்ச் ஃபார் மீனிங் என்ற நூலை தனது வதை முகாம் அனுபவங்களை முன்னுதாரணமாக வைத்து எழுதினார். மனிதர்களுக்கு இரண்டுவிதமான மனநிலைகள் உண்டு. அவை வலி, வேதனையைப் பொறுத்துக்கொண்டு துயரமான சூழ்நிலையைக் கடந்து வாழ்க்கையை வாழ உதவுகிறது. முடிவெடுக்க உதவுவதோடு, சுதந்திரமான இயல்பையும் உருவாக்கித் தருகிறது. நம்மைச்சுற்றி நடைபெறும் சூழ்நிலைகள் மூலம் நாம் எப்படி மாற்றம் பெறுகிறோம் என்பதை நாமே தீர்மானிக்கலாம். அதற்கு சூழலின், பிறரின் கருணையை எதிர்பார்க்க வேண்டியதில்லை என விக்டர் கூறினார். 

விக்டரிடம் ஆலோசனைக்கு நோயாளி ஒருவர் வந்தார். அவருக்கு கவலை அவர் இறப்பது பற்றியல்ல. அவர் இறந்த மனைவியை நினைத்து வருந்தினார். அவரிடம் விக்டர், உங்கள் மனைவிக்கு  முன்னரே  நீங்கள் இறந்துபோனால் என்ன செய்வீர்கள்? அப்போது உங்கள் வருத்தம் குறையுமா என்றார். இல்லை அப்போதும் என் மனைவி கஷ்டப்படுவாளே என்றார். மனைவி இறந்தது குறித்தும் வருத்தம், தான் அவளுக்கு முன்னால் காலமானாலும் வருத்தம் என இருவிதமாக தன்னை வருத்திக்கொள்ளும் மனநிலை அவருக்கு இருந்தது. ஒருவரின் இறப்பு பற்றி அந்தந்த நேரத்தில் வருந்துவது நல்லதுதான். அதற்கு ஒரு அர்த்தமுண்டு என்று கூறினார் விக்டர். 


வாழ்க்கையின் அர்த்தம் என்பதை உருவாக்கிக்கொள்வதை விட கண்டறிவது முக்கியம். அந்த வகையில் அன்பு செலுத்துவது, புதிய பொருட்களை உருவாக்குவது, ஒரு விஷயத்தை வேறு கோணங்களில் பார்ப்பது என நம்மை மாற்றிக்கொள்வது பற்றி விக்டர் விவரித்துள்ளார். 


பின்டிரெஸ்ட்


கருத்துகள்