இடுகைகள்

கொரோனா நாயகர்கள் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

பறவையால் அழகாகிறது வானம்! - இலவச மின்னூல் வெளியீடு

படம்
     இலவச மின்னூல் வெளியீடு.... விரைவில் .....       இந்த நூல் கொரோனா காலத்தில் மக்களுக்கு பல்வேறு உதவிகளைச் செய்தவர்களைப் பற்றி குறிப்பிடுகிறது . இவர்களைப் பற்றி எழுதக்காரணம் , இதுபோன்ற உதவிகள் துயரமான காலத்தில் அனைவருக்கு்ம கிடைக்கவேண்டும் என்ற நோக்கம்தான் . தற்போதைய காலத்தில் அனைத்து மக்களுக்கும் இடையிலும் பிரிவினை வேலிகள் வேகமாக ஊன்றப்பட்டு வருகி்ன்றன . அதனை மனிதநேயமிக்க மனிதர்கள் தொடர்ந்து களைந்தெறிந்து மக்களுக்கு பாகுபாடு இன்றி உதவி வருவது மகிழ்ச்சியளிக்கிறது . இதில் குறிப்பிடப்பட்டவர்கள்தான் உயர்ந்த மனிதர்கள் என்பதல்ல . நம்மால் முடிந்த உதவியை பாகுபாடின்றி பிறருக்கு வழங்க முன்வருபவர்கள் அனைவருமே நாம் போற்றத்தகுந்தவர்கள்தான் . இந்தநூல் அதற்கான நம்பிக்கையை வாசிப்பவர்களுக்கு வழங்கும் என்று கருதுகிறேன் .  பொதுநலம் சார்ந்து உழைக்கும் பல்வேறு மனிதர்களை அறிமுகம் செய்த  நண்பர் திரு. இரா.முருகானந்தம் அவர்களுக்கு இந்த நூல் சமர்ப்பணம்.