இடுகைகள்

மக்கள் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

இந்திராகாந்தி சொன்னவை....

படம்
 இந்திராகாந்தி சொன்னவை.... 1.சுதந்திரமடைந்த நாட்டிற்கு ஜவஹர்லால் நேரு பதினேழு ஆண்டுகள் பிரதமராக இருந்தார். அப்போது நாட்டின் ஒற்றுமை, பன்மைத் தன்மையிலான மதம், இனக்குழு, மொழி ஆகியவற்றோடு ஜனநாயகம் அப்போதுதான் பிறந்து அதன் வேரும் வளர்ந்து வந்தது. 2.இந்தியா, ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக்காக எப்போதும் குரல் கொடுத்து வந்திருக்கிறது. உலகம் முழுக்க உள்ள பல்வேறு பாதிக்கப்பட்ட மக்கள் பிரிவினருக்கு நம்பிக்கையும், தைரியத்தையும் அளித்து வந்துள்ளது. 3.மக்கள் மீது வரம்பற்ற நம்பிக்கை கொண்டுள்ள பாரம்பரியத்தை மகாத்மா காந்தி மற்றும் என்னுடைய தந்தை அடையாளம் காட்டியுள்ளனர். அந்த வழியில், இந்திய மக்கள் எனக்கு வலிமை, நம்பிக்கையைத் தருகிறார்கள்.  4.நம் முன் உள்ள சவால்களை நேரடியாக எதிர்கொள்வோம். நாம் செய்த தவறுகளில் இருந்து பாடங்களைக் கற்றுக்கொண்டு சிக்கல்களைத் தீர்ப்போம். 5.வேளாண்மை துறையில் அதிக உற்பத்தி மட்டுமே நமது நாட்டின் உணவு பிரச்னையைத் தீர்க்க முடியும்.  6. கண்டுபிடிப்பு, மேம்பாடு, சூழலுக்கு பொருத்தம், பாதுகாப்பு ஆகியவற்றை அடிப்படையாக கொண்டே நமது நாட்டின் வளர்ச்சி அமையும். 7.அடிப்படை தொ...

கிளர்ந்தெழு - புதிய மின்னூல் வெளியீடு

படம்
 ராக்குட்டன் கோபோ, ஸ்மாஷ் வேர்ட்ஸ், விவலியோ, பாரோபாக்ஸ், டோலினோ, பேக்கர் அண்ட் டெய்லர், க்ளவுட் லைப்ரரி, ஓவர் ட்ரைவ், பேலஸ் மார்க்கெட் பிளேஸ் ஆகிய வலைத்தளங்களில் கிடைக்கும்  கிளர்ந்தெழு (kilarnthelu)       https://books2read.com/u/m2D611

சிறைக்கூடத்தில் அடைக்கப்பட்ட காற்று - புதிய மின்னூல் வெளியீடு

படம்
      சிறைக்கூடத்தில் அடைக்கப்பட்ட காற்று நூல், மக்கள் அதிகார கொள்கையை சுருக்கமாக விவரிக்கிறது. பொதுவாக, இக்கொள்கையை வெகுசன ஊடகங்கள் தவறாக இட்டுக்கட்டி சித்திரித்து வருகின்றன. உண்மையில் மக்கள் அதிகார தத்துவத்தின் நோக்கம் என்ன, அதன் செயல்பாடுகள் எப்படிப்பட்டவை என்பதைப் பற்றிய அடிப்படை புரிதலை இந்நூல் ஏற்படுத்திக் கொடுக்கும். https://www.amazon.com/dp/B0DYX41J5Q 

சீனாவின் சூழல் பிரச்னைகளை அரசியல் பின்னணியோடு விளக்கும் நூல்!

படம்
      சீனா என்ஜின் ஆப் என்விரோன்மென்டல் கொலாப்ஸ் ரிச்சர்ட் ஸ்மித் ப்ளூடோ பிரஸ் சீனாவில் இயற்கை வளமான நிலம், நீர், காற்று பற்றிய அக்கறையுடன் எழுதப்பட்ட நூல். மொத்தம் 321 பக்கங்கள். எட்டு அத்தியாயங்களில் சீனாவின் முதலாளித்துவ கொள்கை, முன்னாள் அதிபர் டெங்கின் வளர்ச்சி உத்தரவு, ஆறுகள், ஏரி எப்படி மாசுபாடுக்குள்ளானது, பளபள கட்டிடங்களால் ஏற்படும் பாதிப்பு, விலைவாசி ஏற்றம், நிலக்கரி ஏற்படுத்தும் காற்று மாசுபாடு, அவற்றை அதிபர் ஷி ச்சின்பிங் கூட தடுத்து நிறுத்த முடியாத அரசியல் நிலைமை என நிறைய விஷயங்களை நூல் ஆழமாக ஆராய்கிறது. சீனாவில் இடதுசாரி கட்சியின் தலைவர்கள், அதிகாரிகள் வெளிநாடுகளில் இருந்து உணவுகளை இறக்குமதி செய்து உண்கிறார்கள். சீன விவசாயிகள் உற்பத்தி செய்யும் உணவுகளை, சீன தலைவர்கள் தொடுவதே இல்லை. ஏன் அப்படி என்றால், அந்தளவு காய்கறிகளில் வேதிப்பொருட்கள், நச்சுகள் உள்ளன. இப்பொருட்களை ஆண்டுதோறும் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்துவருகிறது. அந்த வகையில் வெளிநாட்டு பணம் நாட்டிற்கு கிடைக்கிறது. ஆனால், கலப்பட உணவுப்பொருட்களால் பாதிக்கப்படுபவர்கள் என்ன ஆவார்கள்? அதைப்பற்றி யாருக்குமே ...

சர்க்கரையும் சந்தை நிலவரமும் எப்போதும் கலவரம்தான்!

படம்
            மதிப்பிற்குரிய பொன்னி சர்க்கரை விநியோக குழுவினருக்கு, வணக்கம். நான் தங்களுடைய பொன்னி சர்க்கரையை, கடந்த சில மாதங்களாகப் பயன்படுத்தி வருகிறேன். பொடி போல இல்லாமல் சர்க்கரை பெரிதாக தரமாக இருக்கிறது. தொடக்கத்தில் ஒரு கிலோ பாக்கெட் சற்று அளவில் பெரிதாக இருந்தது. பிறகு, பாக்கெட் சற்று கச்சிதமாக்கப்பட்டது நல்ல முயற்சி. பொன்னி சர்க்கரை விலை அதிகபட்ச வரி உட்பட ரூ.55 என அச்சிடப்பட்டுள்ளது. கடையில் விநியோகம் செய்யும்போது என்ன விலைக்கு கொடுக்கிறீர்கள் என்று தெரியவில்லை. ஆனால் சில்லறை விற்பனை கடைகளில் ஒரு கிலோ ரூ.45க்கு விற்ற சர்க்கரை, பத்து நாட்கள் இடைவெளியில் ரூ.48 என விலை கூடிவிட்டது.  இந்த ரீதியில் சென்றால், விரைவில் நீங்கள் பாக்கெட்டில் அச்சிட்ட விலையை மூன்று மாதங்களில் அடைந்துவிடலாம். தரம் சிறப்பாக உள்ளது. எனவே, விலை நிர்ணயத்தில் நீங்கள் சற்று கவனம் செலுத்தினால் பொன்னி சர்க்கரை, வளர்ச்சி அடைவதற்கு வாய்ப்புள்ளது. கிராமப்புறம் சார்ந்த கடைகளில் சர்க்கரையை மூட்டையாக வாங்கி எடுத்து வந்து விற்கிறார்கள். அதன் தரம் அந்தளவு சிறப்பாக இல்லை. ஏற...

மேலாதிக்கத்தை எதிர்க்கும் மக்கள் அதிகாரம்!

      தொழிலாளர் சங்கம் என்பது அடிப்படையில், அதிலுள்ள உறுப்பினர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும். அதுதான் அதன் இயல்பான கடமையும் கூட. சிலர் சங்கத்தில் சேராமல் இருப்பார்கள். அதற்கு ஆலையின் மிரட்டல் காரணமாக இருக்கலாம். பெரும்பாலும் சங்கத்தின் தலைவர்கள் செய்யும் ஊழல், துரோகம், சங்க செயல்பாட்டில் நேர்மையின்மையே முக்கியமான சிக்கல்கள். போராட்டம் குறிப்பிட்ட துறையில் நடைபெற்றால், அத்துறை சார்ந்த தொழிலாளர்கள் அப்பகுதி மட்டுமல்ல நாடு முழுக்கவே ஆதரவு தெரிவித்து இயங்கவேண்டும். அதாவது,அவர்களும் வேலைநிறுத்தம் செய்யவேண்டும். அப்போதுதான் அந்த போராட்டம் வெற்றி பெறும். அரசியல் அதிகாரத்தை முற்றாக ஒருங்கிணைத்து ஒழித்தால்தான் நாம் எதிர்பார்த்த பயன்களைப் பெற முடியும். சர்வாதிகாரம், அடக்குமுறை, அதிகாரம் ஆகியவற்றை இங்கு இப்படிக் குறிப்பிடலாம். சொத்துக்களை உருவாக்குபவர்கள் தொழிலாளர்கள், அவர்கள் கையில் உள்ள பேரளவு பலத்தை கவனமாக பயன்படுத்த வேண்டும். பியர் ஜோசப் புரவுட்தோன் என்பவர், நவீன மக்கள் அதிகார கருத்தை உருவாக்கியவர். பத்தொன்பது, இருபதாம் நூற்றாண்டுகளில் மேற்கு நாடுகளில் உருவான தத்துவங்கள...

சமூகப் புரட்சியில் அறிவுஜீவிகளுக்கு உள்ள பங்கு!

படம்
  அரசியல் ரீதியான புரட்சிக்கும் சமூகத்தை அடிப்படையாக மாற்றும் புரட்சிக்கும் நிறைய வேறுபாடுகள் உண்டு. அரசியல் புரட்சியை ஒருவகையில் ரகசியமாக ஏகபோகமாக கூட நடத்திக் காட்டிவிட முடியும். தொழிற்சாலை தொழிலாளர்கள், வேளாண்மைத் தொழிலாளர்கள் என இருதரப்பும் ஒன்றாக இணைந்து செயல்படவேண்டும். பொருளாதாரம், வாழ்க்கை என்ற இரண்டு அம்சங்களிலும் கூட இருபிரிவைச் சேர்ந்த தொழிலாளர்களும் முக்கியம். இவர்கள் இல்லாமல் எந்த சமூக மாற்றங்களும் நடைபெறாது. இணையம் வந்தபிறகு போராட்டங்களை ஒருங்கிணைப்பு வேறு ஒரு தளத்திற்கு மாறியுள்ளது. ஆனால், சமூக வலைதளங்களை நிர்வகிப்பவர்கள், போராட்டங்களை எளிதாக தடுத்து நீக்க முடியும். எனவே, அவை இல்லாமலும் மக்கள் ஒன்றாக இணைந்து களத்தில் செயல்பட முயலவேண்டும். முதலாளிகளைப் பொறுத்தவரை லாபம் வந்தால்தான் ஒரு பொருளை நிர்வாகம் செய்வார். அரசு எதிர்த்தால், தொழில் இழப்பை சந்தித்தால், அதை எதிர்கொள்ளும்படி நிறைய கட்டுப்பாடுகள், விதிகளை உருவாக்கிக்கொள்வார். அரசுகளின் கருத்தியலுக்கு ஏற்றபடி அல்காரிதங்களை கூட தொழில்நுட்ப நிறுவனங்கள் மாற்றியமைப்பதை இதற்கு உதாரணமாக கூறலாம். உடல் உழைப்பு, மூளை உழைப்பு என...

சமூக மாற்றங்களை அடிப்படையாக கொண்ட புரட்சி போராட்டம்!

      மக்கள் அதிகார தத்துவத்தில் கம்யூனிசத்தில் ஆர்வம் கொண்டவர்களும் உண்டு. அதில் நம்பிக்கை இல்லாதவர்களும் உண்டு. இதை நீங்கள் கட்டாயம் தெரிந்துகொள்ளவேண்டும். சமூகத்தில் உள்ள செல்வம், விடுதலை, நீதி, நலவாழ்வு அனைத்து மக்களுக்கும் புறக்கணிப்பின்றி கிடைக்கவேண்டுமென கம்யூனிச தத்துவம் வலியுறுத்துகிறது. இதில் நம்பிக்கை இல்லாதவர்களை தனித்துவவாதிகள் என்று கூறலாம். அனைத்து மக்கள் அதிகார தத்துவவாதிகளும் அரசு என்பது ஆக்கிரமிப்பு உணர்வு கொண்டது. மக்களை அழுத்தி நசுக்குவது, அநீதியை அடிப்படையாக கொண்டது என ஒப்புக்கொள்வர். தனிமனித வளர்ச்சியை அரசு அழித்தொழிக்கிறது. ஒரு சமூகத்தில் மனிதர்கள் மீது எந்த வித அழுத்தமும் உந்துதலும் இருக்கக்கூடாது. எனவே, அடிப்படையாக அனைத்து மக்கள் அதிகார தத்துவவாதிகளும் அரசை ஒழிப்பது என்ற கருத்தில் ஒன்றுபடுகிறார்கள். மியூசுவலிஸ்ட் என்ற பிரிவினர், மக்கள் அதிகாரத்தில் உள்ளனர். இவர்கள், அரசு என்ற அமைப்பை அடியோடு அறவே ஒழிக்க நினைப்பவர்கள். பிரெஞ்சு தத்துவவாதி ப்ரவுட்தோன் என்பவரை பின்பற்றுகிறார்கள். அரசு இல்லாத அமைப்பில் லாபநோக்கு இருக்காது என்பவர்கள். வட்டி இல்லாத கடன்...

வன்முறைதான் எங்கள் மொழி!

படம்
  வன்முறை ஒரு தொடர்சங்கிலியைப் போல சமூகத்தை இணைத்துள்ளது. வன்முறைக்கு ஆதாரமே, அரசுதான். சட்டப்பூர்வமாக வன்முறையை அனைவரும் ஏற்கும்படியாக மாற்றுகிறது. அமைதியாக போராடுபவர்களின் மீது துப்பாக்கியால் சுடுவது, லத்தியால் அடித்து துன்புறுத்துவது என அரசு இயங்குகிறது. மக்கள் அதிகாரம் என்பது பலாத்காரம், வலுக்கட்டாயம் இல்லாத அரசில்லாத சமூகம். அங்கு யாரும் யாரையும் கட்டாயப்படுத்த மாட்டார்கள். மக்கள் சுதந்திரமாக, விடுதலையாக இருக்கலாம். ஒருநாள் நீங்கள் காலையில் எழும்போது உங்கள் நாட்டில் அரசு அமைப்பு இல்லையென்று தெரிகிறது. உடனே என்ன தோன்றும்? அதுநாள் வரை கொல்லலாம் என்று நினைத்த சித்தப்பா மகனை உடனே கொன்று போடலாம் என்றா? இல்லை அது மனச்சிதைவுக்கு உள்ளானவர்களின் செய்கை. இயல்பான மனிதர்கள் அப்படி இயங்க மாட்டார்கள். அரசு இல்லையென்றால், நிறைய கொள்ளை, கொலை நடக்குமோ என்று கூறுவார்கள். கொள்ளை, கொலை செய்பவர்கள் பெரும்பாலும் மனச்சிதைவுக்கு உட்பட்டவர்கள். அதைச் செய்யும்போது ஒருவகை மகிழ்ச்சியை உணர்கிறார்கள். எனவே, அத்தகைய செயல்களை செய்கிறார்கள். அரசு இருந்தாலும் சரி, இல்லாவிட்டாலும் கொலை, கொள்ளை என்பது நடந்துகொண்...

திவாலாகும் வங்கி!

படம்
        பாயும் பொருளாதாரம் 15 திவாலாகும் வங்கி உள்நாட்டு உற்பத்திக்கு அரசு சில தொழில்களை கணக்கில் எடுத்துக்கொள்வதில்லை. சில இனக்குழுவினரின் உழைப்பை கருத்தில் கொள்வதில்லை. இதை அவர்கள் வேண்டுமென்றே செய்வதில்லை. முறையாக அவர்கள் பதிவு செய்திருக்க மாட்டார்கள். அவர்களின் வருமானம் ஆவணங்களில் பதிவாகியிருக்காது. வங்கியில் கடன் பெறவும் மாட்டார்கள். உண்மையில் நிறைய பெண்கள் திருமணத்திற்கு முன்னர் வேலைக்குப் போய் சம்பாதிப்பார்கள். திருமணமான பிறகு வீட்டில் சமையல் வேலை பார்த்து சட்டி கழுவிக்கொண்டிருப்பார்கள். குழந்தை பெற்று வம்சத்தை தழைக்க வைப்பார்கள். அவர்களை வேலை செய்கிறார்கள் என யாரும் கருதுவதில்லை. பெண்கள் தங்களின் சொந்த செலவுக்கு கூட வேலை செய்யும் கணவனை எதிர்பார்க்கும் நிலைக்கு வந்துவிடுவார்கள். சில நிறுவனங்களில் பாலின பாகுபாடு உண்டு. ஒரே வேலை ஆனால் ஆணுக்கு ஒரு சம்பளம், பெண்ணுக்கு ஒரு சம்பளம் என தரம் பார்ப்பார்கள். சாதி, மதம், இனம் பார்த்து சம்பளம் போடும் கிறுக்கு புத்திக்காரர்களும் நிறுவனத்தில் உண்டு. ஏன் இப்படி குறைத்து சம்பளம் போடுகிறீர்கள் என்றால் அதற்கு உனக்கான தகுதி இதுத...

மக்கள் அமைப்பாக திரண்டு கேள்வி கேட்க வேண்டும் - பாயும் பொருளாதாரம்

படம்
      4 பாயும் பொருளாதாரம் கனிம வளங்களைப் பொறுத்தவரை அவற்றை ஒருமுறை விற்றுவிட்டால் பிறகு அதை பெற முடியாது. அவை தீர்ந்துவிடக்கூடிய வளங்கள். மேய்ச்சல் நிலம் உள்ளது என்றால் அங்கு செம்மறி ஆடுகளை ஓட்டிச்சென்று மேய்ப்பார்கள். பலரும் ஒருவரை பின்பற்றி ஒருவர் என மேய்ச்சல் தொழிலை செய்வார்கள். இதெல்லாமே லாபம் வருவதைப் பொறுத்துத்தான். லாபம் வந்தால் அந்த தொழில் இல்லையா வேறு தொழில். குறிப்பிட்ட கிராமத்தினரே மேய்ச்சல் நிலத்தை அடிப்படையாக கொண்டு வாழ்க்கை நடத்துகிறார்கள் என்றால் நிலைமை என்னாகும்? மேய்ச்சல் வெளி ஆதாரம் புல். அது விரைவில் தீர்ந்துபோகும். அப்போது ஆடுகளுக்கு உணவிற்கு என்ன செய்வது? மக்கள் குறிப்பிட்ட மரங்களை, வைப்பு நிதி திட்டங்களை கண்ணை மூடிக்கொண்டு அவர் செய்கிறார் இவர் செய்கிறார் என இறங்கி செய்தால் மோசம் போவது உறுதி. அனைவருமே ஒரே திசை நோக்கி சென்றால் இயற்கை வளங்களை பகிர்ந்தாலும் கூட வெற்றி வாய்ப்பு மங்கும். புதிய யோசனைகளில் தொழில்களை செய்யவேண்டும். பாருங்கள் இளம் ஸ்டார்ட்அப் மாணிக்கங்கள், தோசைகளில் புதுமை செய்கிறார்கள். வாசனைப் பொருட்களில் சமோசா போன்ற வாசனைகளை கொண்டு வருகிறா...

துறை சார்ந்த பிரபலங்கள், தங்கள் இதயத்தை திறந்து பேசும் பொதுமேடை உரையாடல்!

படம்
            துறை சார்ந்த பிரபலங்கள், தங்கள் இதயத்தை திறந்து பேசும் பொதுமேடை உரையாடல்! டெட் டாக்ஸ் உரைகளை யூட்யூபில் பார்த்திருப்பீர்கள். அதில் துறை சார்ந்த பிரபலம் ஒருவர், மேடைக்கு வந்து தன்னுடைய அனுபவங்களை அங்கு கூடியுள்ள மக்களிடம் பகிர்ந்துகொள்வார். அவர் தொழிலதிபராக, திரைப்பட இயக்குநராக, பாடகராக, விளையாட்டு வீரராக இருக்கலாம். தனது அனுபவங்களை கூடியுள்ள மக்களுக்கு கடத்துகிறார். இந்த பேச்சு நீண்டதாக இருக்கலாம். அல்லது சிறியதாக இருக்கலாம். ஆனால், ஒருவர் தன்னுடைய கதையை பிறருக்கு கூறுகிறார். கதை சொல்லும், அதை கேட்கும் ஆர்வம் உடையவர்கள்தான் நாம். எனவே டெட் டாக்ஸ் மகத்தான வெற்றி பெற்று உள்ளது. இதை நகல் செய்து டென்சென்ட் நியூஸ் நிறுவனம் சீனாவில் 2016ஆம் ஆண்டு ஸ்டார் டாக்ஸ் என்ற நிகழ்ச்சியைத் தொடங்கியது. இதில், நூறு துறை சார்ந்த பிரபலங்கள் தங்கள் அனுபவங்களை பேசுவார்கள். மக்கள் அவர்களின் அனுபவங்களை கேட்டு ரசிக்கலாம். இது மக்களில் பலருக்கு ஊக்கமூட்டுவதாக அமைந்துள்ளது. பிரபலங்கள் தங்களுடைய தொழில் வாழ்க்கையைக் கடந்து, வேறு தனிப்பட்ட வாழ்க்கை அனுபவங்களையும்  கூறுகி...

முக்கிய பிரச்னைகளில் எதற்கு முன்னுரிமை அளிப்பது என்பதைக் கற்பது அவசியம்! - ஷி ச்சின்பிங்

படம்
சீனாவின் பரந்து விரிந்த நிங்டே பகுதிகள், சந்தைக்கு ஏற்றபடி வலிமையானவையாக மாற வேண்டும். அதில் எந்த சந்தேகமுமில்லை. ஆனால், தற்போதைய நிலையில் அவற்றை பலவீனமாக உள்ள பறவை என்றுதான் குறிப்பிட வேண்டும். கம்யூனிஸ்ட் கட்சியின் அறிவுறுத்தல்படி, கடந்த ஜூன் மாதம் நிங்டேவுக்கு வந்தேன். அதற்குப் பிறகு அடுத்தடுத்த மாதங்களில் எனது சக பணியாளர்களும் வந்து இணைந்துகொண்டனர். தெற்குப்பகுதியில் உள்ள ஸெஜியாங் பகுதியில் உள்ள வென்சூ, கங்க்னன், யூகிங் ஆகிய நிங்டேவின் அண்டைப் பகுதிகளுக்கு சென்று குழுவாக பார்வையிட்டோம். எல்லையற்ற கடலில் மீனை வாழச்செய்வது, பரந்து விரிந்த ஆகாயத்தில் பறவையை பறக்க வைப்பது என்பது போன்ற செயல்தான் இதுவும். வறுமை ஒழிப்பிற்காக பல்வேறு திட்டங்களை யோசித்தோம். நிங்டேவின் பொருளாதாரத்தை உயர்த்தி அதை சிறப்பாக இயங்க வைப்பது எப்படி என அனைவரும் கலந்துரையாடினோம். நிங்டே விவசாயத்தை அடிப்படையாக கொண்ட பகுதி. அதுவே தனி உலகம் போல இருந்ததால் உலகிடமிருந்து செய்திகள் ஏதும் அங்கு பெரிதாக வரவில்லை. அங்கு, அதைப்பற்றி கவலையே இல்லாமல் தினசரி பணிகள் நடந்து வந்தன. ஆனால், அங்குள்ள சந்தை பின்தங்கியதாக ...

சதுரங்கம் ஆடும் போர்வீரன் - இநூல் வெளியீடு

படம்
            சீன நாட்டின் அதிபரான ஷி ச்சின்பிங், வறுமை ஒழிப்பு, இணைய பாதுகாப்பு, ஊழல் ஒழிப்பு, சீனக்கனவு, வெளிநாட்டு வணிகம் தொடர்பாக பேசிய இருபது உரைகளைக் கொண்ட நூல் இது. இந்த உரைகளின் வழியாக மக்களுக்கு எளிமையாக கூறவரும் செய்தியை எப்படி எடுத்துச்சொல்கிறார், அதன் வழியாக எதிர்பார்க்கும் விஷயங்களையும் நிதானமாக எடுத்து வைப்பதைக் காணலாம். இளம் வயதில் கட்சி உறுப்பினராக இருக்கும்போதே மக்கள் பிரச்னைகளைப் பற்றி உள்ளூர் நாளிதழில் 232 கட்டுரைகளை எழுதியிருக்கிறார் ஷி. பிரச்னைகளை தீர்வுகளை நோக்கி மக்கள் விவாதிக்கும்படி நகர்த்தினார். இக்கட்டுரைகளை வாசித்த மக்கள், அதன் எளிமையான வடிவத்தையும், பிரச்னைகளை பேசும் முறையையும் பாராட்டினர். இப்படி மக்களுக்காக செய்த செயல்களின் வழியாக மக்களின் செயலாளர் என்ற பெயரைப் பெற்றார். இந்த நூலை வாசிக்கும் ஒருவர் மக்களை நேசிக்கும் தலைவர், என்னென்ன விஷயங்களை கவனத்தில் கொள்கிறார். நாட்டை முன்னேற்ற விரும்புகிறவர், எந்தெந்த அம்சங்களில் கவனம் செலுத்தவேண்டும் என்பதைப் புரிந்துகொள்ள முடியும். சர்வாதிகார நாடு, ஒற்றைக்கட்சி ஆட்சிமுறை என ச...

மக்களை விலைக்கு விற்கும் பச்சோந்தி அரசியல்வாதிகள்

படம்
பசுமைக்கட்சி, அணு ஆயுதங்களை, ராணுவ நடவடிக்கைகளை, போரை எதிர்க்கிறது. ஆனால் கூட்டாட்சி முறையில் பல்வேறு சமரசங்களை செய்ய வேண்டியிருக்கிறது. பாசிச ஆட்சிக்கு எதிராக சமரசமே செய்யமுடியாது. முழுக்க போராடி வெல்லவேண்டும் என்று கூறுவது முன்னோர் வாக்கு. ஆனால் ஆட்சி அமைத்து நிர்வாகத்தில் பங்கேற்ற பசுமைக்கட்சியினர், பல்வேறு நாடுகளில் சூழல் மீதான கவனத்தைக் கொண்டு வந்தாலும் பெரும்பான்மை பலமில்லாத நிலையில் அடிப்படை கருத்துகளை முழுக்க செயல்பாட்டிற்கு கொண்டுவரமுடியவில்லை. பசுமைக்கட்சியினருக்கு மாற்றம் என்பது எளிதாக நடைபெறக்கூடியது அல்ல, எளிதாகவும் நிறைவேறாது என்று தெரிந்திருக்கிறது. மாறுதலுக்கு காலமும் குறைந்துகொண்டிருக்கிறது. குறிப்பிட்ட காலத்தில் செயல்ளை மறுபரிசீலனை செய்து மாற்றிக்கொள்ளாவிட்டால் எதையும் மாற்றிக்கொள்ளமுடியாது என்ற நிலை கூட வரலாம். வன்முறையைப் பயன்படுத்தி, லஞ்சம் கொடுத்து எதிர்பார்த்த மாற்றங்களை கொண்டு வருவது அசாத்தியம். அதை நிலைக்கும் என்று கூட கூறமுடியாது. கட்சி தொடங்கி, கொள்கைகளை பிரசாரம் செய்து மக்களை ஈர்த்து அரசியல் அதிகாரத்தைப் பெற்று தேர்தலில் வென்று மக்களின் பிரதிநிதிகளாகி கொள்கை...

செயற்கை நுண்ணறிவு, அதன் ஆபத்துகள் என்ன?

படம்
  செயற்கை நுண்ணறிவு என்றால் என்ன? 1955ஆம் ஆண்டு கணினி வல்லுநரான மார்வின் மின்ஸ்கி என்பவர் முதல்முறையாக கூறினார். அப்போது அதற்கான தீர்க்கமான வரையறை ஏதும் இல்லை. தினசரி பயன்படுத்தும் கால்குலேட்டரை விட சற்று சிக்கலான அமைப்புமுறை என்று புரிந்துகொள்ளலாம். இன்று அப்படி முழுக்க சொல்ல முடியாது. சிக்கலான பிரச்னைகளை தீர்க்க எழுதப்படும் கோடிங் முறை எனலாம். இதை தீர்க்கும் முறை அப்படியே மனிதர்கள் யோசிக்கும் முறையை ஒத்திருக்கும். கணினிகள் தானாகவே யோசிக்காது. ஆனால் தகவல்களைக் கொடுத்து அவற்றை சோதித்து தீர்வுகளை வழங்க செய்யலாம். நிறைய தகவல்களைக் கொடுத்துவிட்டு கேள்விகளைக் கேட்டால் சரியான பதில்களை நாம் பெறலாம். நியூரல் நெட்வொர்க் முறையில் கணினிகளை இன்று உருவாக்கி எந்திர வழி கற்றலை நுட்பமான செயலாக்குகிறார்கள்.  ஏஐ எங்கெல்லாம் பயன்படுகிறது? இன்று போனின் சேவைகளை கட்டண தொலைபேசியில் அழைத்து பெறுகிறீர்களா? அங்கும் ஏஐ பாட்கள் உண்டு அவைதான் உங்களுக்கு வழிகாட்டுகின்றன. இப்போது குரலை அடையாளம் கண்டு பிடித்து பேசவும், உங்களை அழைக்கவும் கூட திறன் பெற்றுள்ளன. நீங்கள் எழுதவேண்டிய மின்னஞ்சலை ஏஐ இலக்கணப் பிழை இ...

தன்னியல்பாக நடைபெறும் மக்கள் போராட்டம் எந்த இடத்தில் தவறாக செல்கிறது? 2010-2020 மக்கள் போராட்டக்கதை!

படம்
                போராட்டத்தின் வீழ்ச்சி எங்கு தவறு நடைபெற்றது ? 2010 -2020 வரையிலான காலகட்டத்தில் ஏராளமான போராட்டங்கள் சமூக வலைத்தளத்தின் மூலம் கட்டமைக்கப்பட்டு இளைஞர்கள் தெருவுக்கு வந்து போராடினார்கள் . இதில் எந்த தலைவர்களும் இல்லை . தன்னியல்பாக கோபம் கொண்ட இளைஞர்கள் , பெண்கள் பங்கேற்று போராட்டத்தை நடத்தினார்கள் . இப்படி போராட்டம் நடைபெறுவதற்கு அரசியல் வெற்றிடம் காரணம் என சிலர் கருத்து கூறுகிறார்கள் . ஆனால் அதற்கு எந்த அடிப்படையும் கிடையாது . எகிப்தில் ராணுவம் , பஹ்ரைனில் சவுதி அரேபியாவும் வளைகுடா கூட்டுறவு கௌன்சிலும் , துருக்கியில் எர்டோகன் , ஹாங்காங்கில் சீன அரசு , பிரேசில் நாட்டில் வலதுசாரி சக்திகள் என வெற்றிடம் நிரம்பப்பட்டது . எனவே இந்த எடுத்துக்காட்டுகளின் வழியாக வெற்றிடம் என்று கூறப்படும் இடத்தை நிரப்ப யாரோ ஒருவர் தயாராக இருப்பது உங்களுக்கு புரிந்திருக்கும் . பிரேசில் நாட்டில் நடைபெற்ற போராட்டத்தின்போது இடதுசாரி ஆட்சி நடைபெற்று வந்தது . எம்பிஎல் என்ற இடதுசாரி குழு , பேருந்து விலை குறைப்பிற்கான போராட்டத்தை த...